இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 30 November, 2007

அகில உலக ரஸ்னா பொண்ணை ரசிப்போர் சங்கம் - இன்று முதல் உதயம்

ஸ்ரேயா கோஸ்வாமி நற்பணி மன்றத்தில் சேர விரும்பிய எங்க சங்கத்து சிங்கத்தை சேர்க்க மாட்டேன் என்று கூறி ஆவமானப் படுத்தியதோடு நிற்காமல் எங்க சங்கத்தயும் அசிங்கப் படுத்தி மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் தாக்கி எங்களை சினம்கொண்டு எழச் செய்துவிட்டார் குசும்பன் மாமா.
ஆதாரம் :
"குசும்பன் said...

Baby Pavan said...
நாங்க அலவ்டா அங்கிள்....////

உங்களுக்கு எல்லாம் அனுமதி இல்லை, சின்ன புள்ளைங்கள கெடுக்கிறேன் என்று கெட்ட பேர் எனக்கு வந்துவிடும், இப்ப யார் குழந்தை நட்சத்திரம் என்று தெரியவில்லை, இருந்தா அவுங்களுக்கு சங்கம் ஆரம்பிச்சிடுங்க:))) "

இதனால் பொங்கி எழுந்த நாங்கள் , குசும்பன் அங்கிளுக்கு போட்டியாக இன்று முதல் அகில உலக ரஸ்னா பொண்ணை ரசிப்போர் சங்கத்தை ஆரம்பிக்கிறோம். ஒரு காலத்துல TV யில I Love You Rasna சொன்ன அந்த குட்டிப் பொண்ணு இப்போ பெரிவளாகி காலேஜ் போராளாம். அதனால் அவள் பெயரில் ஒரு சங்கம் ஆரம்பிப்பதாக நினைத்த போது தானே விரும்பி தலைமைப் பொறுப்பை ஏற்பதாக சொன்ன தன்னார்வலர் கட்டை பிரம்மச்சாரி மங்களூர் சிவா மாமாவை தலைவராகவும், வயாதானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் குறையாத(நன்றி : நீலாம்பரி) வலையுலகத் தல சிபி மாமாவை ஆயுட்கால ஆலோசகராகவும் கொண்டு இன்று முதல் சங்கம் செயல்பட ஆரம்பிக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் கத்தார் கிளையை தனக்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்து கோஸ்வா மன்றத்திலிருந்து வெளியேறிய ரசிகன் மாமாவிற்கு அகில வளைகுடாவின் பொறுப்பு வழங்கப் படுகிறது. எங்கு ரசிகர்.. ஸாரி... நற்பணி மன்றம் ஆரம்பித்தாலும் முதல் ஆளாக சேரும் ஆயில்யன் அங்கிள் கத்தார் 144வது வார்டு பொறுப்பாளர் பதவி கொடுத்தால் கூட போதும் என்றுக் கேட்டு இணைந்திருக்கிறார். இப்படியாக கோஸ்வா மன்றத்திலிருந்து அனைவரும் ரஸ்னா பொண்ணை ரசிப்போர் சங்கத்தில் இணைந்து விட்டதால், யாருமே இல்லாத டீ கடைல யாருக்குத் தான் டீ ஆத்துவது என்று புலம்பிக் கொண்டிருந்த குசும்பன் அங்கிள் ரஸ்னா பொண்ணு சங்கத்தின் ஒருன்கிணைப்பாளர் பதவி குடுத்தால் எங்க சங்கத்து இளஞ்சிங்கம் பவனிடம் நிபந்த்தனையற்ற?!! மன்னிப்புக் கேட்கத் தயார் என்று கடிதம் அனுப்பி உள்ளார். பரிசீலிக்கப் படும்.

சங்கத்தில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது. விருப்பமான பதிவிகளை நீங்களே பரிந்துரைக்கலாம்.

Thursday 29 November, 2007

எப்படி எல்லாம் கடல வறுக்கிறாங்க பாருங்க..

It Came.. I Forwarded..

படத்தின் மேல் கிளிக்குங்கள். தெளிவாகத் தெர்யும். :)

Wednesday 28 November, 2007

போட்டோ பாக்கலியோ போட்டோ..

என்னக் கொடுமை சார் இது? பார்க்ல ஒரு காதல் ஜோடிகூட இல்ல :) ரோட்டோரம் கண்ணுக்கு குளிர்ச்சியா...
இது சென்னை இல்லீங்கோ... பேங்காக்கின் முக்கிய ஷாப்பிங் மால்கள் இருக்கும் சாலை.
என் புது S1000 எடுத்த முதல் படம் :). இங்கிட்டுத் தான் அதை வாங்கினேன். :

பேங்காக் முழுவதும் இது மாதிரி ஏராளமான கார் பார்க்கிங் கட்டிடங்கள் இருக்கு. இது ஸ்வர்ணபூமி( Bangkok Airport - இந்திய பெயர்:)க்கு அருகில்.

ஹிஹி.. லேசா ஷேக் ஆய்டிச்சி. இரவில் பேங்காக்.
ஏர்போர்ட்ல நாத்த மருந்தும்(Scent) சரக்கும் விற்கும் கடை. :P
ஏர்போர்ட்டின் ஒரு பகுதி.
விமானம் ஏற போகும் வழி.
Immigration முடிந்து வெளியே வரும் வழி
விமானம் புறப்படுவதற்கு முன்.. இடது பக்கம் சரக்கும்( baggage ) வலது பக்கம் பயணிகளும் ஏற்றப் படுகிறார்கள்.
விமானத்தில் இருந்து எடுத்தது. இந்த செம்மேகக் கூட்டத்திற்கு மேல் தான் பறந்தோம்.. :)

Tuesday 27 November, 2007

மருத்துவ மாணவர்கள் போராட்டம் சரியா?

மருத்துவ பட்ட படிப்பு ஐந்தரை ஆண்டுகளில் இருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்துவதற்கும் ஒரு ஆண்டு கட்டாய கிராமப்புற பணிக்கும் எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவ Moneyகள் புதுசு புதுசா யோசிச்சி போராட்டம் நடத்துறாய்ங்க. எதிர்ப்புக்கு அவர்கள் சொல்லும் காரணம்:
:: ஆறரை ஆண்டுக்கு எதிர்ப்பு ::
17 வயதில் பட்டப் படிப்புக்கு சேர்ந்தால் அதை முடிக்க 24 வயது கடந்துவிடும். அதற்கு பிறகு தான் வேலைக்கு போக முடியும். ஆனால் பொறியியல் படிக்கும் மாணவர்கள் 22 வயதிலேயே மாதம் 30000 மேல் சம்பாதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.நாங்கள் மட்டும் நீண்ட வருடங்கள் காத்திருக்க வேண்டுமா என்பது தான்.

பதில் : உங்கள் நோக்கம் விரைவில் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் என்றால் உங்களை யார் மருத்துவம் படிக்க சொன்னார்களாம்?. நீங்களும் பொறியியலோ விஷுவல் கம்யூனிகேஷனோ பேஷன் டிஸைனிங்கோ படிக்க போக வேண்டியது தானே?

:: ஒரு ஆண்டு கிராமப் பணிக்கு எதிர்ப்பு ::
கிராமப் புறப் பணிக் காலத்துல அரசாங்க சம்பளமாக 8000 முதல் 10000 வரை தான் கிடைக்கும். இதுவே உடனடியாக தனியார் மருத்துவ மனைகளில் வேலைக்கு சேர்ந்தால் கை நெறய( சில்லறையா கொடுப்ப்பாங்களோ? :P ) காசு கிடைக்கும். எங்களை எதற்கும் கட்டாயப் படுத்தாதிர்கள். எங்கள் இஷ்டத்திற்கு வேலைக்கு போக அனுமதியுங்கள் என்பது தான்.

பதில் : மேலே சொன்ன அதே பதில் தான். உங்கள் நோக்கம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் அல்லது குறைந்த வயதிலேயே கை நிறய சம்பாதிக்க வேண்டுமெனில் நீங்கள் அதற்குறிய படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டியது தானே. யார் உங்களை தடுத்தது?

இவர்கள் எல்லாம் சிறு பிள்ளைகள். எதோ உணர்ச்சிவசப் பட்டு பேசுகிறார்கள். விட்றலாம்.

ஆனால் இதுக்கு ஆதரவு தெரிவிச்சு வருங்கால முதல்வர் சரத்குமார்ல ஆரம்பிச்சி கடந்த கால முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வரை வரிந்துக் கட்டிக் கொண்டு பேசுவதை தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

சமீபத்தில் அம்மாவின் அறிக்கை:
"பொறியியல் மாணவர்கள் படித்து முடித்தவுடன் மாதம் ரூ.50000 ல் இருந்த்து 1 லட்சம் வரை சம்பாதிக்கிறார்கள்.ஆனால் மருத்துவ மாணவர்கள் ஆறரை ஆண்டு படிப்பு முடித்து பிறகு மேல் படிப்பு முடித்து சம்பாதிக்க ஆரம்பிக்கும் போது 30 வயது ஆகிவிடும் . எனவே ஒரு ஆண்டு அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது தான். அப்போ 29 வயது வரை படிப்பதை பற்றி கவலை இல்லை.
இப்போ ராமதாஸ் மட்டும் அம்மாவுடன் கூட்டணி வைக்கத் தயார்னு ஒரு அறிக்கை விடட்டும் பாருங்க. அப்புறம் மம்மிக்கு ஒரு ஆண்டு என்ன? இன்னும் 5 ஆண்டுகள் அதிகரித்தாலும் அதை பற்றி கவலை பட மாட்டாங்க. என்ன கொடுமை அமாஸ் இது?

மருத்துவம் என்பது நோய் போக்கும் உயிர் காக்கும் புனிதமான சேவை.இதை இப்படி பண ரீதியாக ஒரு முன்னால் முதல்வரே பார்க்கும் போது அந்த மருத்துவ மாணவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? இவர்கள் இப்படி பணத்தாசை காட்டி பெரியவர்களால்?! வளர்க்கப் படுவதால் தான் விரைவாகவும் அதிகமாகவும் சம்பாதிக்க நினைக்கிறார்கள். படிப்பு முடித்ததும் வங்கி கடனுடன் பெரும் மருத்துவ நிறுவனங்களை ஆரம்பித்து மேலும் பல மருத்துவ நிறுவனங்கள் ஆரம்பிக்கவும் வங்கிக் கடனை அடைக்கவும் அநியாய கட்டணம் வசூலித்து ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு நவீன மருத்துவம் எட்டாக் கனியாக ஆகிவிட்டது. தட்டிக் கேட்க அல்லது தடுத்து நிறுத்த வேண்டிய தலைவர்கள் இவர்களை தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பின்னே.. கட்சி நடத்த நன்கொடை வழங்க நிறைய பணக்காரர்கள் வேண்டுமல்லவா? அவரவர் கஷ்டம் அவரவர்க்கு. :(

மாணவர்களின் இந்த மன நிலைக்கு பணவெறி பிடித்த அரசியல்வாதிகள் மட்டுமில்லை. அரசாங்கமும் தான்.கல்வி நிறுவனங்களில் நடக்கும் பகல் கொள்ளையை தடுத்து மாணவர்களின் படிப்புக்கான பெரும் பண சுமையை ஓரளவாவது குறைத்தால் தான் அவர்களும் படிப்புக்கான பெரும் முதலீட்டை வட்டியுடன் சீக்கிரம் சம்பாதித்து பிறகு எதாவது சேமித்து ஒரு மருத்துவ நிறுவனத்தை நிறுவ முடியும் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் இருந்து ஒழிக்க முடியும்.
அது சரி.. அரசாங்கம் என்பதே பெரும் முதலீட்டுடன் பதவிக்கு வரும் அரசியல் வாதிகளின் சொத்து தானே. குறைந்த பட்சம் மருத்துவ படிப்புடன் சேர்த்து கொஞ்சம் மனிதாபிமானம் அல்லது சேவை மனப் பான்மை பற்றியும் கற்பித்தால் கொஞ்சம் நல்லது நடக்கலாம். யாருமே கிராமத்துக்கு போய் மருத்துவம் பார்க்க விரும்பலனா யார் அவங்க உயிர காப்பாத்தரது? அவங்க அப்படி என்னங்கய்யா பாவம் பண்ணாங்க?

டிஸ்கி: அதிகம் பணம் சம்பாதிப்பதயோ அல்லது பெரும் பணக்காரர்கள் உருவாவதையோ( நேர் வழியில்) நான் ஒரு போதும் எதிர்பவனல்ல.கோயிலுக்கு சாமி கும்பிடப் போகும் போது அங்கு சுண்டலும் புளியோதரையும் தான் கிடைக்கும்( எத்தன பேர் வாரப் போறாய்ங்களோ? :( ). நீங்கள் அங்கு போவது சாமி கும்பிடவும் மன அமைதிக்காகவும் தான்.சாப்பிடுவதற்கு அல்ல. ஆகவே அங்கு கிடைப்பதை தான் நீங்கள் சாப்பிட வேண்டும். உங்களுக்கு வகை வகையாகவும் ருசியாகவும் சாப்பிட ஆசை இருந்தால் நீங்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு தான் போக வேண்டும். கோவிலில் உக்காந்து பொலம்பாதிங்க என்று தான் சொல்கிறேன்.( அப்டியே நான் சொல்றத கேட்டுட்டாலும்:P )

Friday 16 November, 2007

அஞ்சி நாளு லீவு


தாய்லாந்தில் யானைகள் உண்ணும் இட்லிக்கு பொடி சப்ளை செய்யும் காண்ட்ராக்ட்டில் கையெழுத்து போட அந்த நாட்டுக்கு செல்வதால் வலைப் பதிவுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப் படுகிறது என்பதை சந்தோஷத்துடன்( பின்ன.. மொக்க பதிவுல இருந்து உங்களுக்கு 5 நாள் விடுதலை கெடைக்குதுல) அறிவிக்கிறேன். நான் இல்லாத தைரியத்துல யாரும் சண்ட கிண்ட( அப்டினா? ) போடாம சமத்தா இருக்கோனும். :P.

நிலா, அம்மு, பவன் , அப்பு, மை ஃப்ரண்ட் எல்லாரும் சமத்தா குட்டீஸ் கார்னரை கவனிச்சிக்கோங்க. உங்க எல்லாருக்கும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கியாரேன்... :)

இந்த காலத்து குட்டீஸ் - பதில்

டியர் அமாஸ்..( அத்தைஸ் and மாமாஸ்)
என்னோட இந்த காலத்துக் குட்டீஸ் - ஒரு போட்டி மாதிரி பதிவுக்கு கிடைத்த அமோக:( ஆதரவையும் வரலாறு:( அஜித் படம் இல்ல) காணாத வரவேற்பையும் கண்டு சொல்லவொண்ணா ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறேன். (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...) அந்த ஆனந்தத்தில் இருந்து கொஞ்சம் என்னை விடுவித்துக் கொண்டு பதிலை சொல்லி விடுகிறேன். இன்றும் சொல்லவில்லை என்றால் ஜெஸிக்கா அத்தை என்னைக் கொன்றுவிடுவார். :P .


காட்சி 1 : அவங்க வீட்ல ஒரு குட்டி பையன்( நம்ம சங்கத்து ஆள் ) இருக்கான்.. நம்ம நிலா மாதிரி கொஞ்சம் வாலு. கொஞ்ச நாள் முன்னாடி அவர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கு. அது அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை பற்றிய அழைப்பு. இவர் எதிரில் இருப்பவருடன் மிகுந்த கோபத்துடன் பேசி இருந்திருக்கார். அப்போது அருகில் இருந்த அவர் மகன், அப்பா நான் பேசறேன்.. நான் பேசறேன்.. என்று தொந்தரவு செய்திருக்கான். இவர் இருந்த டென்ஷனில், பேசிட்டிருக்கேன்ல எதுக்குடா தொந்தரவு பன்ற என்று அவர் மகனை அடித்துவிட்டாராம். அவனும் அழுதுகொண்டே சென்று விட்டானாம்.

காட்சி 2 ( போட்டிக்கானது): அடுத்த 2 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்து மீண்டும் தொ.அழைப்பு வந்திருக்கு. அந்த டீலர் மாமா வேறு அறையில் இருந்தாராம். அப்போது நம்ம சங்கத்து ஆள் தொலைபேசி அருகில் இருந்தானாம்.

அடுத்து அங்க நடந்தது:

அந்த டீலர் மாமா வருவதற்குள் நம்ம சங்கத்து ஆள் போனை எடுத்து பேச ஆரம்பித்துவிட்டார். டீலர் மாமா அங்கு வந்து நம்ம ஆளிடம் போனை கேட்டிருக்கார். அதற்கு நம்ம ஆள் சொன்ன பதில் " இப்போ நான் பேசிட்டிருக்கேன்ல.. எதுக்கு தொந்தரவு பன்றிங்க.. அடிச்சிடுவேன் போங்க".
( அந்த டீலர் மாமா அழுது கொண்டே எல்லாம் போய்விட வில்லை.. மகனின் சாதுரியத்தயும் வால் தனத்தையும் நினைத்து அவன் தலையில் லேசாக தட்டி போனை வாங்கி பேசினாராம்.:-) இதில் கற்பனை எதும் இல்லை. அவர் சொன்னதை அப்படியே இங்கு சொல்லிவிட்டேன்.)

அதான் தலைப்பிலே சொல்லி இருக்கேன்ல.. இந்த காலத்துக் குட்டீஸ்னு.. சட்டுடு புரிஞ்சிக்க வேணாமா? :) . உங்க வீட்லயும் இது மாதிரி குட்டீஸ் வால்த் தனம் எதும் நீங்க ரசிச்சி இருந்தா kuttiescorner@gmail.com க்கு அனுப்பி வைங்க.. நிலா(அப்பா) அத படிச்சிட்டு குட்டீஸ்கார்னர்ல போடுவார். நீங்க ரசிச்சத நாங்களும் ரசிக்கிறோமே.. ரெடி..ஸ்டார்ட்... அனுப்பிடு சீசே... :)

Tuesday 13 November, 2007

இந்த காலத்து குட்டீஸ்... ஒரு போட்டி மாதிரி!

ஆளாளுக்கு அவங்க பிளாக்ல ஒரு போட்டி நடத்துறாங்களே.. நாமளும் எதுனா ட்ரை பண்ணலாம்னு யோசிச்சிட்டிருந்தப்ப தான்( நம்ப மாட்டிங்களே) இந்த போட்டிக்கான ?! கரு (ஹிஹி.. அப்டி தான சொல்லனும்..) கிடைச்சது.

இத குட்டீஸ் கார்னர்ல தான் போடலாம்னு இருந்தேன். நான் மை ப்ரண்ட் ஆண்ட்டியின் சமீபத்திய பதிவுக்கு போய் அவர் குட்டீஸ் கார்னரில் வெட்டியாய் எடத்த அடச்சிகிட்டு அவர் பிளாக்ல மட்டும் பதிவு போடறத பத்தி போட்ட ஒரு பின்னூட்டத்துக்கு எனக்கு ஜிடாக்கில் வந்து பதில் சொன்னார். அதான் அங்க நீங்க எல்லாரும் ஒரு நாளைக்கு 4 பதிவு போடறிங்களே. எங்க ஈ ஒட்டிட்டிருக்கோ அங்க எல்லாம் போஸ்ட் போட்டு கடமையைய் தவறாமல் செய்யறேன்னு சொன்னாங்க.( அப்பாடா போட்டு குடுத்தாச்சி:P ). அப்போ தான் எனக்கும் லேசா உறைச்சது. நாம கூட பொடியன் என்ற பேர்ல ஒரு பிளாக் ஆரம்பிச்சி அப்புறம் குட்டீஸ் கார்னர் ஆரம்பிச்சதும் அத மறந்துட்டோமே என்று.
அதான் இந்த பதிவ இங்கன போட்டுறலாம்னு முடிவு பண்ணிட்டேன். ரொம்ப டேங்ஸ் ஆண்ட்டி:P.
இதோ விஷயத்துக்கு வாரேன்..:)

இன்னிக்கு சாயங்காலம் என்னோட டீலர் மாமா ஒருத்தர பார்க்க போயிருந்தேன். நான் பொதுவா எங்க டீலர்ஸ்கிட்ட பிஸினஸ் பேசரத விட வெட்டிகதை பேசறது தான் அதிகமா இருக்கும்( அந்த கம்பெனி எங்க போய் உருப்படப் போகுதுனு தான மனசுக்குள்ள திட்றிங்க ). இன்னைக்கு எதேதோ( தப்பா எதும் இல்லீங்கோ:P ) பேசிட்டிருக்கும் போது அவங்க வீட்ல நடந்த ஒரு கலாட்டவ பத்தி சொன்னார்.

அவங்க வீட்ல ஒரு குட்டி பையன்( நம்ம சங்கத்து ஆள் ) இருக்கான்.. நம்ம நிலா மாதிரி கொஞ்சம் வாலு. கொஞ்ச நாள் முன்னாடி அவர் அலுவலகத்தில் இருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்திருக்கு. அது அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை பற்றிய அழைப்பு. இவர் எதிரில் இருப்பவருடன் மிகுந்த கோபத்துடன் பேசி இருந்திருக்கார். அப்போது அருகில் இருந்த அவர் மகன், அப்பா நான் பேசறேன்.. நான் பேசறேன்.. என்று தொந்தரவு செய்திருக்கான். இவர் இருந்த டென்ஷனில், பேசிட்டிருக்கேன்ல எதுக்குடா தொந்தரவு பன்ற என்று அவர் மகனை அடித்துவிட்டாராம். அவனும் அழுதுகொண்டே சென்று விட்டானாம்.

அடுத்த 2 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருந்து மீண்டும் தொ.அழைப்பு வந்திருக்கு. அந்த டீலர் மாமா வேறு அறையில் இருந்தாராம். அப்போது நம்ம சங்கத்து ஆள் தொலைபேசி அருகில் இருந்தானாம்.

போட்டி !? : இப்போது அங்கு என்ன நடந்திருக்கும்?

சரியான பதிலை சொல்பவர்களுக்கு குட்டீஸ் கார்னரில் ஒரு வாரம் ஸ்டார் அந்தஸ்து வழங்கப் படும். ( தமிழ்மணத்துக்கே நாங்க இப்போ போட்டியாக்கும்:P ).

~போட்டி வெள்ளிக்கிழமை மதியம் இந்திய நேரப் படி முடிவடையும்.~

Saturday 10 November, 2007

வலையுலக வா(ல்)ழ் மக்கள் அனைவருக்கும் என் தாமதமான தீபாவளி நல் வாழ்ததுக்கள்.

தாமதாமா வாழ்த்து சொல்றதுக்கு அல்லாரும் மன்னிக்கோனுமுங்க.. செவ்வாய்க்கிழமை போன இந்த பாழாப்போன இண்டர்நெட் இணைப்பு புதன் கிழமை மதியம் வரைக்கும் வரலைங்க. அதான் யாருக்கும் விஷ் பண்ண முடியல. அப்பால ஊருக்கு போய்ட்டு இன்னைக்கு தான் வந்தேனுங்க.. வந்ததும் ஒரு வாழ்த்து பதிவு போட்டுடேனுங்க. 2 நாள் ரொம்ப சந்தோசமா இருந்துச்சிங்கோ.

ரொம்ப நாளைக்கு( வருஷத்துக்கு:P) அப்புறம் என் நெருங்கிய நண்பர்கள் சிலரை சந்தித்தேன்... பயங்கர ஜாலிதான் போங்க.. மதியம் சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனாலும் போனோம்.. எதுக்குடா இவனுங்கள உள்ள விட்டோம்னு அந்த மேனேஜர்( அல்லது மொதளாலி) மற்றும் எங்களுக்கு சர்வ் பண்ண அந்த நண்பர்(சர்வர்) மூஞ்சிய பாத்தாலே தெரிஞ்சது.. கொஞ்சம் ஓவராத் தான் அலம்பு பண்ணிட்டோம் :). நல்ல வேள இரவு உணவுக்கு போல.. :)).

அப்புறம்... நீண்ட வருடங்களுக்கு பிறகு நெறைய சொந்த பந்தங்கள பாத்துட்டேன். எல்லாரும் மறக்காம ஒரு கேள்விய ( நாக்க புடுங்கிக்கிற மாதிரி எல்லாம் இல்ல) கேட்டாங்க... நானும் வழக்கமா சொல்ற பதில சொல்லி எஸ்கேப் ஆய்ட்டேன். :P

( நான் இங்க இல்லாத இந்த நாலு நாள்ல எங்க சங்கத்துல ஏகப்பட்ட மாற்றங்கள பண்ணி இருக்காங்க.. ஒரு நட எட்டிப் பாத்துட்டு வந்துடறேன். )

Monday 5 November, 2007

எங்க ஊர் குடும்பப் பெயர்கள். செம டமாசு :))

எங்க ஊர்ல எல்லா குடும்பங்களுக்கும் எதாவது ஒரு குடும்ப புனைப்!? பெயர் இருக்கும். அதெல்லாம் படு வேடிக்கையா இருக்கும். இப்போ வரைக்கும் அதுல பாதிப் பேருக்கு மேல என்ன அர்தம்னு தெரியாமலே நானும் அவங்கள அப்டியே தான் அடயாளப் படுத்திகிறேன் :P .

எங்க ஊர்ல இருக்கிரவங்களோட பாதிப் பேர் எனக்கு மறந்துப்போச்சி :( மாதம் ஒரு முறை ஊருக்கு போயும். நான் வீட்டுக்கு போனா எங்க வீட்ட தவிர வேர எங்கயும் போறதில்ல. பக்கத்து வீட்டுக்கோ அல்லது பக்கதுல இருக்கிற தாத்தா வீட்டுக்கோ கூட.

( எங்க ஊர்ல பாட்டி என்ற சொல்லே வழக்கில் இல்லை :). பாட்டியும் எங்களுக்கு தாத்தா தான். எங்க சுத்து பட்டு ஊர்ல எல்லாம் இதே நெலமை தான்).

யார் வீட்டுக்கும் போகவும் மாட்டேன்.. அதே போல ஊர்ல கூடவும் அவ்வளவா பேசவும் மாட்டேன். வீட்ல அத விட மோசம்.ஊர்ல எனக்கு அமைதியின் சிகரம்னு பேரு :P.

சரி மேட்டருக்கு வரேன். பாதிக்கு மேல மக்கள் பேரு எனக்கு மறந்துட்டதால ஞாபகம் இருக்கிற கொஞ்சம் பேர மட்டும் உங்களுக்கு சொல்றேன்.

பொன்னமூட்டு மணி
குந்துகாலமூட்டு ஜெகதீசன்
வண்ணாமூட்டு முருகன்
கொங்காமூட்டு பழனி
நெண்டுக்காமூட்டு வரதன்
தெருக்மோட்டு குப்பன்
ஜினுங்கூட்டு மணி
குண்டமூட்டு குப்புசாமி
மூக்கமூட்டு சிவாஜி
காளையமூட்டு அம்பு( அன்பு)
கரியமூட்டு முருகன்
புட்டமூட்டு சொக்கு
வெள்ளூட்டு பிரகாசம்
ஜொள்ளமூட்டு பன்னீர் :P
மொட்ட ஊட்டு தருமன்
கெழக்குமோட்டு கைலாசம்
வடக்குமோட்டு புட்டன்
புக்கமூட்டு முருகன்
அம்மாசியூட்டு குமார்
தீத்தாமூட்டு குமரன்
புட்டுக்கொள்ளமூட்டு சங்கர்
மீசகாரமூட்டு சாமிக்கண்ணு
மோட்டமூட்டு மணி
குப்பமூட்டு காமராஜ்
செங்காமூட்டு மணி
ஊர்கவணமூட்டு_______( சொல்ல மாட்டோம்ல)

ஊடு என்றால் வீடு....
குப்பமூட்டு = குப்பன் + ஊட்டு = குப்பன் வீட்டு
அதாவது குப்பமூட்டு காமராஜ் என்றால் காமராஜின் அப்பாவோ அல்லது தாத்தாவோ அல்லது கொள்ளுத்தாத்தாவோ குப்பன் என்ற பெயரில் இருப்பார் அல்லது இருந்து இருப்பார். :)

இந்த பெயர்களுக்கு சொந்தக்காரர்கள( எல்லாரும் எனக்கும் சொந்தக்காரங்க தான்) எல்லோரும் இன்னும் இருக்கிறார்கள். 5 ஆண்டுகளுக்கு முன்னால் இது போன்று சுமார் 200 பெயர்களுக்கு மேல் எனக்கு தெரியும். இப்போ எல்லாம் மறந்துப் போச்சி. ( எல்லாம் இந்த நகரத்துப் பசங்களோட கெட்ட சகவாசம் :P )

Sunday 4 November, 2007

தமிழ்மணத்தில் என் பதிவுக்கான மறுமொழிகள் தெரிய என்ன செய்ய வேண்டும்?

தலைப்பை படித்துவிட்டு கொஞ்சம் விளக்கமாக இந்த( என்னோட) மரமண்டைக்கு புரியர மாதிரி சொல்லி தர முடியுமா? :(

Saturday 3 November, 2007

கோவையில் இசை மழை.. சும்மா அதிரப் போகுதுல..

கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் கோவைல சூரியன் FM and ரெய்ன்போ FM மட்டுமே இருந்தது. ரெய்ன்போ FM பத்தி சொல்லவே வேணாம். அவங்களும் அவங்க வர்ணனைகளும்... சகிக்காது.. இந்த சூரியன் FM அதுக்கு மேல.. விளம்பரத்த போட்டே கொன்னுடுவாங்க. வெரைட்டியான நிகழ்ச்சிகளும் இல்ல. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் போன் பேசரது தான். ஒரே மொக்கைபா( அத நான் சொல்றேன் :( ). அதனால என் மொபைல்ல FM கேக்கற வசதி இருந்தும் அத யூஸ் பன்னாம இருந்தேன்.

அட வீணா( என் ஆளு இல்ல) போன பொடியா.. என்னடா சொல்ல வறனு நீங்க கேக்கறதுக்கு முன்னாடி என் மனசாட்சி( இது நிஜமா.. யார்னா மனசாட்சி பத்தி ஒரு பதிவு போடுங்கப்பா.. போட்டிருந்தா தந்தி குடுங்க) என்ன தல கீழ தொங்க விட்டு கேக்குதுபா :(

இப்போ நம்ம கோவைல(நான் கோவைல இருக்கேன் என்கிற அரிய தகவலை உங்ககிட்ட சொல்லியாச்சிபா:P) FM ரேடியோஸ் லைன் கட்டி அடிக்கிறாங்கபா. ரேடியோ மிர்ச்சி..செம ஹாட்டு மச்சி... ஹலோ FM.. இதான் ரைட் நம்பர்... ரேடியோ சிட்டி .. இவங்க எல்லாம் இப்டி க்யூ கட்டி அடிக்கிறாங்கபா... இவங்க எல்லாம் இப்போதைக்கு சோதனை(ஒலிபரப்பு) பண்ணிட்டு இருக்காங்க... சோதனையை ஒலிபரப்போட நிறுத்திப்பாங்கனு நம்புவோம். நிகழ்ச்சில சோதிக்காம இருந்தா சரி.

இப்போ என் மொபைல எத்தன வாட்டி சார்ஜ் பன்றேன்னு எனக்கே தெரியலபா.. :). கோவை இப்போ குளிருதுனு மட்டும் சொல்லிட்டிருந்த நாங்க இனி கோவை அதிருதுனு சொல்லப் போறோம்ல :P. இந்த பதிவ எழுதும்( அல்லது டைப் பன்னும்) போது கூட ரேடியோ மிர்ச்சி( சுச்சிய தான் ரொம்ப மிஸ் பன்றேன்) கேட்டுட்டு தான் இருக்கேனாக்கும். ;)

ரேடியோ மிர்ச்சில வர அந்த கானா பாட்டு..அட அட.. சொகமா தான் கீதுபா..

Friday 2 November, 2007

இலவசக் கொத்த்னார் கேள்விகளுக்கு பதில்கள்.

நண்பர்களே இலவசக் கொத்தனார் தன் இலவசம் வலைப்பூவில் குயிஜ( அப்டித்தான் அவா சொல்றா ) போட்டி நடத்துறார். அதில் நானும் பங்கு பெற்று சில பதில்களை சொன்னேன். அந்த கேள்விகளுக்கு பதில் தேடியதில் பல அரிய விஷயங்கள தெரிஞ்சிகிட்டேன். அதுக்கு கொத்தனாருக்கு ரொம்ப நன்றி. நான் சொன்ன பதிலில் ஒன்றை மட்டும் தவறு என்று சொல்லிவிட்டார் (இப்படி ஏமத்திட்டயே கூகுள்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ) இன்னும் இரண்டு பதில்களை Pending வச்சிருக்கார். அவர் நெனைக்கிற பதில சொல்லனுமாம். (எனக்கு ஜோசியம் தெரியாதுனு யார்னா சொல்லுங்க அவர்கிட்ட ப்ளீஸ்). எது எபப்டியோ உண்மையில் அது மனம் விட்டு பாராட்டக் கூடிய செயல். எனக்கு நேத்து தான் இந்த குயிஜ பத்தி தெரிய வந்தது. அதனால இந்த வாட்டி பெரிசா கண்டுக்கல..( மண் ஒட்ட விட மாட்டோம்ல ... இதுல கொஞ்சம் பேரு எல்லாத்துக்கும் சரியான பதில வேற சொல்லிட்டாங்க.. எப்டித்தான் முடியுதோ.. அவ்வ்வ்வ்வ் :( ).

சரி இப்போ தலைப்புக்கு வரேன்.. அதாவது யார்க்காச்சும் கொத்தனார் கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சதுனா அங்கன போய் சொல்லுங்கண்ணேன். உங்க அறிவ பத்தி அல்லாரும் தெரிஞ்சிக்கட்டும். என்னத்த பெரிய அறிவு.. எல்லாரும் முன்னாடியே பதில தெரிஞ்சிகிட்டா சொல்றாய்ங்க.. எல்லாம் கூகுள் , விக்கிபீடியா புண்ணியதுல தான சொல்றாங்கனு யாரும் சலிச்சிக்காதிங்க. அதுல சரியா தேடரதுக்கும் நமக்கு கொஞ்சமாச்சும் அறிவு வேணுமாக்கும். ஆகவே பெரிசுகளே பொடிசுகளே அங்கிட்டு போய் பதில சொல்லுங்க. அப்போ தான் இது மாதிரி நல்ல சமாச்சாரங்களும் தமிழ் வலைப்பதிவு உலகத்துல அப்பப்போ கெடைக்கும்.

( ஹிஹி.. அந்த கேள்விங்களுக்கு இங்க பதில் இருக்கும்னு நெனச்சி வந்திங்களாக்கும்.. அஸ்கு.. புஸ்க்கு..அப்பள வட... அந்த கேள்விங்கள தயார் பண்ண அவர் எவ்ளோ கஷ்டப் பட்டிருப்பார்?)

மேலும் என் வலைப்பூ தமிழ்மணத்தில் இன்று ( கொஞ்ச நேரத்துக்கு முன்னால ) சேர்த்துக் கொள்ளப் பட்டிருப்பதால் அதில் தெரியுமாறு ஒரு பதிவை போடுவது என்று நினைத்ததாலும் தமிழ்மணத்தில் தெரியப் போகும் முதல் பதிவிற்கு பெருமளவில் ஆட்களைத் திரட்ட வேண்டும் என்ற அரிய நோக்கத்திற்காகவும் தான் இந்த பதிவிற்கான தலைப்பு வைக்கப் பட்டதெயன்றி வேறெந்த உள் ( குத்தும்) நோக்கமும் இல்லை என்பதை உங்கள் முன்னிலையில் தெரிவித்துக் "கொல்ல" கடமைப்ப் பட்டுள்ளேன்.

நன்றி..வணக்கம்.. மீண்டும் வருக..
(பிகு: இந்த ஒடம்பு எவ்வளவு அடி தாங்கும் என்பதை தெரிந்துக் கொண்டு அடிக்கவும்.. அப்புறம் கொலக் கேசு ஆய்டும்..ஆமா.. :P )

நான் இவன் இல்லை..



( த்ச்சும்மா.. டமாசுக்கு.. ஹிஹி..)

Tamiler This Week