இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 24 May, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஊர்ஸ் திவ்வி..

என் அன்புத் தோழியும் சிறந்த கதையாசிரியையும் ரொமாண்டிக் கவிதாயினியுமான ஊர்ஸ் @ திவ்விக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். ஊர்ஸ்.. நீ வேண்டும் வரங்களான


"ஜன்னலோர படுக்கை
தினம் தினம் பெளர்ணமி
நினைத்தவுடன் மழை
சாலையோர பூக்கள்
அதிகாலை பனித்துளி
இரவு நேர மெல்லிசை
கள்ளமில்லாச் சிரிப்பு
பொய்யில்லா நட்பு
தினம் நூறு கவிதைகள்
தோள் சாய ஒரு தோழன்
தாய் மடி தூக்கம்"

இவை அனைத்தும் கிடைக்க இந்த தோழனின் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு.. பல நூறாண்டு...

....ஸாரி ஊர்ஸ்... நம்ம ஊர்ல இன்னைக்கு பராமறிப்பு பணிக்கான மாதாந்திர மின்சார விடுமுறை. இப்போ தான் மின்சாரம் வந்தது. இன்று உனக்கு பிறந்தநாள் என்பதை எனக்கு தெரிவித்த நிஜமாநல்லவன் பாரதிக்கு நன்றி. உங்க ஏரியாவுக்கு இன்று போய் இருந்தேன். உன் பிறந்த நாள் என்று அப்போதே தெரிந்திருந்தால் வீட்டிற்கு போய் விருந்து சாப்டு வந்திருப்பேன்.. ச்ச.. மிஸ் ஆய்டிச்சி :P......

Wednesday 21 May, 2008

Counterfeit Card உஷாரய்யா உஷாரு!

இப்போ எல்லாம் Credit Card இல்லாதவங்க ரொம்ப கம்மி தான். அது இல்லாத சிலர் கூட தேவை இல்லாத பயத்தால தான் வாங்காம இருக்காங்க. ஆனா உண்மையில் அது ரொம்பவும் உபயோகமானது தான். அதுல முக்கியமான மேட்டர் இன்னான்னா.. நம்ம மனசும் கட்டுப்பாடா இருக்கோனும். சரி மேட்டர்க்கு வரேன். இந்த கடன் அட்டைகளை பல வகையிலும் மக்கள் தவறா பயன்படுத்திட்டு இருந்தாங்க. இப்போ புது மாதிரி பயன்படுத்தறாங்க.

அதாவது... ஒரு வகை நவீன கருவி பயன்படுத்தி நமது Debit Card அல்லது Credit Cardஐ Scan செய்து அதன் காந்த காகிதத்தில் உள்ள ரகசிய குறியீடுகளை கண்டுபிடித்து அதே போல் வேறு அட்டை தயாரித்து பயன் படுத்துகிறார்கள். இந்த முறைகேடான அட்டைக்கு Counterfeit Payment Card என் பெயர். இதை வணிக மையங்களில் பயன்படுத்தி பொருட்களை வாங்கி விட்டு நம் தலையில் கை வைக்க வைத்துவிடுகிறார்கள். கடன் அட்டை எண்ணை திருடி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கினால் கண்டுபிடிப்பது சுலபம். அதில் பொருளை ஒப்படைக்க அவர்கள் விலாசம் கொடுத்தே ஆகவேண்டும். ஆகவே அதை வைத்து சுலபமாக கண்டுபிடித்து விடலாம். அதே போல் கடன் அட்டையை திருடி பயன்படுத்த முயன்றால், திருட்டு கொடுத்தவர் சம்பத்தபட்ட நிறுவனத்தில் புகார் அளித்து அட்டையை செயல் இழக்கச் செய்ய முடியும். ஆனால் இந்த மாதிரி போலி அட்டைகளை வைத்து நேரடியாக பொருட்களை வாங்கும் போது சரியான முகவரி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே கண்டுபிடிப்பது கடினம். கிட்டத்தட்ட கண்டுபிடிக்கவே முடியாது என்றே சொல்லலாம். ஆகவே இப்போது இந்த மாதிரி போலியாக தயாரித்த அட்டைகளின் மூலம் நடக்கும் முறைகேடுகள் மிக வேகமாக பரவி வருகிறது.

சரி... Credit Card or Debit Card தான் நம்ம கிட்ட தானே இருக்கும். அத எப்படி யாரோ ஒருத்தர் ஸ்கேன் பண்ண முடியும்னு உங்களுக்கு தோனும்.... அதான் இருக்கவே இருக்கோமே சோம்பேரிகளும் வெத்து பந்தா வீராசாமிகளும். ஹோட்டல் போய் பெயர் தெரியாத கண்டதையும் சாப்ட வேண்டியது. அது சில நூறுகள் அல்லது சில ஆயிரங்களில் வந்து நிற்கும்... சாப்டு முடிஞ்சதும் சேவையாளர் பில் குடுத்ததும் அவரிடமே க்ரெடிட் கார்ட் குடுத்து விடுவோம். பெட்ரோல் போட்டாலும் இதே நிலை. பெட்ரோல் போட்டவர்டமே கார்டை குடுத்து விடுவோம். கார்டின் எண் மற்றும் ரகசிய எண்ணை(CVC-Card Verification code) குறித்து வைத்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் குடுப்போம். நம் அட்டையை ஸ்கேன் எடுக்க இந்த சந்தர்ப்பம் போதுமே..இப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தான் போலி அட்டைகளை தயாரிக்கிறார்கள்.

ஆகவே மக்களே.... உங்கள் கடன் அட்டையை எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் குடுக்காதிங்க. பணம் செலுத்தும் இடத்திற்கு நீங்களே சென்று கடன் அட்டையை குடுத்து உங்கள் முன்னிலையில் பயன்படுத்தும் படி பார்த்துக்கொள்ளுங்கள். அது கடையோ ,ஹோட்டலோ, பெட்ரோல் பங்கோ.. எதுவாக இருப்பினும்...

சில டிப்ஸ்....
1. Credit Card Billing தேதியை உங்கள் வசதிக்கு ஏற்ப முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த தேதியில் பணம் வருமோ அந்த தேதியில் பில் வரும் படி மாற்றிகொள்ளுங்கள்.

2. க்ரெடிட் கார்ட் மூலம் பொருட்கள் வாங்கும் போது வரும் பில்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். கார்ட் பில் வந்ததும் அதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

3.மிக முக்கியம். கண்ட நாட்களிலும் கடன் அட்டையை பயன்படுத்தாதிங்க. உங்கள் பில்லிங் தேதியில் இருந்து 5 நாட்கள் வரையில் மட்டுமே பயன்படுத்டுங்க. அப்போ தான் பணம் செலுத்த அதிக நாட்கள் கிடைக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் 55 நாட்கள் வரை அவகாசம் தருகிறார்கள். உதாரணத்திற்கு .... உங்கள் பில்லிங் தேதி 1 - 30 என்று வைத்துக் கொள்வோம். 1ம் தேதியில் இருந்து பணம் செலுத்தும் நாள் கணக்கிடப் படும். 1ம் தேதியில் இருந்து 55 நாட்கள் என்றால் அடுத்த மாதம் 25ம் தேதி போல் உங்களுக்கு Due Date வரும்... அது.. நீங்கள் 1ம் தேதி வாங்கி இருந்தாலும் சரி அல்லது 30ம் தேதி வாங்கி இருந்தாலும் சரி. ஆகவே நீங்கள் 1 முதல் 5ம் தேதிக்குள் அட்டையை பயன்படுத்தினால் 50 முதல் 55 நாட்கள் வரை அவகாசம் கிடைக்கும். ஒரு வேளை 25 அல்லது 30ம் தேதி பயன்படுத்தினால் 30 முதல் 25 நாட்கள் வரை தான் அவகாசம் கிடைக்கும். அதுவே 40 நாட்கள் மட்டும் அவகாசம் அளிக்கும் வகையிலான கடன் அட்டையாக இருந்தால் 10 அல்லது 15 நாட்கள் தான் அவகாசம் கிடைக்கும். ஆகவே ப்ளான் பண்ணாம எதையும் பண்ணப்படாது.

4. அதிக கடன் வசதிக்கு ஆசைப்பட்டு கோல்ட் , ப்ளாட்டினம் கார்டிகளை வாங்காமல் குறைந்த கடனே அளிக்கும் கட்டணம் வசூலிக்காத இலவச அட்டைகளையே வாங்கலாம்.

5. கடைகளில் அட்டையை பயன்படுத்துவதற்க்கு முன்னால் அதற்கு சர்வீஸ் சார்ஜ் எவ்வளவு வசூலிப்பார்கள் என்பதை கேட்டுவிடுங்கள். பெரும்பாலும் 2% இருக்கும். இது அனாவசிய செலவு. நாம் வாங்குவது பெரும் தொகையாக இருந்தால் சர்வீஸ் சார்ஜ் அதிகமாக இருக்கும் அதற்கு பணம் கொடுத்தே வாங்கிவிடலாம்.

6. சில வணிக மையங்களில் சலுகைகளும் உண்டு. 5% வரை Cash Back கிடைக்கும். சில அட்டைகளுக்கு வட்டி இல்லா தவணைகளும் உண்டு. கூச்சப் படாம இதை எல்லாம் விசாரிக்கனும். பணம் சம்பாதிப்பதை விட அதை சரியாக பயன் படுத்துவது தான் சாவாலான் விஷயம்.

7. கடைசி தேதிக்கு 4 நாட்கள் முன்பே காசோலை செலுத்த சொல்வார்கள்.சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி தேதி அன்று தான் காசோலை குடுக்க முடியும். அதற்கு கடன் அட்டை நிறுவனம் கட்டணம் வசூலிக்கும். அதை கொடுக்காதிங்க. சண்டை போடுங்க. 4 நாட்களுக்கு முன்பே கொடுக்க வேண்டும் என்றால்.. அவர்கள் அவகாசமாக தரும் நாட்களுக்கு என்ன கணக்கு இருக்கு? அது 4 நாட்கள் குறைத்தது போல் ஆகாதா? ஆகவே இதை சொல்லி வாதம் பண்ணுங்க. அந்த கட்டணத்தை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கு. நான் பல முறை இப்படி பயன் பெற்று இருக்கிறேன்:))....

கொசுறு:
.............கடன் அட்டையை வைத்து பணம் கூட சம்பாதிக்கலாம். என் பில் தேதியில் இருந்து சில நாட்கள் கழித்து என் அட்டையை பயன்படுத்தி கொஞ்சம் Pure Gold வாங்கினேன். எனக்கு பில் கட்ட வேண்டிய நாள் அடுத்த மாதம் முதல் வாரம் தான். ஆனால் நான் வாங்கிய தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இப்போது அந்த தங்கத்தை விற்றால் எனக்கு கனிசமான பணம் மிஞ்சும். எந்த முதலீடும் இல்லாமல். இது எப்படி இருக்கு? :))
........ டிஸ்க்ரிப்ஷன் : இந்த பதிவு இதை பற்றி தெரியாதவர்களுக்கு மட்டுமே. பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கலாம். இந்த பதிவு தொடர்பான உருப்படியான தகவல் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க. இன்னும் தெரிஞ்சிக்கலாம்னேன்... என்ன நாஞ்சொல்றது? சரிதானே.. :P

Wednesday 14 May, 2008

பட்டாபிராமன் பாக்யலக்ஷ்மிக்கும் ஜெயந்தி மோகன்ப்ரபுவுக்கும் வாழ்த்துக்கள்

பட்டாபிராமன் என்றொரு அப்பாவி நண்பர் இருக்கார். நண்பர் மட்டுமில்லை... பார்ட்னரும் கூட. ஈரோடு அலுவலக நிர்வாகிகளுல் ஒருவர். பாவம் என்னிடம் மாட்டிகொண்டு விழிக்கும் அப்பாவி பார்ட்னர். அதுவும் மாதக் கடைசியில் நாங்கள் விநியோகஸ்தராக இருக்கும் நிருவனங்களுக்கு காசோலை கொடுக்க நான் செய்யும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டு எங்க "தல"யிடம் போய் காசோலை வாங்கவும் முதல் வாரங்களில் கோயம்புத்தூர் அலுவலக ரிப்போர்ட்டை ஆடிட்டர் அலுவலகத்துக்கு அனுப்ப நான் செய்யும் தாமதத்திற்கு ஆடிட்டர்க்கு பதில் சொல்லிக் கொண்டும்... அதிலும் குறிப்பாக காசோலை ஈரோடு வங்கிக்கு வந்ததும் அந்த கிளை மேலாளர் எனக்கு போன் பண்ணி சொல்லுவார். அப்போ கோவை வங்கி கணக்கில் இருந்து ஈரோடு வங்கிக்கு பணம் மாற்ற வேண்டும். என் கையெழுத்திட்ட காசோலைகளும் ஈரோடு அலுவலகத்தில் எங்க தல கிட்ட தான் இருக்கும். அவர் எப்போவும் செம பிசி. அவரை பிடித்து கோவை அலுவலக காசோலையை வாங்கிக் கொண்டு ஈரோடு வங்கியில் கொடுத்து பணத்தை மாற்றுவதற்குள் பாவம் அவர் படும் அவதி இருக்கே.. அதற்குள் என்னாச்சி என்னாச்சி என்று என்னிடமிருந்து குடைச்சல் போன்.... (சீனா சார் எனக்காக இல்லைனாலும் இந்த அப்பாவிக்காகவாவது சீக்கிறமே உங்க வங்கியில் இணைய பண பரிமாற்றத்துக்கு ஆவண செய்யுங்கள்.. :) )இப்படி எல்லாம் என்னால் கொடுமை படுத்தப் படும் இந்த அபபாவி ஜீவனும் என் இனிய நண்பரும் பார்ட்னருமான பட்டாபிராமனுக்கும் சகோதரி பாக்யலக்ஷ்மிக்கும் வருகிற 18.05.2008 ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் திருமணமும் பவானியில் திருமண வரவேற்பும் இனிதே நடைபெற இருக்கிறது. இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துவோம். :))

----------------********----------------

எங்கள் நட்பு முதலில் மோதலில் தான் ஆரம்பித்தது. அவர் அங்கிலத்தில் எழுதிய ஒரு பதிவுக்கு நான் சீரியஸாக பின்னூட்டம் போட அவரோ விளையாட்டாக பதில் சொல்ல.. அதை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ள... சரியான திமிர் பிடித்த பெண் என்று நினைத்துக் கொண்டு அந்த பின்னூட்டங்களை கூட கோபத்தில் நான் அழித்துவிட்டேன் :).... ஆனால் அவர் இதை ஒரு மேட்டராகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் என் மீது அவர் கடும் கோபத்தில் இருந்தார்.

காரணம்.. நான் ப.பா.சங்கத்தை வம்பிழுத்து(பபாசங்கம் போட்டி - நடந்தது என்ன?) போட்ட ஒரு பதிவு :P.... நான் விளயாட்டாக போட்ட இந்த பதிவை அவர் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டு பின்னூட்டம் போட்டு மிரட்டினார்:(.... பிறகு ஒருவழியாக இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிட்டோம். திருமணம் முடிவானதும் முதலில் 3 அல்லது 4 பேரிடம் தான் இதுவரை சொன்னதாக சொன்னார்.( இதே மாதிரி தான் சொல்லி அன்றே அனைவரிடமும் சொல்லிவிட்டார் என்பது பிற்பாடு தெரிந்துக் கொண்ட ரகசியம்:P )..அதாவது எங்கள் மோதல் நல்ல நட்பாக மாறியதுனு சொல்ல வரேன். :)...

இப்படி நல்ல நண்பர்களாக மாறிய பின்பு அபி அப்பாவின் வேண்டுகோளுக்கிணங்க சாணக்யத்தனமாக :P பேசி மோகன்ப்ரபுவின் அலுவலக மின்னஞ்சல் மற்றும் யாஹூ ஐடி ஆகியவற்றை வாங்கி அதை ஜெ. கலயாண கும்மியில் சேர்த்துவிடுவேன் என்ற கடும் மிரட்டலுக்கு பயந்து உடனே போன் செய்தார். சில நிமிடங்கள் பேசியதும் ஒரு வேண்டுகோள்... "சஞ்சய் .. நான் நூடுல்ஸ் தயாரிச்சிட்டு இருக்கேன். சாப்டு முடிச்சதும் சென்னை போகனும். சமையல் முடிஞ்சதும் கேஸ் ஆஃப் பண்ண மறந்துடுவேன். ப்ளீஸ் சமையல் முடிஞ்சதும் எனக்கு ஞாபகப் படுத்தனும் .. அதுவரை பேசுங்க"னு சொன்னாங்க.... அட கொடுமையே.. இந்த பொண்ண நம்பி ஒரு பையன் வாழ்க்கைய ஒப்படைக்க போறானே என்று ப்ரபுவை நினைத்து அனுதாபப் பட்டுக் கொண்டே .. சரி என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து எவ்வளவு நேரம் நூடுல்ஸ் தயாரிப்பாய்? இன்னும முடியலையா என்று கேட்டேன்.. உடனே ரொம்ப பெருமையாக நான் சாப்பிட்டே முடித்துவிட்டேனே என்றார். அப்போ கேஸ் ஆஃப் பண்ணிட்டயா ஜெயந்தினு கேட்டேன்...

ஜெ : "அச்சாச்சோ.. ஓ மை காட்.. மறந்துட்டேன்... தேங்ஸ்.. தேங்ஸ்..."

ஹாஹாஹா.. என்ன கொடுமை சார் இது... இந்த குழந்தையவா திமிர் பிடித்த பெண் என்று நினைத்தேன்.... பேசும் போது யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொல்லி பல ரகசியங்களை அம்மணி சொன்னாங்க.. ஹிஹி.... அய்யோ பாவம் ஜெயந்தி என்று தனி பதிவே போடலாம் அதை வைத்து.. :P...

அதாகப் பட்டது மக்களே இந்த பச்சிளங்குழந்தைக்கும் பாவப் பட்ட ஜீவன் மோகன் ப்ரபுவுக்கும் வருகிற 18.05.2008 ஞாயிற்றுக் கிழமை திருமணமும் 19.05.2008 திங்கள் அன்று நாமக்கல்லில் வரவேற்பும் இனிதே நடைபெறவிருக்கிறது. இருவரும் வளமும் நலமும் ஆரோக்கியமும் சந்தோஷமும் பெற்று பல்லாண்டு பல நூறாண்டு வாழ வாழ்த்துவோம்... :))

"All married couples should learn the art of battle as they should learn the art of making love. Good battle is objective and honest--never vicious or cruel. Good battle is healthy and constructive, and brings to a marriage the principle of equal partnership."

Monday 12 May, 2008

மங்களூர் சிவா காதலி ஃபோட்டோ.

Make Over Magic Toolன் உதவியுடம் அடையாளம் தெரியாமல் மேக் அக் போடப் பட்டுள்ளது. :P.... அதென்ன Make Over Magic என்று கேட்பவர்கள் மட்டும் தொடரலாம்.இதை பயன்படுத்தி ஒரு பெண்ணின் புகைபடத்தை அப்லோட் செய்து அவருக்கு Lip Liner, Lip Stick, Eye Liner , Hair Style, Hair colour போன்ற வசதிகளை பயன்படுத்தி அந்த பெண்ணிற்கு பிடித்த மாதிரி ஒப்பனை செய்து பார்த்து , பிறகு அதே போல் நேரடியாக செய்து கொள்ளலாம். Indiwo என்ற பெண்களுக்கான பி்ரத்யேக இணையதளத்தில் கிடைக்கிறது இந்த டூல். இந்த டூலை பயன்படுத்தி தான் மங்களூர் சிவாவின் காதலியை அழகு படுத்தி இருக்கிறேன். ஆஹா.. அடுத்த தேர்தல்ல அரசியல் கட்சிகள் டிவி மட்டும் இல்லாம ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன் எல்லாம் குடுத்து நம்ம பிஸினஸ்க்கு ஆப்பு வச்சாலும் கைவசம் ஒரு தொழில் இருக்குடோய். :)..... பெண்களுக்கு உபயோகமான டூல். முயற்சித்து பாருங்க.

இந்த தளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானதாக இருப்பினும் ஆண்களும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் ஏரளமாக இருக்கு. மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் அழகாக விளக்கப் பட்டிருக்கு. இதை பதிவாகக் கூட போடலாம். ஆனால் அதை நம் மக்கள் எந்த அளவுக்கு நேர் மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியாததால் அதை இங்கு ( Breast Self Examination-
Learn to Detect Breast Cancer
)போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

Week-by-Week Pregnancy Guide - கர்ப்பிணி பெண்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பகுதி. இதில் கருவில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த நிலையில் இருக்கும், அதன் வளர்ச்சி மற்றும் அந்த நேரங்களில் அவர்கள் செய்ய வேண்டியவை என சுருக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது.

... ஒருத்தன் உருப்படியா எதுனா சொல்ல விடறாங்களா?.. நம்ம மை ஃப்ரண்ட் வம்பிழுக்கிறாங்க... அவங்க கூட ஃபேஸ்புக்ல விளையாடி ஜெயிக்கனுமாம்.. என்ன கொடுமை சார் இது... இருமா கண்ணு.. இதோ இப்போ வரேன்...

போனஸ் : யாஹூ சமீத்தில் பெண்களுக்காக ஆரம்பித்துள்ள தளம்( or Online Magazine ) Yahoo Shine இதையும் பாருங்க. ஆண்களும் படிக்கலாம் சாமியோவ்.
.. இப்பத்திக்கு சஞ்சய் அப்பீட்டு.. :))

Sunday 11 May, 2008

Sunday Special - Matter பஞ்சம்..

AVG Anti virus தனது இலவச புது பதிப்பை வெளியிட்டிருக்கிறது. தனது போட்டியாளரான Avastஐ விட சிறந்தது என சொல்லிக் கொள்கிறது. ஆனால் இணைய விவாத குழுக்களில் இந்த புது பதிப்பை விட Avast சிறந்தது என சொல்கிறார்கள். சிலர் Avira தான் பெஸ்ட் என்கிறார்கள். AVGயின் புது பதிப்பு 4 வைரஸ்களையும் Avira ஒரு வைரசையும் நம் கணினியில் வர அனுமதித்து விடுவதாகவும் Avast இது போன்று எந்த வைரஸையும் அனுமதிப்பதில்லை எனவும் தகவல். என்னிடம் Avast இருக்கிறது. ஆனாலும் AVGயின் புது பதிப்பையும் டவுன்லோட் செய்து வச்சிருக்கேன். இதுல ஒரு வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதாவது கூகுள் மற்றும் MSNல் தேடும் போது அதில் வரும் இணைப்புகளை சோதித்து அந்த வலைதளம் பாதுகாப்பானதா அல்லது வைரஸ் அபாயம் உள்ளதா அல்லது அதில் வைரஸ் இருக்க்கிறதா என அறிவிக்கிறது.

பாதுகாப்பான தளங்களுக்கு அருகில் பச்சை நிற 'டிக்" இருக்கும். வைரஸை கொண்டுள்ள தளங்கள் சிவப்பு X குறியிடனும் , வைரஸ் பரவ வாய்புள்ள தளங்கள் ஆரஞ்சு நிற X குறியுடனும் தெரிகிறது. இந்த குறிகள் மீது மவுஸ் கொண்டு சென்றால் அந்த தளம் பற்றிய விவரங்கள் தெரிகிறது.
வைரஸ் அபாயம் உள்ள இணைப்புகளை க்ளிக் செய்தாலோ அல்லது நேரடியாக(தேடுதல் இல்லாமல்) அந்த தளத்தின் முகவரியை குறிப்பிட்டு செல்ல முயன்றாலோ ஒரு எச்சரிக்கை தகவல் வருகிறது( பார்க்க :2வது படம்). அந்த எச்சரிக்கையை மீறி செல்வது நமது ரிஸ்க். ஆகையால் இந்த வசதிக்காக Avast இருந்தும் AVGயின் இந்த புது பதிப்பையும் பதிவிறக்கி வைத்துக் கொண்டேன். ஓசியில் கிடைத்தால் எனக்கொன்று என் தம்பிக்கொன்று என கேட்கும் ஆட்கள் தானே நாமெல்லாம்.. :D.... முயற்சித்து பார்க்கலாம்...

**********************************

வீடியோ தளங்களின் (இப்போதைக்கு) அரசன் Youtube இந்தியாவில் தன் சேவையை துவங்கி இருக்கிறது.




************************************
இகலப்பை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ண முடியவில்லை என்பது பெரும்பாலோனோரின் கவலை. ஆனால் அந்த வசதி வந்து நீண்ட நாட்கள் ஆகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது போலும். Yahoo Messenger 9.0வை பதிவிறக்கிக் கொள்ளுங்கள். இதில் இகலப்பை உதவியுடன் தமிழில் மின்னச்சு செய்யலாம்.

மேட்டர் பஞ்சதால மக்கள் மறந்துடக் கூடாதேனு எப்டி எல்லாம் ஒப்பேத்த வேண்டி இருக்கு. என் ஆசான் ஜூவிக்கு இந்த ஒப்பேத்தல்கள் எல்லாம் சமர்ப்பணம். :)

Saturday 10 May, 2008

தமிழக காவல் துறையின் லட்சணம்


ஒரு காலத்தில் தமிழக காவல் துறை ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையாக பேசப் பட்டது. ஆனால் இன்று .. அவர்கள் தங்கள் திறமைய ஆளும் கட்சிக்கு ஆட்கள் இழுக்கவும் எதிர் கட்சியினரின் தொலை பேசி பேச்சிகளை ஒட்டு கேட்கவும் ஆளும் கட்சிக்கு அடிபணிந்து எதிர் கட்சியினரை உளவு பார்க்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இதைவிட பெருங்கொடுமைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறை வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடப்பது தொடர்கதை ஆகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி அருகில் அதியமான் கோட்டை காவல் நிலையதிலும் அதை தொடர்ந்து பென்னாகரம் காவல் நிலையத்திலும் துப்பாக்கிகள் கொள்ளை போனது. அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் காவலர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறார்கள். எவ்வளவு கேவலம் இது... காவல் நிலையத்தையே காவல் காக்க முடியாத இவர்களால் எப்படி பொது மக்களை காக்க முடியும். இவர்களை பணி நீக்கம் செய்யாமல் விசாரணை குழு அமைக்கிறார்கள். கர்மம்....

அடுத்து சில தினங்களில் கோவையில் மரம் கடத்தும் கும்பல் ஒன்று ஒரு பூங்காவில் இருந்த சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்றார்கள். இத்தனைக்கும் இந்த பூங்கா நகரின் மத்தியில் இருக்கிறது. காவல் துறையினர் எந்த லட்சனத்தில் நகரில் இரவு ரோந்து பார்த்திருப்பார்கள் என்று பாருங்க.

இதைவிடக் கொடுமை.. கோவையில் இரவு பணியில் இருந்த காவலர்களில் வாக்கி டாக்கியை யாரோ அபேஸ் பண்ணி சென்றது. தன்னிடம் ஒருவன் திருடுவதையே தடுக்க முடியாத இவர்களா நகரில் நடக்கும் திருட்டை தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?..

சமீபத்தில் சென்னையில் நடந்த கொடுமை..... ராஜாஜி சாலையில் உள்ள அரசு கருவூலம், சம்பளக் கணக்கு அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளக் கட்டிடத்தில் நடந்த கூத்து... அந்த பகுதியில் இரவில் ரோந்து சென்ற கமிஷனர் அந்த அலுவலக கட்டிடத்திற்கு சென்று கதவை தட்டி இருக்கிறார். அரை மணி நேரம் கழித்து ஆயுதப் படை காவலர் ஒருவர் தூக்க கலக்கத்தில் கதவை திறந்திருக்கிறார். எந்த லட்சணத்தில் காவல் காக்கிறார்கள் பாருங்க.

அன்றைய உயர் அதிகாரிகள் ரோந்தின்.. ஒரு காவலர் லுங்கியுடனும், 4 பெண் காவலர்கள் நைட்டியுடனும் "பணி" புரிந்திருக்கிறார்கள். மேலும் 3 காவலர்கள் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றிருந்ததும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இதே ரீதியில் சேவை புரிந்தால் தமிழகத்தில் ஒரு பயலும் பாதுகாப்பாக இருக்க முடியாது. குறிப்பாக இரவில் யாரும் வெளியே செல்ல முடியாது. இவர்களை கண்காணிக்க வேண்டிய உயர் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து கொஞ்சம் ஒழுங்காக வேலை பார்த்தால் தான் இந்த நிலை மாறும்.

......... மங்கை அவர்களின் பதிவை படிசச்தும் இதை எழுதத் தோன்றியது....

Friday 9 May, 2008

பை கூகுள்.. ஹை யாஹூ இந்தியா...

ஜிமெயில் வரும் வரை நம் வேடந்தாங்கல் யாஹூவாகத் தான் இருந்தது. ஆனால் ஜிமெயில் வந்ததும் அதில் இருந்த வசதிகளுக்காக யாஹூவை தலை முழுகினோம். ஆனாலும் சாட் பண்ண இப்போ வரை யாஹூ மெசஞ்சர்க்கு இணையாக வேறு எதுவும் கிடையாது. அதே போல் இவ்வளவு நாளும் தேடுதல் என்றாலே அது கூகுள் தான் என்று இருப்பேன். ஆனால் இப்போ யாஹூ ஒரு அற்புதமான தேடும் அனுபவத்தை தருகிறது. இதன் பெயர் Yahoo Glue! beta. இதை சோதனை அடிப்படையில் முதலில் யாஹூ இந்தியாவில் அறிமுகப் படுத்தி இருக்கிறது. இதைவிட சிறந்த தேடுபொறிக்கு கூகுள் ரொம்பவே மெனக் கெட வேண்டி இருக்கும். அது வரை இனி தேடுதலுக்கு யாஹூ இந்தியா தான் என்னோட ஃபேவரிட்டா இருக்கும்.
அப்படி என்ன இருக்கு இந்த புது Yahoo Glue! betaவில்?.. நாம் தேட வேண்டிய சொல்லை குடுத்து தேட சொன்னதும் அந்த சொல்லுக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே பக்கத்தில் தருகிறது. உதாரணமாக Kamal என்று தேடினால் கமல்ஹாசன் பற்றிய தகவல்கள் அடங்கிய இணைய தளங்கள், கமல் தொடர்பான புகைபடங்கள், விக்கிபீடியாவில் கமல், யாஹூ பதில்களில் கமல் பற்றிய விவாதங்கள், லாஸ்ட் எஃப் எம்மில் கமல் படங்களின் பாடல்களின் பட்டியல், Youtubeல் கமல் தொடர்பான விடியோக்கள் , மற்ற தளங்களில் உள்ள செய்திகள் , இன்னும் பல விதமான தகவல்கள் என அனைத்தும் ஒரே பக்கத்தில் அளித்து நம்மை திக்கு முக்காடச் செய்கிறது.
ஒவ்வொரு முறையும் தேட்டுவதற்கு யாஹூ இந்தியா தளத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் அட்ரஸ்பாருக்கு அடுத்து உள்ள தேடுதல் பெட்டியில் Yahoo Glue! betaவை தேர்ந்தெடுத்து அங்கிருந்தே தேடலாம். கீழுள்ள படத்தில் வட்டமிட்டுள்ள இடம்.
முயற்சி பண்ணி பாருங்க... வழக்கம் போல படத்து மேல வச்சி அமுக்குங்க.. பெரிசாகும்..

Thursday 8 May, 2008

தமிழச்சியும் இளையகவி்யும் ஜூ.வியின் மேட்டர் பஞ்சமும்

...படத்து மேல எலிய வச்சி அமுக்குங்க.. படம் பெரிசாகும்...
வாரத்துக்கு 2 பதிப்பு வெளியிட வேண்டிய கட்டாயத்திற்காக ஜூவி செய்யும் மொள்ளமாறித் தனம். இது ஜூவிக்கோ, தமிழச்சிக்கோ எந்த வகையிலாவது பயன் தரக் கூடிய கட்டுரை ?!யா?... எமக்கு வந்த நம்பத் தகுந்த தகவல்படி தன் பதிவின் ஹிட்ஸ் ஜாஸ்தி ஆவதற்காக இளையகவி காசு குடுத்து அல்லது தன் பதிவின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் ஒரு பகுதியை கொடுப்பதாக்க சொல்லி இதை போட சொல்லி இருக்கிறார். :) காலையில் நான் அவரிடம் தொலை பேசிய போது அவரும் இதை ஒத்துக் கொண்டார். என்ன கொடுமை சார் இது? அந்த ஜொள்ளு பதிவு போட தமிழச்சியிடம் சம்மதம் பெற்றாராம்... யோவ் இளைய கவி.... தமிழச்சிய உங்க சகோதரினு தானைய்யா சொன்னிங்க.. சகோதரிய ஜொள்ளுவிட சகோதரியே சம்மதிச்சாங்களா? ஏன்யா இப்படி புளுகறிங்க? ஏன்யா இப்படி தமிழச்சி பேரை கெடுக்கறிங்க? ...

Tamiler This Week