இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, 21 December 2008

அபியும் நானும் - டபுள் விமர்சனம்


பெண் குழந்தைகள் என்றால் அப்பாக்கள் ஓவர் அழிச்சாட்டியம் செய்வார்கள். அது தான் இந்த படத்தின் முதல் பாதி. படம் அழகாக நகர்கிறது. குழந்தையின் PreKG அட்மிஷனுக்கு பண்ணும் ஆர்ப்பாட்டம் ஜாலி. அதற்காக அவர்கள் பண்ணும் வாக்குவாதம் இப்போது எல்லார் வீட்டிலும் நடப்பது தான்.

“ குழந்தைக்கு சொல்லிக்குடுக்கும் அளவுக்கு அப்பா அம்மாவுக்கு நாலேஜ் இருக்கான்னு பரீட்சை வைப்பாங்க”ன்னு ஐஸ்வர்யா சொல்லும் போது “ அப்போ பள்ளி கூடத்துல என்ன புடுங்குவாங்களாம்” என்று நந்துf/oநிலா மாதிரி ப்ரகாஷ்ராஜ் கேட்பார் என்று எதிர்பார்த்து எமாந்தேன். அதற்காக அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் என்ன என்று தெரிந்துக் கொள்ளும் அளவுக்கு மெனக்கெட்டு தயார் செய்வது டூ மச்சி.. இதற்கும் குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்? சிலர் பல வருடங்களாக குழந்தையின் அடிமிஷனுக்காக பரீட்சை எழுத வருகிறார்களாம். கொய்யால கொழந்தைக்கு அட்மிஷனா? இல்ல வயசுக்குவந்த பையன்/பொண்ணுக்கு அட்மிஷனாடா?

பொண்ணு பள்ளியில் படிக்கும் போதே வெளிநாட்டு பல்கலைகழகங்களோட அப்ளிகேஷனை கையில் வைத்துக் கொண்டு அலையும் அப்பாக்களை விட கல்லூரி முடிந்ததும் எந்த வெளிநாட்டு மாப்பிள்ளை சிக்குவான் பொண்ண எப்போ தொரத்திவிடலாம்னு காத்துட்டு இருக்கும் அப்பாக்கள் அதிகம் இருக்கும் இந்த காலத்தில் MBA படிக்க பொண்ணு டில்லி போவதை எதிர்க்கிறார் ப்ரகாஷ்ராஜ். சரி தொலையட்டும்..

ஒருவழியாக முதல் பாதி சுபம்.

இரண்டாம் பாதி.. அடக் கொடுமையே!.. ப்ரகாஷ்ராஜ் எனும் அப்பனை கேனையனாக காட்ட ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். அநியாயத்துக்கு ஜோக்கராய் தெரிகிறார். கல்லூரியில் படிக்கும் பொண்ணுகிட்ட “ உன் வாழ்க்கையை நீயே அமைச்சிக்கிறது உன் உரிமை மட்டுமில்லை.. கடமையும் கூட”ன்னு டகால்ட்டி டயலாக் விடுபவர் பொண்ணு ஒருத்தனை லவ் பன்றான்னு தெரிஞ்சதும் கொதித்தெழுகிறார். அந்த பையன் ஒரு பஞ்சாபி என்று தெரிந்ததும் மேலும் நொந்து போகிறார். அப்பா செல்லமாக வளர்ந்த ஒரு பெண் தன் கல்யாண தேதியை சாப்பிடும் நேரத்தில் அப்பாவிடம் தகவலாய் தெரிவிக்கிறார். கல்யாண தேதி பற்றி அவரிடம் கேட்க கூட மாட்டாராம். கல்யாணம் எப்படி நடக்க வேண்டும் என்பது உட்பட எல்லாம் ப்ரகாஷ்ராஜ்க்கு தெரியாமலே தீர்மாணிக்கப் படுகிறது.

தன் மீதான் பாசம் குறைவதாக படுவதால் ப்ரகாஷ்ராஜ்க்கு மாப்பிள்ளை மீது வெறுப்பு வருகிறது. பிறகென்ன? இருக்கவே இருக்கு தமிழ் சினிமா சீன் டெம்ப்ளெட்.

கதவருகே காரணமே இல்லாமல் நாயகி வந்து நிற்கும் போது வீட்டில் ஒரு வெட்டி கும்பல் உட்கார்ந்துக் கொண்டு நாயகனுக்கே தெரியாத அவனை பற்றின நற்குணங்களை எல்லாம் பட்டியல் போடுவார்கள். உடனே ஒளிந்திருந்து இதை ஒட்டு கேட்கும் நாயகிக்கு நாயகன் மீது நல்ல அபிப்ராயம் வந்துவிடும்.

இதே போல் ப்ரகாஷ்ராஜ், வீட்டுக்கு வரும் போது அந்த சர்தார்ஜி மாப்பிள்ளையின் பேட்டி டிவியில் வருகிறது. நடு வழியில் நின்றுவிடும் காரை மாப்பிள்ளை சரி செய்கிறார். இதெல்லாம் கூட பரவாயில்லை. திட்டக் கமிஷனின் உறுப்பினராய் மட்டுமே இருக்கும் மாப்பிள்ளையிடம் பிரதமரே நேரடியாக போன் செய்து முனுசாமி இருக்காருங்களா என்பது போல் ஜோகிந்தர் இருக்கிறாரான்னு பேசுகிறார். பாவம் பிரதமர் ஆபிசில் வேலை பார்க்கும் டசன் கணக்கான செயலர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள் போல.

பிறகு மாப்பிள்ளையின் சேவை மனப்பான்மை எல்லாம் தெரியவைத்து ப்ரகஷ்ராஜ் மனதை மாற்றுகிறார்கள். ஆனால் இதை எதுவும் சீரியசாக செய்யவில்லை. ஒவ்வொரு சீனிலும் ப்ரகஷ்ராஜ் கட்டாயமாக வழிகிறார். பார்க்கவே பாவமாக இருக்கிறது. ஒரு வழியா கல்யாணம் முடிஞ்சி படமும் முடிகிறது.

இந்த மாதிரி கதைக்கெல்லாம் துறுதுறுன்னு குறும்பு கொப்பளிக்க இருக்கிற நாயிகி இருக்க வேணாமா? திரிஷா தான் கிடைத்தாரா? குழந்தைகளாக வரும் குட்டிப் பெண்கள் மனதில் நிற்கிறார்கள். திரிஷா சகிக்கலை..

அபபா மகள் இடையிலான உணர்வு பூர்வமான உறவுக்கும் இந்த படத்துக்கும் பெரிய சம்பந்தம் எதும் இல்லை. முதல் பாதியில் மட்டுமே ஓரளவு சம்பந்தம் தெரிகிறது.

........மேலே இருக்கும் விமர்சனம், தியேட்டரை வாழ்க்கைக்கான வகுப்பறையாக நினைத்து பாடம் கற்க செல்பவர்களுக்கு மட்டுமே.....

என்னை மாதிரி பொழுதுபோக்குக்கு சினிமா பார்ப்பவர்களுக்கு :
முதல் பாதி - அழகு - பார்க்கலாம்..
2வது பாதி - ஜாலி - எதார்த்ததை எல்லாம் தூக்கி எங்காவது வைத்துவிட்டு பார்க்கலாம்.
.. பாடல்களைத் தவிர அதிக பட்சமாக 15 முதல் 20 நிமிடங்கள் தான் எரிச்சல் படுத்தும் காட்ச்சிகள் இருக்கின்றன. மற்ற படி போர் அடிக்காமல் தான் இருந்தது...

Thursday, 18 December 2008

Ajith Vs Vijay

நமக்கு தெரிஞ்ச வரையில் பார்த்தாலும் சிவாஜி - எம் ஜி ஆர், ரஜினி - கமல் என பெரும் ஜாம்பவான்கள் சம காலத்தில் உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். எங்க தலைவரோட மெகா டிவியில மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்களை பற்றிய சிறப்பு நகழ்ச்சிகள் வந்துக் கொண்டிருக்கின்றன. அதில் எம் எஸ் வி சொன்னார் “ எதோ ஒரு படத்தில் நடிக்க சிவாஜியை அனுகிய போது அதில் அண்ணன் ( எம் ஜி ஆர்) நடித்தால் நன்றாக இருக்குமே ”என்று ஆலோசனை தந்தாராம். அவர்களுக்குள் நடிப்பில் எவ்வளவோ போட்டிகள் இருந்திருக்கின்றன. ஆனால் அவர்களோ அவர்களின் ரசிகர்களோ ஒருவரை ஒருவர் அசிங்கப் படுத்தும் வசனங்களை தங்கள் படங்களிலோ ஊடகங்கள் வழியாகவோ பரப்பியதில்லை.

ஆனால் இந்த தகர டப்பா வாயனுங்க விசய்யி அசீத்து பேனுங்க தொல்லை தாங்களைடா சாமி.. அவனுங்க தான் அவனுங்க நடிக்கிற படத்துல ஒருத்தரை ஒருத்தர் தாக்கி வசனம் பேசறானுங்க.. இந்த ஈரு பேனுங்க அதை விட மோசம்.. அவனுங்க அழிச்சாட்டியத்தை பாருங்க..

விசய்யி பேனுங்க :

”சூர்யா வயிறு 6 பேக்ஸ்
விஷால் வயிறு 4 பேக்ஸ்
விஜய் வயிறு 2 பேக்ஸ்

அஜித் வயிறு ஃபேமிலி பேக்..

....Ajith Rockz....”

---------------

இது அசீத்து பேனுங்க SMS :

”Number of Remake films by Actors:

ரஜினி : 35 வருடங்களில் 6
கமல் : 46 வருடங்களில் 5
அஜித் : 16 வருடங்களில் 3

டாக்டர்.விஜய் : 14 வருடங்களில் 18

....Dr.Vijay Rockz.... “

-----------

இது பொதுவான டெம்ப்ளெட்.. பேரை மட்டும் மாத்தி போட்டு அனுப்பறானுங்க..

”கவுண்டமணி : ச்ச்சோ.... போன் எடுத்தா நச்சி நச்சின்றானுங்க.. எதோ அஜித் படமாம்.. அஜித் ரசிகனுங்களாலயே பாக்க முடியலையாம்.. என் ரசிகனுங்களை பாக்க சொல்றானுங்க.. அட இது பரவால்லைப்பா.. சோசியல் மேட்டர்.. பண்ணிக்கலாம்.. அஜித் சாங்ஸ் எல்லாம் ஹிட்டாக்க சொல்றானுங்க.. நான் என்ன அஜித் ரசிகனுங்க மாதிரி பொறம்போக்கா? ஒரே குஷ்டமப்பா.. சாரி.. கஷ்டமப்பா..

அஜித் : போன் வயர் பிஞ்சி ஒரு வாரம் ஆச்சி

கவுண்டமணி : இது செல் போன் டா

அஜித் : ஹ.. அரசியல்ல இதெல்லாம் சாதரனப்பா.. “

அஜித ரசிகர்கள் விஜய் பேரை போட்டு இதை அனுப்பறானுங்க.. :)

........ கைவசம் இருக்கும் அசீத்து விசைய்யி சோக்குகளை நீங்களும் பின்னூட்டுங்க சாமியோவ்வ்.. :).........

டக்ளஸ் அண்ணன் : உண்மையை சொல்லுங்க.. தலைப்பை பார்த்ததும் என்னவோ எதோன்னு டரியல் ஆகித் தானே வந்திங்க.. நீங்கள்ல்லாம் இன்னும் திருந்தலையா.. எங்க எவன் அடிச்சிப்பான்னு காத்துட்டு இருக்காங்கய்யா.. போங்கய்யா.. போய்.. புள்ள குட்டிங்களை படிக்க வைங்க.. நீங்க எல்லாம் எப்போ தான் சஞ்சய் மாதிரி நல்ல புள்ளயா ஆகப் போறிங்களோ... :)))

Sunday, 2 November 2008

எச்சரிக்கை : சினிமா தொடர் பதிவு

எச்சரிக்கை : இந்தப் பதிவு அநியாயத்துக்கு பெரியதாக இருப்பதால் வழக்கம் போல் படிக்காமல் கமெண்ட் போடும் நல்லவர்களுக்கு... தடித்த எழுத்துக்களில் இருப்பதை மட்டும் படித்துக் கொள்ளலாம்.:)

என்னை இந்தத் தொடருக்காக அழைத்த "மீ த ராப் " "பெரியக்கா மலேசியா மாரியாத்தா மைஃப்ரண்ட் " என் பாசமலர் "பின்னவீணத்துவ சுனாமி ஸ்ரீமதி " ஆகியோருக்கு கொலைவெறியுடன் ஆளுக்கு ஒரு நன்றி ):):)

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஒரு வயதுக்கு முன்பே இருக்கலாம். எங்க திரை அரங்கில்(இப்போது இல்லை) எப்போது முதலில் பார்க்க ஆரம்பித்தேன் எனத் தெரியவில்லை. லேசான நினைவு இருக்கும் சம்பவம் எனில் அரூர் தாஸ் தியேட்டரில் வெற்றிவிழா பார்த்தது நினைவிருக்கு. இரவுக் காட்சி பார்த்துவிட்டு அம்மா ,அப்பா மற்றும் அப்பாவின் தோளில் நான் வந்துக் கொண்டிருக்கிறோம். சில அடி தொலைவு போனதும் ஒரு கை என் தோளில் விழுகிறது. லேசாகத் தலையை தூக்கிப் பார்க்கிறேன். எங்கள் ஊரின் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.லட்சுமணபெருமாள் அவர்கள் சிரிக்கிறார். அப்போது என்ன வயதென்று தெரியவில்லை.ஆனால் படம் பார்த்து காலையில் பசங்க கிட்ட செம பில்டப் குடுத்து சண்டைக் காட்சிகளை விளக்கும் வயது என்பது மட்டும் நினைவிருக்கிறது. அப்போ கதைய பத்தி எல்லாம் எவனுக்கு கவலை.. :)) நாங்க எல்லாம் அப்போவே டெர்ரராக்கும்.. :)

1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

நினைவு தெரிந்த பின் தான் எல்லா படமும் பார்த்திருக்கிறென்...நினைவில்லாமலா பிறந்தேன்.. நல்லா கேக்கறாங்கயயா கேள்வி .. :) ஆனால் வெற்றிவிழா தான் நினைவில் இருக்கிறது.

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

ஸ்ஸ்ஸ்ஸபா.. இப்போவே கண்ணக் கட்டுதே. :( ( பின்ன அ,ஆ, இ, ஈ நு கேட்டா என்ன பன்றதாம் )
சூப்பர் சண்டை காட்சிகள்.. சண்டைக் காட்சிகளைத் தவிர வேறு எதையும் புரிந்துக் கொள்ளவோ உணர்ந்துக் கொள்ளவோ முடியாத அல்லது விரும்பாத வயது அது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா :( .. இனி தியேட்டர் வந்து சினிமா பார்க்கக் கூடாது என முடிவெடுக்க வைத்த படம். கொய்யால நான் என்ன கொள்ளை அடிச்சா காசு சம்பாதிகிறேன்.. இந்த குப்பைகளை எல்லாம் 85 ரூபாய் டிக்கெட் வாங்கி பார்க்க. ( நிஜமா நல்லவரு நாக்கப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்விக்கு கொஞ்சம் கூடுதலாவே கேட்டதால நோ ப்ளாக்ல டிக்கெட் வாங்கிங்.. :))
(1-இ.. கேள்விய இங்க கேட்டிருக்கனும்.. கொலைவெறித் தாண்டவம் ஆடி இருப்பேன்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

குருவி ...இணையத்தில் பார்த்தேன்.... 3 பகுதிகள் தரவிறக்கி வைத்துருந்தாலும் கஷ்டப் பட்டு இரண்டாம் பகுதியின் பாதி பார்க்கும் போதே... நம்ம நந்து அண்ணா சாவை உணர்ந்ததாக சொன்னாரே.. அதைவிட படுபயங்கர விளக்கமுடியாத உணர்வெல்லாம் எனக்கு ஏற்பட்டது.. யாராவது இஅல்வசமாய் ஒரு கணினி தருவதாக அப்போ சொல்லி இருந்தால் இந்தக் கணினியை கொலை செய்திருப்பேன். :(

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
நான் எப்போதுமே சோகமான அல்லது "மெசேஜ்" சொல்லும் படங்களைப் பார்ப்பது இல்லை. என்னை பொறுத்தவரையில் சினிமா என்பது வெரும் பொழுதுபோக்கு சாதனம். தவமோ தியானமோ செய்து மனதை சாந்தப் படுத்தும் கலை எனக்கு வராது என்பதால்( மூன்றாண்டுகள் தினமும் காலையில் 1 மணி நேரம் தியானம் செய்திருக்கிறேன்.. அந்த அனுபவத்தில் சொல்கிறேன்) மனதை சாந்தப் படுத்தவே அல்லது மன இறுக்கத்தில் இருந்து விடுபடவே சினிமா பார்ப்பதை விரும்புபவன்.

எனக்கு சச்சின், வசீகரா, பஞ்ச தந்திரம், 23ம் புலிகேசி வகையறா சினிமாக்கள் மீது தான் நாட்டம்...
ஆனாலும்.. மகாநதி என்னை வெகுவாக பாதித்த படம் என சொல்வேன். அந்த சிறுமி கொல்கத்தா விபச்சார விடுதியில் படும் அவதி.. பிறகு வீட்டிற்கு வந்தும் தூக்கத்தில் அதை நினைத்து புலம்புவது.. இது மிகவும் தாக்கிய காட்ச்சிகள்...
அடுத்து....தேவர் மகன்... அதில் வரும் பஞ்சாயத்துக் காட்சிகளெல்லாம் எங்கள் வாழ்க்கையில் நிகழ்வது போன்று இயல்பாய் இருந்தது. தாக்கியது என்று சொல்வது கொஞ்சம் மிகையாக இருக்கும். என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஊரில் நாசர் குடும்பம் போன்ற ஒரு குடும்பம்.. எப்போதும் எங்களுடன் மல்லுக்கு நிற்கும்.. ஆனால் இந்த தலைமுறையியில் நாங்கள் ஒற்றுமையாக இருப்பதோடு அப்போது மோதிக் கொண்ட எங்கள் பெற்றோர்களியும் ஒன்றாக்கி இருக்கிறோம். ஒருவர் தவிர மற்ற எல்லாரும் பகை மறந்தே உறவாடுகிறார்கள். :)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

நிறைய இருக்கு.. குறிப்பாக பெயர் பிரச்சனை.. பெயரில் என்ன இருக்கு? அதை எல்லாம் பெரிதாக்கி இம்சை செய்வார்கள் கலாச்சார காவலர்கள். சண்டியர் கிருஷ்ணசாமி கும்பல் பண்ண அட்டகாசம்... ரஜினி படங்களுக்கு ராமதாஸ் வகையறா செய்த ஓவர் டார்ச்சர்.. எல்ல்லம் ரொம்ப மோசமான அரசியல்.

அதைவிட பெரிதாக தாக்கிய அரசியல் தமிழ்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால் வரிவிலக்கு அளித்தது. கலைஞரின் மிக மோசமான முடிவு இது. பெயர் மட்டும் தமிழில்.. ஆனால் வசங்கள் பாடல் வரிகளில் பாதி எல்லாம் ஆங்கிலத்தில்... நல்லவன் என்று பெயர் வைத்துக் கொண்டால் கற்பழிப்பு செய்தாலும் குற்றமல்ல என்பது போல இருக்கு இது. சரியான மோசடி இது. விஞ்சான முறை வரி ஏய்ப்பு...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

குறிபிட்டு சொல்ல நினைவு வரவில்லை. அபூர்வ சகோதரர்கள் பார்த்து பிரமித்து போனேன். பிறகு இரட்டை வேடங்கள் படங்களைப் பார்த்து ஆச்சர்யப் பட்டிருக்கேன். விட்டாச்சார்யா பாணி தந்திரக் காட்சிகள் கொண்ட படங்கள் மற்றும் சிவாஜியின் நவராத்திரி ஆகியவைகள் பெரிதும் தாக்கிய தொழில்நுட்பங்கள் என்று சொல்லலாம்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
அவ்வப்போது இணையத்தில் மட்டும். சினிமாவின் புதிய விஷயங்கள் அல்லது கமல் பற்றிய செய்திகள் கண்ணில் படும் போது படிப்பேன். மத்தபடி தேடிச் சென்று ஆர்வத்துடன் படிப்பது இல்லை.

7. தமிழ்ச்சினிமா இசை?

என் அடிப்படைத் தேவைகளில் ஒன்று என்று கூட சொல்லலாம். இப்போதெல்லாம் தினமும் சில மணி நேரங்களாவது தமிழ் சினிமா இசையை கேட்பேன். காலையில் எழுந்ததும் ஜெயா மேக்ஸில் பாடல்கள் கேட்டுக் கொண்டு தான் எல்லா வேலைகளும் நடக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது கணினியில் கேட்டுக் கொண்டிருப்பேன். மின்சாரத் தடை அல்லது பயணத்தில் மொபைலில் கேட்டுக் கொண்டிருப்பேன். பாடல் வரிகளை நான் அவ்வளவாக ரசிப்பதில்லை.. இசை மட்டுமே என் விருப்பம்.

இப்போது வரும் தமிழ் சினிமா இசை எல்லாம் தற்காலிகமாகவே இருக்கிறது. அடுத்த நல்ல மெட்டுக்கள் சில வந்தால் முன்னவைகள் காணாமல் போய்விடுகிறது அல்லது முன்னவைகள் கேட்க பிடிப்பதில்லை. என் மொபைலில் சேமித்து வைத்திருப்பது எல்லாம் இளையராஜாவின் “ அரம்பகால” இசைகள் மட்டுமே. அந்த இடத்தை நிரப்ப இனி யாராலும் முடியும் என்று தெரியவில்லை.

இப்போதும் தேவை இல்லாத இசைக் கருவிகளின் இரைச்சலைக் குறைந்தால் இன்னும் சில காலம் கூடுதலாக ரசிக்கலாம் என்று நினைக்கிறேன்.

8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஹிஹி.. தொலைக்காட்சியில் தமிழ் சினிமா பார்ப்பதே இல்லையே :)).. Star movies, HBO வில் மட்டும் தானே சினிமாவே பார்ப்போம் நாங்க.. :)) இப்போ எல்லாம் HBOவில் சப் டைட்டில் எல்லாம் போட்டு அசத்துகிறார்கள். :)) ஹிந்தி படங்களை தியேட்டர் அல்லது டிவில் பார்ப்பது இல்லை.. ஒரு மண்ணும் புரியாம என்னத்தை பார்க்கிறது.

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

சமீபத்தில் விடியோகான் நிறுவனம் குடுத்த ஒரு ஹிந்தி சினிமா தொகுப்பில் லக்‌ஷ்யா பார்த்தேன் சப் டைட்டில் இருந்ததால். :) .. கார்கில் போரை வைத்து எடுத்த உணர்ச்சிப் பூர்வமான படம். நன்றாக இருந்தது.

ஆங்கிலத்தில் ஜுராசிக் பார்க். பாதித்ததா பயமுறுத்தியதா என்று சொல்ல முடியவில்லை. தாக்கம் குறைய பல காலம் ஆகியது.

சமீபத்தில் அண்ணாச்சி வடகரைவேலன் புண்ணியத்தில் கோவை காஸ்மோபாலிடன் க்ளப்பில் அகிராவின் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அரை மணி நேரத்தில் வந்துவிட வேண்டுமென்று நினைத்து தான் போனேன். பிறகு ஒரு மணி நேரம்.. பிறகு 2 மணிநேரம்.. அப்படியே என்னை கட்டிப் போட்டுவிட்டது. 3 மணி நேரம் ஆகியும் வெளியே வர மனமில்லை. துணிதுவைக்கும் கடமை என்னை கெட்ட வார்த்தையில் திட்டி அழைத்ததால் மனமில்லாமல் வெளியே வந்தேன். படங்களின் பெயரை நினைவில் கொள்ள முடியவில்லை. அவ்வ்ளவு அற்புதமான படங்கள்.

சூபப்ர் மேன் மற்றும் ஸ்பைடர் மேன் படங்களை பார்க்கும் போது எரிச்சலாய் வரும். இவைகளுக்கு லுச்சாத் தனமான ஹாரிபாட்டர் கதைகள் எவ்வளவோ மேல். :(.. இவங்களுக்கு எல்லாம் விஜயகாந்த் மற்றும் விட்டலாச்சார்யார் படங்களை யாராவது போட்டு காட்டுங்கப்பா.. :(


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

Pass Boss :))
(....ஒருவேளை எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததால் வேண்டுமானால் தமிழ்சினிமா மேம்படலாம்.. :))... )

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரகாசமாய் இருக்கு. அதற்கு முன் சில கும்பல்களை ஓட ஓட விரட்ட வேண்டும் அல்லது திருந்த வைக்க வேண்டும்.
  • சொந்தமய் யோசிக்கத் தெரியாமல் ஆந்திராவில் இருந்து சுட்டுப் போடும் எடிட்டர்” ரீமேக் மோகன்” குடும்பம்.
  • மகேஷ் படங்களின் பூஜை அன்றே தமிழ் ரைட்ஸை வாங்கி பெட்டியில் பூட்டிவைக்கும் இளைய தலவலிபதி விஜய்
  • சந்திரமுகி, குசேலன் என்று கடன்வாங்கியே காலம் தள்ளும் ரஜினி
  • இரட்டை அர்த்த வசனங்கள் மட்டுமே சினிமா எடுக்க போதுமான் தகுதி என நினைத்துக் கொண்டிருக்கும் எஸ்ஜே.சூர்யா
  • யாராவது ஒருவர் வித்தியசமான கதையில் படமெடுத்து தெரிந்தோ தெரியாமலோ அது நன்றாக ஓடினால் அதே பாணியை பல ஆண்டுகளுக்கு பிடித்து தொங்கும் மசாலா இயக்குநர்கள்.
  • சினிமா எடுக்க காதல் என்னும் கன்றாவியை தாண்டி யோசிக்கத் தெரியாத டூபாக்கூர்கள்
இவர்களை எல்லாம் விரட்ட வேண்டும் அல்லது இவர்களாகவே திருந்த வேண்டும். அபப்டி திருந்தினால் தமிழ்சினிமா பெரிய சிகரங்களை எட்டலாம். பாலிவுட் இன்று இருக்கும் உயரத்திற்கு பல தமிழர்கள் தான் காரணம். ஏன்னா அங்க புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பு உண்டு. அதனால் திறமைசாலிகள் புலம் பெயர்ந்துவிடுகிறார்கள். கோடம்பாக்கத்தில் உப்புமாக்களுக்கு மட்டுமே வாய்ப்பு.

பாலிவுட் = சீனா
கோலிவுட் = இந்தியா

இந்தியா =(அ)> சீனா என்ற நிலை வர நிறைய சீர்திருத்தங்கள் தேவை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய
சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

சினிமா என்பது வெரும் பொழுதுபோக்கு சாதனம். இன்று ஏராளமான பொழுதுபோக்கு சாதங்கங்கள் வந்துவிட்டதால் சினிமா இல்லாதது ஒரு குறையாவே இருக்காது. தமிழர்கள்சினிமாவிற்கு தண்ட செலவு செய்யாமல் ஓராண்டு சேமிப்பு உயரும். மாணர்களின் படிப்பு மேம்படும். மொத்தத்தில் தமிழர்கள் சுபிட்சமாகவே இருபபார்கள்.

சினிமாத் தொழிலை நம்பி இருக்கும் குடும்பங்கள் பெரிய அளவில் பாதிப்படையும் என்பதால் அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்பதே என் விருப்பம்.


............ யப்பா கேள்வி தயாரித்த புண்ணியவான்களா... பள்ளியோடத்துல கூட இம்புட்டு கேள்விக்கு பதில் சொன்னதில்ல்லை... 5 கேள்வி கேட்டாலே 4 கேள்விகளை சாய்சில் விட்டு 5வது கேள்விக்கு சாய்சில் விட்ட 4 கேள்விகளையும் பதிலா எழுதி வைப்பேன். என்னையப் போய் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுத வைச்சிட்டிங்களே... நல்லா இருக்கப்பு.. :(

சுத்தி நின்னு தப்பிக்கவிடாம மாட்டிவிட்ட புண்ணியவதிகளா.. இப்போ சந்தோஷமா.. நல்லா இருங்க நீங்களும்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

அநேகமா இந்த தொடர்பதிவின் கடைசி பதிவு என்னோடதா தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஒருவேளை இதுவரை இந்த தொடரில் மாட்டாத புண்ணியவான்கள் யாராச்சும் இருந்தா என்னோட வேண்டுகோளை ஏற்றதா சொல்லி பதிவு போட்டு மறக்காம இந்த பதிவுக்கு ஒரு லின்கும் குடுங்க.. ( எல்லாம் ஒரு வெளம்பரம் தான். :)) )

சின்ன பதிவா இருந்தாலே எழுத்துப் பிழைகள் எண்ணமுடியாத அளவு இருக்கும். இதை மறுமுறை வாசித்து திருத்தம் செய்ய என் சோம்பேறித் தனம் அனுபதியளைக்காததால் வழக்கம் போல் எழுத்துப் பிழைகளை கண்டுக்க வேணாம்னேன்.:))
--

இதைத் தொடர அருணா அக்காவை மற்றும் பொடிப்பொண்ணை மாட்டிவிடுகிறேன்.. :)

Wednesday, 15 October 2008

சன் குழுமம் எப்போ திருந்தும்?






அடப்பாவிகளா.. அடப்பாவிகளா.. குறைந்த பட்சம் பின்னனி இசையாவது மாத்தி இருக்கலாமேடா? இதுக்கு சன் டிவியை குறை சொல்றதா? இல்லை இசை அமைப்பாளரையா? சன் டிவின்னாலே காப்பி தானோ.. பேசாம சன் குழுமம் என்பதை காப்பி குழுமம் என்று வைத்துக் கொள்ளலாமே.. :(

Sunday, 28 September 2008

சரோஜா - படத்துக்கு வேற எதுனா பேர் வச்சிருக்கலாம்

இதுவரை நானும் எவ்வளவோ கேவலமான சினிமாக்கள் எல்லாம் பார்த்திருக்கேன்.. ஆனா இவ்வளவு கேவலமான சினிமாவை நேற்று தான் பார்த்தேன்... இதை முழு நீளக் காமெடி படமாக எடுத்திருந்தால் கொஞ்சம் ரசித்திருக்கலாம்...

யுவன் பின்னனி இசையை அநியாயத்துக்கு வீணடித்திருகிறார்.. ஒரு நிஜமான திரில்லருக்கு அந்த இசையை பயன்படுத்தி இருக்கலாம்..

ப்ரேம்ஜிக்காக திணித்திருக்கும் situation songs எல்லாம் செம எரிச்சல் ரகம்...

முதல் 45 நிமிடங்கள் எதோ மியூசிச் சானல் பார்ப்பது போன்ற உணர்வு... அடுத்த காட்சிகள் எல்லாம் என்ன செய்வது என்றே தெரியாமல் திணிக்கப் பட்டிருக்கிறது.. சகிக்கலை... நான் இந்தளவு எந்த படம் பார்க்கும் போதும் எரிச்சல் அடைந்தது இல்லை...

அந்த 4 பேரும் யாரிடமாவது அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.. அல்லது யாருமே துரத்தவில்லை என்றாலும் தப்பித்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள் அல்லது தேடி போய் வில்லன் கும்பலிடம் வலுக் கட்டாயமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

ஜெயராமின் லூசுத்தனமான ப்ளாஷ் பேக்... சுத்தமா ஒட்டல.. கர்மம்..

ஒரு பர்சிர்க்காக உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் மீண்டும் ஆபத்தை தேடிப் போகிறார்கள். அதற்கு சொல்லும் காரணம் சுத்த அபத்தம். அதில் இருக்கும் விலாசத்தை வைத்து வில்லன் சரண் வீட்டுக்கு வந்துடுவானாம்... ஏன் வெளிய போலிஸ்ல சொல்ல வேண்டியது தான?

தமிழ்நாட்ல இருந்து போகும் சரணும் அவர் தம்பியும் தெலுங்கில் தான் அதிகம் பேசுகிறார்கள்.. ஆனால் ஆந்திராவில் இருக்கும் அனைவரும் தமிழில் மட்டுமே பேசுகிறார்கள்.. கொடுமைடா சாமி..

பாடல்கள் எல்லாம் பரவாயில்லை...
காட்சி அமைப்பு மகா கேவலம்.. பெரும்பாலான காட்சிகள் ஸ்ளோ மோஷனில் தான் அமைத்திருக்கிறார்கள்.. சீரியல் பார்பப்து போன்ற உணர்வு....

ஒரே ஆறுதல் - ப்ரகாஷ்ராஜ் .. அற்புதமா நடிச்சி இருககார்.. அடுத்து சரண் - மோசம் இல்லை.. கொஞ்சம் நல்லாவே நடிச்சிருக்கார்.. மத்தது எல்லாம் வேஸ்ட்.. பழகின தோஷத்துக்கு வாய்ப்பு கெடைச்சிருக்குன்னு நல்லா தெரியுது..

ப்ரேம்ஜி சொல்லும் காப்பி வசனம் - எவ்வ்வ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாடோமா? மாப்ள.. இனி உங்க குடும்ப படம் தியேட்டர் போய் பாக்க மாட்டோம்டா..

எதாச்சும் கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணுங்க மிஸ்டர் வெங்கட் ப்ரபு.. சகிக்கல உங்க சரக்கு....

இதுக்கு மேல என்னத்த சொல்றது... இனி பழயபடி இணையத்தில் மட்டுமே சினிமா பாக்கறதுனு முடிவு பண்ண வச்ச படம் இது...

... கமல், மணிரத்னம், ஷங்கர் மாதிரி சிலர் படங்கள் மட்டும் விதிவிலக்கு... :)

Sunday, 17 August 2008

சத்யம் - விமர்சனம் + இத்யாதிகள்

சாப்பிடும் போதே பசங்க கிட்ட கேட்டுகிட்டேன். சத்யம் படம் எந்தெந்த தியேட்டர்ல போடறாங்கனு. யமுனா , கவிதால போட்டிருக்காங்க.. யமுனால டிக்கெட் கெடைக்காது( இந்த படத்துக்கு? ) அதனால கவித போங்கன்னு சொன்னாங்க. இந்த 2 தியேட்டர்லையும் படம் பாக்கறதுக்கு பதில் நான் ஊட்டுக்கு கவுந்தடிச்சி படுத்துடுவேன் ராசாக்களானு சொல்லி படம் பாக்கும் திட்டத்திஅ கைவிட முயற்சித்த கடைசி வினாடியில் சென்ட்ரல்ல போட்டிருக்கங்க பாருங்கனு சொன்னாங்க. அப்போ சரி பாத்துட வேண்டியது தான். சென்ட்ரல் தியேட்டர் ரொம்ப நல்லா இருக்கும்.

தியேட்டர் போனதும் கவுண்டரை பார்த்தா ஒரு பயலும் இல்லை. ஆஹா இன்ஹ படத்துக்கு டிக்கெட் இல்லையா? என்ன கொடுமை குசும்பா என்று நினைத்துக் கொண்டே கவுந்தரை நெருங்கி அங்கிருந்த ஒரு பணியாளரிடம் டிக்கெட் இருக்கான்னு கேட்டேன். இல்லை சார் முடிஞ்சதுனு சொன்னான். பாம்பு புத்துகுள்ள இல்லைனா அத புடிச்சி பொட்டியில அடைச்சி வச்சிருப்பாங்கனு எனக்கு தெரியாதா?.. பசங்க கிட்ட கெடைக்குமானு கேட்டேன். வெவரமான பையனா இருப்பான்(ஹிஹி) போலனு நெனைச்சிருப்பார் போல. ஓரம்கட்டினார். அண்ணே எனக்கு மெஜஸ்டிக் இல்லைனா ராக்கர்ஸ் வேணும்னு சொன்னேன். உடனே மெஜஸ்டிக் ஒன்னு குடுத்தார். 30 ரூபாய் தரை டிக்கெட்டை 200 ரூபாய்க்கு விப்பானுங்களே 75 ரூபாய் டிக்கெட்க்கு எவ்ளோ புடுங்க போறானோ .. இன்னைக்கு என் பர்ஸ் காலினு நெனைச்சேன். ஆனா ரொம்ப நல்லவர் போல.. அல்லது ப்லாக்ல கூட வாங்க ஆளில்லை போல.. 100 ரூபாய் தான் வாங்கினார். சரினு பைக்கை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு வந்து ஏசியில் உக்காந்து யோசிச்சதில் ......

  • திருட்டு விசிடி பாக்காதிங்க.. இணையத்தில் பாக்காதிங்க.. சினிமா என்பது பலரில் உழைப்பிலும் வியர்வையிலும் உருவாகிறது. இப்படி பார்ப்பதால் பலரில் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.. என்றேல்லாம் சொல்லி புலம்பும் சினிமா தோட்டத்து காவல்காரர்களே.. ப்ளாக்கில் டிக்கட் விற்பதை நிறுத்தினாலே நங்கள் திருட்டு விசிடி அல்லது இணையத்தை நாட மாட்டோம் என்பது ஏன் உங்களுக்கு உறைக்கவில்லை?
  • ப்ளாக்கில் டிக்கெட் விற்பவர்கள் யாரோ மூன்றாம் மனிதர்கள் அல்ல.பேராசை பிடித்த தியேடர்காரர்களின் ஊழியர்கள் தான்.
  • பல தியேட்டர்களில் படம் வெளிவந்து சில வாரங்களுக்கு கவுந்தரில் டிக்கெட் கொடுப்பதே இல்லை. அவர்கள் ஆட்களை வைத்தே ப்ளாக்கில் விற்கிறார்கள்.
  • 30 ரூபாய் டிக்கெட் 100 ரூபாய்க்கு மேல், 60 ரூபாய் டிக்கெட் 150 முதல் 200 ரூபாய்.. சில படங்களுக்கு 300 ரூபாய்க்கு மேல்...
  • படம் புடிக்கும் உங்களுக்கு மட்டும் தான் காசின் அருமை தெரியுமா? நீங்கள் மட்டும் தான் கஷ்டபட்டு சம்பாதிகிறிங்களா? நாங்க எல்லாம் கொள்ளை அடித்தா சினிமா பார்க்க வருகிறோம்.
  • நடிப்பு என்றால் என்ன என்றே கேள்விப் பட்டிராத பதுமைகளை மனித பொம்மைகளை அழைத்து வந்து அவர்களின் உடலின் அங்கங்களை மட்டுமே காட்டுவதற்கு கோடிகளில் சம்பளம் குடுப்பதை நிறுத்துங்கள். பன்ச் டயலாக் பேசியும் மரத்தை சுத்தி பாட்டு பாடியும் ( அதுவும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து மரங்கள்) மேக்கப்பில் முகத்தை அழகாக்கி இடுப்பில் கயிறு கட்டி தாவி தாவி சண்டையிடும் நடிகர்களுக்கு கோடிகளில் குளிப்பாட்டுவதை நிறுத்துங்கள்.
  • இதை எல்லாம் குறைத்தால் திரை அரங்கிற்கு குறைந்த விலையில் படங்களை விற்கலாம். அவர்களும் நியாயமான விலையில் டிக்கெட் விற்பார்கள். மக்களும் நியாயமான விலை குடுத்து சினிமா பார்க்க வருவார்கள்.
  • நீங்கள் செய்யும் இந்த மொள்ளமாறித் தனங்களுக்கு நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை தண்டமாக வாரி இரைத்து தியேடருக்கு வந்து உங்களை ஆராதிக்க வேண்டுமா?
  • அப்படியே போனாலும் ஒழுங்காவா படம் எடுக்கிறிங்க? அரசியல்வாதிகள் மேடைகளில் அரசியல் எதிரிகளை திட்ற மாதிர் இவனுங்க சினிமா போட்டியாளர்களை சினிமாவில் திட்டிகிட்டு இருக்கானுங்க. அதை நாங்க காசு குடுத்து கேக்கனுமாம். கருமாந்திரம் புடிச்சவனுங்களா..
  • இனி எவனாச்சும் திருட்டு விசிடில பாக்காதிங்க.. இணையத்துல பாக்காதிங்கனு சொல்லிப் பார்ருங்க.. ரஜினி கிட்ட சொல்லி உதைக்க சொல்றேன்.
சரி.. இந்த பதிவு சத்யம் படம் விமர்சனம்னு தானே சொன்ன.. அது எங்கடா?..
விஜய் டிவில நம்ம சிசூசா சிம்பு ஒரு நடன ஜோடிங்க கிட்ட கேட்ப்பார்.. இந்த செருப்பு எந்த கடைல வாங்கினிங்க? கர்ச்சீப் எங்க திருடிங்க.. இப்டி எல்லாம்.. அப்போ தீதி பாட்டி குறுகிட்டு கேப்பாங்க.. சிம்பு.. இவங்க டான்ஸ் பத்தீஈஈஈ...
சிசூசா சொல்வார் " என்ன சொல்றதுன்னே தெரியலைங்க.. அதான் இப்டி பேசிட்டு இருக்கேன்னு"..

இப்போ என் நிலைமையும் தான்.. :)
ப்ளாக்ல டிக்கெட் வாங்கிட்டு தியேட்டர்ல போய் உக்காந்தா.. அடங்கொய்யால.. பாதி சீட்டு காலி.. இதுல பக்கத்துல ஒரு இம்சை கும்பல்... சர் நாங்க ஒன்னா வந்திருக்கோம். 2 சீட் மட்டும் வேற எடத்துல தான் கிடைச்சது. நீங்க அங்க போய் உக்காந்துக்கிறிங்களா என்று.. ஏண்டா டேய் தியேட்டருக்கு சினிமா பாக்க வரிங்களா இல்ல சோறு திங்க வரீங்களாடா? ஒன்னாவே உக்காந்து என்னடா புடுங்க போறிங்க..:(... அப்புறம் என்ன பண்ணி தொலையறது... அந்த கும்பல்ல பாதி பேர் பொண்ணுங்க.. போய் தானே ஆகனும்.. அட தாய்குலத்துக்கு மரியாதைங்க..

  • விஷாலை போலிஸ் உடையில் பார்க்க பல்லி போலிஸ் உடை போட்ட மாதிரி இருந்தது.
  • போலிஸ் உடை மட்டும் என்று இல்லாமல் எந்த உடையுமே அவருக்கு பொருத்தமா இல்லை.. காஸ்ட்யூம் டிசைன் செம சொதப்பல்...
  • ஒரு பாடலில் யார் குறைவான ஆடை உடுத்துவது என்று விஷாலுக்கும் நயனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.
  • ஒவ்வொரு ஃப்ரேமிலும் யாரையாவது பந்தாடிக் கொண்டே இருக்கிறார் புரட்சிதளபதி விஷால்.
  • நயன் முன்புறம் பார்ப்பதை விட பின்புறத்தில் பார்க்க அழகாக இருக்கிறார். (என்னாது எப்டி பார்த்தாலும் ஒன்னு தானா.. குசும்பா .. கல்யாணம் ஆகியும் திருந்தலையா நீங்க? :P)
  • அந்த குட்டி பசங்கள எதுக்கு நடிக்க வச்சாங்கனு தெரியலை. அந்த சீன்களையும் பு.த.வுக்கே கொடுத்திருந்தால் பாவம் ஆசை தீர இன்னும் யாரையாவது பந்தாடி இருபபார்.
  • பாடல்கள் அனைத்தும் வலுக்கட்டாயமாக் திணிக்கப் பட்டிருக்கு. அதுவும் அந்த முதல் பாடல்... எந்த காரணமும் இல்லாமல் ஒரு டூயட். கர்மம்.. கர்மம்..
  • சிறையில் வில்லன் கம் எக்ஸ் போலிஸ்காரருடன் பேசும் போதும் க்ளைமாக்ஸில் இரண்டு வில்லைன்கள் தலையிலும் துப்பாக்கி வைத்துக் கொண்டு பேசும் போதும் "நின்று கொண்டே ஆய் போகிறமாதிரி" தெரிகிறார். :)
  • புரட்சிதளபதி கழுத்துக்கு கீழ் எடுத்திருக்கு சிரத்தையை சற்று முகபாவணைக்கும் எடுத்திருக்கலாம்.
  • முதல் காட்சியிலேயே " நான் பொறுக்கி இல்லை.. போலிஸ்" என்று விக்ரமை வம்புக்கு இழுக்கிறார்.
  • முதல்வரை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போதும் மந்திரிகள் பவ்யமாய் இடுப்பில் துண்டை கட்டிகொண்டு அவரை இதய தெய்வமே என்று அழைக்கும் போது ஏனோ யாரோ மனதில் வந்து போகிறார்கள்.
  • முதல் காட்சியிலும் கடைசிகாட்சியிலும் பறந்து குருவி விஜயை மிஞ்சி இருக்கிறார்.
  • பனியனோடு நயன் கட்டிலில் உருளும் காட்சி நன்றாக இருப்பதாக சொல்லி எனக்கு டிக்கெட்டுக்கு100 + பாப்கார்னுக்கு 20 ரூபாய் செலவு வைத்த லக்கி ஒழிக. அப்டி ப்ரமாதமா எதும் இல்லை.
  • இந்த சோதாப் பயலை NCC பசங்க கூட கம்பேர் பண்ணதுக்கு லக்கிக்கு ஒழிக நெ2.

நயன்: என்னாது.. விஷாலை ஹீரோயினா போட்டிருக்கலாமா? மைண்ட் யுவர் டங் மிஸ்டர். மங்களூர் சிவா.

Sunday, 15 June 2008

தசாவதாரம் - பார்க்க வேண்டிய படம்


என்னை பொறுத்தவரை சினிமா என்பது முழுக்க முழுக்க பொழுது போக்கு ஊடகம் தான். ஆனால் மக்கள் பெரும்பாலும் பாடம் படிக்கவே தியேட்டர் வருவதாக நினைத்து எப்போ பாத்தாலும் மெசேஜ் சொல்லியே படம் எடுக்கும் கருத்து கந்தசாமிங்க இம்சை தாங்கல. நாங்கலாம் வகுப்பறைல சொல்லி தந்ததயே காதுல வாங்கினது இல்லைனு தெரிஞ்சும் இந்த தப்பை பன்றானுங்க நம்ம சினிமாகாரங்க. அதுவும் இல்லைனா மரத்த சுத்தியே எப்போவும் பாட்டு பாடறானுங்க. அதுவும் இல்லைனா எல்லா படத்துலையும் பறந்து பறந்து சண்டை போடறானுங்க.

இவர்களுக்கு மத்தியில் கமல் ரொம்பவே வித்தியாசம் தான். எப்போதும் ஒரே மாதிரி படம் கொடுத்து போர் அடிபப்தில்லை. சினிமா என்பது பொழுது போக்கு அம்சம்தான் என்பதை உணர்ந்து ஒவ்வொரு படத்திலும் எதாவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் நம்மை ரசிக்க வைக்க "முயற்சி" செய்கிறார். இந்தியன், அவ்வை சண்முகி, ஆளவந்தான் வரிசையில் அவைகளை தூக்கி சாப்பிடும் வகையில் இது அபாரமான முயற்சி. நம்மை ரசிக்க வைக்க ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார். இது தான் உண்மையான கலைஞனுக்கான அடையாளம்.

சும்மா மரத்தை சுத்தி பாட்டு பாடியும், பறந்து பறந்து மட்டுமே சண்டை போட்டும், யதார்த்தமாய் கழட்டுகிறேன் என்று சொல்லி நம் பக்கத்து வீட்டில் நடப்பதயே சினிமாவாய் எடுத்து திரையிலும் காட்டி அல்வா கொடுக்கும் மஞ்சமாக்கனுங்களை விமர்சிபது போல் இந்த கலைஞனின் உழைப்பையும் விமர்சனம் என்ற பெயரில் கொச்சை படுத்த விரும்பவில்லை.

தொழில்நுட்ப ரீதியில் கலக்கி இருக்கிறார்கள். லாஜிக் விளக்கெண்ணைகளை தவிர்த்து வித்தியாசமான , புதுமையான முயற்சியை ரசிக்கும் மனது இருந்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

Saturday, 29 March 2008

இயக்குனர் சீமானை உதைக்கலாமா?

வெளிவராத ஒரு சிங்கள படத்தின் இயக்குனரை சிலருடன் இணைந்து இயக்குனர் சீமானும் தாக்கி இருக்கிறார். இது போன்ற கீழ்த்தரமான இயக்குனர் இருப்பது தமிழ்சினிமாவின் சாபக்கேடு. தாக்குதலுக்கு காரணம் அவர்களின் கொள்கை(!?)க்கு மாறாக அந்த சிங்கள படம் இருக்கிறது என்பது தான். படமே வெளிவராத நிலையில் இவர் எப்படி அதை கண்டுபிடித்தார் என தெரியவில்லை. ஒரு வேளை இவர் சொல்லும் காரணம் நிஜமானதாகவே இருக்கட்டும். அப்படியானால் ஒருவர் எடுக்கும் சினிமா நம் கொள்கைகளுக்கு மாறாக இருந்தால் நமக்கு பிடிக்காத வகையில் இருந்தால் அந்த படத்தின் இயக்குனரை உதைக்கலாம். அப்படித்தானே.

சீமான் எடுத்த எல்லா படங்களுமே எல்லோருக்குமே பிடித்தவை தானா?. எதோ காரணத்தால் எத்தனையோ பேருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம் இல்லையா?.. அப்போ அவங்க எல்லாம் சேர்ந்து இந்த டுபாக்கூர் இயக்குனர் சீமானை உதைக்கலாமா?

சுப.வீ.பா மற்றும் கோஷ்டி எதிர்க்கிறார்கள் என்றால்... அவர்களுக்கு தேவை இருக்கிறது எதிர்க்கிறார்கள். இவரும் ஒரு இயக்குனராக இருந்துக்கொண்டு இதை எபப்டி செய்யலாம்? நாளை இவருக்கும் இந்த நிலை வந்தால் யாரையும் இவர் குறை சொல்லமாட்டாரோ?...

இதில் வேடிக்கை .. சுப.வீ யின் அண்ணன் தான் இயக்குனர் திரு. முத்துராமன் அவர்கள். :) இவர் இன்னொரு இயக்குனரை தாக்குவதற்கு முன் யோசித்திருக்க மாட்டாரா? நம் அண்ணன் எடுத்த படங்கள் கூட யாருக்காவது பிடிக்காமல் இருந்திருக்கலாமே.. அவர்களும் நம் வழியை பின்பற்றினால் என்ன செய்வது என்று....

Sunday, 3 February 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

வடிவேலு ஒரு நாடக நடிகர். அவருக்கு கல்யாணத்துல எதோ தோஷம் இருக்காம். அவருக்கு 2 மனைவிகள் அமைவாங்களாம். அதுல முதல் மனைவி
இறந்துவிடுவாராம். அதனால ஊரில் புதிதாய் தோன்றி இருக்கும் ஒரு கற் (பெண்) சிலைக்கு வடிவேலுவை கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இந்த கல்யாணம் முடிந்து வடிவேலு அண்ட் கோ சென்றவுடன் அந்த கற்சிலைக்கு உயிர் வந்துவிடுகிறது. அவள் தான் இந்திரலோகத்து ரம்பையாம். பூமிக்கு சுற்றுலா வந்த ரம்பை, சூரிய அஸ்தமணத்திற்குள் தேவலோகம் செல்லாததால் "ஒரு பகல் ஒரு இரவு" கற்சிலையாக பூமியில் இருக்க வேண்டும் என இந்திரனால் சபிக்கப் பட்டு அந்த சாபத்தை ரம்பை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சைக்கிள் கேப்பில் தான் வடிவேலு ரம்பையை கல்யாணம் செய்துக் கொள்கிறார்.
கல்லாக இருக்கும் போது கட்டினாலும் கண்வன் தானே என்று ரம்பை 2 பூதங்களை அனுப்பி வடிவேலுவை இந்திரலோகத்துக்கு தூக்கி வர செய்கிறாள். இரவு அவளுடனும் பகலில் பூமியிலும் இருப்பாராம். ஹூம்.. மச்சம்டா கருப்பா என்று நான் நினைத்திருப்பேன் என்று தவறாக நினைக்க வேண்டாம் . ப்ளீஸ் :P..
நாயகி நல்ல உயரமாக அழகாக இருக்கிறார். ரசிக்கலாம்.

இந்திரலோகத்தில் ரம்பை ஒரு படிகத்தை தருகிறாள். இதை வைத்திருந்தால் யார் கண்ணிற்க்கும் வடிவேலு தெரிய மாட்டாராம். அதை வைத்துக் கொண்டு வடிவேலு சொர்கம் நரகம் இரண்டையும் சுத்தி பார்க்கிறார். நா.அழகப்பன் மட்டுமல்ல.. இந்திரன், எமன் எல்லோரும் வடிவேலு தான். எமன் வடிவேலு 23ம் புலிகேசியை நினைவு படுத்துகிறார். ஆனால் புலிகேசி அளவுக்கு ரசிக்க முடியவில்லை.

[இடைவேளைக்கு பிறகு]

தன்னுடன் கொஞ்சி விளையாடும் ஒரு குட்டி பாப்பா இறந்ததும் பொங்கி எழுகிறார் வடிவேலு. குழந்தையின் உயிரை பறித்த எனம் உயிரை பறிக்க திட்டம் போட்டு அதற்காக பூமியில் இருந்து சாராயத்தை எமலோகத்துக்கு எடுத்து சென்று காமெடி பண்ணுகிறார். சகிக்கல.

இறந்த குழந்தைகள் சொர்கத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு, இதை அவர்களின் பெற்றோர்கள் பார்த்தால் ஆனந்தப் படுவார்கள் என்று கூறி கண்ணீர் மலக வசனம் பேசுவது தான் படத்தின் மிகப் பெரிய காமெடி.:).. முடியலடா சாமி..

மனிதர்களை கொத்து கொத்தாக(இதென்ன வார்த்தை பிரயோகம்?) கொல்ல எதேதோ செய்தாலும் அதனை மனிதர்கள் முறியடித்துவிடுவதாக பொலம்பிவிட்டு க்ளைமாக்ஸில் மனிதர்கள் தாங்களே சாவை தேடிச் சென்றுவிட்டு அதற்கு தன் மீது பழி போடுவதாகவும் டகால்டி டையலாக் விடுகிறார். ஏண்டா... என்னதான் காமெடி படம்னாலும் ஒரு ஞாயம் வேணாமாடா? :(
வடிவேலு மேலோகத்தில் தான் பார்த்தவைகளை தன் அம்மாவிடமும் நண்பர்களிடமும் சொல்வதால், அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி பேயோட்ட வருகிறார் ஸ்ரேயா. வந்து வசனம் எதும் பேசி சிரமப் படாமல் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டு போகிறார். அடப் பாவிகளா இதுக்காடா 30 லாவன்னா குடுத்திங்க? :( இதுல வடிவேலு 10 லாவன்னா குடுத்தாராமில்ல.. லேசா கட்டிபுடிக்க கூட இல்லையே.. அட ஸ்ரேயா பாதத்துல கூட முத்தம் தரலயே. இதுக்கு எதுக்குடா கருப்பா 10 லாவன்னாவ வீணடிச்ச? ஹ்ம்ம்ம்.... இதுக்கு தான் கஷ்டப் பட்டு சம்பாதிக்கனும்னு சொல்றது?அற்பனுக்கு வாழ்வு வந்தா....?

ஸ்ரேயாவ இப்படி வீணடிச்சிட்டாங்களே படுபாவி பயலுகன்னு நெனச்சி முடிக்கறதுக்குள்ள இந்திரலோகத்துல ரம்பை ஏடாகூடமா படுத்து நெளியறா.ஸ்ரேயா சம்பளத்துல பாதிய புடுங்கி இந்த பொண்ணுக்கு குடுங்கடானு மங்களூர் சிவா மாமா போராட்டம் நடத்துவதாக கூறியிருக்கிறாராம். :P
தன்னை பூமியில் வறுத்தெடுத்த காவலர் மேலோகம் வந்ததும் அங்கு தரும் தண்டணைகளை பார்த்து, பயந்து அழுது " இந்த தண்டணை எல்லாம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால் நான் தப்ப்பெ செய்திருக்க மாட்டேனே" என்று பேசுவதை கேட்டதும் அழகப்பன் மனதில் பொரி பறக்கிறது.( பில்ட் அப் :P.. கண்டுக்காதிங்க..).. நரகத்தில் கிடைக்கும் தண்டனைகள் தெரியாம தான் மக்கள் பூமிய்ல் தப்பு பண்றாங்களாம்.உடனே இந்திரலோகத்தின் ரகசிய அறைக்கு சென்று மனிதர்களின் ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்துக் கொண்டு பூமிக்கு சென்று மக்களை திருத்துகிறார்... டேய்.. அடங்குங்கடா டேய்.. தாங்க முடியல..

பிறகு எமனை கொல்வதற்க்கு முயன்றது வடிவேலு தான் என்பது தெரிந்ததும் எனம் பொங்கி எழுந்து வடிவேலுவை துரத்திக் கொண்டு இந்திரலோகம் வருகிறார். அங்கு ரம்பை எமனுடன் வாக்குவாதம் செய்கிறார். இதில் இந்திரன் தலையிட்டு ரம்பைக்கும் வடிவேலுவுக்கும் சாபம் குடுக்கிறார். இதனால் வடிவேலு 90 வயது முதியவராகவும் ரம்பை ஆவியாகவும் உலா வருகிறார்கள்.வயோதிக வடிவேலு சாபம் பெற்றதிலிருந்து விமோசனம் பெரும் வரை காரணமே இல்லாமல் கூட அழுதுவடிகிறார்.

ரம்பை குடுக்கும் படிகத்தை வைத்துக் கொண்டிருந்ததால் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருக்கும் வடிவேலு நாரதர் நாசர் கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் தெரிந்தாரோ? புரியவில்லை.

நாரதர் கலகம் நன்மையில் முடியவேண்டுமல்லவா?(அப்டியா?!).. அதனால் பிரகஸ்பதி இந்த சாபத்திற்கு சாபவிமோசனம் சொல்கிறார். அதாவது ஆவியாக் திரியும் ரம்பை வடிவேலுவின் கலுத்தில் மாலை அணிவித்தால் இருவருக்கும் சாப விமோசனம் கிடைத்து பழய நிலையை அடந்துவிடுவார்களாம். இது தான் க்ளைமாக்ஸ். இதற்காக இவர்கள் செய்யும் கோமாளித் தனங்கள் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது. இழு இழுனு இழுக்கறாய்ங்கப்பு. :(

பிறகு ஒருவழியாக ரம்பை உருவத்தில் இருக்கும் ஒரு வட இந்தியப் பெண்ணின் உடலில் புகுந்துக் கொள்ளும் ரம்பையின் ஆவி தமிழில் பேசுவதைக் கண்ட அவர்கள் பெற்றோர்கள் தீவிர ஆராய்ச்சி செய்து அதன் விளைவாக மதுரை அழகர் கோவிலுக்கு அந்த பெண்ணை அழைத்துவந்து வடிவேலு கழுத்தில் மாலையிட செய்து ரம்பைக்கும் வடிவேலுவுக்கும் சாபவிமோசனம் கிடைத்து நாரதர் ரம்பைக்கு எதார்த்தத்தை புரிய வைத்து அந்த வட இந்திய பெண்ணையே வடிவேலுக்கு திருமணம் செய்து வைத்து..... ஸ்ஸ்ஸ்..அப்பாடா.. தாறுமாறா நம்ம கண்ண கட்டி படத்த முடிக்கிறாங்க.

தயவு செய்து யாரும் புலிகேசி போல் இருக்கும் என்று நினைத்து இந்த படத்தை பார்க்க செல்ல வேண்டாம். மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.
எமன் வேஷத்துக்கு வினுசக்கரவர்த்தியை பயன் படுத்தி இருக்கலாம்.

இடைவேளைக்கு முன் : பார்க்க சென்ற பாவத்திற்காக பார்க்கலாம்.
இடைவேளைக்கு பின் : முதல் பாதியை பார்த்த பாவத்திற்கு தண்டணை.

ஷொட்டு

  • நாயகியின் நாட்டிய நடனங்கள். அற்புதமாக ஆடுகிறார். அழகாகவும் இருக்கிறார்.
  • நாரதராக வரும் நாசரின் நடிப்பும் ஒப்பனையும். மிகையாகவுமில்லாமல் குறையாகவும் இல்லாமல் சரியாக செய்திருக்கிறார்.
  • தோட்டா தரணியின் கலை. அழகான செட்கள்.
  • இந்திரனாக வரும் வடிவேலு கொஞ்சம் ரசிக்க வைக்கிறார்.

குட்டு
  • அழகப்பன் வடிவேலு லிப்ஸ்டிக்கை குறைத்திருக்கலாம். ராமராஜன் தேவலை.
  • புலிகேசியின் சுவடுகள் மறையும் முன் அதே போல் எடுக்க முயற்சித்தது.
  • இடைவேளைக்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் இயக்குனர் பேய் முழி முழித்திருக்கிறார்ர்.
  • க்ளைமாக்ஸ் இழுவை.
இதை இந்தியில் மொழிபெயர்த்தால் புதியதாக ஆரம்பித்திருக்கும் NDTV Imagineல் இந்திய தொலைகாட்சிகளில் முதன் முறையாக என்று ஒரு ரவுண்டு வரலாம்.

சந்தேகம் சஞ்சய்காந்தி asks...
  • இது காமெடிப் படமா இல்ல அழுகாச்சி படமா?
மதிப்பெண் : 80 க்கு 35. (80 = ப்ளாக்கில் வாங்கிய டிக்கெட் விலை)

ப்ளாக் டிக்கெட்கள் டிக்கெட் கவுண்டர் அருகில் தான் விற்க்கப் பட்டது.அந்த இடத்தில் விற்க தியேட்டர் ஊழியர்களால் தான் முடியும். நான் வாங்கும் போது ஏராளமானோர் வாங்கினார்கள். எல்லாரும் அப்போதைய காட்சிக்காகத் தான் வாங்கினார்கள். அப்படினா என்ன வெங்காயத்துக்கு ஹவுஸ்ஃபுல் போர்ட். அரசாங்கம் நிர்ணயித்த விலையைவிட அதிக விலையில் விற்க இந்த அய்யயோக்கியத் தனம்.

Tamiler This Week