இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday 28 May, 2009

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4

புதியவர்கள் மட்டும் கீழே படிங்க. ஏற்கனவே இதைப் பற்றித் தெரிந்தவர்கள் நேரடியாக படத்தைப் பார்த்து கவிதை சொல்லிடுங்க.


இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க
. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.

கவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.

தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)

இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .


இந்த வாரப் படம்..

முந்தையக் கவிதைகள் படிக்க : பேசும் கவிதைகள்.

16 Comments:

said...

// தமிழர்ஸ் - Tamilers said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்//

ஆஹா.. கவிதை.. கவிதை..

என்னமா ரசிச்சு எழுதியிருக்காங்க :)

said...
This comment has been removed by the author.
said...

இனணயற்ற ஒவியன் பிரம்மன்
எந்த தூரிகை கொண்டு உன்னை
வரைந்தனன் உன் வண்ணம் என்ன‌
வானவில்லில் கடைந்ததோ

நற்றமிழும் அற்றமிழும்
நாணம் கொள்ளும்
நின் அற்புத வதனத்தின்
அழகை பகர இயலாது

ஒவியங்கள் அசைவதில்லை
நீ மட்டும் அசைந்தாடும்
உயிரோவியமாய்!!!!

said...

மேகத்தையும்
காற்றையும்
முந்திச் சென்றாய்!!!
நீ!
வேகத்தில் அல்ல....
அழகில்!!!!
அன்புடன் அருணா

said...

நிறங்களாய்
கடலும் வானும் உறைந்திருக்க
ஈரமண்ணில் தடம் பதித்து
சிறகடித்து சிரிக்கின்றன
பிஞ்சுக் கால்கள்
ஓவியத்திற்கு
உயிர் தெளித்து!!

said...

ஓடி வரும்
ஓவியமே
துரத்துவது
யாருன்னை

ஓயாத நீரும்
ஒய்யார வானும்
ஓட ஓடத்
துரத்திடுதோ

ஒப்பில்லா
அழகுக்கு
போட்டி நீ
என்றெண்ணி

said...

இறைவா,
இந்த தேவதைக்கு
காப்பி ரைட் போட்ட
கார்பரேட் கம்பெனிக்கு
என்னை முதலாளியாக்கு.
( இது கவிதையில்ல, வேண்டுதல்)

said...

இங்கே என் கவிதை

எனக்கென்று நீ பிறந்தாய்
அலைகடலென ஆர்பரித்தாய்
கண்ணே குதுகளித்தாய்
என் வாழ்வில் வசந்தம் மலரச்செய்தாய்


(எழுதியவர், கல்யாணம் ஆகாத பேச்சிலர் ராஜு )

said...

இங்கே என் கவிதை

எனக்கென்று நீ பிறந்தாய்
அலைகடலென ஆர்பரித்தாய்
கண்ணே குதுகளித்தாய்
என் வாழ்வில் வசந்தம் மலரச்செய்தாய்


(எழுதியவர், கல்யாணம் ஆகாத பேச்சிலர் ராஜு )

said...

மகிழ்வாய் பறக்கிறது ஒரு பஞ்சவர்ணம்
தன் வர்ணமான எதிர்காலத்தை நோக்கி...

regards,
Bharat

said...

யாழினிது குழலினிது.

மேலும் கீழும்
நீலநிறப் பொறிகள்
ஊன்றிய காலடியின்
அடியில் பற்றிய மணல்
மோனவெளியில் மாயமாக ;
ஓட ஓடத் துரத்தும்
அலையின் நாக்குகளுக்கு
இரையாகும் சுவடுகள் ;
எது குறித்தும் கவலையற்று
என்னை முந்தியோடும்
பிஞ்சின் கொலுசொலிகள்.

said...

தன்னழகு கொண்டு
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்,
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......

said...

புத்தக பொதி மறக்கும்
அத்துனை நேரங்களும்
ஆனந்த கூத்தாடுவோம்..

said...

அழகுக்கு அழகு சேர்க்கிறது
நீல வானமும்,
அலையற்ற கடற்கரையும்...


-Bharat

said...

வானம் கொண்ட நீலம் உண்டு
கடல்கள் உமிழ்கின்றன நிறங்கள் என்று
இராமன் அன்று சொன்னான்!

என்றும்
வானம் கொள்ளும் வண்ணங்கள் யாவும்
சில சின்னக் கைகளின் மந்திரக் கட்டளையாலோ?!

சின்னக் கால்களின் சிறு துள்ளல்கள் கண்டு
மேகக் கூட்டங்களும் கன்னம் சிவப்பதும் உண்டோ?!

said...

siragai virirthu parappathu malalai mattumillai en manadum thaan
s.seduraman

Tamiler This Week