இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Thursday 7 May, 2009

படம் பார்த்து கவிதை சொல்லுங்க - 1

வணக்கம் மகா ஜனங்களே..!
ஓவரா மொக்கை போட்டு லைட்டா போரடிக்கிது. அதனால ஒரு புது முயற்சி உங்கள் ஆசிகளுடன். இனி ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஒரு படம் போட்டு பதிவு வரும். இதில் இருக்கும் படத்தைப் பார்த்து பின்னூட்டத்தில் கவிதை சொல்லிட்டுப் போங்க. அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும். அந்த ஒரு கவிதை எது என்பதை ( ஒன்றுக்கு மேல் எழுதுபவர்கள்) கடைசி நாளுக்குள் குறிப்பிட்டு சொல்லிவிட வேண்டும். புதனுக்கு மேல் வரும் கவிதைகள் தனி வலைப்பூவில் பதியப் பட மாட்டாது. ஏனெனில் வியாழன் அன்று முந்தைய வாரத்துக்கான படமும் கவிதைகளும் பதிவிடப் படும்.

கவிதை ஹைக்கூவாகவும் இருக்கலாம். 25 வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

இங்கே பரிசுகளோ, கவிதையின் தரமோ அறிவிக்கப் பட மாட்டாது. இந்த பதிவின் பின்னூட்டத்தில் வரும் அத்தனைக் கவிதைகளும் படத்துடன் சேர்த்து ஒரு தனி வலைப்பூவில் சேமிக்கப் படும். அந்த வலைப்பூவும் அனைவரின் காட்சிக்கும் வைக்கப் படும். கவிதைகள் பற்றிய பின்னூட்டங்களோ கும்மிகளோ தாராளமாக அங்கே அரங்கேற்றலாம்.

தனி வலைப்பூவில் வெளியிட்ட பின் யாராவது கவிதைத் திறமைசாலிகள் (எனக்குத் பழக்கமானவர்கள் : அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் ) தனிப் பட்ட முறையில் பின்னூட்டத்தில் சிறந்த கவிதைகளை பட்டியலிடலாம். சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுப்பவர்களும் படத்திற்கு கவிதை எழுதலாம். ஆனால் தேர்வு செய்யும் போது அவர்கள் கவிதை தவிர்த்து பிறர் கவிதைகளை தேர்வு செய்யலாம். இது அவர்களின் தனிப் பட்ட முடிவு மற்றும் ரசனையாக இருக்கும். மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. :)

இங்கே முடிந்த வரை கும்மி அடிக்காமல்( இந்த பதிவுகளுக்கு மட்டும்) இருக்க பணிவுடன் வேண்டுகிறேன்.

டிஸ்கி : யார் வேண்டுமானாலும் இதற்கு படம் அனுப்பலாம். கவிதைகள் எழுத ஏற்றது போல் வரைந்தும் அனுப்பலாம். படங்கள் அனுப்ப வேண்டிய முகவரி : blogsking@gmail.com .

இந்த வாரப் படம்..

...ரெடி... ஸ்டார்ட் மீஜிக்.... :)

111 Comments:

said...

நல்ல முயற்சி. கவிதைக்கும் எனக்குமான உறவு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் உள்ளததைப் போல.

சோ, இப்ப அப்பீட்டு

யாராச்சும் கவிதை எழுதினா

படிக்க அப்ப ரிப்பீட்டு

said...

Kalakkareenga ponga :)))

kavithai mattum dhaan accepteda? kavujaiyum accepteda ;-) rendavadhum ok na konjam neram kazhichu vandhu edhaavadhu poda try pandren :)

said...

தலைப்புகளோடு மட்டுமே
முற்றுபெறும் கவிதைகள்...
ஆழ்ந்த யோசனைகளினூடே
அதிக இனிப்புடன் தேநீர்....
வாசனை வரங்களை
பன்னீருக்கு பரிசளித்த பூக்கள்.....
காதுகளை கடன்கொடுக்க
காற்றில் கரையும் கானம்...
கதகதப்பாய் குளிர்காய
கணங்கள் நீட்டும் அவன் நினைவுகள்....
ஜன்னலோரத்தில் நான்....
மழைக்கம்பிகளின் குத்தலிலிருந்து
விடுபட வழி தேடி ஜோடிப்புறாக்கள்....
எல்லோருக்குமாய்
எதற்கு பெய்ய வேண்டும் மழை?

said...

ஏற்கனவே எழுதின கவிதை தான்.. இந்த படத்துக்கு மேட்சா இருந்தது போட்டுட்டேன்.. :))

said...

உன்னை பிரிந்து விட்ட துக்கத்தில்
வானத்து தேவதைகள் எல்லாம்
கண்ணீர் விட்டு அழுகின்றன..
உன் பிறந்தநாள் தோறும் மழை..

said...

விட்டு விட்டது மழை
விடவில்லை தூவானம்
நாற்றமடிக்கிறது
கிடை தண்ணீர்
எப்பொழுது வ(வி)டியும்

said...

//அடுத்த வாரம் புதன் வரை கவிதை சொல்லலாம். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் கவிதை சொல்லலாம். ஆனால் நிச்சயம் ஒருவருக்கு ஒரு கவிதை மட்டுமே ஏற்றுக்கொள்ளப் படும்.//

மாமனே இந்த பிடித்துக்கொள் என் கவிதையை!





ன்

said...

சர
வண
ன்

said...

சரவ
ணன்

said...

ன்





(ரிவர்சபுள் கவிதை மாமா)

said...

போதுமா இன்னும் வேண்டுமா?

said...

//ஓவரா மொக்கை போட்டு லைட்டா போரடிக்கிது. //

உங்களுக்கு லைட்டா! எங்களுக்கு???:(


//அனுஜன்யா, ஜ்யோவரம் சுந்தர், வடகரைவேலன் அண்ணாச்சி, பரிசல் போன்றவர்கள் மற்றும் பலர் //

வடகரைவேலன் அண்ணாச்சி உங்களையும் ஹிட் லிஸ்டி சேர்த்துவிட்டார் என் மாமன் இனி உங்களை தனியாக கவனிக்கவேண்டும்:)

said...

hey its really different pa

yosichu elutharen

sariya

kandipa intha kavithai race la

kalanthukaren

said...

//நல்ல முயற்சி. கவிதைக்கும் எனக்குமான உறவு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் உள்ளததைப் போல.//


மீ டூ

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

said...

//ஸ்ரீமதி said...

ஏற்கனவே எழுதின கவிதை தான்.. இந்த படத்துக்கு மேட்சா இருந்தது போட்டுட்டேன்.. :))//


செல்லாது

செல்லாது


போயிட்டு வேற கவிதை யோசிச்சு கொண்டு வாங்க!

said...

///ஆயில்யன் said...
//ஸ்ரீமதி said...
ஏற்கனவே எழுதின கவிதை தான்.. இந்த படத்துக்கு மேட்சா இருந்தது போட்டுட்டேன்.. :))//
செல்லாது
செல்லாது
போயிட்டு வேற கவிதை யோசிச்சு கொண்டு வாங்க!///

என்னங்க இது கூத்து.. கவுஜாயினிகளே இப்படி அப்பீட் ஆனா என்ன அர்த்தம்?/?.. ;-))

said...

என் நினைவுகளைப் போலவே
கலங்கலாக இருக்கும்
புது மழையின் தூறல்களே!
உங்களுக்குத் தெரியுமா?
நானும் ஒருநாள் உங்களைப்
தெளிவாகவே வந்திறங்கி
இப்பூமியில் இருந்தேன்.

(கவிதை இன்ஸ்யூர் செய்யப்படுகின்றது.. By தமிழ் பிரியன்)

said...

உனக்காக
காத்திருக்கும்பொழுது
மழைத்துளிகளை ரசிக்கிறேன்
உன் கன்னக்குழிகளின்
ஞாபகம் வருவதால்!

said...

கவிதையாஆஆஆஆஆஆஆஆஆஆ

said...

என் வீட்டு வாசலில் பார்த்தபோது
எனக்கு வந்தது ஆத்திரம்
எவனோ பெய்த -த்திரத்திற்கு....

said...

பிரிந்த காதலியை
காண வரும் காதலனாய்
உனக்கு முன் பூமிக்குவந்த
நீர்த்துளிகளை தேடி
ஆனந்தமாய் கலக்கிறாய் !!

idhu okva :)

said...

ஸாரிப்பா அது மழையா??

எனக்கு வேற மாதிரி தோணுச்சு...

said...

மாமோய் கடைசியா ஒட்டுமொத்தமா எல்லா மக்களையும் டரியலாக்க எடுத்த கொலைவாளா இது.....??/ :))))))))

said...

//G3 said...

பிரிந்த காதலியை
காண வரும் காதலனாய்
உனக்கு முன் பூமிக்குவந்த
நீர்த்துளிகளை தேடி
ஆனந்தமாய் கலக்கிறாய் !!

idhu okva :)
//

வாட் பாஸ் வாட்?
என்ன ஒ.கேவா ஜி.கேவான்னுக்கிட்டு இதுதான் ஒ.க்கேன்னு பொளேர்ன்னு அடிச்ச மாதிரி சொல்லி சப்மிட் பண்ணுங்க ஹய்யோ ஹய்யோ!

said...

25 :)

said...

//G3 said...

25 :)//

அட இந்த கவிதை நல்லாயிருக்கே!

said...

எனக்கு இப்படி படம் பார்த்து எல்லாம் கவிதை எழுத வராது. இருந்தாலும்... உங்க முயற்சி வெற்றி பெற

1.
துளியென விழுந்தாய்
நீரலையாய் நகழ்ந்தேன்.

2.
என் அமைதியை
துளித்துளியாய் சிதைக்கின்றாய்
துவானமாய் நீ விழுந்து

3.
தூரல் புள்ளிகள் சுற்றி
வட்ட வட்ட கோலங்கள்

உக்கார்ந்து யோசிச்சா உன்மையாவே நல்ல கவிதை எழுதலாம்.

மேல சொல்லி இருக்கறது எதுவுமே கவிதை இல்லைங்கோ

Anonymous said...

மழை கவிதை கொண்டு வருமே யாரும் கதவடைக்க வேண்டாம். கறுப்புத் துனி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம். மழை தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம், நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

said...

நண்பர் ^Sanjai G,

படம் நன்றாக இருக்கு.

தலைப்பு: கல்லெறிந்தவர்கள்

6வது வகுப்பில் கெளசல்யா
8வது வகுப்பில் ராதா
பிளஸ் ஒன்னில் கேத்தரின்
கல்லூரி முதல் வருடத்தில் ரம்யா
மூன்றாவது வருடத்தில் ஜானவி
முடிக்கும் போது (டெல்லி) ஷ்ருதி
இந்த மொசைக் குளத்தில்
கல்லெரிந்து விட்டுப்
போனவர்களின்
நினைவுகள் கலையாமல்
சங்கு சக்கரமாக
அங்கங்கே சுற்றிக்கொண்டிருக்கிறது
கடைசியாக கல்லெரிந்து
கல்யாணம் ஆகிக்
கலைந்துப் போன
என் மனைவியின்
பெரிய சக்கரத்தைச்
சுற்றி

said...

இராவுல முட்ட முட்ட
குடித்த பீரு
ஓடுது ஆறா
ரோட்டுல!

said...

இறைவா..
எங்கள் கண்ணீரை உன்
அபிஷேகத்துக்குக் காணிக்கையாக்குகிறோம்..
மனம் இறங்கி எம் குல
மக்களின் அல்லலைத்
துடைக்க வா
சீக்கிரம்..
கண்ணீர்த்துளி சேகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது..
அது வெள்ளமாகி எங்களைக்
கொல்லுமுன் வந்துவிடு!

said...

உன் அன்பு மழையில்
நனைய வந்தால்
நீயோ வசவு மழையில்
வருத்தப்படுத்துவாய்

அப்போதும்
தூவானத்தின் தூரல்களும்
சில்லென்ற சாரல்களும்
சுடும் நீ இல்லாத போழ்துகளில்

said...

aiyoooo..............

said...

அடுத்த துளிக்காகக்
காத்திருக்கும்
குட்டிக் குட்டி
வட்டக் கிண்ணங்கள்!!!

வானம் முகம்
பார்த்துக் கொள்ள
விடாமல் இதென்ன?
மழைத் துளிகள்
முந்திக் கொண்டன!!!

வட்டத்துக்குள் வட்டம்
நீருக்குள் மழைத்துளி
இதென்ன???
பூமிக்குள் வானமா???

நல்லாருக்கா????
அன்புடன் அருணா

said...

திடீரென பெய்த மழையென
நீ வந்தாய்! இன்று
எஞ்சிய மண் வாசனை
நெஞ்செல்லாம்..,

said...

இதுவரை விழுந்த
மொக்கைகளுக்குப் பின்
இன்றைய கவிதைத்துளிகளாய்
நீர்

Anonymous said...

இந்த ஓர் மழைத்துளியைப் போன்றது தான் உன் பார்வையும்
என் மனக் கூட்டில் உள்ள
பட்டாம் பூச்சிக் கூட்டத்தில் கலந்து சிறகடிக்கிறது !

said...

ஒரு துளி மலையில்
உருவாகிறது பல வளையங்கள்
- இது அண்ணன் தங்கை போல
ஒன்றுடன் ஒன்று கலக்காத அன்பு.

ஆனால் இவ்வளையங்கள்
மற்ற துளியில் வரும் வளையங்களுடன்
ஒன்றோடு ஒன்று கலக்கும்
- இது உறவுக் காதல்.

said...

மீ த எஸ்கேப்பு!

said...

என் மனக்குளத்தில்
பட்டு தெறித்து
விநாடி பொழிதில்
வீரியம் குறைந்தன
வீணாக வந்த
வளைய கவலைகள்!!!

said...

மண் மீது
கரையும்
மழைக் கனவுகள்

said...

மேகத்துடன் சண்டையிட்டு
வெளிநடப்பு செய்கின்றன
மழைத்துளிகள் !!!

said...

நல்ல முயற்சி. கவிதைக்கும் எனக்குமான உறவு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் உள்ளததைப் போல.

சோ, இப்ப அப்பீட்டு

யாராச்சும் கவிதை எழுதினா

படிக்க அப்ப ரிப்பீட்டு//

ரிப்பீட்டு ரிப்பீட்டு ரிப்பீட்டு

said...

மிகச் சிறப்பாக கவிதை எழுதுபவர்களுக்கு மிகச் சிறந்தவர்களால் அங்கீகாரம் கிடைத்தால் அதைவிட பெருமை என்ன இருக்க முடியும்?. // அதுதான் அவர்களே பதிவுகளில் சென்று வாழ்த்துகிறார்களே நன்றாக இருந்தால்.. அப்புறமென்ன? ஏதாவது பரிசு குடுப்பதாக இருந்தால் சொல்லுங்க நானும் கலந்துகக்றேன்.. ஹிஹி..

said...

அண்ணன் ஆதிமூலக் கிருஷ்ணன் பரிசுகளை வாரி வழங்குவார் என அன்புடன் அறிவிக்கிறேன். :))


அண்ணே ஆதி அண்ணே.. இப்போ சந்தோஷமா? கலந்துக்கிறிங்களா? :)

said...

யார் தலைலயும் முடியிருந்தா பொருக்காதே உங்களுக்கு....

said...

கண்ணிலிருந்து
பெரும் மழை
புது மனைவி வைக்கும்
சாம்பார்

said...

பின்னூட்ட குறிப்பு :
@ஆதி மூலகிருஷ்ணன்
திருமணமாகாதவர்களுக்கு எச்சரிக்கை - 25 பதிவு படிச்சதால வந்த கவிதை அல்ல அது

said...

என் கவிதையில் பிழை திருத்தி வாசிக்க:

கவிதை: கல்லெறிந்தவர்கள்

கல்லெரிந்து - கல்லெறிந்து

said...

அதோ பாரு தண்ணி
அதுல குதிச்சா வரும் ஜன்னி
ஹே டண்டனக்கா ..
ஹே டண்டனக்கா ..

said...

அதோ பாரு தண்ணி
அதுல குதிச்சா வரும் ஜன்னி
ஹே டண்டனக்கா ..
ஹே டண்டனக்கா ..

சஞ்ஜெய் இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?இது தேவையா?

said...

ஹே டண்டனக்கா ..
ஹே டண்டனக்கா ..
அய்யோ ஆர்வ மிகுதியில...

said...

தறை நனைத்து
எந்த அழகி போட்ட
ஆறு புள்ளி கோலமிது

said...

ஜோதி பாரதி, செம டைம்லி கவிதை. நல்லா இருந்தது.

said...

என்னோட கவிதை :-

ஜோதி பாரதி
நல்லா இருக்கு கவிதை
ஜோதி பாரதி
செம டைம்லி கவிதை

----

ஜோதி பா
ரதி
செம டைம்லி

விதை

----

ஜோதிபாரதிநல்லாஇருக்குஉங்ககவிதைசெமடைம்லிகவிதை

(கடைசி கவிதை பின்நவீனத்துவபாணி கவிதை - அனானியா அடுத்த பின்னூட்டத்தில் கேள்வியாக போடாமல் இங்கேயே சொல்லிவிடுகிறேன்.)

said...

/// வடகரை வேலன் said...

மழை கவிதை கொண்டு வருமே யாரும் கதவடைக்க வேண்டாம். கறுப்புத் துனி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம். மழை தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம், நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்///

அண்ணாச்சி இது அழுகுணி ஆட்டம்.
இது ஏற்கெனவே அரவிந்த்சாமி "என் சுவாச காற்றே" படத்தில் வாயசைச்ச பாட்டு.

இது போட்டியிலிருந்து விலக்கப்படுகிறது.

said...

//இது போட்டியிலிருந்து விலக்கப்படுகிறது. //

இதெல்லாம் எப்போவோ விலக்கப் பட்டது. என்கிட்டயும் குசும்பன் கிட்டயும் சாட்ல இதை சொல்லிட்டு தான் போட்டார். :)

said...

என்னுடைய ரிவர்சபுள் கவிதை தனி பதிவில் வரவில்லை என்றால் அதை சபைக்கு கொண்டு செல்வேன் அங்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் அடுத்த பதிவில், 5 வது நிமிடத்தில் 40 கவிதைய கொட்டுவேன்! நான் எல்லாம் பிறவி கவிஞர்கள்! சாக்கிரதை!

said...

குறிப்பிட்ட ஆட்களை மட்டும் கமெண்ட் போடாம தடுக்க எதுனா வழி இருந்தா சொல்லுங்க மக்கா.. இந்த குசும்பன் டார்ச்சர் தாங்கலை. இருடி.. மாடரேஷன் போடறேன். ;))

said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ இந்த குசும்பன் டார்ச்சர் தாங்கலை. இருடி.. மாடரேஷன் போடறேன். ;))//

என் செல்லகுட்டி மாமா கும்மி அடிக்காத மாமான்னு பணிவா கேளு கும்மி அடிக்கல! ஆணவத்தில் பேசினீங்க என்றால் நான் மட்டும் இல்ல கும்மி குல தெய்வங்களை எல்லாம் ISD போட்டு அழைத்துவருவேன்.

டெலிட் விளையாட்டை மறந்து இருக்கமாட்டீங்க!

said...

சாக்கிரதை !!!

போன பின்னூட்டத்தில் போட மறந்துட்டேன்

said...

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ மாடரேஷன் போடறேன். ;))//

ஹி ஹி ஹி அது கோழைங்க செய்வது:)

சிங்கத்துக்கு பயந்து மாடரேசன் போடுவது இயல்புதானே!!! ம்ம்ம் நடக்கட்டும் அப்பயும் அடங்கமாட்டேன்!

said...

என்னோட கவிதையும் வரணும். இல்லாட்டி கணேஷ் கிட்ட சொல்லுவேன். :)-

said...

மணிகண்டன் said...
என்னோட கவிதையும் வரணும். இல்லாட்டி கணேஷ் கிட்ட சொல்லுவேன். :)//

ஹி ஹி அவருக்கிட்டேயே அவரை பற்றி சொல்வீங்களா? என்ன ஒரு காமெடி!

said...

மணி அண்ணே, நீங்களுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;(

ஆளாளுக்கு ஒரு புள்ள பூச்சியைப் போய் மிரட்டறிங்களே.. :(

said...

நித்யா, இதான் நீ எழுதின கவிதையா? எதோ 4 பக்கம் இருக்கும்னு சொன்ன? :(

said...

அப்ப நான் எழுதுன கவிதை?? ஒழுங்கா அதையும் போட்டிக்கு எடுத்துக்கங்க சொல்லிபுட்டேன்

said...

ஹிஹி.. ஆதவன்.. அதெல்லாம் எப்போவோ சேர்த்தாச்சி.. கவலை விடுங்க.. நீங்க அப்டி எழுதினா விட்ருவேன்னு நினைச்சிங்களா? :)))

said...

ஏதேதோ நேசிக்க
கற்றுத்தந்த நேசிகையே!

இதோ வானத்தை பிரிந்த
மழை வந்து சொல்லுது ஆறுதல்
சொப்பு சொப்பென
டப் டப்பென

உனக்குமிந்த மழை அங்க்கேதும்
சொல்லுதா இந்நேரம்.

(ரவி சுப்பிரமணியன் எழுதியது 'காத்திருப்பு' தொகுப்பிலிருந்து)

said...

மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க,

முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

தேடி வரும் மாப்பிள்ளைக்கு
எடுத்து வையுங்க,

சும்மா வரும் மாப்பிள்ளைக்கு
சூடு வையுங்க.

said...

டென்சன் வேண்டாம். நீங்கதானே சொன்னீங்க. சொந்தமா எழுத தெரியலைன்னாலும் வேற யாராவது எழுதினதை கூட போடலாமுன்னு. அதுதான். கூகுளில் தேடிகிட்டு இருக்கேன். கிடைச்சதும் வந்து அருவி போல கொட்டறேன். வெயிட் :)

said...

/
தாரணி பிரியா said...

மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க,

முக்காப் படி அரிசி போட்டு
முறுக்கு சுடுங்க

தேடி வரும் மாப்பிள்ளைக்கு
எடுத்து வையுங்க,

சும்மா வரும் மாப்பிள்ளைக்கு
சூடு வையுங்க.
/

@தாரணி பிரியா
கண்ணாலம் ஆகீடுச்சா?????

said...

அன்பான நண்பர் திரு சஞ்சய் காந்தி அவர்களே,

வணக்கம், நீங்க ஒரேடியா காங்கிரஸ் கட்சியை support செய்யுறத பார்த்தேன். நீங்கதானே அது இல்ல நான் தப்பா வந்துவிட்டேனா?

அது உண்மையின்னா இதைக்கொஞ்சம் கேளுங்க. ஒருத்தர் உங்க கட்சிபற்றி சும்மா கண்டப்படி எழுதிகிறார்! காங்கிரஸ் கொஞ்ச நாட்களில் செத்துருமாம், அந்த அதிமேதாவி சொல்லுறாரு!

நான் ஒன்றும் blog எழுதும் பல மடையர்கள் சொல்லுறத serious ஆக எடுத்துக்கொள்ளவில்லை! அனா இந்த மாமனிதர் ஒரு கம்யூனிஸ்ட் போல தெரியுது! நான் ஆங்கிலத்தில் ஒரு பக்கத்துக்கு ஒரு போடு போட்டேன், ஆனா அவரு அதை போடவேஇல்லை!

தமிழில போடனும்முதான் நினைத்தேன், ஆனா டைம் இல்ல! அதுக்கு மேல நானும் காங்கிரசு காரனும் இல்ல! அதான் உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன்!

அவரு பேரு மாதவராசு! எதேதோ தினம் தினம் எழுதி தள்ளராறு, சூரியனடியில் இருக்கும் எல்லா எழவையும் பற்றி ! தாங்க முடியல்ல!
daily பக்கம் பக்கமாக பிரிண்ட் அட்டிக்கிராறு, ஒண்ணுமே தெரியாம! அத்த பாத்து கைதட்ட ஒரு கூட்டம்! ஆரம்பிக்கலாமான்னு பாக்கிறேன், தமிழில்தான்! அவரு அத போடாட்டி நீங்க allow பண்ணுவீங்களா, உங்க blog இல!

சொல்லி அனுபுங்க, ஆரம்பிக்கலாம், இந்த செவப்பு சட்ட பாசாங்கு பசங்கள அடிக்க!

நன்றி

said...

நண்பர் நோ. இங்க நோ அரசியல். :)

காங்கிரசுக்கு சப்போர்ட் பன்றது நான் தான். யாரோ காங்கிரஸ் அழிந்துவிடும் என்று சொல்வதால் அழியப் போவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் ஆதரவு/எதிர்ப்பு நிலைபாடு இருக்கும். மாதவராஜ் பலராலும் மதிக்கப் படும் பதிவர். எனக்கு அவரை பற்றி எதும் தெரியாது. உங்கள் கருத்தில் தனி மனித தாக்குதல் இல்லை என்றால் என் அரசியல் வலைப்பூவில் அனுமதிக்கிறேன்.

http://thinkcongress.blogspot.com

இதுக்கு என் கிட்ட வர வேண்டியதில்லை. அண்ணன் தமிழ்மணியிடம் சொன்னால் போதும் சுளுக்கெடுத்துவிடுவாரே. :))

said...

எப்போதும் ஓயாத அலைகள்
இப்போது ஓய்ந்து போயின.
சீக்கிரம் உன் முகத்தைக் காட்டிவிடு.
சீரியஸ்ஸான சத்யாகிரகமாம் இது.!

***

மழைத்துளி கிளப்பிய அலைகள்
மனதுக்குள் மெல்லிய தென்றல்.
கடற்கரையில் மட்டும் தானா காற்று?

***

இப்படிக்கு கவிஞர் காத்துவாயன்.

தேறுமா இல்லை காயலாங்கடை ச்மாச்சாரமா ன்னு சொல்லிடுங்க மக்களே.

said...

ஒரு துளியின் அழைப்பில்
விட்டு விடுதலை ஆகின்றோம் நாம்

எல்லா கசடுகளிடனிருந்தும் அப்போதைக்கு விடுதலை

சூழ்நிலையின் போக்கு குறித்த எந்தவொரு சலனங்களுமில்லை மனதில்

வாழ்வும் அதன் போக்குகளும் குறித்தான கவலையற்று இருக்கின்றோம்
சில மணித்துளிகளேனும்

மழையும் நனைவதுவும் ஈடுபார்க்கவியலாது இன்னபிற அனுபவங்களுடன்

செடிகளும் கொடிகளும் மரங்களும் இன்னபிற ஜீவராசிகளும்
உணர்ந்த அளவிற்க்கேனும்
மழை உனர்ந்த மனிதருண்டோ

எந்த ப்ரதி பலனுமிண்றி
எல்லா உயிரையும் உய்விக்க வந்த மழை குறித்த
செய் நன்றி இல்லை இங்கு யார்க்கும்

சேமிக்க இருந்த இடமும் சுருங்கி வருகிறதிப்போது

காலத்தின் நாம் காலங்கடந்து போயிருப்பினும்
இயற்கையின் கருணையின்றி
வாழ்க்கையில்லை என உணர்வதெப்போது...

said...

ஆட்டத்தில் கலந்துக்க இது போதுமா நண்பரே?
சொந்த சரக்காக்கும்.

said...

மதிபாலா said...

எப்போதும் ஓயாத அலைகள்
இப்போது ஓய்ந்து போயின.
சீக்கிரம் உன் முகத்தைக் காட்டிவிடு.
சீரியஸ்ஸான சத்யாகிரகமாம் இது.!

***

மழைத்துளி கிளப்பிய அலைகள்
மனதுக்குள் மெல்லிய தென்றல்.
கடற்கரையில் மட்டும் தானா காற்று?

***

இப்படிக்கு கவிஞர் காத்துவாயன்.

தேறுமா இல்லை காயலாங்கடை ச்மாச்சாரமா ன்னு சொல்லிடுங்க மக்களே.

எல்லாம் சரி. இந்த கவிஞர் காத்துவாயன் என்கிற பேர எங்கிட்டுருந்து புடிச்சிங்க?
ப்ரோபைல் போய் போட்டோவெல்லாம் பார்க்கவச்சிட்டிங்களே சாமி.

said...

என்னை பற்றிய
உன் நினைவலைகள்

உன்னை பற்றிய
என் கனவலைகள்

இன்னும்
கலங்களாய் ...

said...

//...ரெடி... ஸ்டார்ட் மீஜிக்.... :) //

துளி முத்தங்கள்,
அத்தனையும் வெட்கங்களாக விரிகிறது !

:)

said...

மழை ஓய்ந்த பின்
முற்றத்து வீட்டின்
ஓடுகள் தவற விடும்
மழைத் திவலைகளை
கைகளில் பிடித்து
விளையாடுகையில்,
பிடறியில் விழும் அடி
ஒரு நாளும்
வலித்ததில்லை!
ஆ.......வென்று துடிக்கும்
என் நாடகத்தை
அம்மா....
நிஜமென்று தான்
நினைத்திருக்கிறாள்!!
இன்றும் அதேபோல்
விளையாடுகையில்,
விழாத அடியின்
வலி தாங்காமல்
தடவிப் பார்த்து
அலறுகையில் அலைந்து
அரற்றுகிறது கண்கள்!!!

said...
This comment has been removed by the author.
said...

தொடுவானில் இணைந்திருந்த‌
மேக‌க் காத‌ல‌னின் பிரிவால் உண்டான‌ பூமி ம‌க‌ளின் முக‌ச்சுருக்க‌ம்

said...

ஒரு பூ கிடைத்திருக்கலாம்
மறுப்பின்
கிளை விட்டிருக்கலாம்
மனம் தொட்டு அதிரவைத்து
விலகி ஓடும்
வரம்புகளுக்குள்
மழைத்துளி பட்டு
நீர்த்து கலையாமல் அலைகிறது
கோல முத்திரைகள்

said...

எல்லைகள் தொடுமென்றோ
திரும்பி வருமென்றோ
எதிர்பார்ப்புகளற்ற சலனத்தில்
தொலையும் அலைகள்
போன்றதே காதலும்!

said...

நேற்று கரடியாகவும்
இன்று முயலாகாவும்
நாளை வேறு ஏதாகவும்
குழந்தைக்கு காட்சி தரும்
புகைப்படத்தில்.
ஒரே கவலை
அலையும் நீரில்
கப்பல் விட முடியாதது
மட்டுமே!

said...

மெலிதாய்
இதழ் விரிக்கத்தொடங்கி
சப்த சிரிப்புகளில்
சுத்தமாய் மறைந்திருந்தது
குவளைப்பூ போன்றதொரு
மழையின் துளியும்

said...

எத்தனை உயரத்திலிருந்து
விழுந்தாலும்
குழந்தையை சிரிக்க வைத்த பின்பே
மறைகிறது
தூறல் பொம்மைகள்

said...

அடிவானம் தொட்டுவிட்ட
ஆசையில் அலைகிறது
மேகங்கள்
நீரலையாய்

said...

நேற்று பெய்த மழையில் இன்னமும் நனைந்து கொண்டிருக்கிறது உயிர் சொட்டுச்சொட்டாய்
உன் நினைவுகள்...

said...

உன் விழிகளிலிருந்து
இடம் தவறி
அலைகின்ற கண்ணீர்ப்பூக்கள்
தொட்ட வடிவமானதா
எப்படி சூட்டுவது

said...

உனக்காக பெய்த மழையை
சேகரித்தும்
அதற்காக கவிதைகள் எழுதியும்
விடிகிறது பொழுது
அலையின் வடிவங்கள்
மனங்கள்தோறும்

said...

மூன்று வருடங்களுக்கு பிறகு நினைவு படுத்தியிருக்கிறது இந்தமழை,
நீ பிரிவறிவித்த மழை நாளின் இரவையும் கூடவே
உன்னோடு கழிந்த விடு முறை நாட்களின் மழை நேரப் பின்மதியங்களையும்.
மழை எப்பொழுதும்
மழையாகவே இருக்கிறது!

said...

குறிப்பார்த்து விழுந்த கல்லாக
நீர்த்துளி பட்டு
சிதறிய தண்ணீர்
நீ துளி பார்த்ததும்
சிதறும் நானாய்

said...

பாதச்சுவடு படாமல்
குதிகாலை தூக்கி
கால் விரல்களால்
நடந்து போகிறாய்
கோலம் போட்டுக்கொண்டுள்ளது
தண்ணீர்

said...
This comment has been removed by the author.
said...

பாதச்சுவடு படாமல்
குதிகாலை தூக்கி
கால் விரல்களால்
நடந்து போகிறாய்
கோலம் போட்டுக்கொண்டுவிட்டது
தண்ணீர்

said...

எப்பொழுதாவது ரசிக்கக்கிடைக்கிற தாழ்வாரத் தூவானங்களில் தெறித்தலைகிறது உன் முகம்
யாருமற்ற பகல்களில்
வருகிற மழையை
நீயும் ரசிக்கிறாயா?

said...

ஒரு மழைக்கால இரவின்
ஆரம்பத்தில்
கொடுத்த முத்தம்
தீராமல்
தன் தடயங்களை பத்திரப்படுத்தியுள்ளது
நீ சென்ற பிறகும்

said...

காதல் சின்னமாக
பத்திரப்படுத்த துடிக்கிறது
மனசு
நீ நனைந்த மழையை
சேகரிக்க

said...

அத்தனை மழையிலும்
என்னை மூழ்கடித்து
நனையாத வெளிச்சமாய்
நகர்ந்து செல்கின்றது
என் மீதான உன் காதல்

said...

மதுக்கோப்பை வடிவில்
காதல் பூத்திருந்தது
அடர் சிவப்பு வர்ணம்
நீர்த்திருந்ததில்
மிதந்து போனது
அவள் மழையில் நனைந்த அழகு

said...

மழையுடன் உறவாடுதல்
எளிதாகி விட்டது
அரிதாகக் கிடைத்திருக்கும்
உன் பிரிவுக்காலத்தில்

said...

தண்ணீர்ப்பூக்களில்
மழைத்துளி தூவும்
காதல் தோல்வி கோலங்கள்

said...

தூக்கம் பயங்கரமா வந்துடுச்சு.

போதும்ன்னு நினைக்குறேன் :)))

said...

வாசனைகளோடு வந்து
ஜன்னல் நனைக்கிற சாரல்களுக்கு தெரிவதில்லை
நீ இப்பொழுதெல்லாம் அறைக்கு வருவதில்லை என்பதும்
மழைக்கும் உனக்குமான சினேகம் மறக்கப்பட்டு விட்டதையும்..

said...

வாசனைகளோடு வருகிற மழைக்கு தெரிவதில்லை நீயற்ற இரவுகளின் நீளம்,
தனியே அருந்துகிற தேநீருக்கு தெரிவதில்லை முத்தங்களுக்கு பின்னரான தேநீரைப்பற்றி,
அணைத்துக்கொள்கிற உன் தலையணகைள் தூக்கம் கலைகிற இரவுகளில் கிசுகிசுப்பாய் பேசுவதில்லை,
நீ ஊருக்கு போன நேரத்தில் வருகிற மழைக்கு தெரியாது
போர்வையை சரிசெய்ய நீயில்லாத இரவுகள் பற்றி,
வந்து விடு அல்லது மழையை கூட்டிப்போய்விடு!

said...

நனைந்து கொண்டே
பேசி வந்த புதன் கிழமை,
ஈரம் காயும்வரை இருந்துவிட்டுப்போன
ஞானசம்பந்தர் நூல்நிலையம்,
நூல் நிலையத்து விகடனில் வாசித்த மழைக்கவிதை,
தகரக்கூரையில் விழுகிற
துளிச் சப்தங்கங்கள்,
விடைபெறும்வரை பிரியாமலிருந்த இடது கைகளின் வெப்பம்,
விடைபெறும் தருணத்தில் நிகழந்த குளிர்விட்ட முத்தம்,

இங்கே எப்பொழுதாவது வருகிற மழையும்,
இவ்வளவும் கொண்டு வருகிறது
உன் கடிதங்களை தவிர!

said...

நன்றி சென்ஷி !

said...

//தமிழன்-கறுப்பி... said...

நன்றி சென்ஷி !//

எலேய் நாந்தாம்லே உனக்கு நன்றி சொல்லனும். ஒரு வழக்கமான ராத்திரியை கவிதை இரவா மாத்தி கொஞ்ச நேரம் எல்லாத்தையும் மறக்க வைச்சதுக்கு நன்றிடா மாப்பி!

said...

கவிதை சமைத்த அனைத்து கவிஞர்களுக்கும் நன்றி நன்றி நன்றி. :)

உங்கள் கவிதைகள் மற்றும் ஜ்யோவரம் சுந்தரின் விமர்சனத்திற்கு,
http://pesumkavithai.blogspot.com/

அனைவரும் வருக.. ;)
இந்த வாரப் போட்டி இன்ருடன் நிறைவு பெறுகிறது. ஆதரவு தருக. :)

Tamiler This Week