இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday 25 October, 2008

ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?

பரபரப்பான அல்லது சர்ச்சைக்குரிய விவகாரங்களை தவிர்க்கவே விரும்பினாலும் இது உணர்வுபூர்வமானதும் முக்கியமானதுமான விவகாரம் என்பதால் இந்த பதிவு.

ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்தியா எந்த வகையில் பங்காற்றி தீர்வுக்கு வழி செய்ய முடியும்? நாம் இங்கு ராஜினாமா செய்கிறோம், மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறோம்..இன்னும் பல வழிகளில் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் சிங்கள இனவெறி அரசுக்கு. ஆனால் அது ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையில் உதவும்? இதைப் பார்த்து சிங்கள அரசு திருந்திவிடுமா? தமிழர்கள் மீதான தாக்குதலைக் கைவிடுமா?

இந்தியா அவர்களிடன் கோரிக்கைத் தான் வைக்க முடியும். கட்டளை இட முடியாது. அந்த கோரிக்கையை அவர்கள் காதில் வாங்கிக்கொள்வது போல் தெரியவில்லை. பிறகு இந்தியா என்ன செய்ய வேண்டும்? ராணுவத்தை அனுப்பி பங்களாதேஷ் போல ஈழத் தமிழகம் மலர செய்ய வேண்டுமா? அப்படி அனுப்பப் படும் ராணுவத்தை ஏற்கும் மனநிலையில் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்களா? நாம் கடந்த காலத்தை பற்றி யோசித்து ராணுவத்தை அனுப்பத் தயங்குவது போல் ஈழ மக்களும் தயங்கமாட்டார்களா?

இலங்கை ராணுவத்திற்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்தலாம். ஆனால் சீனாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவும் இப்போதும் ஆயுதம் குடுக்கிறார்களே. நாம் நிறுத்தினாலும் அவர்கள் குடுப்பார்களே. அந்த ஆயுதங்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப் படாதா?.. இந்தியா ராணுவ உதவி வழங்குவதை நியாயப் படுத்தவில்லை. உடனே நிறுத்தினாலும் சிங்கள இனவெறி அரசுக்கு அதனால் எந்த இழப்பும் இல்லையே.

வேறு எந்த வகையில் தான் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உதவ முடியும்.? நாம் இங்கு நடத்தும் போராட்டங்கள் எல்லாமே இலக்கே இல்லாமல் குருட்டுத் தனமாக வெறும் எதிர்ப்பு காட்டுவது என்ற வகையில் தான் இருக்கு. சரியான தீர்வை சொல்லி ஒருவரும் போராடவில்லை.யாரையும் திட்டாமல் நேர்மையாக உங்கள் கருத்த்துக்களை சொல்லுங்கள்.

இந்தியாவின் பங்களிப்பு எபப்டி இருக்க வேண்டும் என்பதில், குறிப்பாக ஈழத்து சகோதரர்களின் கருத்தை அறிய விரும்புகிறோம்.

இது நிச்சயம் பலருக்கும் ஒரு தெளிவை உண்டாக்கும்.
அனானி ஆப்ஷனும் திறந்துவிடுகிறேன்.
தனிமனித தாக்குதல்கள் வேண்டாம்.
ஈழத் தமிழ் மக்களுக்கு பயன் படும் வகையிலான கருத்துக்களை மட்டுமே சொல்லுங்க.

169 Comments:

said...

me the 1st?

said...

அட ஆமாம்

நான்தான் பர்ஸ்ட்

said...

ஈழப் பிரச்சினை தீர்க்கப் பட வேண்டியதுதான்.
ஆனால் தீர்க்க முடியாதது.

said...

//இந்தியா என்ன செய்ய வேண்டும்? ராணுவத்தை அனுப்பி பங்களாதேஷ் போல ஈழத் தமிழகம் மலர செய்ய வேண்டுமா? //

மாம்ஸ் அதுக்கு எல்லாம் முதுகெலும்பு உள்ள பிரதமர் இந்திராகாந்தி போல் ஒரு ஆள் வேண்டும், அதுபோல் தைரியமான ஆள் யார் இருக்கா!

said...

இராணுவத்தை அனுப்புவது என்பதெல்லாம் வேறுபல பிரச்சினைகளில் சென்று முடிந்து விடும்.

பொருளாதாரத் தடைகளை விதிக்கச் செய்யலாம்.

ஆனால் அதனை அமெரிக்கா செய்யாது.

ஐ.நா. என்பதே அமெரிக்காவின் பிடியில்தான் என்பதை மறந்து விடக்கூடாது.


மேலும் புலிகளே தாங்கள் பலஹீனமடையும் போது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு கோருவதும், வலுவடைந்த பின் வம்படியாக போரில் ஈடுபட்டு ஈழத் தமிழர்களை கேடயங்களாகப் பயன்படுத்தி உலகத் தமிழர்களிடம் காண்பித்து அனுதாபம் தேடி ஆதாயம் அடைவதும்தான் தொடர்கிறது.


ஈழத்து தமிழர்களே பலர் விடுதலைப் புலிகளை விரும்பவில்லை.

சிங்கள இராணுவத்தால் பாதிக்கப்படுவதை விட புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அதிகம்.

புலிகள் தனிநாடு கோருவதை விட்டுவிட்டு சிங்கள அரசில் பங்கெடுக்க முன்வர வேண்டும். இதனை தமிழர்கள் புலிகளுக்கு வலியுறுத்த வேண்டும்.

ஆட்சியில் அதிகாரத்திலிருந்து போராடி உரிமைகளைப் பெற்று வலுவடைந்து பின் முடிந்தால் தனிநாடாக ஈழத்தை அறிவிக்கட்டுமே!

said...

இந்தியா நார்வே போல் மத்தியஸ்தராக செயல்படவேண்டும்.

இருவரையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர மற்ற நாடுகள் மூலம் நெருக்கடி கொடுக்கவேண்டும்.

said...

இந்தியா உடனடியாக செய்ய வேண்டியது...

பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்கு மருத்துவ உதவிகளும், அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்ய முடிந்த அளவு உதவிகளுமே!

said...

//இந்தியாவின் பங்களிப்பு எபப்டி இருக்க வேண்டும் என்பதில், குறிப்பாக ஈழத்து சகோதரர்களின் கருத்தை அறிய விரும்புகிறோம்.
///

கொரியாவில் DMZ ல் வட கொரியாவுக்கும் நார்த் கொரியாவுக்கும் அமெரிக்கா செய்துள்ளது போல DMZ உருவாக்கப்படவேண்டும்...

ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கியது போல் விடுதலை புலிகளுக்கான தடையை நீக்கிவிடுதல் வேண்டும்...

அரசியல் ரீதியாக இந்த பிரச்சினையை பேசி தீர்த்து மத்தியஸ்தம் செய்து எல்லைகளை வகுக்கவேண்டும்...

(ஏற்கனவே செய்தது போல ஒன்சட் அடிக்காமல் இருத்தல் வேண்டும், தமிழ் பிரதிநிதிகளை டெல்லியில் லாக்கிவிட்டு கொழும்பு சென்று ஒப்பந்தம் செய்துகொள்ளாம இருத்தல் தான் ஒன்சைட் எனப்படுகிறது)

இந்தியாவில் இருந்து சிங்கு ராணுவ வீரர்களை அனுப்பாமல் தமிழ் ராணுவ வீரர்களை அனுப்பவேண்டும்...

ஏன் என்றால் சிங்குக்கும் சிங்களனுக்கும் வித்தியாசம் இல்லை...இரண்டு தரப்பாரும் பெண்களை, தாய்மார்களை, சகோதரிகளை வண்புணர்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர்...

ஆயுத மற்றும் அரசியல் போராட்டத்தின் மூலம் ஒரு யூதர்களுக்கான நாடு இஸ்ரேல் உருவாகியது போல தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாகிவிட்டால் இந்திய மொழிவாரி மாநிலங்கள் தனிநாடு கேட்கும் என்று பயப்படுவதை தவிர்க்க வேண்டும்...

நாங்கள் சந்திரனை தொட்டுவிட்டோம், அணுகுண்டை வெடித்துவிட்டோம் என்று பெருமை பீற்றிக்கொள்ள தமிழனுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் அய்யா, டெல்லியில் வேலை செய்ய ஒர்க் பர்மிட் வாங்கவேண்டிய அவலம் எதற்கு ? வேண்டாம் அந்த நிலை.

Anonymous said...

//ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கியது போல் விடுதலை புலிகளுக்கான தடையை நீக்கிவிடுதல் வேண்டும்..

அப்புறம் தமிழ்நாட்டில் ஏற்கனவே விமானநிலையம் ரயில் நிலையம் என்று குண்டு வைப்பார்கள். விபுலிகளை விமர்சிப்பவர்கள் அனைவரும் தமிழ் விரோதிகள் ஆவார்கள். கொல்ல்படுவார்கள்.

விடுதலைபுலிகளை விமர்சிக்கும் ரவி போன்றவர்கள் இப்போதே படு கேவலமாக வார்த்தை பிரயோகம் செய்யும் போதே தடை நீக்கபட்ட பின்?

//அரசியல் ரீதியாக இந்த பிரச்சினையை பேசி தீர்த்து மத்தியஸ்தம் செய்து எல்லைகளை வகுக்கவேண்டும்...//

அப்புறம் மத்தியஸ்தம் செய்யாதே என்று குரல் கொடுக்க வேண்டும்

//
(ஏற்கனவே செய்தது போல ஒன்சட் அடிக்காமல் இருத்தல் வேண்டும், தமிழ் பிரதிநிதிகளை டெல்லியில் லாக்கிவிட்டு கொழும்பு சென்று ஒப்பந்தம் செய்துகொள்ளாம இருத்தல் தான் ஒன்சைட் எனப்படுகிறது)//

இவர் தான் அவங்களை லாக்கினார் என்பதை பக்கத்தில் இருந்து பார்தாராம்.

//இந்தியாவில் இருந்து சிங்கு ராணுவ வீரர்களை அனுப்பாமல் தமிழ் ராணுவ வீரர்களை அனுப்பவேண்டும்...//

இந்திய அமைதிபடையில் முதலில் இலங்கைக்கு சென்றது மதராஸ் ரெஜிமெண்டே. யாழ்பாணத்தில் பண்டிக்கைக்கு பொருட்கள் வாங்கி கொண்டு இருந்த மதராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த தமிழ் ரானுவ வீரர்களை பின்னால் இருந்து சுட்டு விட்டு ஓடிய விடுதலை புலிகள் இதுக்கு எல்லாம் மசிவார்களா?

//ஏன் என்றால் சிங்குக்கும் சிங்களனுக்கும் வித்தியாசம் இல்லை...இரண்டு தரப்பாரும் பெண்களை, தாய்மார்களை, சகோதரிகளை வண்புணர்வதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர்...//

இவருதான் விளக்கு புடிச்சாரு.

//ஆயுத மற்றும் அரசியல் போராட்டத்தின் மூலம் ஒரு யூதர்களுக்கான நாடு இஸ்ரேல் உருவாகியது போல தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாகிவிட்டால் இந்திய மொழிவாரி மாநிலங்கள் தனிநாடு கேட்கும் என்று பயப்படுவதை தவிர்க்க வேண்டும்...

நாங்கள் சந்திரனை தொட்டுவிட்டோம், அணுகுண்டை வெடித்துவிட்டோம் என்று பெருமை பீற்றிக்கொள்ள தமிழனுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் அய்யா, டெல்லியில் வேலை செய்ய ஒர்க் பர்மிட் வாங்கவேண்டிய அவலம் எதற்கு ? வேண்டாம் அந்த நிலை.//

விடுதலைபுலிகள் தமீழ் ஈழம் கிடைத்து விட்டால் அடுத்த குறி தமிழ்நாடுதேன். சண்டை நடந்தால் தானே தேசிய தலைவருக்கு உடும்பு கறியும் கால் அமுக்கி விட மசாஜ் படையும் கிடைக்கும்.

Anonymous said...

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வைகோ, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து..?''

''அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுகள், இதற்காக. எப்போதெல்லாம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறதோ... அப்போதெல்லாம் நாட்டைத் துண்டாட நினைக்கும் அரசியல் தலைவர்கள் அவ்வளவு பேரும் நெஞ்சு நிமிர்த்திப் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இதனை நான் பலமுறை கலைஞரிடமே நேரில் சொல்லியிருக்கிறேன்.

தற்போதைய தி.மு.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடனேயே இப்படி தீவிரவாத ஆதரவு பேசுபவர்கள் அவ்வளவு பேரும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக வெளிப்படையாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேச

ஆரம்பித்தார்கள். உடனே இதை நான் கண்டித்தேன். தமிழக சட்டமன்றத்திலும் முன்பு பேசினேன். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களெல்லாம் ஒன்றிணைந்து வெளிநடப்பு செய்தோம். சட்டமன்ற காங்கிரஸ் அலுவலகத்தில் வந்து அமர்ந்திருந்தோம். அப்போது, எங்களைத் தேடி வந்தார்கள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, பரிதி இளம்வழுதி ஆகியோர். 'முதல்வர் உங்களை சமாதானப்படுத்தி மீண்டும் சட்டமன்றத்துக்கு அழைத்து வரச் சொல்லி யிருக்கிறார்...' என்று சொல்லி அழைத்தார்கள். நாங்களும் மீண்டும் சட்டமன்றத்துக்குப் போனோம்.

அப்போது, 'தீவிரவாதம் பேசுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்...' என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தார் முதல்வர் கலைஞர். ஆனால், அவர் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தொடர்ந்து நாங்களும் வலியுறுத்தி வலியுறுத்தி ஓய்ந்து போனோம். எங்கள் கூட்டணியில் இருந்தாலும், தொல்.திருமாவளவனும் தொடர்ந்து இதேபோலத்தான் தேசத்தின் ஒற்றுமைக்கு விரோதமாகவே பேசி வருகிறார். விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரித்துப் பலமுறை பேசியிருக்கிறார். சென்னை ஷெனாய் நகரில் அவர் பேசிய பேச்சைக் கடுமையாகக் கண்டித்து நடவடிக்கை எடுக்க நாங்கள் கலைஞரை வலியுறுத்தினோம். ஆனால், அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படிப்பட்டவர்களை எல்லாம் கூட்டணியில் வைத்துக்கொள்வது சரியல்ல என்பதை நாங்கள் பலமுறை வலியுறுத்தினோம்.

எதையுமே கேட்காத கலைஞர், இன்றைக்கு வேறு வழியில்லை என்றதும் நடவடிக்கை எடுத்திருக்கிறார். இந்தக் கட்டத்திலும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழகத்தில் விரைவில் விடுதலைப்புலிகளின் நடமாட்டம் ஆரம்பமாகி இருக்கும். தமிழ்நாட்டில் ஆயுதக் கலாசாரம் பெருக்கெடுத்துத் தமிழ்நாடே சுடுகாடாகி இருக்கும். நல்லவேளை, இப்போதாவது கலைஞர் நடவடிக்கை எடுத்தார். அதற்காக அவருக்கும் ஒரு நன்றி... இன்றைக்கு வைகோ, கண்ணப்பன் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்திருக்கும் கலைஞர், உங்களோடு நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த அக்டோபர் 23-ம் தேதி மாலை வரை இயக்குநர்கள் சீமானையும் அமீரையும் சேரனையும் கைது செய்யவில்லை! ராமேஸ்வரத்தில் அவர்கள் பேசிய பேச்சு சாதாரணமானதா? அவர்களைப் போல இன்னும் ஏராளமான விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தமிழகத்தில் குவிந்து கிடக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு பேரையும் கைது செய்து சிறையில் அடைக்கும் வரையில், நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்... போராடுவோம்!'

Anonymous said...

இல்லையே... விடுதலைப்புலிகள் ஆதரவு விஷயத்தில் காங்கிரஸ§ம் ஜெயலலிதாவும் ஒரே கருத்துடன் ஒரே படகில் பயணிப்பது போல தோன்றுகிறதே...''

''அது என்னவோ உண்மை. கூட்டணியில் ஒன்றாக இல்லையென்றாலும் ஆரம்பத்திலிருந்தே விடுதலைப்புலிகள் எதிர்ப்பு விஷயத்தில் காங்கிரஸ்காரர்களின் உணர்வுதான் ஜெயலலிதாவுக்கு. அவர் ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் புலிகளை ஆதரித்ததில்லை. புலிகளை ஆதரிப்பவர்களையும் அவர் விட்டு வைத்ததில்லை. ஏன்... வைகோவையும் ம.தி.மு.க-காரர்கள் பலரையும் 'பொடா' சட்டத்தின் கீழ் கைது செய்து 19 மாதங்கள் சிறையில் அடைத்தவர்தான் ஜெயலலிதா. இன்றைக்கும் வைகோ தனது கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக தனது கொள்கையில் துளியும் சமரசம் செய்துகொள்ளாமல் கடுமையாக அறிக்கை விட்டிருக்கிறார்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் தீவிரவாத ஆதரவாளர்கள் தலைதூக்க மாட்டார்கள். லேசாகத் தூக்கினாலும், அவர்களுக்கு ஜெயில்தான் என்கிறபோது ஜெயலலிதா மீது பயம் இருந்தது. ஆனால், இன்று என்ன நடக்கிறது? தீவிரவாத இயக்கம் என்று தடைசெய்யப்பட வேண்டிய அளவுக்கு உள்ளது நெடுமாறன் இயக்கம். ஆனால், அவரையெல்லாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குக் கூட்டிவைத்து விவாதிக்கிறார் கலைஞர். அப்படிச் செய்யும்போது அவர்களெல்லாம் கலைஞர் மேல் என்ன மாதிரியான மரியாதையை, பயத்தை வைத்திருப்பார்கள்? ஆட்சி என்பது வேறு, நட்பு என்பது வேறு, அரசியல் என்பது வேறு என்றெல்லாம் பிரித்துப் பார்க்க கலைஞருக்குத் தெரியவில்லை. அதனால்தான் மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பி, யார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து விடுகிறார். அவர்களெல்லாம் 'பதில் உபகாரமாக' தாறுமாறாகப் பேசி, கலைஞர் அரசுக்கே நெருக்கடியை ஏற்படுத்தி விடுகிறார்கள்!''

''சரி, உங்கள் கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் டாக்டர் ராமதாஸ், 'விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் அல்ல...' என்று பேசியிருக்கிறாரே..?''

''அதுதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே... டாக்டர் ராமதாஸாக இருந்தாலும் திருமாவளவனாக இருந்தாலும் எல்லோரும் எங்களுக்கு ஒன்றுதான். விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கும் யாராக இருந்தாலும், அவர்களுடைய அந்தக் கருத்துகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால், விடுதலைப்புலிகள் அத்தனை தூரம் கொடூரமானவர்கள். ஏன்... இத்தனை தூரம் விடுதலைப்புலிகளுக்காக இங்கிருந்து பரிந்துபேசும் பலரும், இலங்கைக்குப் போய் ராணுவத்தை எதிர்த்துப் போராடலாமே. இருக்கவே இருக்கிறதே கள்ளத் தோணி..!''

Anonymous said...

இத்தனை தூரம் விடுதலைப்புலிகளுக்காக இங்கிருந்து பரிந்துபேசும் பலரும், இலங்கைக்குப் போய் ராணுவத்தை எதிர்த்துப் போராடலாமே. இருக்கவே இருக்கிறதே கள்ளத் தோணி..!''

ravi, are you ready to go ?

Anonymous said...

இன்னமும் நடிகர்கள் உண்ணாவிரதமே நடக்கவில்லை அதற்க்குள் அஜீத் படங்களை புறக்கணிப்போம் என்று விடுதலை புலி ஆதரவு ஈழ தமிழர்கள் கூட்டம் கிள்ம்பி விட்டது. இவர்கள் தான் தமிழ் படவுலகை வாழ வைக்கிறார்களாம். தெரியாதா சேதி படம் வெளிவந்த நாள் அன்றே இணையத்தில் தமிழ் சினிமாவை வெளியிடுவது யார்ங்கோ?

said...

//ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?//

இதர்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களை பேசி திசை திருப்ப வேண்டாம் ப்ளீஸ். தீர்வை மட்டும் சொல்லுங்க.

அனானி எதோ பத்திரிக்கை பேட்டியை போட்டிருக்கிறார் போல. யார் பேட்டி இது?

said...

//குசும்பன் said...

//இந்தியா என்ன செய்ய வேண்டும்? ராணுவத்தை அனுப்பி பங்களாதேஷ் போல ஈழத் தமிழகம் மலர செய்ய வேண்டுமா? //

மாம்ஸ் அதுக்கு எல்லாம் முதுகெலும்பு உள்ள பிரதமர் இந்திராகாந்தி போல் ஒரு ஆள் வேண்டும், அதுபோல் தைரியமான ஆள் யார் இருக்கா!//

யோவ் மாமா.. இந்த லொள்ளு தான வேணாம்னு சொல்றது. அது நேருவா இந்திராகந்தியா என்பதே இன்று தான் கேட்டு தெரிஞ்சிகிட்டிங்க. அதுல நக்கல் வேறயா? :)

Anonymous said...

விடுதலைப் புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் கருத்து.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காண வேண்டும

- சென்னையில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்

Robert blakeஇலங்கை தமிழர் பிரச்சினைக்கு முதலில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறினார்.

சென்னை பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத்துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நேற்று நடந்தது. இதில் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கலந்துகொண்டு `இலங்கை பிரச்சினையில் அமெரிக்காவின் நிலைப்பாடு' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தீவிரவாதத்தை ராணுவ நடவடிக்கைகள் மூலமோ, சட்ட நடவடிக்கைகள் மூலமோ மட்டும் கட்டுப்படுத்திவிட முடியாது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம் இதைச் சொல்கிறோம்.

இலங்கை அரசு, தனது சட்ட திட்டங்களுக்குஉட்பட்டு, சிங்கள மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்துகின்றன. அதற்கு வசதியாக புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுவின் பணிகளை செயல்படுத்த இலங்கை அரசு முன்வர வேண்டும்.

சிங்கள மக்களில் ஒருசாரார் முதலில் விடுதலைப் புலிகளை ஒழித்துவிட்டு, அதன்பின்னர் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த சூழ்நிலையில், இலங்கை அரசு விடுதலைப் புலிகளை தமிழ் மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும், பலவீனப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் கருத்து.

இலங்கை தமிழர்கள் வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு இரையாகாதவாறு வேலைவாய்ப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். விவசாயம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

போரினால் பாதிக்கப்படுவோருக்கு உதவி செய்ய ஐ.நா. அமைப்பு மற்றும் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும், போரினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக முதலில் அறிவித்த நாடு அமெரிக்காதான்.

இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லீம்கள் ஆகிய முத்தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் அரசியல் ரீதியாக தீர்வு காண்பது சாத்தியம்தான். தற்போது இதற்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் இலங்கை சொர்க்க பூமியாக மாறும். தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டால் இலங்கையின் நிலையே மாறிவிடும். இவ்வாறு அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறினார்.

முன்னதாக, அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார். சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி பிரெட்ரிக் கெப்லான் உள்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில் பல்கலைக்கழக பாதுகாப்பு கல்வித்துறைத் தலைவர் மால்வியா நன்றி கூறினார்.

Anonymous said...

@அனானி எதோ பத்திரிக்கை பேட்டியை போட்டி@

your congress party mla vellor janakasekaran .today junior vikatan article

said...

இந்திய அரசைப் பொறுத்தவரை, இது இந்தியப் பிரச்சனை அல்ல. இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தமிழகத்தின் பிரச்சனை.
இந்த தவறான நினைப்பை முதலில் மாற்ற வேண்டும்.
இந்தியா முழுவதும் இலங்கைப் பிரச்சனையின் தீவிரம் உணரப்படவேண்டும்.
கலைஞரின் எம்.பிக்கள் வாபஸ் நாள், இந்த மாற்றத்தின் முதல் நாளாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Anonymous said...

இந்தியாவும் விடுதலைபுலிகளும்

சென்ற வாரம் வழக்கம் போல விடுதலை புலிகளுக்கும் சிங்கள் ராணுவத்திற்க்கும் நடந்த சண்டையில் இரண்டு இந்தியர்கள் காயமாம் .

இலங்கை பிரச்சனை என்பது இடியாப்ப சிக்கல்களை விட மிக மிக சிக்கலானது. கூடவே அங்கு நடக்கும் போராட்டம் அல்லது வன்முறை யாருக்காக என்பதும் படு படு குழப்பமானது..


தமிழ் மக்களுக்காகவா??

அப்ப ஏன் இந்தியாவில் இருந்து பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து செல்லபட்ட கூலி தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து அந்நாட்டின் அந்நிய செலாவாணியை உயர்த்தினார்களே..அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா???

அப்போது எல்லாம் ஏன் சண்டை வரவில்லை??


அந்த தேயிலை தொழிளார்கள் நிலை அடிமைக்கு கீழான நிலை..அவர்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது ..ஓட்டுரிமை உட்பட.

அவர்களை சில பேரை தந்திரமாக இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்த போது அதற்க்கு ஒத்து ஓதியது இந்த யாழ்பாண தமிழர்களே ...அல்லது இவர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள்..

இன்று கூட மலையக தமிழர்கள் என்று அழைக்க படும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரியவில்லை..

தமிழ் ஈழம் உருவானால் யாழ்பாண தமிழர்களுக்கு நிகரான மக்கள் தொகையில் இருக்கும் இவர்கள் கதி என்ன??


இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றியத்ற்க்கு காரணம் என்வென்றால் இட ஒதுக்கீடு என்ற அரசின் நிலை...அதை நேரம் கிடைத்தாம் பின் பேசலாம்..

ராஜீவ் படுகொலை.. பத்மநாபா முதல் அமிர்ந்தலிங்கம் வரை கொன்ற மாவீரர்கள் இவர்கள்..

இந்திய படைகளை பின்னால் இருந்து தாக்கிய கோழை புலிகள்..

சரி உங்களை தினமும் எவனோ ஒருவன் யார் என்ற முகம் தெரியாமல் சொல்லி கொள்ளாமல் பின்னால் இருந்து உங்களின் நடு மண்டையில் கல் எரிந்தால் என்ன செய்வீர்கள்??

காக்க போன ரானுவத்தை எதிரிகளாக ஆக்கிய மிக பெருமை இந்த புலிகளுக்கு உண்டு. பின்னால் இருந்து தாக்குவது வீரமாம்.. அதுவும் தற்கொலை படை எல்லாம் வீர காவியவாம்

பிரபாகரன் மகன் அலல்து மகளை எல்லாம் இப்படி தற்கொலை படை ஆக விட வேண்டியது தானே.. ஏன் அவர்களுக்கு மட்டும் லண்டனில் சொகுசு வாழ்க்கை??


சரி அப்ப என்னதான் முடிவு??

விடுதலைபுலிகளை அழிக்க யாராலும் முடியாது....உலக தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருக பெருக அவர்கள் பலம் பெருக தான் செய்யும்.. கூடவே நார்வே ஒத்தாசை செய்த கதை நினைவுக்கு வருகிறது. ஒஸ்லோவில் சட்டம் ஒழுங்கு நிலை படு மோசம்

காரணம் யார் .. நம்ம இலங்கை தமிழ் காரர்கள் தான்..

சரி இந்த பிரச்சனை தீர்ந்தா அப்படியே எல்லா அகதி என்று சொல்லி வந்தவங்களை எல்லாம் அனுப்பி வைத்து விடலாம் என்ற தன் உள் நாட்டு குழப்பத்தில் தான் நார்வே உதவிக்கு வந்தது..

பணக்கார அகதிங்க எல்லாம் ஐரோப்பாவுக்கு தான் போறாங்க..ஏழை அகதிங்க இந்தியாவிற்க்கு வராங்க..

ஏங்க சார் ..ஏன் சார் அகதி என்பது உயிர் பிழைக்க தஞ்சம் கேட்பது.. ஏன் உங்க ஆளுங்க எல்லாம் பணக்கார நாடுகளுக்கே உயிரி பிட்சை கேட்க்கறீங்க??? இணையங்களில் சம்ம டக்கரா தமிழ் புலின்னு கலக்கிறீங்க..

ஏங்க அகதின்னு ஓடுறீங்க உங்களூக்கு ஏன் பணக்கார நாட்டுக்கு ஓடுறீங்க,,சோமாலியா எத்தியோப்பியாவிக்கு எல்லாம் அகதியா போக வேண்டியது தானே??



இந்த போரை காட்டி புலம் பெயறந்தவர்கள்.. அதாவது வேலை தேடி வெளிநாட்ட்க்கு குறுக்கு வழியில் சென்றவர்கள் இருக்கும் வரை இந்த போர் ஒயாது..

இந்தியாவின் நிலை என்ன?


தமிழ் நாட்டின் தென் பகுதியில்

கல்பாக்கம், கூடங்குளம் தொடங்கி திருவனந்தபுரம் வரை பல நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் அன்னிய நாட்டு அரசுகள் வேவு பார்க்க அனுமதிக்க கூடாது. கூடவும் இந்த இடங்களில் அந்நிய நாடுகளின் பார்வையும் பட கூடாது..

விடுதலைபுலிகளும் சிங்கள் ரானுவமும் இரு தரப்பும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை..

சிங்கள் தரப்பு தொடர்பாக நமக்கு ஏற்கனவே தெரியும்

விடுதலைபுலிகள் தரப்பும் அப்படியே

அவர்களின் தமிழ் துரோக கொலைகள் எல்லாம் நமக்கு தொடர்பில்லாது விட்டு விடுவோம்..

நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அந்த ஆண்டன் பாலசிங்கதின் வார்தைகளை மறக்க முடியுமா?

மலையக தமிழர்கள் எல்லாரும் யாழ்பாணத்திரின் அடிமைகள் என்று இன்று வரை சொல்லும் யாழ்பாண வாசி தமிழர்களின் நடப்பை திருத்த முடிய்மா?

வடக்கியத்தானை நம்பாதே ( வடக்கித்தியான் - > தமிழ்நாடு ) என்று இன்று வரை சொல்லும் இந்த முதுகில் குத்தும் இலங்கை தமிழர்களை இன்னம் ஒரு முறை நம்பி மோசம் போகலாமா?


சரி அப்ப ராடார்?

ராடார் என்பது ஆள் கொள்ளும் இயந்த்ரம் இல்லை.. வானில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ஒரு கருவி..

அப்ப அந்த இரண்டு இந்தியர்??

அந்த ராடர்களை அங்கு இருக்கு ஆட்களுக்கு கற்று தர சென்றவர்கள்..

சரி ராடாரை இந்தியா கொடுக்காமல் இருந்தால்?

சீனா கொடுத்துஇருக்கும்.. கூடவே நம் சென்னை வரை எல்லா ஏரியாவையும் அந்த ராடார் வழியாக சொல்லி கொள்ளாமல் கண்காணிப்பார்கள்?

அப்ப என்ன தான் சொல்ல வர?

என்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..

அதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..

இவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ....


இலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..

said...

//
அப்ப என்ன தான் சொல்ல வர?

என்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..

அதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..

இவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ....


இலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..
//
கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும் ரெம்பவே தெளிவாக சொல்லியிருக்கின்றீர்கள்.

உங்கள் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்.

said...

நண்பர்களுக்கு!
விடுதலைப்புலிகள் பலவீனமடைந்த எந்தச் சந்தாப்பத்திலும் போர்நிறுத்தம் செய்யப்படவில்லை என்பதை நீங்கள் அறியாமலிருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனையிறவுப் படைத்தள வீழ்ச்சி, “அக்கினிச்சுவாலை” என்ற சிங்கள இராணுவத்தின் நடவடிக்கையின் முறியடிப்பு, கட்டுநாயக்க வான்படைத்தளம் மீதான தாக்குதல் போன்ற அடுத்தடுத்து ஏற்பட்ட இழப்புக்களால்தான் ஸ்ரீலங்கா அரசு, யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இறங்கியது. இறுதியாக யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகியதும் சிங்கள அரசுதான். அதேபோல, இன்றைய நிலையிலும் விடுதலைப்புலிகள் யுத்தநிறுத்தம் மேற்கொள்ளுமாறு எவரிடமும் கோரிக்கையை வைக்கவில்லை.

அடுத்ததாக, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் தவறானது. நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது, விடுதலைப் புலிகள் என்பவர்கள் எங்கோ வானத்திலிருந்து வந்த வேற்றுக்கிரக வாசிகள் என்பதைப்போல இருக்கிறது. அவர்கள் எங்களுடைய சகோதர சகோதரிகள். எங்களுக்காக தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள். வன்னியில் இருக்கும் மக்களில் பலர், அந்தப்போராளிகளின் பெற்றோராகவோ உடன் பிறந்தவர்களாகவோ இருக்கிறார்கள்.

“விடுதலைப் புலிகளை ஈழத்தமிழர்கள் வெறுக்கிறார்கள்” என்பதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. புலம்பெயாந்த நாடுகளில் மட்டுமல்ல, கொழும்பிலும் விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் ஆதரவு மிகப்பெரியது. விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு இழப்பையும் தமிழனுடைய இழப்பாக கொண்டாடும் அளவுக்கு சிங்களவருடைய மனநிலை இருக்கிறது. நானே நேரடியாகப் பாதிக்கப்பட்டவன். எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டம். இங்கு எல்லா ஈழத்தமிழருமே போராட்டத்தின் பங்காளிகள். (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) அந்தவகையில், விடுதலைப் புலிகளின் போராட்டம் என்று கூறுவதே தவறு, இது ஈழத்தமிழரின் போராட்டம்.

இநதப் போராட்டப் பலம் இருப்பதால் மட்டுமே சிங்களவர்கள் பயப்படுகிறார்கள். அரசியல் ரீதியான உரிமைகளை, அமைதிவழிகளில் முடியுமானவரை கேட்டபிறகுதான் ஆயுதப்போராட்டமே ஆரம்பமானது. தமிழருக்கான அரசியல் உரிமைகளைச் சிங்களவன் தரமாட்டான் என்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உங்களுக்காக ஒன்று
விடுதலைப் புலிகளைப் பல நாடுகளில் தடை செய்வதில் மும்முரமாக வேலைசெய்து விடுதலைப் புலிகளாலேயே கொல்லப்பட்ட, ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் என்பவரை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஈழத்தமிழர் போராட்டத்துக்கு எதிராக அவரைப்போல வேறு யாரும் செயற்பட்டதில்லை. ஒரு கட்டத்தில் ஸ்ரீலங்கா அரசின் பிரதமர் பதவி அவருக்கு வழங்கப்படும் என்கிற நிலை வந்தபோது, கோபங்கொண்டு சிங்களவர்கள் எதிர்த்ததால், அந்தப்பதவி வேறொருவருக்குக் கொடுக்கப்பட்டது. காரணம், கதிர்காமர் பிறப்பால் ஒரு தமிழன். சிங்கள அரசின் தீவிர விசுவாசியான லக்ஸ்மன் கதிர்காமருக்கே இந்தநிலை என்றால் மற்றவர் நிலை என்னவென்பதைச் சிந்தியுங்கள்...
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி என்றொரு மகாத்மா இல்லாமல், நேதாஜி முதன்மைப்படுத்தப்பட்டிருந்தால், அவருடைய போராட்டம் மீது இப்படியொரு பழி சுமத்தப்பட்டால் உங்கள் மனநிலை எப்படியிருக்குமோ அப்படித்தான் எங்களுக்கும் இருக்கும் என்பதைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

ஈழத்தமிழருக்காக தமிழக உறவுகள் தொடர்ந்து போராடவேண்டும் என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் தலைவணங்குகிறோம்.
உங்களுக்கு இருக்கக்கூடிய ஆயிரம் பிரச்சனைகளுக்குள்ளும் ஈழத்தமிழனுக்கு ஆதரவாக வீதியில் இறங்கியுள்ள உறவுகளுக்கு எம் நன்றிகள்.

கடந்தகாலங்களில் இரண்டு தரப்பிலும் எத்தனையோ தவறுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவற்றைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பதிலும் பயனில்லை. உலகில் யாருமே தவறு செய்யாதவர்களாக இருக்க முடியாது.

எங்கள் பார்வையில் இந்திய அரசு செய்யக்கூடியவை
1 யுத்தக்களத்துக்கு அப்பால் தமிழரின் வாழ்விடங்கள் மீது ஸ்ரீலங்கா வான்படை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துவதைத் தடுத்தல்.
2 வன்னியிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கான உணவு, மருத்துவ வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.
3 கொழும்பிலும் ஏனய இடங்களிலும் தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போதல், கப்பம் பெறப்படுதல் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுத்தல். (இந்த நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா அதிபருடைய தம்பி கோத்தபாயவின் பங்கு அதிகமானது.)
4 வடக்கும் கிழக்கும் இணைந்தது தமிழர் தாயகம் என்பதை முடிந்தால் சிங்கள அரசை ஏற்கவைத்து, அந்தத் தாய் மண்ணில் தமிழர்கள் சுய கௌரவத்தோடு வாழும் வழியை உருவாக்குதல். ஆகக்குறைந்த்து தமிழ்நாடு போன்ற மாநில முறையாவது. (தமிழீழம் என்பது எங்கள் அதியுச்சக் கோரிக்கை. அதைத்தவிர வேறு எதுவுமே வேண்டாம் என்று ஈழத்தமிழர் ஒருபோதும் சொன்னதில்லை. ஆனாலும் சுயநிர்ணயம் என்பது அடிப்படை)

முதல் மூன்று விடயங்களும் அவசரமானவை. நான்காவது விடயம் இந்தியாவால் சாத்தியப்படுமா என்பது மத்திய அரசின் வலிமையைப் பொறுத்தது. இவற்றுக்கான அழுத்தங்கள் எந்த வடிவில் தமிழகத்திலிருந்து கிடைத்தாலும் அது போற்றுதலுக்குரியது.

குறிப்பு –
ஈழத்தமிழர்களில் ஒருவனாக இந்தப் பதிலைத் தருகிறேன். யாரையும் புண்படுத்தும் எண்ணத்தோடு இவற்றை எழுதவில்லை. அடிப்படையில் தமிழக ஊடகங்கள் சரியான தகவல்களைத் தரவில்லை என்று நினைக்கிறேன். அதேபோல ஈழம்சார் ஊடகங்களும் தமிழகத்தின் உண்மை நிலைப்பாட்டை எங்களுக்குச் சொல்வதில்லை.

Anonymous said...

//புகழன்- மேலும் புலிகளே தாங்கள் பலஹீனமடையும் போது போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு கோருவதும், வலுவடைந்த பின் வம்படியாக போரில் ஈடுபட்டு ஈழத் தமிழர்களை கேடயங்களாகப் பயன்படுத்தி உலகத் தமிழர்களிடம் காண்பித்து அனுதாபம் தேடி ஆதாயம் அடைவதும்தான் தொடர்கிறது.
ஈழத்து தமிழர்களே பலர் விடுதலைப் புலிகளை விரும்பவில்லை.
சிங்கள இராணுவத்தால் பாதிக்கப்படுவதை விட புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அதிகம்.
புலிகள் தனிநாடு கோருவதை விட்டுவிட்டு சிங்கள அரசில் பங்கெடுக்க முன்வர வேண்டும்.//
புகழனின் கருத்தை வழிமொழிகிறேன்.
இதனை தமிழ்நாட்டு தமிழர்களும், இந்திய அரசும், தமிழ்நாட்டு அரசும் புலிகளுக்கு வலியுறுத்த வேண்டும்.இது தான் இலங்கை தமிழருக்கு செய்ய கூடிய மிக பெரிய உதவி.

said...

சீரியஸ் மேட்டர்ன்றதால பிரசன்ட் சார் மட்டும் போட்டுக்கிறேன்.. :(

said...

//
குறிப்பு –
ஈழத்தமிழர்களில் ஒருவனாக இந்தப் பதிலைத் தருகிறேன். யாரையும் புண்படுத்தும் எண்ணத்தோடு இவற்றை எழுதவில்லை. அடிப்படையில் தமிழக ஊடகங்கள் சரியான தகவல்களைத் தரவில்லை என்று நினைக்கிறேன். அதேபோல ஈழம்சார் ஊடகங்களும் தமிழகத்தின் உண்மை நிலைப்பாட்டை எங்களுக்குச் சொல்வதில்லை//

மிக்க நன்றி கிருஷ்ணா. ஈழத் தமிழர்களிடமிருந்து இது போன்ற வெளிப்படையான கருத்துக்களைத் தான் எதிர்பார்க்கிறோம். எப்போதும் நீங்கள் வெளிப்படையாக சொல்லாமல் நிகழ்வுகளை மட்டுமே சொல்வதால் அதற்கு யார் காரணம், அவைகளை போக்க வழி என்ன என்பதை சரியாக அறிய முடியாமல் நாங்கள் அடித்துக் கொள்கிறோம்.

இப்போது கூட பாருங்கள் உங்களைத் தவிர மற்ற எல்லாரும் இந்தியர்கள் தான் இங்கு விவாதிக்கிறார்கள். சரியான தீர்வு என்ன என்று தெரியாமல் நாங்கள் மட்டுமே பேசுகிறோம். வேறு எந்த ஈழத் தமிழரும் பேச முன்வரவில்லை..

உங்கள் மனதை மை போட்டு பார்த்தா கண்டுணர முடியும்..

வெளிப்படையாக மற்றவர்களும் பேசலாமே. உங்கள் தீர்வு புலிகளை முன்னுறுத்தியே இருப்பதாகத் தெரிகிறது.

இதில் மற்ற ஈழத் தமிழரின் நிலை என்ன?

நீங்களும் வன்னிப் பகுதிக்கே முக்கியத்துவம் தருவது போல் உள்ள்து. இதனால் தான் நாங்கள் உங்களை பிரித்துப் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

ஈழத் தமிழர், மலையகத் தமிழர், தமி முஸ்லிம்கள் என்ற பாகுபாடு இருப்பதாக சொல்லப் படுவது பற்றியும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் கிருஷ்ணா.

//எங்கள் பார்வையில் இந்திய அரசு செய்யக்கூடியவை//

இதற்கு சிறப்பு நன்றி. மற்றவர்களும் இதை சொன்னால் நன்றாக இருக்குமே..

said...

இந்த விவாதத்தில் நிறைய தகவல்கள் மறைத்தே சொல்லப்படுகின்றன. முதலில் இந்தியாவில் இருக்கக் கூடிய தமிழர்களின் முதல் கோரிக்கை ஈழத்தில் இருக்கக் கூடிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது. ஈழத் தமிழர்களுக்காக கவலைப்படுகின்றோம் என்றதும் அது புலிகளுக்கான ஆதரவு என்று எடுத்துக் கொள்வது ஏமாற்றமளிக்கின்றது.

இதன் மூலம் எங்களது உணர்வை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் வைகோ போன்றவர்கள் இறங்கியுள்ளனர்.

said...

இலங்கையைப் பொறுத்தவரை சிங்களவர்கள் பெரும்பான்மையானவர்கள். இவர்களால் தமிழ் பேசக் கூடியவர்கள் கடுமையான பாதிப்பு உள்ளாகியுள்ளனர்.
தமிழர்கள் தமிழ் இந்துக்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள், மலையக மக்கள் எனப் பிரிந்து உள்ளனர். ஒன்றாக இருந்த தமிழர்களை மத ரீதியாக, வடக்கு, கிழக்கு என்று பிராந்திய ரீதியாக பிரித்த அந்த 1990 நிகழ்வை கிழக்கில் இருக்கும் யாரும் மறந்திருக்க முடியாது.

இப்போது பிரிந்து கிடக்கும் தமிழ் பேச கூடியவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் ஈழத்தில் யாரும் இல்லை.

மலையக மக்களை அவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் என்ற ரீதியிலேயே நடத்தப்படுகின்றது.

முஸ்லிம்களின் நிலை சொல்லவே வேண்டியதில்லை. மத்தளத்திற்கு இரண்டு புறமும் அடி என்பது போல், ஒருபுறம் சிங்கள பேரினவாதிகளின் அடியையும், மறுபுறம் துரோகிகள் என்று கூறும் புலிகளின் அடியையும் படுகின்றனர்.

said...

///
கிருஷ்ணா கூறியது
“விடுதலைப் புலிகளை ஈழத்தமிழர்கள் வெறுக்கிறார்கள்” என்பதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ///

நீங்கள் சொன்னதைக் கேட்டதும் எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை, சிரிப்பே வந்தது.
இதைப் பற்றி மேல் விபரம் தர வேண்டியதில்லை. ஈழத்தில் உள்ள தமிழர்களில் முஸ்லிம்கள் எத்தனை சதம்? மலையக மக்கள் எத்தனை சதம்? ஒட்டுக்குழுக்கள் எனப்படும் தமிழ் குழுக்கள் எத்தனை சதம்? இதற்கு விடை தேடுங்கள். புலிகளுக்கு எததனை சதம் ஆதரவு என்று உங்களுக்கு தெரிந்து விடும்.

said...

///கிருஷ்ணா சொன்னது
4 வடக்கும் கிழக்கும் இணைந்தது தமிழர் தாயகம் என்பதை முடிந்தால் சிங்கள அரசை ஏற்கவைத்து,////

வடக்கையும், கிழக்கையும் ஏன் இணைக்க வேண்டும்? வடக்கும் கிழக்கும் ஏன் பிரிந்து இருக்கிறது? கல் முனைக்கு கீழே உள்ள பகுதியின் நிலை என்ன? நீங்களே அதையும் சொல்லி விடுங்களேன்... :(

அதை மட்டும் வாகாக மறைத்து விடுவீர்கள். ஏன் இந்த பாரபட்சம்?

இந்தியா தனது முழு படை பலத்தையும் உபயோகித்து இலங்கையைக் கைப்பற்றி, தனி ஈழத்தை அமைத்தால் யாரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவது? பதில் சொல்லுங்கள்.

கிழக்கையும், வடக்கையும் இணைத்து ஈழத்தை ஏற்படுத்தும் போது, துரோகிகள் என்றும், காட்டிக் கொடுக்கும் கள்வர்கள் என்றும் மீண்டும் ஒரு 1990 நிகழ்வை ஏற்படுத்த மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? அதற்கு யார் உத்திரவாதம் கொடுப்பது?

Anonymous said...

இதெல்லாம் வீண் முயற்சி தோழர். இந்தியத் தமிழர்கள் அடித்துக்கொள்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் வழக்கம் போல் அதை வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா இதை செய்யவேண்டும் என வெளிப்படையாய் கேட்க அவர்கள் வெத்து கவுரவம் இடம் கொடுக்கவில்லை. புலிகளால் தான் தீர்வு கிடைக்கும் அவர்களை ஆதரிக்கிறோம் அல்லது எதிர்க்கிறோம் என்று ஒருவரும் சொல்லவில்லை. இவர்கள் எப்போதும் இப்படித் தான். மோதவிட்டு வேடிக்கைப்பார்ப்பார்கள். இந்தியத் தமிழன் உணர்ச்சிவசப் படுபவன் எனத் தெரிந்து அதை தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள் இந்த இலங்கைத் தமிழர்கள்.

said...

சிங்களப் பேரினவாதம் ஒழிக்கப்பட்டு ஈழ மக்கள் அனைவரும் அமைதியடைய வேண்டும் என்ற அதே நேரத்தில், எங்கள் மக்களை அடுத்து ஒரு பேரினவாதத்தின் கீழ் விட வேண்டும் என்று நினைப்பதற்குப் பதில் அவர்கள் அனைவருக்கும் விஷம் கொடுத்து கொன்று விடுங்கள்.

(இதை எழுதும் நேரம் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது)

அவர்கள் தொடர்ந்து அடுத்த போராட்டத்தில் தங்கள் இரத்தத்தைச் சிந்த வேண்டும் என்பது தான் உங்கள் ஈழப்பாசமா?

நாங்கள் முழு இலங்கையையும் அமைதியாகவே பார்க்க விரும்புகின்றோம்.

said...

இறுதியாக புலிகள் தங்களது தேவையை இராணுவ வழியிலேயே தீர்த்துக் கொள்வோம் என்று சொல்லாமல சொல்கிறார்கள். சிங்கள இராணுவத்தின் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த தமிழ்நாட்டான் மழையில் நனைவது உதவட்டும் என்பதே அவர்கள் நோக்கம். மழை காலத்தில் பாரிய தாக்குதல்களை மேற்கொள்வோம் என்று புலிகளின் படைப்பிரிவு தலைவர் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

புலிகள் தனி ஈழம் உருவாக்க தமிழ் மக்களை ஒன்றிணைக்க தயாராக இல்லை. முஸ்லிம்கள் புலிகளுடன் இணைய தயாராக இல்லை. ஒட்டுக்குழுக்களுடன் சமாதானம் பேச புலிகள் தயாரில்லை. மலையக மக்களுக்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் கொடுக்க புலிகள் தயாராக இல்லை. அப்படியானால் தனி ஈழத்தில் இருந்து புலிகளை ஆதரிக்காத பாதிக்கும் மேல் தமிழ் பேசக் கூடிய மக்களை புறக்கணித்து விட்டு என்ன செய்ய முடியும் எனத் தெரியவில்லை.

said...

புலிகளை இந்தியாவில் சுதந்திரமாக உலாவ விட்ட காலமும் ஒன்று உண்டு என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. புலிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி அளித்த காலமும் உண்டு. ஆனால் அந்த சுதந்திரம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்று பத்பநாபா முதல் ராஜீவ் வரை பார்த்து விட்டோம். இன்னும் இழக்க வேண்டுமா என்ன?

said...

இன்னும் ஆக்கப்பூர்வமான வாதங்களுடன் பேசக் கூடியவர்களுடன் விவாதிக்க இன்னும் தயாராக இருக்கிறேன். எனக்கும் யாரும் விரோதிகளோ, நண்பர்களோ கிடையாது. என்னுடைய கவலையெல்லாம் இலங்கையில் உள்ள அனைத்து தமிழர்களும் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே... தனிமனித தாக்குதல்கள் இல்லாத பின்னூட்டங்கள் வரும் பட்சத்தின் இரவு சந்திக்கலாம். (வேலைக்கு நேரமாச்சுப்பா... )

said...

// ஒரு 1990 நிகழ்வை ஏற்படுத்த மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? //

1990 மட்டும் அல்ல அதற்குப் பின்பும் பலமுறை அதைவிடக் கொடூரங்கள் நடந்திருக்கின்றது.

உலகெங்கிலும் இப்படிப்பட்ட உண்மைகள் மறைக்கப்பட்டே வந்திருக்கின்றது.

Anonymous said...

அனானி உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் (முழுவதும் இல்லை)

said...

ஈழத்தமிழன் என்ன சொன்னாலும் அதற்கொரு முன்முடிவான பதிலோடு இருந்தால் என்ன செய்வது ?

இந்தியா செய்யக் கூடியது என்ன என்பதை கிருஸ்ணா கூறி விட்டார்.

தமிழ் முஸ்லிம்களும் ஈழத்தமிழர்கள்தான். இதை புலிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு அவர்களுக்கும் மரபுவழித் தாயகம் தான். முஸ்லீம்களை வெளியேற்றியது தொடர்பாக புலிகள் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். முஸ்லீம்கள் மீளவும் தமது பிரதேசங்களில் குடியேறலாம் என அறிவித்தும் இருக்கிறார்கள்.-

2002 ஏப்ரலில் முஸ்லீம்களின் பிரதான கட்சியான முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கீமை நேரில் சந்தித்து பிரபாகரன் இந்த அழைப்பை விடுத்ததோடு ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டிருக்கிறார்கள். அக்காலத்தில் முஸ்லீம் தலைவர்களோடு பிரபாகரன் அருகிருக்கும் பெரிய பெரிய போஸ்டர்கள் கொழும்பு முழுவதிலும் ஒட்டப் பட்டிருந்தன. இன்னும் சொல்லப் போனால் - வலைப்பதிவில் இப்போது எழுதும் லோசன் -பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரனிடம் - முஸ்லீம்களை மீள அழைக்கும் அறிவிப்பை இப்போதே அறிவிக்க வேண்டும் என கேட்டு பதிலை பெற்றார். -

இலங்கையில் முதன் முதலில் தோன்றிய இனச் சிக்கல் முஸ்லீம்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஆனதுதான் என்பது உங்களுக்கு தெரியாதிருக்கும். பெரிய கலவராமாக வெடித்த அச் சிக்கலுக்கு சமரசம் செய்து வைத்தவர்கள் தமிழர்கள்.

மலையகம் - தமிழரின் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கோடு நிலத்தொடர்பு அற்ற சிங்களவர் தேசத்தின் மத்தியில் இருக்கிறது.

ஆனால் இன்று வன்னியில் போராடுகின்ற போராளிகளில் கஸ்டமுறும் மக்களில் பலர் மலையகத் தமிழர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா.. அவர்களின் தலைமுறைக்கு முந்திய பூர்வீகம் இந்தியா என்பது தெரியுமா..

56 83 என்ற இலங்கையின் கலவரங்களின் போதெல்லாம் - மலையகத்தில் சிங்களவரின் - தாக்குதலுக்கு அஞ்சி அவர்கள் வடக்குக்கும் கிழக்கும் தான் ஓடிவந்தார்கள். - (சிங்களவனுக்கு மலையகம் முஸ்லீம் என்ற பேதமில்லை. தமிழர்கள் என்பதே அவன் இலக்கு) அவ்வாறு வந்தவர்கள் வன்னியில் காடுகள் திருத்தி வாழிடம் அமைத்து அந்த மண்ணின் மைந்தர்களாக இருக்கிறார்கள். அந்த மண்ணுக்காக போராடுகிறார்கள்.


மலையகத்திலும் திட்டமிட்டே சிங்கள அரசுகள் அவர்களின் கல்வியை வளர்ச்சியை தடுக்கிறது. அதற்கு மலையக அரசியற் தலைவர்களும் காரணம். ஆனால் இப்போது அந்த இளைய தலைமுறையிடம் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஈழப்போரும் ஒரு காரணம்.

நாளை ஈழத்தில் ஏதோ ஒரு நிமிர்ந்த தீர்வு கிடைக்கையில் அதை இஸ்லாமியத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் என அனைவரினதும் விடிவாகவே அமையும் என்பதில் நமக்கு நம்பிக்கையும் தெளிவும் இருக்கிறது. ஆகவே அஞ்சற்க-

அப்புறம் - புலிகளை ஆதரிக்கும் - வீதக் கணக்கு சொல்பவருக்கு - ஆம் புலிகளை எதிர்க்கும் குறிப்பிட்ட சதவீதத்தினர் இருக்கிறார்கள்தான். ஆனால் ஜனநாயகம் ஜனநாயகம் என்கிறீர்ககளே அது என்ன சொல்கிறது..?

2002 இலங்கை பாராளுமன்ற தேர்தல்! கூட்டணியின் முதலாவது தேர்தல் பிரகடனம் என்ன தெரியுமா?
விடுதலைபுலிகளே தமிழரின் பிரதிநிதிகள்!

90 சத வீதமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது அவ்வமைப்பு.

அதுவும் தேர்தலில் வேறெங்கெங்கோ நடப்பது போல 50 சதவீதமானவரோ 60 சதவீதமானவரோ வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

100 சதவீத வாக்களிப்பு தமிழர் பகுதிகளில் நடந்த தேர்தல் அது.

வாய் கிழிய சனநாகம் மக்களாட்சி என கத்துகிறவர்கள் இதெற்கென்ன சொல்ல போகிறார்கள்..

இப்போதும் ஈழத்தமிழர்கள் மத்தியில் (புலம்பெயர்ந்த பெயராத) மக்கள் மத்தியில் புலிகளின் பிரதிநிதிகள் யாரென தேர்தல் வையுங்கள் . முடிவை அறிவீர்கள்! (51 சத வீதம் பெற்றாலே உங்களுக்கு திருப்திதானே)

-தனி ஈழம் தவிர்ந்த சுயாட்சி தீர்வை அரசுதான் முன்வைக்க வேண்டும். ஆனால் செய்யமாட்டார்கள். அதனை செய்ய அரசியல் சட்டம் அனுமதிக்காது - தனிய விட்டால் அவன் எங்கேயோ போய் விடுவான் பயம் வேறு-

இலங்கையின் அரசியல் சட்டத்தை மாற்றி- (அதற்கு சிங்கள கட்சிகள் ஒத்துவராது- அதை மாற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்.) அவர்களின் அரசியல் சட்டத்தில் தமிழர்கள் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே பாராளுமன்றம் வரலாம்.

(முன்பொருதடவை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் கட்சி எதிர்கட்சியாக வந்தது கண்ட சிங்கள அரசு பதைபதைத்து ஐயகோ விட்டால் ஆட்சிக்கே வந்து விடுவார்கள் என அலறியடித்து அரசியல் சட்டத்தை மாற்றி விகிதாசார தேர்தல் பிரதிநிதித்துவத்தை கொண்டு வந்தது உங்களில் யாருக்கும் தெரியுமா.. அதன் படி இன விகிதத்திற்கு ஏற்ற மாதிரியே பாராளுமன்ற இடமும் கிடைக்கும். சிங்களவர்க்கு 75 வீதம். தமிழருக்கு 25 வீதம் !

இந்த லட்சணத்தில் ஆயுதத்தை கைவிட்டு அரசு அமைக்கட்டுமாம்.


புலிகளின் ஆயுதம் தனிநாட்டுக்கு மட்டுமானதல்ல. சிங்கள தேசத்துக்கு ராணுவ பொருளாதா நெருக்கடிகளை கொடுத்து சிங்கள கட்சிகள் இயலாத கட்டத்தில் அரசியல் சட்டத்தை மாற்றி ஒரு தீர்வை தமிழருக்கும் வழங்கும் விதத்தில் நிர்ப்பந்திக்கவுமே..

சிங்களம் தானாக முன்வந்து சுயாட்சியை வழங்கினால் ஆயுதத்தின் தேவை இல்லாது போகும். ஆனால் அதற்கு முன்பாக ஆயுதம் போயின் - தற்போதைய ஒற்றையாட்சியின் கீழ் நான்கு முனிசிபல் கவுன்சில்களை தமிழருக்கு தருவார்கள். அதை வாங்கி கொண்டு விசர்பிடித்தலையும் கட்டாகாலி நாய்களை பிடித்தழிப்பதே உச்ச பட்ட அதிகாரம் என்றிருக்க வேண்டியது தான். நகரத்தில் நாலு கக்கூஸ் கட்டவும் அவர்களிடம் கெஞ்சிகொண்டு...

said...

இப்போதும் ஈழத்தமிழர்கள் மத்தியில் (புலம்பெயர்ந்த பெயராத) மக்கள் மத்தியில் புலிகளின் பிரதிநிதிகள் யாரென தேர்தல் வையுங்கள் . முடிவை அறிவீர்கள்! (51 சத வீதம் பெற்றாலே உங்களுக்கு திருப்திதானே)//

மக்களின் பிரதிநிதிகள் என வந்திருக்க வேண்டும்.

said...

மிக்க நன்றி கொழுவி. சில புதிய தகவல்களை அறியத் தந்திருக்கிறீகள்.

//100 சதவீத வாக்களிப்பு தமிழர் பகுதிகளில் நடந்த தேர்தல் அது.

வாய் கிழிய சனநாகம் மக்களாட்சி என கத்துகிறவர்கள் இதெற்கென்ன சொல்ல போகிறார்கள்..//

இதற்கு மாற்றுக் கருத்து இருக்கு. ஆனால் பிறகு சொல்கிறேன். இப்போது அதை சொன்னால் //ஈழத்தமிழன் என்ன சொன்னாலும் அதற்கொரு முன்முடிவான பதிலோடு இருந்தால் என்ன செய்வது ?// என்று மீண்டும் ஒரு முறை சொல்லக் கூடும்.

//"ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?"//
இதில் இருந்து விலக வேண்டாம் என விரும்புகிறேன்.

said...

வேறு ப்திவில் இருக்கும் கமெண்டை வெட்டி ஒட்டுவதற்கு அனானி ஆப்ஷனை பயன் படுத்தவேண்டாம். அப்படி விரும்பினால் உங்கள் பெயரில் சொல்லுங்கள்.

said...

தனி ஈழத்தில் இருந்து புலிகளை ஆதரிக்காத பாதிக்கும் மேல் தமிழ் பேசக் கூடிய மக்களை புறக்கணித்து விட்டு என்ன செய்ய முடியும் எனத் தெரியவில்லை.//

ஒட்டுக் குழுக்கள்! ஐயா பிரியா
இயக்கத்தின் சட்டம் ஒழுங்குகளுக்கு கட்டுப்படாது - அதற்கான தண்டனைகளை ஏற்க மறுத்து - பிரிந்து சென்றவர்களை - அழைத்து வைத்து என்ன பேசுவது? அவர்கள் புலிகளின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க இராணுவத்தோடு இயங்கும் குழுக்கள்.

இந்திய ராணுவ ஒழுங்கு கோட்பாடுகளை மீறியொருவன் செயற்பட்டு பாகிஸ்தான் ராணுவத்தோடு சேர்ந்து ஓடிப்போனால் - கூப்பிட்டு வைத்து பேசுவார்களாக்கும் -

பிரியன் தெளிவுக்காக இந்த கேள்வி
மலையகம் என்ற நிலப் பிரதேசம் - தனித்து சிங்கள தேசத்தின் மத்தியில் சிங்கள தேசத்தால் முற்றாகச் சூழப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும்தானே?

இன்றைக்கு தமிழகத்திலிருந்து ஈழம் எப்படித் தொலைவு மட்டு நிற்கிறதோ அவ்வாறே..

//மலையக மக்களுக்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் கொடுக்க புலிகள் தயாராக இல்லை. //

இந்த கேள்வியை யதார்த்தத்தில் இப்படி மாற்றியும் கேட்கலாம். ஈழ மக்களுக்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் கொடுக்க தமிழ்நாடு தயாராக இல்லை..


ஆனாலும் - மலையக தலைவர்களான ஆறுமுகம் தொண்டமான் சந்திரசேகரன் ஆகியோர் பிரபாகரனை சில தடவைகள் சந்தித்து பேசியிருக்கிறார்கள் - இலங்கையில் தமிழருக்கான விடிவு அனைத்து தமிழர்களுக்குமானதே என பிரபாகரன் சொன்னதாக அவர்கள் அப்போது பத்திரிகைகளிடம் சொன்னார்கள்..


தவிர.. அதென்ன கல்முனைக்கு கீழே.. புரியவில்லை. விளக்கவும்.

வடக்கு கிழக்கை முதலில் இணைத்தது இந்தியா தான் என்பது தெரியும் என நினைக்கிறேன்

Anonymous said...

வணக்கம் சகோதரர்,

என்ன செய்ய வேண்டும் என சிந்திப்பதே எமக்கு நிம்மதியை தருகின்றது.

பதிவுக்கு பதில் எழுதும் அளவிற்கு எனக்கு அரசியல் அறிவு இல்லை.

எனக்கு தெரிந்தவரை:

ஒரு குடிகாரன், அவன் மனைவியை எப்பவும் அடித்து துன்புறுத்துவானம்..காரணம் அவனை தட்டிக்கேட்க மனைவி பக்கத்தால் உறவுகள் யாரும் முன்வராதது தானாம்... தட்டிகேட்க ஆள் இருக்கு என்றால் அடிக்க முதல் குடிகாரன் யோசிப்பான் இல்லையா?

அவனை யோசிக்க மட்டும் வையுங்கள்..போதும்

said...

//"ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?"//
இதில் இருந்து விலக வேண்டாம் என விரும்புகிறேன்.//

முதலில் மனிதாபிமானத் தேவை. உணவு மருந்து ஆகியவையின் சீரான விநியோகம் - அதை உறுதிபடுத்த வேண்டும்.

மக்கள் வாழிடங்களில் தாக்குதல நிறுத்துங்கள். என அழுத்தம். இன்றும் கிளிநொச்சியில் இலங்கை படை எறிகணையில் நித்திரையில் இருந்தே இருவர் செத்துபோயிருக்கிறார்கள்.

பிறகு உண்மையாகவே இலங்கையில் அமைதி நிலவ வேண்மென்ற இதய சுத்தியான எண்ணம் இருக்குமானால் - அழுத்தங்களை பிரயோகித்து - சிங்கள அரசியல்சட்டத்தை மாற்ற வைப்பது. அந்த சட்டம் உள்ளவரை எதுவும் நடக்காது - சுயாட்சி தீர்வை தாம் சாதகமாவே பரிசீலிப்போம் என புலிகள் அறிவித்து எவ்வளவோ காலம் ஆகி விட்டது. ஆக சுயாட்சியை வரையுங்கள். அதை பகிரங்கப் படுத்துங்கள். நீதியான தமிழ்மக்கள் ஏற்கின்ற திட்டம் அதுவானால் - பிறகெதுக்கு ஆயுதம் -

சரி ஒருவேளை ஒட்டுமொத்த தமிழரும் விரும்பி - புலிகள் விரும்பவில்லையாயின் - பிறகு தானாகவே புலிகள் அந்நியமாகி போவார்களே.. (ஏனெனில் புலிகளின் போர்பலமும் பொருளாதாரபலமும் வெளிநாடுகளில் தங்கியிருக்கவில்லை. அது தமிழ்மக்களிடமே தங்கியுள்ளது.)

ஆனால் அவ்வாறு அரசு முன்வராத வரைக்கும் புலிகளை நம்புவதை தவிர வேறு வழி.. என்ன?


இந்த 30 காலத்தில் எப்போதாவது சிறிலங்கா சுயாட்சித் திட்டமெதனையும் முன்மொழிந்திருக்கிறதா?

சரி அரசியற் திட்டத்த மாற்ற காலமெடுக்குமா..? இதோ புலிகள் தாயரித்து அரசிடம் கொடுத்திருக்கிறார்களே.. 5 வருடத்திற்கான இடைகால நிர்வாக சபை- அதை அரசு பரிசீலிக்கட்டும். அதில் 5 வருடத்தின் பிறகு பொதுத்தேர்தல் ஒன்றை நடாத்தலாம் என புலிகளே சொல்லியிருக்கிறார்கள். அந்த இடைகால நிர்வாக சபையில் தமிழர்களும் முஸ்லீம் பிரதிநிதிகளும் ஏன் சிங்கள பிரதிநிதிகள் கூட புலிகளால் உள்ளடக்கப் பட்டிருக்கிறார்களே தெரியுமா..?

பொதுத் தேர்தலில் புலிகளும் போட்டியிடட்டும். ஒட்டுகுழுக்களும் போட்டியிடட்டும்.

தேர்தல் முடிவுகளை இந்தியா அங்கீகரிக்குமா?
இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்த இந்தியா முயலுமா..?

---

புலிகள் தரப்பில் இருந்து இந்தியா நோக்கி வேண்டுதல் வரவில்லையென யார் சொன்னது?
இதோ நேற்று டைம்ஸ் நௌ times now ஊடகத்துக்கு நடேசன் வழங்கிய பேட்டி பார்த்தீர்களா..

இந்தியா இதில் தலையிட்டு நேர்மையான தீர்வைத் தரவேண்டும் என கேட்டிருக்கிறாரே.. அது வேண்டுதல் இல்லையா.. தம்மீதான தடையை நீக்க வேண்டும் என கேட்டிருக்கிறாரே இது வேண்டுகோள் இல்லையா.. ?

இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் ஒரேயொரு நட்புநாடாக தமிழீழமே இருக்கும் என புலிகள் அறிவிக்கிறார்களே.. இது உறவுக்கான அழைப்பு இல்லையா.. ?

ஆனால் இது தெரிந்த உடன் நீங்கள் மறுவளத்தால் - நடேசனுக்கு அவ்வாறு கேட்க என்ன அருகதையுண்டு என கேட்பீர்கள்- ஏனெனில் முன்முடிவுகளை நீங்கள் ஏற்கனவே எடுத்து விட்டீர்கள்.

Anonymous said...

//ஒட்டுக்குழுக்களுடன் சமாதானம் பேச புலிகள் தயாரில்லை.//
தமிழ் பிரியன்அவர்களே ,
அது என்ன ஒட்டுக்குழு பிரபாகரனின் சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஒட்டுக்குழுவா?

Anonymous said...

சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஒட்டுக்குழுவா?//

வைகோ சீமான் அமீர் எல்லாம் ஒட்டுக்குழுக்களா

Anonymous said...

வைகோ சீமான் அமீர் எல்லாம் ஒட்டுக்குழுக்களா//

இந்தியாவில் சட்டங்களும் திட்டங்களும் உள்ளது போலவே ஈழத்திலும் சட்டங்களும் திட்டங்களும் உள்ளன. நான் இந்தியா என்ற இறையாண்மை மிகு நாட்டின் சட்டதிட்டங்களை ஏற்கின்றேன். ஈழமும் ஒரு இறையாண்மை மிகு நாடு என அந்த நாட்டின் மக்கள் நம்புகிறார்கள்

Anonymous said...

Civilian casualties: setting the record straight
One of the most common fabrications being spread about by those working against the Sri Lanka is that a large number of civilians are being killed in air strikes. Nobody likes conflict, and it's easy to conjure up images of death and destruction being rained down from the air - we've all seen plenty of war films. It isn't just fiction, of course. Air strikes have a thoroughly ugly past, and people tend to believe these stories without feeling the need to ask for supporting evidence. But they simply aren't true.

Just this week, a British Member of Parliament called for an urgent debate on the conflict in Sri Lanka because of his concern about what he described as Government bombing of areas in the North and East of the country.' Barry Gardiner, representing a constituency that is home to a considerable number of Tamil expatriates, demonstrated how uninformed he is - the East hasn't seen violence on anything other than a very local scale for over a year now. And he was almost equally wrong about the North. The LTTE will have fed Barry Gardiner this disinformation in the hope that he would agitate for pressure to be exerted on the Government to capitulate to the separatist demands of the organisation.

It is but one example of the kind. Foreign observers are regularly to be heard pontificating on this topic, spurred on by local propagandists.

The Peace Secretariat has been collecting data on all accusations of civilian deaths and injuries made in Tamil newspapers and websites, including from a number of publications that are known to be intimately associated with the LTTE. While this opens up the possibility of abuse by keenly encouraging the generation of false claims, it also gives a clear indication of the maximum possible extent of any issues there might be with air operations.

The findings are highly instructive. In the last two and a half years, the Sri Lanka Air Force has carried out hundreds of strikes against LTTE targets. But Tamil media sources have reported the demise of no more than 106 civilians, while only another 281 civilians are professed to have sustained injuries. This covers almost the entire period in which the Government has been responding to LTTE actions - from June 2006 to October 2008.

It should be noted that all but 45 of these 106 alleged deaths occurred in a single incident at the beginning of the confrontations. The Sri Lanka Air Force hit an LTTE camp in the jungles of Mullaitivu in August 2006. It maintains that those killed were cadres undergoing military training, and testimony of injured girls who subsequently found their way to areas under Government control backs up photographic and intelligence data supplied by the Sri Lanka Air Force. However, the LTTE claimed that the young women were attending a residential first aid course. Proof of this hasn't been established, and the reputation of the organisation for the recruitment of girls as suicide bombers as well as fighting cadres must surely be taken into account.

The Sri Lanka Air Force can therefore be said to do a good job. Their efforts to safeguard the civilian population compare favourably with those of other countries, including military forces much better equipped than ours.

Human Rights Watch has carried out analyses of the air strikes of the United States Air Force in both Afghanistan and Iraq. They show a far more worrying record.

In Afghanistan, two studies have been conducted. The first looked at the six months from October 2001 to March 2002. Human Rights Watch found evidence of an absolute minimum of 152 civilian deaths, which it put down to the fairly widespread use of cluster munitions. These release a large number of smaller bombs, a proportion of which don't explode on impact and therefore become landmines. The United States Air Force dropped a total of 1,228 cluster munitions containing around 248,056 bombs in the period studied, and Human Rights Watch says that a conservative estimate of the number that wouldn't have exploded on impact is around 5%, which would leave more than 12,400 landmines. Human Rights Watch noted that unexploded bombs from cluster munitions dropped by the United States Air Force and its allies in the first Gulf War eventually killed a total of 1,600 civilians.

The second report on Afghanistan looked at the two and a quarter years from May 2006 to July 2008. Human Rights Watch says that the United States Air Force killed at least 556 civilians in this period. It blamed this very high number of deaths on the tendency of the United States Army to call in air strikes on unverified targets in support of ground troops to avoid casualties on their own side.

In Iraq, Human Rights Watch didn't attempt to quantify the number of civilians who were killed in air strikes. However, the British medical journal The Lancet published an article suggesting that a total of 601,027 Iraqis died because of the conflict in the three and a quarter years from March 2003 to June 2006, of which 13% or over 78,000 people in air strikes. Human Rights Watch did say that the majority of the civilian deaths in air strikes occurred as the United States Air Force targeted Iraqi leaders, unwisely relying on intercepts of satellite phones that could only narrow down a location to the nearest 100 metres. All 50 of the acknowledged hits on Iraqi leaders failed, and Human Rights Watch claimed that most Iraqis they questioned were convinced that the targets weren't even present at the time of the attacks.

We dwell on these experiences because they demonstrate the restraint with which the Sri Lankan Government is prosecuting its air operations. Tactics that have led to significant numbers of civilian deaths in other theatres of war have not been employed here. It should be remembered that the methodology used by the Peace Secretariat in collecting these figures is rather more prone to overestimation than that used by Human Rights Watch, especially given the well known propaganda capacity of the LTTE.

Civilian deaths and injuries are a truly appalling prospect, and it is the duty of the Government to ensure that they do not occur under any circumstances. This effort by the Peace Secretariat to quantify the instances in which such things may have taken place supplements the routine work done by the Sri Lanka Air Force to monitor the results of its strikes and take action to ensure the safety of our people. This has also born fruit. Since fighting intensified in the North, only five allegations of civilian deaths in air strikes have been made in the three months from July 2008.

Interestingly, Sri Lankan NGOs who are known for their hostility to the Government admit that there have been very few civilian deaths in this phase of the conflict. Kumar Rupesinghe, head of the Anti-War Movement, was quoted in an interview in The Island this week admiring the introduction of what he called precision bombing to the Sri Lanka Air Force. Planes have been flying very low, so they have been able to study the maps and be very precise about their targets, he said. If the Anti-War Movement chief ideologue admits that the Government is succeeding in its attempts to safeguard civilians, others must surely be ready to accept it.

The Government welcomes accurate and relevant criticisms of its policies and is very happy to engage with those who can assist it to achieve its objectives of looking after its people. Such healthy dialogue is however at risk of being overshadowed by the current plague of fabrications that are attaching themselves to our record.

Anonymous said...

Anonymous said..
வைகோ சீமான் அமீர் எல்லாம் ஒட்டுக்குழுக்களா//
வைகோ சீமான் அமீர்ருக்கு சில வாரம் தான் சிறை.ஆனால் பிரபாகரனை புலியை எதிர்த்தால் தமிழர்கள் பரலோகம் தான்.

said...

மிக நல்லப் பதிவு சஞ்சய்.

இந்தப் பிரச்சனையில் இந்தியா செய்ய வேண்டியது.

1) முதலில் தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளும் அடங்கிய ஒரு குழுவை அமைத்து, அவர்களோடு நம் நாட்டுப் பத்திரிக்கையாளர்களையும் இணைத்து அவர்களை ஈழத்துக்கு அனுப்பி நிலைமைகளை நேரில் கண்டறியச் சொல்ல வேண்டும்.

ஏன் நாம் புலிகள் தவறான தகவல்களைத் தருகின்றார்கள், சிங்கள அரசு தவறானத் தகவலைத் தருகின்றது என்று குழம்ப வேண்டும்.
ந‌ம் குழுவே நேரில் க‌ண்டு வ‌ர‌ட்டுமே, ந‌ம் ப‌த்திரிக்கையாள‌ர்க‌ள் அங்கு உள்ள‌ நிலைமைக‌ளை நேரில் க‌ண்டு ப‌ட‌ம்பிடித்து வ‌ர‌ட்டுமே, அதைப் பார்த்தாவ‌து இங்குள்ள‌வ‌ர்க‌ள் உண்மைக‌ளை உண‌ர‌ட்டும்.

ஆனால் அய்யா ஒரு வேண்டுகோள் த‌ய‌வு செய்து அந்த‌க் குழுவில் எம் கே நார‌ய‌ண‌ண், சிவ‌ச‌ங்க‌ர‌ மேன‌ன் போன்ற‌ அதிகாரிக‌ளை ம‌ட்டும் அனுப்பாதீர்க‌ள்.

2) ந‌ம் நாட்டுக் குழுவின‌ர் நேரில் க‌ண்டுவ‌ரும் உண்மைக‌ளை வைத்து இங்கு ந‌ம‌து நாடாளும‌ன்ற‌த்தையோ அல்ல‌து தேசிய‌ அள‌வில் அனைத்துக் க‌ட்சிக் கூட்ட‌த்தையோ கூட்டி என்ன‌ செய்ய‌ வேண்டும் என‌ முடிவெடுக்க‌லாம்.
ந‌ண்ப‌ண் குசும்ப‌ன் சொன்ன‌து போல் ஒரு முதுகெலும்புள்ள‌ த‌லைமையால் தான் இரும்புப் பெண்ம‌ணி இந்திரா செய்த‌து போல‌ ப‌ங்க‌ளாதேஷ் உருவாக்கிய‌து போல் த‌மிழ் ஈழ‌ம் உருவாக‌ச் செய்ய‌ முடியும். என‌வே த‌ற்போதுள்ள‌ நிலையில் அது சாத்திய‌மில்லை. அங்குள்ள‌ நிலையை நேரில் க‌ண்ட‌றிந்து வ‌ந்த‌வுட‌ன் உங்க‌ளுக்கு எல்லாம் ம‌ன‌ம் என்ற‌ ஒன்று இருந்து, அதில் ம‌னிதாபிமான‌ம் என்ற‌ ஒன்று கொஞ்ச‌மாவ‌து இருந்தால் அத‌ன்ப‌டி ஏதாவ‌து ந‌ட‌வ‌டிக்கை எடுங்க‌ள்.

இனி ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் இழ‌ப்ப‌த‌ற்கு ஒன்றுமில்லை.

நாம் கொடுக்காவிட்டாலும் சீனா, பாகிஸ்தான்,அமெரிக்கா எல்லாம் ஆயுத‌ம் கொடுக்கும் என்று சொல்ல பிராந்திய‌ வ‌ல்ல‌ர‌சுக்கு வெட்க‌மாயில்லை? அதைக் கூட‌ த‌டுத்து நிறுத்த ந‌ம்மால் முடியாது என‌ நினைக்கின்றீர்க‌ளா? இதுக்குத்தான் இந்திரா மாதிரி ஒரு வீர‌மும், விவேக‌மும் உள்ள‌ ஒரு பிர‌த‌ம‌ர் இந்தியாவிற்கு வேண்டும்.

ஆனால் இந்த‌ ம‌னித‌ ச‌ங்கிலிப் போராட்ட‌ம், ம‌றிய‌ல், ஊர்வ‌ல‌ம் எல்லாம் ந‌ம‌து உண‌ர்வுக‌ளைக் காட்ட‌த்தான் உத‌வுமேத் த‌விர‌ வேறெந்த‌ உப‌யோக‌மான‌ ப‌ல‌னும் இருக்காது. அதோப் போல் தூத‌ரை கூப்பிட்டு க‌ண்ட‌ண‌ம் தெரிவிக்கிற‌து, இல‌ங்கையில‌ இருந்து ஒருத்த‌ர‌ கூப்பிட்டு விள‌க்க‌ம் கேட்குற‌து எல்லாம் க‌தைக்கு ஆகாது. உட‌னே இந்தியா நேரடியாக‌த் த‌லையிட‌ வேண்டும் என்ப‌தே என் வேண்டு கோள்.

இரண்டுத் தரப்பிலும் பல தவறுகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
அன்னை இந்திராவின் ஆசியோடும், ஆயுதங்களோடும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அவரது மகனால் நசுக்கப்பட்டது மிகவும் தூரதிஷ்டமானது. திலீபன், பூபதி அம்மா போன்றவர்கள் உண்ணாவிரதமிருந்தே உயிர் துறக்குமளவுக்கு இந்தியா அதை கண்டுகொள்ளாமல் விட்டது காந்தியை தேசத்தந்தையாக கொண்ட ஒரு தேசத்திற்கு மிகவும் அவமானமானது.
அமைதிப் படை செய்ததும் மிகவும் மோசமானது. அதோப் போல் ராஜிவ் கொலையும் தூரதிஷ்டமானது. இருதரப்பாலும் தவறுகள் நிகழ்தப்பட்டுள்ளன. அதையே நாம் பெரிதுபடுத்திக் கொண்டிருக்காமல் கடந்த கால நிகழ்வுகளில் இருந்து மீண்டு வந்து, தற்காலத்தை கண்ணோக்கி ஒரு தீர்வை யோசிக்க முன்வரவேண்டும்.
பழங்காலத்துக் கதைகளை சொல்லிக்கொண்டே இருப்பது தற்காலத்திற்கு உதவாது . ஒன்றை ம‌ட்டும் நினைவில் கொள்ளுங்க‌ள், இப்போது அங்கே அநியாய‌மாய் ம‌டியும் ப‌ல‌ குழ‌ந்தைக‌ளுக்கு ராஜிவ் என்றால் யாரென்று கூட‌த் தெரியாது. இன்னும் ராஜிவ் பெய‌ரைச் சொல்லிக் கொண்டு பிர‌ச்ச‌னையில் இருந்துத் த‌ப்பிக்க‌வோ அல்ல‌து இல‌ங்கைக்கு உத‌வி செய்வ‌தையோ செய்ய‌ வேண்டாம்.

ச‌ரி அய்யா புலிக‌ளை எதிர்ப‌வ‌ர்க‌ளுக்கும், கொண்டை உள்ள‌வ‌ர்க‌ளுக்கும் ஒரு முக்கிய‌மான‌ கேள்வி: த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் ந‌டுக்க‌ட‌லில் சுட‌ப்ப‌டும் போது நீங்க‌ எல்லாம் எங்க‌ சாமீ போய் என்ன‌த்த‌ புடுங்குறீங்க‌? எல்லை தாண்டி போனான் அதான் சுட்டான்னு சொல்லுறீங்க‌ளே, மீன‌வ‌ர்கள் எல்லைதாண்டி போற‌து ஒரு சாதார‌ண‌ செய‌ல், அது இங்க‌ ம‌ட்டுமில்ல‌, பாகிஸ்தான் கூட‌யும் ந‌ட‌ந்துகிட்டுத்தான் இருக்கு, ஆனா இது வ‌ரைக்கும் இந்திய‌ க‌ட‌ற்ப‌டை ஒரு பாகிஸ்தான் மீன‌வ‌னையோ, அல்லது பாகிஸ்தான் க‌ட‌ற்ப‌டை ஒரு இந்திய‌ மீன‌வ‌னையோ இதுவ‌ரைக்கும் சுட்டுருக்கா? சொல்லுங்க‌ சாமீ , ஏன்யா ஈழ‌த்த‌மிழ‌ன் எப்ப‌டியோ போறான் நீ வேலைய‌ப் பாருன்னு சொல்லுற‌ புண்ணிய‌வாண்க‌ளா ந‌ம்ம‌ த‌மிழ் நாட்டைச் சேர்ந்த‌ இந்திய‌த் த‌மிழ‌ன் அநியாய‌மா சாவுறானே அதுக்கு என்ன‌ய்ய‌ சொல்ல‌ போறீங்க‌. க‌ச்ச‌த்தீவுல‌ ந‌ம‌க்கும் மீன் பிடிக்குற‌ உரிமை இருக்குன்னுதானே ஒப்ப‌ந்த‌ம் சொல்லுது? அங்க‌ போற‌ மீனவ‌னையும் சுடுறாய்ங்க‌ளே அதுக்கு என்ன‌ சொல்லப் போறீங்க?
ந‌ம்ம‌ மாண்புமிகு உள்துறை அமைச்ச‌ர் சிவ‌ராஜ் பாட்டீல் அவ‌ர்க‌ள் மாநில‌ங்க‌ள‌வையில‌ சொல்றாரு, எத்த‌னை மீன‌வ‌ர்க‌ள் இதுவ‌ரைக்கும் சுட‌ப்ப‌ட்டாங்க‌ங்கிற‌ க‌ண‌க்கு கூட‌ அவ‌ங்க‌கிட்ட‌ இல்லையாம். இதுக்கு என்ன‌ ச‌ஞ்ஜெய் சொல்ல‌ போறீங்க‌? உங்க‌ காங்கிர‌ஸ் க‌ட்சி அமைச்ச‌ர் தானே அவ‌ரு நாட்டின் த‌லைந‌க‌ர்ல ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்பைக் குறித்து தொலைகாட்சிக‌ளுக்கு பேட்டிய‌ளிக்கும் போது கூட‌ ஒரு ஒரு பேட்டிக்கும் இடைய‌ உட‌னே ச‌ட்டைய‌ மாத்திக்கிட்டு செம‌ ஸ்டைலா பேட்டி குடுக்குற‌துல‌ அவ‌ருக்கு இருந்த‌ அக்க‌றைய‌ கொஞ்ச‌ம் சாகுற‌ த‌மிழ‌ன் மேல‌யும் காட்ட‌ச் சொல்லுங்க‌ய்யா. புண்ணிய‌மா போகும்.

Anonymous said...

இலங்கைத் தமிழர்கள் என்று சொல்வது பொத்தாம் பொதுவான சொல். தமிழீழம் என்று புலிகள் அல்லது பெரும்பான்மை ஈழத்தமிழர்கள் சொல்லும் பகுதியில் மலையகத் தமிழர்கள் இல்லை என்பதே உண்மை
சாஸ்திரி காலத்தில் மலையகத்தமிழர்கள் இந்தியா அனுப்பப்பட்டபோது யாழ் தமிழர்கள் மனிதச் சங்கிலி நடத்தவில்லை. கடல்தாண்டி குண்டுவெடிப்பு நடத்துபவர்கள் மலையக அடிமைகளை விடுவிக்க என்ன செய்தார்கள் என்பது வர்களுக்கே வெளிச்சம்.தமிழீழம் என்பது பெரும்பான்மை சமூகத்தின் அவா மலையகம் அதில் இல்லை.மலையகத்திற்கான தனிநாடு கேட்க புலிகள் தயாரா? சிங்களவனிடம் நடக்கும் சண்டை சசோதரச் சண்டை என்றுதான் சொன்னார்கள்.

மீனவர் பிரச்சனைக்கே உருப்படியாக ஒன்றும் செய்யமுடியாத வெளியுறவுக் கொள்கை இந்தியாவினுடையது.இந்தியா ஒன்றேமே செய்யாமல் இருந்தாலே நல்லது. அமெரிக்கா தருவான் பாகிஸ்தான் தருவான் என்பதற்காக இந்தியா தர வேண்டியதில்லை.

said...

வணக்கம்

நானும் புகழனின் இந்த கருத்து சரியாக இருக்கும் என்று நிணைக்கின்றேன்
\\புலிகள் தனிநாடு கோருவதை விட்டுவிட்டு சிங்கள அரசில் பங்கெடுக்க முன்வர வேண்டும். இதனை தமிழர்கள் புலிகளுக்கு வலியுறுத்த வேண்டும்.
\\

நன்றி

Anonymous said...

முதலில் மலையகம்,வடக்கு,கிழக்கு,உட்பட்ட ஒருங்கிணைந்த தமிழீழக் கொள்கை வகுத்து அனைவரையும் ஒரு குடையில்கீழ் கொண்டுவந்து தனிநாடு கேட்கட்டும் புலிகள். மலையகத்தான்,பீத்தமிழன் , வடக்த்தியான் என்று பிரிவினை பேசிக் கொண்டே சுயநலமாக தனக்கு மட்டும் போராடிவிட்டு அனைத்து தமிழர்களுக்கான தனி ஈழம் போன்ற தோற்றத்தை உண்டாக்க வேண்டாம். சீமான் கோஷ்டிக்கு மலையகம் என்று ஒரு நாசமாக்கப்ப்ட்ட தமிழினம் இருப்பதும், யாழ் தமிழர்களைவிட இவர்கலின் தொப்புள்கொடி உறவு வடக்கத்தியானுக்கு அதிகமானது என்ரு தெரியாது

said...

வணக்கம்.உங்கள் பதிவில் சொல்லலாமுன்னு பின்னுட்டம் போட்டால் நீளமாகப் போய்விட்டது.எனவே எனது கருத்தை தனிப் பதிவாகி விட்டேன்.மன்னிக்கவும்.

said...

முதலில் மலையகம்,வடக்கு,கிழக்கு,உட்பட்ட ஒருங்கிணைந்த தமிழீழக் கொள்கை வகுத்து அனைவரையும் ஒரு குடையில்கீழ் கொண்டுவந்து தனிநாடு கேட்கட்டும் புலிகள்.//

இதை செய்தால் முதலில் நீங்கள் எழுதப் போவதையும் இப்போதே சொல்லி விடுகிறேன்.

பார்த்தீர்களா மலையகத்தையும் தனியாக கேட்கும் புலிகள் இனி தமிழகத்தையும் தம்மோடு இணைக்க கேட்பார்கள். ஐயோ குய்யோ முறையோ தகுமோ

said...

அய்யோ அய்யோ!
தலைப்பு
“ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?” என்பதுதான்.

அதற்கு பதில் கூறுவதை விட்டு விட்டு விவாதங்கள் எங்கெல்லாமோ செல்கின்றது.

எந்தப் பிரச்சினைக்கும் தற்காலிகத் தீர்வு ஒன்றும் நிரந்தரத் தீர்வு ஒன்றும் இருக்கும்.

இப்பொழுது ஈழத் தமிழர்களுக்குத் தேவை தனித் தமிழ் ஈழமா? தன்னாட்சியா என்பதை விட
போரால் ஏற்பட்ட பசி பட்டினியைப் போக்கும் உணவு, காயங்களுக்கான மருத்துவ உதவி இவையே...

அதி அவசரமாக என்ன செய்தேனும் இவற்றை வழங்க வேண்டும்.

தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். அதற்காக இந்தியா உலக நாடுகளுடன் இணைந்து முயற்சி செய்து முடிவினை அளிக்க வேண்டும்.

போர் நிறுத்தத்திற்குப் பின் போர்தான் நி்ன்று விட்டதே இப்போது பாதிப்புகள் ஏதும் அதிகம் இல்லை என்று சும்மா விட்டு விடாமல் தொடர்ந்து முயற்சித்து நிரந்தரத் தீர்வுக்கு வழி வகுக்க வேண்டும்.

Anonymous said...

இந்தியா என்ன செய்யவேண்டும்.. ம்ம்ம்.. இது மிக நல்ல கேள்வி. இந்தியா செய்ய வேண்டியது இரண்டே இரண்டு.

1) இந்தியாவுக்கு எந்தவித ராணுவ, தொழில்நுட்ப, புலனாய்வு மற்றும் நிபுணர் உதவிகளை வழங்காதிருத்தல்.

2) இந்தியாவில் புலிகளுக்கானா தடையை அகற்றல்.

புலோலியான்.

Anonymous said...

இப்படியொரு சுதந்திரமான கருத்தாடலுக்கு வாய்ப்பளித்த பொடியன்-SanJaiக்கு மிக நன்றிகள். புலிகள் இப்படியொரு சந்தர்ப்பம் தரமாட்டார்கள்.எல்லாவற்றக்கும் துப்பாக்கி தான் அவர்களின் பதில்.

Anonymous said...

அடச்சை.. பின்னூட்டம் இடுறதுக்கே இவ்வளவு இடர்பாடா?? :)

இப்படிவந்திருக்க வேண்டும்...

1) இலங்கைக்கு எந்தவித ராணுவ, தொழில்நுட்ப, புலனாய்வு மற்றும் நிபுணர் உதவிகளை வழங்காதிருத்தல்.

2) இந்தியாவில் புலிகளுக்கான தடையை அகற்றல்.

புலோலியான்.

Anonymous said...

புலிகள் பற்றி பலவிதமான கருத்துகள் இங்கே இருப்பதால் ஒரு தெளிவுக்காக நண்பர் செல்வாவின் வலைப்பூவில் இட்ட பின்னூட்டத்தையும் இங்கே இணைக்கிறேன்.

//ஒரு ஈழத் தமிழன் என்கிற ரீதியில் சில விளக்கங்கள் கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த ஆயுதப் போராட்டம் தோன்றிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறேன். தமிழ் இளைஞர்களுக்குள் கொழுந்துவிட்டு எரிந்த சுதந்திர தாகத்தைப் பயன்படுத்தி சாரி சாரியாக இயக்கங்களை உருவாக்கி கொத்துக்கொத்தாக இளைஞர்களை இந்தியாவில் வைத்து ஆயுதப்பயிற்சியும் வழங்கியது இதே இந்தியாதான். ஈழத்தமிழர் மீது இருந்த பற்றினால் இது என்று நீங்கள் எண்ணினால் ஏமாறப்போவது நீங்களே. இதை அவர்கள் செய்யக் காரணம் இலங்கை அரசு சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா என இந்திய எதிர்ப்பு நாடுகளுடன் நட்புப் பாராட்டியதுதான். இலங்கையில் அமைதியைக் குலைப்பதுவே அப்போது இந்தியாவின் நோக்கம். ஏனென்றால், இந்திய- சீனப் போருக்கு இலங்கை அரசின் ஆதரவு சீனாவின் பக்கமே இருந்தது. இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் விமானப்படை இலங்கையில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் இலங்கையை ஒரு கட்டுக்குள் வைத்துக்கொள்ள கொடுக்கப்பட்ட லஞ்சமே கச்சைத்தீவு. கச்சைதீவு தமிழன் சொத்துதானே என்று தாரைவார்த்தது 'இந்தி'யா. கொடுப்பதற்கு வேறு தீவுகள் இல்லாத காரணத்தினாலோ என்னவோ பின்னாளில் இலங்கையில் உள்நாட்டுக் குழப்பத்தை விளைவித்தது இந்தியா. அப்போது சிங்களக் காடையர்களின் கலவரங்களால் சினமுற்றிருந்த ஈழத்தமிழ் இளைஞர்கள் இலகுவாகவே இந்திய வலையில் வீழ்ந்தார்கள்.

இப்படியாக ஈழத்தின் ஆயுதப்போராட்டம் உருவாகி வளர்ந்துவந்த நிலையில் மத்திய அரசின் 'ரா' அமைப்பு இயக்கங்களுக்குள் பிரிவினையையும் வளர்த்துவந்தது. எந்த ஒரு இயக்கத்தின் கையும் மேலோங்கக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தது. கிட்டத்தட்ட அப்போது இருந்த 32 இயக்கங்களில் புலிகள் மட்டுமே 'ரா'வை செவிமடுக்கவில்லை. அதனால் புலிகளை அடக்கவேண்டிய தேவை 'ரா'வுக்கு வந்தது. டெலோ இயக்கத்தின் மூலம் புலிகளை ஒழிக்கும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புலிகளோ பதுங்கிக் கொண்டார்கள். நிலைமை கைமீறுவதைக் கண்டு ஒரு கட்டத்தில் புலிகள் டெலோ உட்பட எல்லா இயக்கங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

இந்தக் கட்டத்தில் ஈழத்தில் ஆட்டுவிக்கும் பொம்மைகள் ஏதும் 'ரா'வுக்கு இல்லை. பிடியை இழந்தாகிவிட்டது. இப்போது என்ன செய்வது? இதே காலகட்டத்தில் வடக்கில் இலங்கை ராணுவம் புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் நடவடிக்கை ஒன்றை (1987) ஆரம்பிக்கிறது. அப்பாவித் தமிழர்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளாகிறார்கள். சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்த இந்தியா மனிதாபிமானம் என்கிற முகமூடியைப் பயன்படுத்தி இலங்கையின் 'உள்நாட்டு' விவகாரத்தில் தலையிடுகிறது. இலங்கை இந்திய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு இரண்டு நன்மைகள். ஒன்று, தம் சொல் கேளாத புலிகளை ஒழித்தல். இரண்டு, இலங்கையை சீனா பாகிஸ்தானுடன் சேராமல் பார்த்துக்கொள்ளல்.

பிரச்சினைக்குள் இருந்தவர்கள் தமிழர்களும் சிங்களவர்களும். ஆனால் ஒப்பந்தம் இட்டதோ சிங்களவரும் இந்தியாவும்.சரி ஒப்பந்தம்தான் செய்தார்கள். புலிகளின் சம்மதத்தைக் கேட்கவில்லை. அந்த ஒப்பந்தத்தை புலிகளின் தொண்டைக்குழியில் திணித்தார்கள். பிரபாகரனை நாடு கடத்தி புலிகளின் கைகளை முறுக்கினார்கள். வேறு வழியில்லாமல் புலிகளும் ஒத்துக்கொண்டார்கள். புலிகள் ஒப்பந்தப்படி ஆயுதங்களை ஒப்படைக்கிறார்கள். ஆயுதங்களை இந்தப்பக்கம் இந்தியப்படை வாங்கிக்கொண்டிருக்க மறுபுறத்தில் புலிகளுக்கு எதிரான தனது கைப்பாவை அமைப்பு ஒன்றுக்கு ஆயுதங்களை வழங்குகிறது 'ரா'. இதை அறிந்த புலிகள் ஆயுதக் கையளிப்பை நிறுத்துகிறார்கள். தொடர்ந்து நடந்த சம்பவங்களில் திலீபன் உட்பட பல போராளிகள் உயிர் துறக்கிறார்கள். தமிழர்கள் கொந்தளிக்கிறார்கள். எங்கும் ஆர்ப்பாட்டம், பேரணி. அப்போது இந்திய ராணுவக் கட்டளை அதிகாரி ஹர்கிரத் சிங்கிற்கு ஜே.என்.தீட்சித் மூலம் ஒரு உத்தரவு வருகிறது. பிரபாகரனைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆளை முடித்துவிடும்படி. அமைதிப் பேச்சுக்கு வரும் ஒருவரை சுட்டுக்கொல்ல முடியாது என்று தெரிவித்து விடுகிறார் சிங். இவர் பின்னாளில் மாற்றப்பட்டது வேறு கதை. இந்தச் சமயத்தில் அமைதியின்மைக்கு புலிகளைக் குற்றம் சுமத்தி அவர்களை அழிக்கும் முயற்சியில் இறங்குகிறது இந்தியா. புலிகள்‍ இந்தியப் படை மோதல் உருவாகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்படுகிறர்கள்.

பின்னர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தின் பின் ஆட்சி ஏறிய பிரேமதாசா இந்தியாவை வெளியேறும்படி பணிக்கிறார். இந்திய ராணுவம் வெளியேறுகிறது. சில வருடங்கள் கழித்து ராஜீவ் கொல்லப்படுகிறார். இந்தியா இலங்கை விவகாரத்திலிருந்து பெருமளவில் ஒதுங்கிக் கொள்கிறது. புலிகள் அபரிமித வளர்ச்சி காண்கிறார்கள். தமிழர் நிலங்களில் முக்கால்வாசியை இலங்கை ராணுவத்திடமிருந்து மீட்டெடுக்கிறார்கள்.

சிக்கலுக்குள்ளான இலங்கையை மீட்க மறுபடியும் உள்நிழைகிறது இந்தியா (2005). இம்முறை கொல்லைப்புற வழியாக. நிலங்களைப் பெருமளவு மீட்டுவிட்ட புலிகளுக்கு அப்போதைய தேவை தமிழ் ஈழ தேசத்துக்கான சர்வதேச அங்கீகாரம். ஆனால் இந்தியாவோ ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலிகளுக்குத் தடையைக் கொண்டுவர இலங்கை அரசுக்கு உதவியதோடு மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு ராணுவ தளபாடங்கள், ஆலோசனைகள் மற்றும் நிபுணர்களை வழங்குகிறது. இலங்கை ராணுவம் புலிகள் பகுதிகளுக்குள் நுழைந்து பல பிரதேசங்களைக் கைப்பற்றுகிறது. புலிகள் வலிந்த தாக்குதல்கள் எதையும் செய்யாமல் சர்வதேச அங்கீகாரத்துக்கான வேலைகளைச் செய்கிறார்கள்.

இதற்கு முதல் தேவை இந்தியாவில் புலிகளுக்கு உள்ள தடையை நீக்குவதாகும். இந்தியாவில் நீங்கினால் மற்றைய நாடுகள் எல்லாம் வரிசையாக நீக்க தமிழீழம் உருவாகும். இழந்த நிலங்களை மீட்பது எல்லாம் புலிகளுக்கு அவ்வளவு கடினமான காரியமாக இருக்கப்போவதில்லை.

இப்போது சொல்லுங்கள். இந்தியா தடையை நீக்கவேண்டுமா கூடாதா?

-புலோலியான்
//

Anonymous said...

பார்த்தீர்களா மலையகத்தையும் தனியாக கேட்கும் புலிகள் இனி தமிழகத்தையும் தம்மோடு இணைக்க கேட்பார்கள். ஐயோ குய்யோ முறையோ தகுமோ - கொழுவியார்

அய்யா கொழுவி மலையகத்திற்கு தனி நாடு வாங்கிக் கொடுக்க முடியுமா புலிகளால். சும்மா பினாத்தாமல் நேரடியாக் சொல்லுங்க சாரே. மலையகம் யாழ்த்கமிழனுக்கு தீண்டத்தாகத இனம். வடக்கத்தியானை நீங்கள் ஒருபோதும் உங்களுடன் இணைக்க விரும்பப்போவது இல்லை . எதற்கு இந்தக் க்கூப்பட்டு. மலைய்க மக்கள் நாடு துரத்தப்பட்டபோது யாழ் சுகவாசிகல் என்ன செய்தீர்கள்?

Anonymous said...

இணைய சும்பன்களுக்கும், ஆச்சி திடீர் மசால போல கருத்துச் சொல்லும் திரையுலக கந்தசாமீகளுக்கும் மலையகம் என்பது தனி இனம் என்பது தெரியாது. இலன்க்கையில் தமிழ் ஒரே இனம் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள். யாழ் வாசிகளிடம் மலையகம் பற்றிப் போசுங்க்கள். உடனே ஓ வேலையப்பாரு வடக்கத்ஹ்தியானே , சிங்களன் சோதரன் என்று சொல்வார்கள்

நடேசன் கேட்டால் என்ன கேட்கட்டி என்ன . தேசியத் தலைவர் உதவி வேண்டும் என்று சொல்லமாட்டாரா? இந்தியா என்ன செய்யவூண்டும் என்பதே சரியல்ல. முதலில் யாரிடம் இருந்து என்ன உதவி வேண்டும் என்று தேசையத் தலைவர் உதவி கோரட்டும். அதில் மலையகத்திறு தனி நாடி கோரிக்கையும் இருந்தால் இந்தியா ஏதாவது செய்யட்டும்

said...

நான் ஏற்கனவே சொல்லியிருக்க எதையும் செய்ய இந்தியாவல முடியாது, அப்படி நடக்க தமிழன்னு சொல்லிக்கிற சிலரும் விடமாட்டாய்ங்க. ஆகையால் நான் இந்திய அரசுக்கு வைக்கும் இறுதி வேண்டுகோள் சில கன்னட ஆசிரியர்களையோ அல்லது மராட்டிய ஆசிரியர்களையோ ஈழத்துக்கு அனுப்புங்கள் , அங்குள்ள எல்லாத் தமிழர்களுக்கும் கன்னடம் அல்லது மராத்திய மொழியைப் போதிக்கச் சொல்லுங்கள். ஈழத்தில் உள்ளவர்கள் தமிழனாய் இருந்து சாவதை விட கன்னடனாகவோ, மராட்டியனாகவோ மாறி பிழைத்துக் கொள்ளட்டும்.

ஈழத்தில் அல்ல உலகின் எந்த பாகத்தில் உள்ள கன்னடன் தாக்கப்பட்டாலும், மராட்டியன் பாதிக்கப்பட்டாலும் கன்னடர்களும் சரி, மராட்டியர்களும் சரி இந்தியாவையே கிடுகிடுக்க வைத்துவிடுவார்கள். அதையாவது செய்யுங்கள் அய்யா.

இந்தியாவிலேயே தேசியக் கொடிக்கு இணையாக தங்கள் மாநிலத்திற்கு என ஒரு கொடியை வைத்துக் கொண்டு அதையும் தேசியக் கொடிக்கு இணையாகப் பறக்கவிடும் அளவுக்கு மாநிலப் பற்றும் மொழிப் பற்றும் உள்ள ஒரே மாநிலம் கர்நாடகம் தான். ஈழத் தமிழ் உறவுகளே, இந்த பாழாய் போன தமிழன் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவும் மாட்டான், பிறரையும் செய்ய விடமாட்டான். இங்கு ஒரு சோ, ஒரு சுப்ரமண்ய சாமி, ஒரு ஜெயலலிதா மட்டுமில்லை. ஆயிரக்கணக்கில் இருக்கின்றார்கள். நீங்கள் இனியும் தமிழர்களாய் இருந்து சாகாமல் கன்னடர்களாகவோ அல்லது மராட்டியர்களாகவோ மாறிப் பிழைக்கும் வழியைப் பாருங்கள்.

Anonymous said...

//புகழன் - தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும். அதற்காக இந்தியா உலக நாடுகளுடன் இணைந்து முயற்சி செய்து முடிவினை அளிக்க வேண்டும்.//
இப்போது புலிகளின் அவசரதேவையே இது தான்.
மிகவும் பலவீனப்பட்டுள்ளார்கள். இதனால் தான் இவ்வளவு நாடகமும். இதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

said...

ஸ்ரீலங்காவில் வாழும் முஸ்லிம்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறார்களா ?

said...

//
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
ஸ்ரீலங்காவில் வாழும் முஸ்லிம்கள் தனி ஈழத்தை ஆதரிக்கிறார்களா ?

//

யாழ் தமிழர்கள் ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் முஸ்லிம்களை ஏற்றுக் கொள்கிறார்களா?

Anonymous said...

ஜோசப் பால்ராஜின் பாசம் கண்ணீர்விட வைக்கிறது. விரைவில் கள்ளத் தோணி ஏறி ஈழம் சென்று சிங்களர்களுக்கு எதிராக போரிடுவார் என்பது மட்டும் நிச்சயம். சார் சென்னையில் இருந்தால் இப்போதே புறப்படுங்கள். விடிவதற்குள் வன்னி போய்விடலாம். மலையகம் பக்கம் போய்விட வேண்டாம். அங்கே இருப்பது இந்தியத் தமிழர்கள். நமக்குத் தான் நம் வீட்டைவிட பக்கத்துவீடு தானே முக்கியம்.

Anonymous said...

மலையகத் தமிழர்கள் என்பவர்கள் பிரித்தானிய அரசால் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். அவர்கள் குடியேற்றப்பட்டது சிங்களவரின் இதய பூமியான மலையகத்தில். இது கிட்டத்தட்ட மும்பையில் வேலை நிமிர்த்தம் குடியேறிய தமிழர்களைப் போன்ற ஒரு நிலை. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர் போன்ற அரசியல் நிலையை உடையவர்கள்.

இப்போது சொல்லுங்கள் மும்பைத் தமிழர்கள் தனிநாடு கேட்பதற்கும் தமிழகத்தில் அப்படி ஒரு குரல் ஒலிப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்ன?

-புலோலியான்

Anonymous said...

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர் போன்ற அரசியல் நிலையை உடையவர்கள்.//

அப்ப அந்த நாதியத்த இனத்தைஇப்பத்தி உங்களுக்கு அக்கரைஇ இல்லை. வடக்கத்தியானிடாம் உதவி கேட்கும் நீங்கள் மலையகத்தான்னுக்கு என்னெ செய்தீர்கள்? சாஸ்திரி கலத்தில் யாழ்வாசிகள் என்ன போர்ராட்டம் செய்தீர்கள். மலையகத்தான் இந்தியா போஉ ஒழிந்தால் நல்லது என்றே இருந்தீர்கள்.

மலையகத் தமிழர்கள் என்பவர்கள் பிரித்தானிய அரசால் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள்./

அப்ப தமிழகத்தமிழனுக்கு யாழ்வாசிகலைவிட மலையகத்தானிடம் தொப்புல்கொடி உறவு அதிகமாக உள்லது சரியா?

சஞ்ஜை மலையக தமிழினம் பற்றி யாருக்கும் அக்கரை இல்லை. முதலில் மலையகத்திற்கான தனி நாடு கொள்கையையும் உங்கள் அஜென்ட்டாவில் சேருங்கள். அது தனி இனம். யாழ்வாசிகள்மலையகத்தானுக்கு வேலைகூட கொடுக்கமாட்டார்கள். எங்கே போய்சொல்ல இந்தக் கொடுமையெலாம்

Anonymous said...

முதலில் அங்கே நடக்கிறதை உலகத்துக்கு தெரிவிக்க UN சபை ஒரு குழுவை அங்கு அனுப்ப வேண்டும். மனித உரிமை மீறல்களை கட்டு படுத்த வேண்டும். UN போன்ற அமைப்புகள் அங்கு இருந்தால் புலிகள், இலங்கை அரசு இருவருமே கட்டுக்குள் வருவார்கள். இந்த நிலை வந்தால் மட்டுமே அரசியல் தீர்வுக்கு ஏதுவான வழி பிறக்கும். இதில் சில அடிப்படை சிக்கல்கல் உள்ளன. வேறு நாடுகள் இலங்கை பிரச்சினையில் தலை இடுவதை விரும்பாது. இதை மாற்ற வேண்டுமானால் தமிழ் நாட்டு தமிழர்கள் போராட்டம் வேண்டும். அப்போது தான் இந்திய அரசு உணரும். காலம் காலமாக தமிழன் இந்திய அரசை பொறுத்த மட்டில் இரண்டாம் குடிமகன். அதனால் தான் தமிழனின் நலன் கருதாமல் கச்சா தீவை இலங்கைக்கு கொடுத்தது. தமிழக மீனவன் சுடப்படும் போது கண்டு கொள்ளாமல் இருக்கிறது. எனவே, இதை உணர்ந்து மத்திய அரசுக்கு புரிய வைக்க தமிழாக மக்கள் போராட்டம் மிக அவசியம்.
எனக்கு புரியாத ஒரு விஷயம், இன்னும் இந்த விஷயம் என் UN சபையில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்க படவில்லை? இதற்கு ஒரு வழி இருந்தால் யாருனும் சொல்லுங்களேன்.

Anonymous said...

அப்ப அந்த நாதியத்த இனத்தைஇப்பத்தி உங்களுக்கு அக்கரைஇ இல்லை. வடக்கத்தியானிடாம் உதவி கேட்கும் நீங்கள் மலையகத்தான்னுக்கு என்னெ செய்தீர்கள்? சாஸ்திரி கலத்தில் யாழ்வாசிகள் என்ன போர்ராட்டம் செய்தீர்கள். மலையகத்தான் இந்தியா போஉ ஒழிந்தால் நல்லது என்றே இருந்தீர்கள்.

மலையகத் தமிழர்கள் என்பவர்கள் பிரித்தானிய அரசால் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள்./

அப்ப தமிழகத்தமிழனுக்கு யாழ்வாசிகலைவிட மலையகத்தானிடம் தொப்புல்கொடி உறவு அதிகமாக உள்லது சரியா?//

உங்கள் கருத்து மிகச்சரி.. வடக்கு கிழக்கு தமிழர் அரசியல் தலைமை விட்ட பிழை அது. தமிழர் விடுதலைக் கூட்டணி அது இது என்று அரசியல் செய்து கொண்டிருந்தார்கள். அது மட்டுமல்ல.. இலங்கை சுதந்திரமடைந்தபோது இலங்கை இரு நாடுகளாக இருக்க வேண்டுமா அல்லது ஒரு நாடாக இருக்க வேண்டுமா என்கிற விவாதம் நடந்தபோது லண்டன் வரை சென்று ஒரே நாடு என்று கதையை முடித்து வைத்தவர் பொன்.ராமநாதன் அவர்கள். முதிர்ச்சியில்லாத இவ்வாறான காரியங்களால் இன்று தமிழினம் வதைபட்டுக்கொண்டிருக்கிறது.

நண்பரே வன்னியில் ஒலுமடு என்கிற ஒரு இடம் இருக்கிறது. அங்கே சிங்களவனுடன் மலையகத்தில் வாழமுடியாமல் குடிபெயர்ந்த பல மலையகத் தமிழர்கள் புலிகளால் நிலம் வழங்கப்பட்டு விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். திருகோணமலையில் திரியாய் என்னுமிடத்தில் பலர் குடியேறி இருக்கிறார்கள். இப்படிப்பல.. புலிகளுக்கு மலையகத்தில் ஒரு நல்ல ஆதரவுத் தளம் இருக்கிறது. நீங்கள் சொன்ன காலகட்டம் எல்லாம் மலை ஏறி விட்டது.

புலோலியான்.

Anonymous said...

மலையகத் தமிழர்கள் என்பவர்கள் பிரித்தானிய அரசால் இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். அவர்கள் குடியேற்றப்பட்டது சிங்களவரின் இதய பூமியான மலையகத்தில். இது கிட்டத்தட்ட மும்பையில் வேலை நிமிர்த்தம் குடியேறிய தமிழர்களைப் போன்ற ஒரு நிலை. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர் போன்ற அரசியல் நிலையை உடையவர்கள்./

அப்படிபோடுி சாரே..
மலையகத்தான் இந்தியாவில் இருந்து பிழக்கபோன பரதேசி. யாழ்வாழ் சும்பன்கள் எல்லாம் யார். அவனுங்களுக்கு தமிழகம் வடக்கத்தியா? மலையகம் தனியாம். இவர்களுக்கு தனி அரசியல் நிலையாம். ஏன் மலையகத்தானுகும் சேர்த்து போ்ராடினால் கொறைன்சு போவீர்களோ?அரசியல்,அதிகாரம்,பணபலம் இல்லமால் காயடிக்கப்படும் மலையக மக்களின் தீர்வுக்காக தமிழம் போராடினால் நல்லது. ஏன் என்றால் தமிழீழத்தால் மலையகத்தானுக்கு ஒரு பலனும் இல்லை.

புலிகளுக்கு மலையகத்தில் ஒரு நல்ல ஆதரவுத் தளம் இருக்கிறது./

அதெல்லாம் சரி. ஆனால் ஏன் அவனுக்கும் சேர்த்து விடுதலை கேட்க என்ன தயக்கம்? நேரடிபதில் சொல்ல முடியாது. மலையகத்தான் இந்தியா விரட்டப்பட்டபோது யாழ்வாசிகள் என்ன செய்தீர்கள்/

Anonymous said...

மலையகம் பற்றி இணைய சும்பன்களுக்கும் பாரதிராஜகோச்டிகளுக்கும் என்ன தெரியும். தொப்புள்கொடி உறவாம். தூ. அது மலையகத்தானுக்கும் நாம் காட்டவேண்டியது. யாழ்வாசிகளுக்கு மலையகத்தான் தீன்Dஅத்தகாத வந்தேறி அதாவது தெரியுமா

Anonymous said...

கொசோவாவில் இப்போது அமைதி ஏற்படவில்லையா? 1983 இல் புலிகள் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன். கண்டிப்பாக, புலிகளால் பாதிகப்பட்டவர்களும் இருப்பார்கள். இலங்கை அரசு செய்வது இன ஒழிப்பு வன்முறை. புலிகளின் போராட்டமும் வன்முறையே.

ஆனால் இப்பது அமைதி பிறக்க வேண்டுமானால் இதை எல்லாம் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு, பிரச்சினையை எப்படி உலக நாட்டு தலைவர்களுக்கு தெரிவிக்க முடியும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுவே அங்கு அமைதி ஏற்பட ஒரு அடித்தளமாக அமையும் என்று எண்ணுகிறேன்.

பிரதமுருக்கு தந்தி அனுப்ப ஒரு முகவரி இருந்தது போல் UN மன்றத்துக்கும், UN தலைவர்களுக்கும் ஏதேனும் email id இருந்தால் தயவு செய்து இணையத்தில் பரப்புங்கள். நாம் முடிந்தவரை நம்மால் ஆனதை செய்வோம்.

Anonymous said...

சுயநலம் என்றாலும் இந்தியா பங்களாதேசுக்கு போராடியது. மலையக விடுதலையை ஏன் புலிகள் முன்னெடுக்கவில்லை என்றால் அது தனி அரசியலாம். தனி ஈழம் வேணும், தனிக் காஷ்மீர் வேணும், தனித்தமிழ்நாடு வேண்டும் ஆனா மலையகம் மட்டும் நாசமாப் போகட்டும். துப்புல்கொடி உறவு பற்றிப்பேசும் டவுசர்ப்பாண்டிகளுக்கு... மலையகம்தான் முதல் தொப்புல்கொடி உறவு. தெரிந்து கொள்ளுங்கள். தமீழீழத்தில் மலையகம் பற்றி எந்த தீர்மானமும் இல்லை. மலையக மக்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து போன வந்தேறிகளாம். ஏன்யா யாழ்வாசிகள் எல்லாம் என்ன சுயம்பாக உருவெடுத்த் த்னி தமிழ் இனமா? அப்படி சொல்ல வெட்கமாயில்லை உங்களுக்கு. அவர்களுக்கும் சேர்த்து போராடினால் என்னெ குறைந்த விடுவீர்கள். அவர்களும் தனி நாடு அடையட்டுமே. சுயநலவாதிகளா

said...

அடிக்கடி யாழ்வாசி யாழ்வாசி எனச் சொல்வதன் மூலம் எங்கோ இணையத்தில் படித்த அரைகுறை கட்டுரைகளை வாந்தியெடுக்கிறார் ஒரு சோதரர் -

தமிழரின் அறவழித் தலைமையின் காலத்தில் நிகழ்த்திய அரசியற் சதுரங்கத்தில் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையை தற்போதும் தூக்கிப் பிடித்து ஏதோ முடிந்தால் மலையகத்தார் யாழ்ப்பாணத்தார் முஸ்லீம்கள் என பிரிவினையை வளர்த்து விடலாம் என கனவு காணுகிறார்.

நடவாது சாரே.. தமிழர்கள் தான் நாமெல்லாம்.

வடக்கு கிழக்கில் தற்போது இருக்கும் மலையக மக்களுக்கு தாமும் ஈழமக்கள் என்ற எண்ணம்தான் உள்ளதே தவிர வேறெதுவும் கிடையாது.

பிரதேசவாதம் நீ மலையகம் நான் யாழ்ப்பாணம் என்ற பிதற்றல்கள் ஒருகாலத்தில் மக்கள் மனங்களில் இருந்ததுதான் சாரே.. அதை ஏற்பதில் தயக்கம் இல்லை. ஆனால் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள ஈழத்திற்கு தெரிந்திருக்கிறது. 20 வருடமாக ஒரே பல்லவியையா பாடிக் கொண்டிருக்க முடியும்?

கூர்மை பெற்ற யுத்தம் நமக்குள் தமிழன் என்ற ஒரே எண்ணத்தையே விதைத்திருக்கிறது.

சாரே - தனிநாடாய்ப் பிரிந்து செல்வதற்கு சில அடிப்படைகைள ஜெனிவாவின் அரசியல்சாசனம் சொல்கிறது.

இதேயிடத்தில் - தற்போது புலிகள் இயக்கத்தில் இணைந்திருக்கும் முன்னாள் ஈரோஸ் இயக்கத்தின் தமிழீழ வரைபு மலையகத்தையும் இணைத்திருந்தது தெரியுமா..

தயவுசெய்து ஈழம்பற்றிய கேள்வி கேட்பவர்கள் கொஞ்சம் நிலவர அறிவோடு பேசுவது நல்லது. நாலு கட்டுரையை வாசித்துவிட்டு உன்னை மடக்குகிறேன் பார் என வந்து முட்டியுடைக்கக் கூடாது.

ஆனால்.. வடகிழக்கு தமிழர்களை விட மலையகத் தமிழர்களுக்கு நெருங்கியதும் கால அளவு குறைந்ததுமான உறவு இருப்பது உண்மைதான். அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கே எதையும் செய்ய முன்வராத இந்தியா வடகிழக்குக்கு செய்யும் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் முயற்சிக்கலாம் இல்லையா...?

ஒரேயொரு சந்தோசம் - இன்று ஈழத்திற்கு ஆதரவான நிலை தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ளது. பெரும்பான்மை குறித்த கவனமே எமக்குண்டு.

said...

நாம் இங்கு விவாதிக்க நமது நேரத்தை ஒதுக்கும் நோக்கம் நமது ஈழ உறவுகளை கொடுமைகள் களையப்பட வேண்டும் என்பதற்காகத் தான்... அதைக் கவனத்தில் கொள்கின்றோம்.

அனானியா வருபவர்களின் கருத்துக்களை விட்டுவிட்டு கொழுவி அவர்களுக்கு மட்டும் என்னுடைய ஐயப்பாடுகளை முன்வைக்க விரும்புகின்றேன்.

கொழுவி இது போல் பல விவாதங்களில் பங்கெடுத்துள்ளார் என்பதையும் மனதில் கொள்கின்றேன்.

புலிகளின் பழைய தவறுகளை விட்டுவிடலாம். அதில் யாழ் முஸ்லீம் வெளியேற்றம், காத்தான்குடி பள்ளிப் படுகொலை (படங்கள் என்னிடம் மின்னஞ்சல் பெட்டியில் உள்ளன.), தம்மை எதிர்த்த குழுக்களை அழிக்க முற்பட்டது, இந்தியாவில் வந்து அதை செய்தது, ராஜீவ் கொலை உள்ளிட்டவைகள் அதில் அடக்கிக் கொள்ளலாம். ஏனெனில் இவை சரித்திரத்தில் இடம் பெற்று விட்டன. இவைகளுக்கு மன்னிப்பு கேட்டு விட்டனர்.

இனி இது போல் நடவாது என்ற உத்திரவாதமும் அளிக்கப்பட்டுள்ளது.

Anonymous said...

//ஒரேயொரு சந்தோசம் - இன்று ஈழத்திற்கு ஆதரவான நிலை தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ளது. பெரும்பான்மை குறித்த கவனமே எமக்குண்டு.//

இணையத்தில் எத்தனை பதிவுகள் தினமும் வருகின்றன. எத்தனை பேர் புலிகளை ஆதரித்து எழுதுகிறார்கள். தினமும் ஆயிரம் புதிய பதிவுக்ள் என்றால் அதில் அதிகமாக இந்திய தமிழர்கள் ஈழம் தொடர்பாக எழுதும் பதிவுகள் 20யை தாண்டாது. இது தான் பெரும்பான்மைய கொழுவி?

நீங்க காமேடி கீமேடு செய்யவில்லையே?

Anonymous said...

//புலிகளின் பழைய தவறுகளை விட்டுவிடலாம். அதில் யாழ் முஸ்லீம் வெளியேற்றம், காத்தான்குடி பள்ளிப் படுகொலை (படங்கள் என்னிடம் மின்னஞ்சல் பெட்டியில் உள்ளன.), தம்மை எதிர்த்த குழுக்களை அழிக்க முற்பட்டது, இந்தியாவில் வந்து அதை செய்தது, ராஜீவ் கொலை உள்ளிட்டவைகள் அதில் அடக்கிக் கொள்ளலாம். ஏனெனில் இவை சரித்திரத்தில் இடம் பெற்று விட்டன. இவைகளுக்கு மன்னிப்பு கேட்டு விட்டனர்.//

எப்போது மன்னிப்பு கேட்டார்கள் என்று தெளிவு படுத்த முடியுமா??

said...

//stanjoe said...

The soultion is in the hands of eelam tamils.

Sinhalese army is fighting against LTTE, If eelam tamils can handover Prabahran to India or Srilanka. The war will be stopped, Once Prabahran is elimiated, Then I dont think India will think too much to enter issue eelam issue //

வாங்க கோத்தபாய ராஜபக்ஸ்ஷே, எப்டியிருக்கீங்க?
எப்படி எப்படி , பிரபாகரனை பிடிச்சு இந்தியாகிட்டயோ இல்ல இலங்கைகிட்டயோ கொடுக்கணுமா? நல்லா இருக்கு உங்க யோசனை. அப்டி புடிச்சு குடுத்தா என்னா ஆகும்? நீங்க ரொம்ப சுலபமா தமிழ் இனம்னு ஒரு இனத்தையே இலங்கையில அழிச்சுருவீங்க. அப்றம் இந்தியா என்ன, அமெரிக்கா வந்தா கூட ஒன்னும் செய்ய முடியாது. அது தானே மிஸ்டர்.கோத்தாபய உங்க யோசனை? ந‌ல்லா சொல்றாய்ங்க‌யா யோச‌னை.
முடிஞ்சா போயி பிராபகரனை புடிங்கய்யா.

Anonymous said...

தமிழ்பிரியன், யாழ்பாண இஸ்லாமியர்களை புலிகள் கொன்றது சரி தான் என்பது என் நிலை.

said...

நாம் விரும்புவது ஈழத் தமிழர்களை பிரித்து அதை அரசியலாக்க வேண்டுமென்பது இம்மியளவும் இல்லை. அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே நமது அவா!

இனி ஈழத் தமிழர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் சக்தி அங்கு யாருக்கு இருக்கின்றது என்ற கேள்வி இருக்கின்றது?

அந்த தலைமையை முஸ்லிம்களும், தமிழர்களும், புலிகளை எதிர்க்கக் கூடியவர்களும், புலிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த வல்லமை யாருக்கு இருக்கும்? மேற்சொன்னவர்களில் ஒரு பகுதிக்குத் தான் இருக்க முடியும்.

முஸ்லிம்களின் தலைமையில் இயங்க முடியாது. ஏனெனில் அவர்கள் தமிழர்களின் எண்ணிக்கையில் பாதியே வருவார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

தமிழர்களில் ஜனநாயக ரீதியில் போராடக் கூடியவர்களின் தலைமையிலும் சாத்தியமே இல்லை. நமக்கு பல துரோக வரலாறுகளே கண் முன் நிற்கின்றனர்.

இறுதியாக இந்த வல்லமை புலிகளுக்கே இருக்கின்றது. முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் கால ஓட்டத்தில் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதற்கு இந்திய முஸ்லிம்கள் ஒரு உதாரணம். பாகிஸ்தான் பிரிந்த பிறகும் கால ஓட்டத்தில் முஸ்லிம்கள் இந்தியாவின் பிரிக்க இயலாத சக்திகளாக மாறியுள்ளனர். இந்துக்களையும், முஸ்லிம்களையும் பிரிக்க நினைக்கும் பாஸிஸ சக்திகள் இந்தியாவில் படுதோல்வியைத் தழுவியுள்ளது கண்கூடு. இன்னும் தோல்வியையே தழுவும்.

ஆனால் புலிகளால் இந்த தலைமையை தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதை தயவு செய்து தெளிவு படுத்த வேண்டுகின்றேன்.

Anonymous said...

//வாங்க கோத்தபாய ராஜபக்ஸ்ஷே, எப்டியிருக்கீங்க?
எப்படி எப்படி , பிரபாகரனை பிடிச்சு இந்தியாகிட்டயோ இல்ல இலங்கைகிட்டயோ கொடுக்கணுமா? நல்லா இருக்கு உங்க யோசனை. அப்டி புடிச்சு குடுத்தா என்னா ஆகும்? நீங்க ரொம்ப சுலபமா தமிழ் இனம்னு ஒரு இனத்தையே இலங்கையில அழிச்சுருவீங்க. அப்றம் இந்தியா என்ன, அமெரிக்கா வந்தா கூட ஒன்னும் செய்ய முடியாது. அது தானே மிஸ்டர்.கோத்தாபய உங்க யோசனை? ந‌ல்லா சொல்றாய்ங்க‌யா யோச‌னை.
முடிஞ்சா போயி பிராபகரனை புடிங்கய்யா//

வாங்கய்யா கண்ணி புலி,இங்க இணையத்துல போராடடுவதற்க்கு பதில் கள்ள தோணியில் போய் புலிகளோடு சேர்ந்து சண்டை போடலாம். வடக்கதியானை சேர்த்துபாங்களாங்னு கேட்டுகிட்டு போங்க. முடிஞ்சா போய் போராடுய்யா,

என்னது பிரபாகரனை புடிக்கனும்மா? அவனே உடம்பு வெடிச்சு சேத்து போறமாதிரி இருக்கான். செத்த பாம்பை புடிச்சு என்ன செய்வது?

said...

கொழுவி said...

தமிழ்பிரியன், யாழ்பாண இஸ்லாமியர்களை புலிகள் கொன்றது சரி தான் என்பது என் நிலை.
//

இந்த பின்னூட்டினை நான் இடவில்லை.
Name URL இனை பயன்படுத்தி பாவம் யாரோ விளையாடுகிறார்கள்.

கருத்து சுதந்திரத்தை பயன்படுத்துகிறார்கள். இயலாக் கட்டத்தில் இப்படியேதாவது திருகுதாளங்களில் ஈடுபடுவது தோற்றுப் போவர்களின் உலகளாவிய வழமை

Anonymous said...

இலங்கையின் இறையாண்மைக்கு உலைவைக்கும் தமிழக அரசியல்!

- இந்திரஜித்

அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி விடுத்த ஒரு அறிக்கையில, இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில், இந்திய மத்திய அரசு 1971ல் பங்களாதேஷ் பிரிவினையின்போது செயற்பட்டதுபோல நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். தமிழ்நாட்டில் வை.கோபாலசாமி, ப.நெடுமாறன், தொல்.திருமாவளவன், எஸ்.ராமதாஸ் போன்றவர்கள் மட்டுமல்ல கருணாநிதியும் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறார் என்பதுதான் இதன் அர்த்தம். இந்திய மத்திய அரசில் ஒரு பிரதான பங்காளியாகவும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவராகவும் உள்ள கருணாநிதி, இன்னொரு சுதந்திரமும் இறைமையும் உள்ள நாட்டின்மீது இந்தியா வன்முறையை பிரயோகித்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என கூறுவது, அப்பட்டமான ஜனநாயக விரோத நிலைப்பாடு என்பதுடன், மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இதன் மூலம் கருணாநிதி இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விட்டதுமல்லாமல், இந்தியா 1955ல் பாண்டுங் மாநாட்டில் ஒப்புக்கொண்டு பின்பற்றி வருவதாகச் சொல்லிக் கொள்ளும் பஞ்சசீலக் கொள்கையையும் கேலிக்கூத்தாக்கியுள்ளார். அதுமட்டுமல்ல சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு 1929ல் எழுதிய கட்டுரை ஒன்றையும் கருணாநிதி சுட்டிக்காட்டி, இந்தியா இலங்கையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் வலியுறுத்தியுள்ளார். நேருவின் கட்டுரையில் அவர் இந்தியா பலவீனமாக இருப்பதனால் (அப்பொழுது பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இருந்துது) அயல்நாடுகளில் உள்ள தனது பிரஜகளை பாதுகாக்க முடியாமல் இருக்கிறது என்றும், இந்தியா பலம் பெறும் காலம் வரும், அப்பொழுது அது தனது பிரஜைகளை பாதுகாக்கும் எனவும் கூறியிருந்தார். இதை மேற்கோள் காட்டிய கருணாநிதி, இப்பொழுது இந்தியா பலம் பெற்றுள்ளதால், அது இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதியின் கூற்றின்படி, இலங்கையின் வடகிழக்கில் வாழுகின்ற தமிழர்களும் இந்தியப் பிரஜைகள் என்றே அர்த்தமாகிறது. இது இலங்கையின் சுதந்திரத்தையும் இறைமையையும் மட்டுமின்றி, இலங்கை தமிழர்களின் தனித்துவத்தையும்மதிக்காத, தமிழக, தமிழ் பேரினவாத சக்திகளின் ஆணவப்போக்காகும். இது ஒருபுறமிருக்க, இன்னொரு தமிழக இனவெறியரான ப.நெடுமாறன், இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டும்கூட,வன்னியில் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தத்தை நிறுத்தமுடியாதென, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கூறியிருப்பது, இந்தியாவின் இறைமையை மீறும் செயலென அறிக்கை விடுத்துள்ளார். இதன்பொருள் இலங்கை என்பது இந்தியாவின் ஒருபகுதி என்ற கருத்தை உள்ளடக்கி நிற்கிறது. இந்த அறிக்கையின் மூலம், கருணாநிதியைப்போலவே நெடுமாறனும் இலங்கையின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அப்பட்டமாக மீறி நிற்கின்றார். தமிழக இனவெறி அரசியல்வாதிகளின் இத்தகைய உரைகளும் அறிக்கைகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டவை மட்டுமல்ல. தமிழகத்திலும் தமிழ் இனவாதத்தை தூண்டி, அங்கும் ஒரு பிரிவினைப் போக்கை வளர்க்கும் நோக்கம் கொண்டவை. இந்திய அரசு இதை முளையிலேயே கிள்ளியெறிய தவறினால், தமிழ்நாடும் ஒரு காஸ்மீராக, காலிஸ்தானாக, நாகலாந்தாக,அசாமாக மாறக்கூடிய நிலை வெகுதூரத்தில் இல்லை.

1987 ஆண்டில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படைமீது, புலிகள் தொடுத்த வலிந்த தாக்குதல்களால் இந்திய அமைதிப்படை புலிகளுடன் யுத்தம் புரிய நேரிட்டது. அப்பொழுது இந்திய அமைதிப்படை தமிழர்களை கொல்வதாகக்கூறி, இந்திய மத்திய அரசையும் இந்திய அமைதிப்படையையும் கருணாநிதி கடுமையாக வசை பாடினார். புலிகளுடனான யுத்தத்தில் இந்திய இராணுவத்தினரில் 1255 பேர் கொல்லபட்டனர், பல ஆயிரக்கணக்கான காயமுற்றனர். இவ்வாறு பல இழப்புகளைச் சந்தித்த இந்திய அமைதிப்படை 1990 ஆண்டு இந்தியாவிற்கு திரும்பியபொழுது, இந்திய அமைதிப்படை தமிழர்களுடன் சண்டைபோட்டு விட்டதாகக்கூறி, கருணாநிதி இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்தார். இப்பொழுது அதே கருணாநிதி, 1971ல் பங்களாதேஷ் பிரிவினையின்போது இந்தியா நடந்து கொண்டதுபோல இந்திய மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டுமென புத்தி பேதலித்தமாதிரி பிதற்றுகிறார். 1960களில் இந்தியா பின்பற்றிய அயலுறவு கொள்கைகளின் விளைவாக, தன்னைச்சுற்றிவர இருந்த நாடுகளான சீனா, பாகிஸ்தான், பர்மா, நேபாளம், சிக்கிம்,பூட்டான், ஆப்கானிஸ்தான் என எல்லாநாடுகளுடனும் எல்லைப்பிரச்சினையை உருவாக்கிக்கொண்டது. சீனாவுடன் 1962ல் ஒரு தடவையும்,பாகிஸ்தானுடன் 1965லும் 1971லுமாக இருதடவைகளும் எல்லையுத்தத்திலும் ஈடுபட்டது. சிக்கிமை 1972ல் தனது நாட்டுடன் இணைத்தக் கொண்டது. ஆனால் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் உள்ள இலங்கையைப் பொறுத்தவரை,(முன்னைய காலங்களில் சோழப்பேரரசர்களின் படையெடுப்புகள் நடந்தபோதிலும்) இருநாடுகளுக்கிடையிலும் தரைத்தொடர்புகள் இல்லாததாலும், இலங்கையின் பண்டாரநாயக்க ஆட்சிகளின் புத்திசாதுரியத்தினாலும்,இந்தியாவுடன் பெரும் முரண்பாடுகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் ஏகபோகம் தகர்ந்து, ஜனதாதளம், பாரதீயஜனதா போன்ற கட்சிகளின் அரசுகள் உருவான பின்னணியில், அயல்நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளும் மேம்படத் தொடங்கின. குறிப்பாக சீனாவுடனும் பாகிஸ்தானுடனுமான இந்தியாவின் உறவுகள் முன்னெப்போதையையும் விட இப்பொழுது சிறப்பாக உள்ளன. ஆனால் தரைத்தொடர்புகளும் இல்லாமல், இந்தியாவைவிட எழுபதில் ஒரு மடங்கு சிறியதுமான,இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை,இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழ்தேசிய வெறிபிடித்த சக்திகள் சீர்குலைத்துவிடக்கூடிய அபாயம் இப்பொழுது எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைமையிலான இலங்கை தமிழ் பாசிசசக்திகள்,இந்தியாவின் இறைமைக்கு சவால்விட்ட அளவுக்கு வேறு எந்த அயல்நாடும் அதற்கு சவால்விட்டது கிடையாது எனலாம். அதேபோல தமிழக தமிழ் இனவெறி சக்திகள் (முன்பு சோழமன்னர்களின் படையெடுப்புகளை விடுத்துப்பார்த்தால்) அளவுக்கு வேறு எந்தவொரு அந்நிய சக்தியும் இலங்கையின் இறைமைக்கு சவால்விடுத்ததும் கிடையாது. இந்த உண்மையை இந்திய அரசாங்கத்தின் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

இலங்கை இனப்பிரச்சினை என்பது தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்தோ அல்லது வெளிசக்திகளின் தலையீட்டினாலோ தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. அது முற்றுமுழுதாக இலங்கையின் அனைத்து இனங்களினதும் இணக்கப்பாட்டின் மூலம் தீர்க்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக நாட்டின் சனத்தொகையில் 70 வீதத்தை வகிக்கும் சிங்களமக்களின் புரிந்துணர்வும் உடன்பாடும் அதற்குத்தேவை. இலங்கையின் 2500 வருட வரலாற்றில் தமிழகமன்னர்களின் பல படையெடுப்புகளின் காரணமாக, இந்தியா என்றால் ஒர் ஆக்கிரமிப்பு நாடு என்ற சிந்தனை சாதாரண சிங்களமக்களின் மனதில் ஊற்ப்போய் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கையைவிட்டால் தமக்கு வேறுநாடு கிடையாது என்ற கருத்தும் சிங்களமக்கள் மத்தியில் உண்டு. இலங்கை கௌதம புத்தரால் சிங்களமக்களுக்கென ஆசீர்வதிக்கப்பட்ட நாடு என்ற நம்பிக்கையும் சிங்களமக்களுக்கு உண்டு. மேலும் இந்த கருத்தோட்டங்களை அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிங்கள இனவாதிகள் வளர்த்தும் வந்துள்ளார்கள். ஆனால் அதேநேரத்தில் சாதாரண சிங்களமக்கள், தமிழர் உட்பட ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளை மறுப்பவர்கள் அல்ல. தீவிர இனவாதம் பேசிய சிங்கள அரசியல்வாதிகளை, இலங்கைச் சிங்கள மக்கள் எப்பொழுதும் நிராகரித்தே வந்துள்ளனர். இன்றுகூட இலங்கையில், இனங்களின் ஐக்கியத்தை விரும்பும் தமிழர்களின் விகிதாசாரத்தைவிட, அதை விரும்பும் சிங்களவர்களின் விகிதாசாரமே அதிகம். எனவே இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா அனுசரணை வழங்குவதானால், அது தலையீடு அல்லது நிர்ப்பதித்தல் என்ற வகையில் இருக்குமானால்,அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக இந்திய மத்திய அரசாங்கம்,தமிழக இனவாத அரசியல்வாதிகளின் சொற்படி செயற்படுமானால்,அது இலங்கையின் ஸ்திரதன்மையை பாதிப்பதுடன் மாத்திரம் முற்றுப்பெறாது. இந்தியாவையும் அது கடுமையாக பாதிக்கும். ஏனெனில் சில தமிழக அரசியல்வாதிகள் அப்பாவித்தனமாக நம்புவது போல, புலிகள் சுயாதீனமான ஒரு தமிழ் தேசிய இயக்கமல்ல. அவர்களின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் அனைத்து வேலைத்திட்டங்களிலும், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் கரங்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன. அதில் முக்கியமானது இந்தியாவை சீர்குலைத்து, இந்திய உபகண்டத்தை யுத்தப்பிராந்தியமாக நிலை நிறுத்துவது. அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மகத்தான சுதந்திரப் போராட்டத்தை நடாத்திய இந்திய மக்கள்,தம்மீது அந்நிய –உள்நாட்டு நாசகார சக்திகளால் போடப்பட்டுள்ள சதி வலையை நிச்சயம் அறுத்தெறிவார்கள் என்று நம்பலாம்.

http://www.thenee.com/html/251008-3.html

Anonymous said...

//இந்த பின்னூட்டினை நான் இடவில்லை.
Name URL இனை பயன்படுத்தி பாவம் யாரோ விளையாடுகிறார்கள்.

கருத்து சுதந்திரத்தை பயன்படுத்துகிறார்கள். இயலாக் கட்டத்தில் இப்படியேதாவது திருகுதாளங்களில் ஈடுபடுவது தோற்றுப் போவர்களின் உலகளாவிய வழமை//

ஏன் நீயே செய்து விட்டு யாரோ செய்கிறார்கள் என்று பழியை தூக்தி போடலாமே.

புலிகள் இது வரை செய்த படுகொலைகள் தமிழ தலைவர்களை கொன்றது எல்ல்லாமே யாரோ செய்தார்கள் என்று அடுத்தவர் மேல் பழியை போட்டவர்கள்தானே

said...

நீங்க காமேடி கீமேடு செய்யவில்லையே?//

நான் வலைப்பதிவு எழுதுபவர்களை வைத்து சொல்லவில்லை. 8 கோடி தமிழர்களிலும் சொல்கிறேன்.

மனிதச் சங்கிலியாகட்டும் - உண்ணாவிரதமாகட்டும் - அரசியட்கட்சிகளின் நோக்கினை கடந்து ஈழத்தமிழர் நலனில் அக்கறையின் பால் மட்டுமே வரும் அந்த மக்களின் பெயரில் சொல்கிறேன்.

அது போதும்!


பிரியன் - புலிகள் தீர்வுக்காக மட்டுமே போராடுகிறார்கள். இடைக்கால நிர்வாக சபையில் 5 வருடத்திற்கு பிறகு பொதுதேர்தல் என்பதை புலிகள் தாமாக முன்மொழிந்திருக்கிறார்களே..

தேர்தலில் பிரபாகரன் ஒருபோதும் போட்டியிடப் போவதில்லையெனவும் தீர்வின் பின்னர் மக்களின் தீர்மானத்திற்கு விட்டுவிடுவதாகவும் நெடுமாறனிடம் முன்பொருதடவை சொல்லியிருந்தாரே..

தமிழீழத்தின் அதிபராக எவரும் வரலாம். ஆனால் தேசியத்தலைவர் பிரபாகரன் மட்டும்தான். எப்போதும்.

சுயாட்சி மாதிரியான தீர்வு கிடைக்கும் போது அதன் பெறுபேறு முஸ்லீம்கள் மலையக மக்கள் ஏன்.. சிங்கள மக்கள் என அனைவரையும் சென்றடையும் வண்ணம் பார்த்து கொள்ளவது எங்கள் பொறுப்பு

ஆனால் சிங்கள அரசை சுயாட்சிக்கு இணங்கச் செய்வது யார் பொறுப்பு? இலங்கையின் இனவெறி பிடித்த அரசியல் சட்டத்தை மாற்றச் செய்வது யார் பொறுப்பு?

இந்த கேள்விகளுக்கு இப்போதைக்கு நம்பப்படும் ஒரு பதில் அதற்கு புலிகளின் ஆயுதங்களே பொறுப்பு

வேறுயாராவது அதனை தலையிட்டு தீர்த்தால் ஆயுதங்களின் தேவையும் அற்று போகும்.

said...

அடுத்தவ்ர் பெயரில் கமெண்ட் போடுவதை நிறுத்துங்கள். இங்கு தேவை இல்லாத சண்டை வேண்டாம். முடிந்தால் ஆரோக்கியமான விவாதம் செய்யுங்கள். இல்லை எனில் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

கொழுவி அதற்கு நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டாம். விட்டுவிடுங்கள்.

said...

புலிகளின் தற்போதைய அஜெண்டா என்ன என்பது தான் தற்போதைய முதல் கேள்வி.

ஆயுதம் தரித்து போராடிக் கொண்டே இருப்பதால் மட்டும் தனி ஈழம் கிடைத்து விடுமா? சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு என்பது நிதர்சனமான உண்மை.

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு ஈழத்தில் இருக்கும் மக்கள் படும் அவலம் தான் முதல் துயர். தனி ஈழம் இரண்டாவதே.
தமிழீழத்தில் உள்ள தமிழ் பேசக் கூடியவர்களை ஒன்றிணைக்க என்ன திட்டம் வைத்துள்ளனர்?

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து அமைதி மலர திட்டம் என்ன?

ஆயுதம் தாங்கி போராடி வெல்ல இயலுமா என்பதை நீங்களே உங்கள் மனசாட்சியைத் தொட்டு கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

இலங்கைப் பிரச்சினையை உலக நாடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஐ.நாவில் இதை எழுப்பி கவரலாம். அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு கண்டிப்பாகத் தேவை.

அதற்கான சூழல் மலர்ந்துள்ள நிலையில் புலிகளின் பெயரை இதில் இழுப்பது இந்தியாவின் உள்ளவர்களின் வெறுப்பை மட்டுமே சம்பாதிக்க வைக்க இயலும்.

இன்னும் தமிழகத்தில் ராஜீவ் கொலையை யாரும் மறக்க வில்லை. அதை வரலாற்றுத் தவறு என்று எம்மை போன்று சிலர் மன்னிக்கலாம். ஆனால் பாமர மக்களின் மனதில் ஜெ. போன்றவர்களின் பிரச்சாரங்கள் இன்னும் மறக்க வைக்கவில்லை.

தமிழகத்திலேயே இந்த நிலை என்றால் இந்தியா முழுவதும் ஒத்த கருத்து இயலாது.

முதலில் தமிழகத்தில் எழுந்து இருக்கும் அனுதாப அலையை பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.

இந்த சூழலில் மேலே சொன்ன ஒன்றை மீண்டும் சொல்கிறேன். புலிப் படைத் தலைவர் ஒருவர் ‘வரும் மழை காலத்தில் மழைச் சகதியில் சிங்களப்படைகளை ஓட ஓட விழ்த்துவோம்’ என்று சொல்கின்றார். ஆயாசமாக இருக்கிறது.... :(

பலமுள்ள ஒருவனை அடிக்கும் போது அவன் திருப்பி அடிக்கிறான். பலவீனமானவனுக்காக பஞ்சாயத்து செய்கின்றோம். அப்போது அடிபடுபவன் உன்னை அழிக்காமல் விட மாட்டேன் என்று அனைவர் முன்னிலையிலும் சொல்வது பஞ்சாயத்துக்கு வருபவனை வேலையைப் பார்த்துக் கொண்டு போடா என்று சொல்வது தானே?

அடிக்க வேண்டாம் என்று சொல்ல நான் பாதிக்கப்பட்டவன் அல்ல... பாதிக்கப்பட்டவனுக்கு தான் அதன் வலி தெரியும் என்பதை உணர்கின்றேன்.

said...

ஏன் நீயே செய்து விட்டு யாரோ செய்கிறார்கள் என்று பழியை தூக்தி போடலாமே.//

கருத்தியல் ரீதியில் தோல்வியைத் தழுவி பின்செல்பவர்களின் கடைசி வார்த்தைகளில் வன்முறை தெரிவது வழமைதான். பரவாயில்லை - ஈழத்தில் திடீரென ஒருவனை ஒருமையில் விளிப்பது - பண்பாட்டுக்குறைவு என்ற வழக்கம் உள்ளது.

தமிழகத்தில் அது வழமை- அதில் பண்பாட்டு குறைவு ஏதுமில்லை என நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆகவே யாதொரு பாதகமும் இல்லை

Anonymous said...

சமாதான காலங்களில் புலிகள் தங்கள் ஆயுதங்களை மீண்டும் அதிகரித்து கொள்வதற்க்கும் எதிரிகளை தற்கொலை படையால் அழிபப்தையே குறிக்கோளாக வைத்து இருக்கின்றனர்.

சென்ற சமாதான காலத்தில் புலிகளால் கொல்லபட்டது தமிழரான கதிர்காமர் மற்றும் பலர். எள்ளாளன் படை பொங்கு வரும் படை என ஏகப்பட்ட படைகள்.

மேலும் தற்போதையை இலங்கை படை தளபதியை தற்கொலைபடை தாக்குதல் நடாத்தி கொலை செய்ய முயர்ச்சித்தார்கள்..

சமாதான காலத்தில் பேச்சு வார்த்தை காலத்தில் இதை போல செய்தால் யாருக்குதான் புலிகளோடு பேச்சுவார்த்தை நடாத்த முடிவுக்கு வருவார்கள்.

புலிகள் போர்களத்தில் போர் செய்வது வேறு , தற்கொலை தாங்ககளை அனுப்பி கொலை செய்வது வேறு.

புலிகளின் தற்கொலை தாக்குதால் பாதிக்கபடுவது சிங்கள அப்பாவி மக்கள் சிங்கள ரானுவத்தால் பாதிக்கபடுவது தமிழ் மக்கள்.

said...

ஒரு முக்கிய கருத்தையும் இங்கு சொல்லி விட ஆசைப்படுகின்றேன்... இல்லைன்னா முத்திரை குத்த ஆட்கள் ரெடியா இருக்காங்க,... :)

நான் ஒவ்வொரு விடுதலைப் போராட்ட வீரர்களையும் மதிக்கின்றேன். புலிகள் இயக்கத்தில் சேர்ந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ளக் கூட தயங்காத என் சகோதரனின் தியாகம் அளப்பரியது. ஆனால் எதற்காக, யாருக்காக என்று அந்த விடுதலை வீரனே குழம்பிப் போகும் நிலை தான் உள்ளது.

கொழுவி கூறியது போல் புலிகளின் ஆயுதம் தான் இறுதி முடிவு என்பது மனதிற்கு கஷ்டமாக இருக்கின்றது.

முஸ்லிம்கள் தமிழ் ஈழம் என்ற கோஷத்தில் இருந்து மெல்ல மெல்ல விலகி விட்டனர். கருணா மற்றும் சில கிழக்குப் பகுதி குழுக்கள் இலங்கை அரசிடம் தஞ்சம் புகுந்து விட்டனர். பிள்ளையான் குழுக்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

’எங்களுக்கு இந்தியாவின் அமைதிக்கான முயற்சி தேவையில்லை. இந்திய இலங்கை இராணுவ தாக்குதலை நிறுத்த வேண்டும். நாங்கள் அவர்கள் தாக்குதலை நிறுத்தியதும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்’ என்பது லாஜிக்க்கில் கூட வரவில்லை.

Anonymous said...

//நான் வலைப்பதிவு எழுதுபவர்களை வைத்து சொல்லவில்லை. 8 கோடி தமிழர்களிலும் சொல்கிறேன்.//

கணக்கு தவறு :)) 7 கோடி.

//மனிதச் சங்கிலியாகட்டும் - உண்ணாவிரதமாகட்டும் - அரசியட்கட்சிகளின் நோக்கினை கடந்து ஈழத்தமிழர் நலனில் அக்கறையின் பால் மட்டுமே வரும் அந்த மக்களின் பெயரில் சொல்கிறேன்.//

ஈழதமிழர்கள் பால் தமிழகத்தில் அனைவருக்கு அக்கறை இருக்கிறது. அதன் காரணமாகதான் 30 வருடங்களாக தமிழகம் வரும் அகதிகளுக்கு உணவு படிப்பு வேலை கொடுத்து அவர்களையும் எங்களுக்கு சரிசமாக நடத்தி வருகிறோம்.

மருத்துவம் பொறியயல் கல்லூரி படிப்பு தமிழ்நாட்டில் படித்து பின் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு சென்ற பின்பு இந்தியாவை தூற்றுபவகள் பல பேர். ஏன் நீங்களும் தமிழ்நாட்டில் படிக்காமல் இருந்து இருக்கலாம். உங்களின் பல பதிவுகள் ஏதோ இலங்கை தமிழர்கள் படு உயர்வானவர்கள் .இந்தியாவின் உதவியை எதிர்பார்க்காதவர்கள் என்ற தொணி இருக்கும்..

ஆனால் இந்த ஈழ தமிழர்களின் துயர் தீர்க்கும் ஆதரவு புலி ஆதரவாக போவதுதான் தடுக்கபடவேண்டியது. பட்டது போதும்

said...

அது எப்படீங்ணா, எதிர் கருத்து சொல்றவன் எல்லாம் பெயரிலியா வர்றாய்ங்க? என்னா வீரம்டா சாமி. சஞ்செய் ஒன்னு பெயரிலிகள தடை பண்ணுங்க. இல்லன்னா என்னா வேணும்ணாலும் செய்யிங்க.
முகம் தெரியாத கோழைங்க கூட எல்லாம் விவாதம் பண்ற கோழை கிடையாது நாங்க.

Anonymous said...

//’எங்களுக்கு இந்தியாவின் அமைதிக்கான முயற்சி தேவையில்லை. இந்திய இலங்கை இராணுவ தாக்குதலை நிறுத்த வேண்டும். நாங்கள் அவர்கள் தாக்குதலை நிறுத்தியதும் நாங்கள் தாக்குதல் நடத்துவோம்’ என்பது லாஜிக்க்கில் கூட வரவில்லை.//

அதை தான் தற்போது எதிர்பார்க்கிறார்கள். இலங்கை அரசின் தாக்குதலை நிறுத்தி விட்டால் பின்னர் ஆயுதங்களை இறக்குமதி செய்து பின் போரை தொடர புலிகள் நடத்தும் நாடகமே இது

said...

பலத்த யோசனைக்கு பின்னர் பின்னுட்டம்
இடுகிறேன்...
பலவருடங்களுக்கு பிறகு தமிழகத்தில்
இலங்கை தமிழர்களுக்கு குரல் ஓங்கி
ஒலித்து இருக்கிறது! அது என்னவோ ?
புலிகளுக்கு ஆதரவாகவே எல்லோருக்கும்
நினைக்க தோன்றுகிறது! அது சிலருக்கு
பிடிக்க வில்லை!
முதலில் இலங்கை அரசுக்கும் தமிழர்களுக்கும்
இடையிலான பிரச்சனைக்கு தீர்வு பெற முயற்சிக்கலாம்.
பிறகு நம் பிரச்சனைகளை பார்த்து கொள்வோம்.
ஒரே இனத்துக்குள்,ஒரே கட்சிக்குள் பிளவுகள்
இருப்பது சகஜம் தானே? தமிழ் நாட்டில் எத்தனை
மாறுபட்ட கருத்துகள் உடைய கட்சிகள்
உள்ளன, ஆனால்? இந்தியாவில் கார்கில்
போரிலும்,சுனாமி தாக்கியபோதும் அனைவரும்
கைகோர்த்து கொள்ளவில்லையா?
தமிழ் மொழியை தாய் மொழியாக
கொண்டவர்கள் அனைவரும் தமிழர்கள்தான்.

மேலும் புலிகளுக்கு எதிரான கருத்து
கொண்டவர்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
உங்களிடம் என்ன தீர்வு இருக்கிறது ?
அதை சொல்லுங்கள்.

நமக்குள் பிரச்சனை வேண்டாம் தமிழ்
பேசும் அனைவரும் தமிழ் தாயின்
பிள்ளைகள் தான்.

புலிகள்தான் எல்லா பிரச்சினைகளுக்கும்
காரணம் என்று சொல்பவர்களுக்கு!!!
ஒருவேளை புலிகள் தோன்றி இருக்கவிட்டால்
இலங்கையில் தமிழ் இனமே அழிந்து போய்
இருக்காதா!!!

said...

புலிகளின் தற்போதைய அஜெண்டா என்ன என்பது தான் தற்போதைய முதல் கேள்வி./

புலிகளின் ஆயுதமும் போரும் தனிநாட்டுக்கானது என்பதை தாண்டி இன்னொரு பரிணாமம் உள்ளது. அது சிங்கள அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து இறங்கிவரச் செய்வது. அதற்குரிய வரலாறுகளும் உண்டு

3 வருடங்களில் இராணுவம் கைப்பற்றிய பகுதிகளை - (97-99) ஒரு இரவில் இராணுவம் புலிகளிடம் இழந்ததும் (99 இறுதியில்) தொடர்ச்சியாக ஆனையிறவைத் தாண்டி யாழ்பாணம் வரை சென்றதும் ஆயிரக்காணக்காண இராணுவத்தை (அரச அறிக்கையின் பிரகாரம் 4000 ) இழந்ததும் தொடர்ச்சியாக 2001 யூலையில் கட்டுநாயக்காவில் சிறிலங்காவின் பொருளாதாரம் முழுவதுமே நாசமாய்ப் போன நிலையில் -

சிங்கள அரசு ஐய்யோ பேசலாம் வாருங்கள் என அழைத்தது. நோர்வேயை அழைத்தது. பலவீனமான நிலையில் இருந்தால் மட்டுமே புலிகள் பேசப்போவார்கள் என சொல்பவர்களே.. புலிகள் இராணுவ பலத்தில் மேலோங்கி இருந்த அன்றைய நிலையில் பேச்சுக்கு போனார்களே..

இல்லை நாங்க வரமாட்டோம். ராணுவ வழியில் பார்க்கலாம் எனச் சொல்லவில்லையே.. (முதலில் கடந்த தடவை பேச்சுக்கு சிங்கள அரசுதான் அழைத்தது என யாருக்குத் தெரியும்..)

புலிகளின் இராணுவ பலம் என்பது தமிழரின் அரசியற் பலத்துக்கான இருக்கும் ஒரே வழி.. சிங்கள அரசுகள் சுயாட்சி போன்றதொரு தீர்வினை வழங்குவதற்கான அழுத்தம்.

ஏனெனில் சுயாட்சியை வழங்குங்கள் என சிங்கள அரசை வற்புறுத்தும் வகையில் கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் யாரும் இல்லை.

புலிகளின் ஆயுதங்களைத் தவிர

தற்போது முன்னேறியுள்ள இராணுவத்தை விரட்டுவதென்பதும் தமது இராணுவ பலத்த பேணுகிற அதனூடான அரசியற்பலத்த தக்க வைக்கின்ற நடைமுறைதான்.

-திரும்ப திரும்ப ஒரே விடயத்த எழுத எனக்கும்தான் ஆயாசமாக இருக்கிறது

said...

இந்தியா எதையும் செய்யவேண்டாம், உம் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க எங்களுக்கு தடை இல்லை என்று அமெரிக்காவிடம் கூறினால் போதும்,ஈழம் மலர்ந்த பிறகு அவர்கள் தலைவரை அவர்கள் தேர்வு செய்யட்டும்.

Anonymous said...

//அப்படிபோடுி சாரே..
மலையகத்தான் இந்தியாவில் இருந்து பிழக்கபோன பரதேசி. யாழ்வாழ் சும்பன்கள் எல்லாம் யார். அவனுங்களுக்கு தமிழகம் வடக்கத்தியா? மலையகம் தனியாம். இவர்களுக்கு தனி அரசியல் நிலையாம். ஏன் மலையகத்தானுகும் சேர்த்து போ்ராடினால் கொறைன்சு போவீர்களோ?அரசியல்,அதிகாரம்,பணபலம் இல்லமால் காயடிக்கப்படும் மலையக மக்களின் தீர்வுக்காக தமிழம் போராடினால் நல்லது. ஏன் என்றால் தமிழீழத்தால் மலையகத்தானுக்கு ஒரு பலனும் இல்லை.//

உங்களுக்கு பல விடையங்களைத் தெளிவு படுத்த வேண்டி இருக்கிறது.

சுமார் கி.மூ 7000 வருடங்களுக்கு முன் இலங்கை என்று ஒரு தீவு இல்லை. தமிழகத்தின் ஒரு பகுதியே இலங்கை. இராமேஸ்வரத்தில் எப்படி தமிழன் வாழ்ந்தானோ, அவ்வாறே தற்போதைய இலங்கையிலும் வாழ்ந்தான். கடலால் பிரிக்கப்பட்ட பின்னர் கி.மூ. 500 அளவில் வட இந்தியாவிலிருந்து விஜய மன்னன் மற்றும் அவனது பரிவாரங்களின் வருகையோடு சிங்கள இனம் தோன்ற வழி பிறக்கிறது. அங்கிருந்த வேடர்கள் நாகர்கள் இயக்கர்கள் (அக்காலத் திராவிடர்கள்) போன்றவர்களுடன் கலந்து வடமொழி கலந்து உருவான இன மொழிக் குழுமம் சிங்களம். கலப்பிலிருந்து தப்பிய குழுமம் இப்போதைய ஈழத்தமிழ் குழுமம். இது கிட்டத்தட்ட சமஸ்கிருதம் கலந்த சேர நாடு மலையாள நாடு ஆன கதை. வடக்கு கிழக்குத் தமிழர்கள் நீங்கள் நினைப்பது போன்று அங்கே குடியேறியவர்கள் அல்லர். நெல்லைத்தமிழனுக்கு தமிழ் நாட்டில் என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை ஈழத்தமிழனுக்கும் இலங்கையில் இருக்கிறது.

பின்னர் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களப் பகுதிகளில் வெள்ளையனால் குடியேற்றப்பட்ட மலையகத்தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மலேசியா சிங்கப்பூர் போன தமிழர்களின் இவர்களுக்கும் அவலம் நேர்கிறது. எழுபதுகளில் தமிழ் ஈழப் போராட்டம் தொடங்கியபோது மலையகத்தில் ஒரு எழுச்சி ஏற்படவில்லை. காரணம் இருபேருமே தமிழர்களாக இருந்தபோது அவர்களது சமூக அரசியல் பின்னணி வேறாக இருந்தது. வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு தங்கள் தாயக பூமி சிங்களவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது என்கிற கவலை. சிங்களவர்களுக்கு தங்கள் பூமி மலையகத் தமிழரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டதே என்கிற கவலை. அதனால்தான் மலையகத்தில் ஒரு நாளும் தனி நாடு கோரிக்கை இல்லை. சிங்கப்பூரிலும் இல்லை, மலேசியாவிலும் இல்லை. மும்பையிலும் இல்லை. பெங்களூரிலும் இல்லை. ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கில் உண்டு. காரணம் மேலே கூறியபடி தாயக நிலக் கோட்பாடு.

சரி மலையகத் தமிழருக்கு ஈழத்தமிழர்தான் ஒன்றும் செய்யவில்லை. அவர்களது குடிஉரிமையைப் பறித்து ஒரு லட்சம் பேரை தமிழ்நாட்டுக்கு நாடு கடத்தியபோது எத்தகைய விளைவுகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டன?

நன்றி.
புலோலியான்.



புலிகளுக்கு மலையகத்தில் ஒரு நல்ல ஆதரவுத் தளம் இருக்கிறது.

அதெல்லாம் சரி. ஆனால் ஏன் அவனுக்கும் சேர்த்து விடுதலை கேட்க என்ன தயக்கம்? நேரடிபதில் சொல்ல முடியாது. மலையகத்தான் இந்தியா விரட்டப்பட்டபோது யாழ்வாசிகள் என்ன செய்தீர்கள்/

said...

கொழுவி சொல்லும் விடயங்களில் இதுதான் புரியவில்லை. இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அதே நேரம், புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவார்கள் என்பது என்ன? அப்படியானால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் என்ன தான் செய்ய வேண்டும்?

Anonymous said...

கொழுவி,
2002ல் புலிகள் போர் நிறுத்தக்கு காரணம் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் அழிக்கபட்ட பின் அனைத்து ஆயுத குழுக்களுக்கும் எதிராக உலகாலயவிய அழுத்தமே.

மேலும் கடந்த சில வருடங்களாக புலிகளின் ஆயுத பலம் பெரும்ளவு அழிக்கபட்டுவிட்டது. அன்றையை நிலை வேறு இன்றையை நிலை வேறு. நீங்கள் ஏற்காவிட்டாலும் அது தான் உண்மை

said...

தமிழ்பிரியன் - இந்தியாவை அமைதி முயற்சிக்கு வரவேண்டாம் என யார் சொன்னது.. வாங்களேன்.. போர் நிறுத்தம் ஒன்றை இருதரப்பும் அறிவிக்க வைத்துவிட்டு சிங்களத்தோடு முதலில் பேசி - சுயாட்சிக்கு இணங்க வைக்க முடியுமா?

அல்லது - என்னால முடியலை.. நீங்க ஏதாவது தீர்வு வைத்திருக்கிறீர்களா.. வைத்திருந்தால் சொல்லுங்க!

இந்தியா இதில் தலையிட்டு நேர்மையான முறையில் தீர்வு காண வேண்டும் - என புலிகளின் அரசியற்துறை பலமுறை அறிவித்தது என சொன்னால் - பதிலுக்கு பிரபாகரனை சொல்லச் சொல்லு என்கிறீர்கள். ... இது விவாதமா விதண்டாவாதமா..?

தமிழ்பிரியன் புலிகளின் ஆயுதங்கள் இறுதி முடிவைத் தருமென்பது அரசியல் ரீதியான முடிவுக்கும் பொருந்தும்..


திரும்ப திரும்ப.. ஒரே விடயத்த சுத்தி சுத்தி வருகிறீர்கள். எனது கேள்விக்கு பதில் சொல்லுங்கள்..

சிங்கள அரசை தமிழருக்கான சுயாட்சித் தீர்வொன்றை வழங்கும் விதத்தில் அழுத்தம் வழங்க இந்தியாவினால் முடியுமா..?
முடியாதா...? விட்டுவிடுங்கள்!

said...

இந்தியா என்ன செய்ய வேண்டும்?

நடுநிலை என்ற தன்மையில் அல்லாமல்!

தமிழ் மக்களுக்கு ஆதரவு என்ற நிலையில்

இருந்து கொண்டு இலங்கை அரசுடன்

பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.

said...

கொழுவி சொல்லும் விடயங்களில் இதுதான் புரியவில்லை. இந்தியா தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அதே நேரம், புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவார்கள் என்பது என்ன?//

உங்களுக்கு ஒரு இழவும் புரியவில்லையென எண்ணத் தலைப்படுகிறேன்.

இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளுக்குள் முன்னேறி வருகிறது. இதை இப்போதைக்கு தடுத்து நிறுத்துவது புலிகளைத் தவிர யாருமில்லை.

இப்ப புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்து விட்டு இந்தியாவை தலையிட சொல்லிக் கேட்பதா..?

புலிகள் யுத்தநிறுத்தத்தை அறிவித்தால் சிங்களமும் பதிலுக்கு யுத்த நிறுத்ததத்தை அறிவிக்குமா ? (அண்மையில் சார்க்மாநாட்டுக்காக புலிகள் ஒருதலைபட்ச யுத்த நிறுத்தத்தை அறிவித்த போது அரசு நிராகரித்தது)

சிங்களம் யுத்தத்தை நிறுத்தாத வரையில் புலிகள் யுத்தத்தை நிறுத்துவது எந்த ஊர் நியாயம்..

இந்தியா தலையிடுவதாக அறிவித்து - இணங்கினால் - அல்லது இந்தியா இருதரப்பையும் யுத்தத்தை நிறுத்து பேசலாம் என அறிவித்தால் - புலிகளும் நிறுத்தத்தான் வேண்டும். என்னுடைய கேள்வி சிங்களத்தை பணிய வைத்து சுயாட்சி தரும் வலு அல்லது மனநிலை இந்தியாவிடம் உள்ளதா ?

Anonymous said...

பதிலுக்கு பிரபாகரனை சொல்லச் சொல்லு என்கிறீர்கள். ... இது விவாதமா விதண்டாவாதமா..?//

ஏன் அவர் கொலைதான் செய்வாரா? சொன்னால் குறைந்துவுடுவார? என்ன கொடுமை சரவணன்.உதவி கேட்பது என்ன தவறா?

Anonymous said...

என்னுடைய கேள்வி சிங்களத்தை பணிய வைத்து சுயாட்சி தரும் வலு அல்லது மனநிலை இந்தியாவிடம் உள்ளதா ?//

சிங்களத்தைப் பணியவைத்து மலையக மக்களுக்கு தனிநாடு வாங்கித்தரும் வீரம் தேசிய தலைவருக்கு உள்ளதா?

said...

மேலும் கடந்த சில வருடங்களாக புலிகளின் ஆயுத பலம் பெரும்ளவு அழிக்கபட்டுவிட்டது. அன்றையை நிலை வேறு இன்றையை நிலை வேறு. நீங்கள் ஏற்காவிட்டாலும் அது தான் உண்மை //

அதை நான் ஏற்கின்றேன். அன்றைய இராணுவ சமநிலை தற்போது இல்லை.

இலங்கை அரசு பலவீனப்பட்ட நிலையில் புலிகளை பேச அழைத்து - அந்த காலத்தில் தன்னை பலப்படுத்தி - மீளவும் யுத்தத்தை ஆரம்பித்தது.

ஆனால் பாரியளவிலான நில இழப்பு என்பதை தவிரவும் ஒரு சில ஆயுதக் கப்பல்கள் கடலில் பிராந்திய நாடுகளின் உதவியினால் அழிக்கப் பட்டன என்பதை தவிரவும் - ஆளணி ஆயுத வளத்த புலிகள் தக்க வைத்திருக்கிறார்கள். இத்தனைக்கு பிறகும் தமது விமானத்தை மேலெழுப்பி பறந்து குண்டு வீசி மீள இறக்க அவர்களால் முடிகிறது..

மீளவும் இராணுவ சமநிலையை பெற முயல்வார்கள் அவர்கள்.

Anonymous said...

மலைய மக்களுக்கு ஆதரவாக, யாழ் மேட்டுக்குடிக்கு எதிராகப் பேசினால் வந்து சாமியாடும் மேட்டுக்குடிவர்க்கமே, மலையகம் என்றால் அது பம்பாயிலிருக்கும் தமிழன் தனிநாடு கேட்பது என்று கொச்சைபப்டுத்துகிறாய். யாழ் மேட்டுக்குடி ஆண்டைகள் என்ன சுயம்பாக உருவான தமிழ் இனமா? விடுதலை என்றால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழருக்கும் விடுதலை. தனி நாடு என்றால் இலங்கயில் உள்ள அனைத்து தமிழருக்கும் வேண்டும். யாழ் மேட்டுக்குடி ஆண்டைகள் தனிநாடு கேட்கலாம். மலையகத்தன் கேட்டால் அது பம்பாயிக்கு பிழைக்கப்போனவர்கள் போன்ற நிலையால். வெட்கம் கெட்டவர்களே இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி?

said...

எப்படியாவது போரிட்டு வென்று விடுவார்கள் என்று தான் ஒன்றல்ல.. இரண்டல்ல.. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கைத் தீவை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்...

இன்று பெருவாரியாக தமிழ் மக்கள் சிங்கள இராணுவத்தில் கொன்று குவிக்கப்படும் சூழலில் தான் நாங்களும் குரல் கொடுக்க எத்தனிக்கின்றோம்.

இலங்கையைத் தடுத்து நிறுத்த இந்தியா ஒரு கொள்கைக்கு வர வேண்டும். இந்தியாவிலேயே கொள்கை எல்லாம் 5 சீட்டுக்கு காற்றில் பறக்க விட்டு விடும் சுயநலவாதிகள் தான் இருக்கின்றோம்.


///விட்டுவிடுங்கள்..///
கவலைப்படாதீர்கள்... சீக்கிரமே விட்டுவிடுவார்கள் தமிழ்நாட்டில். என் சமீபத்திய ஈழம் பற்றிய பதிவில் சொன்னதையே சொல்கின்றேன்.

*****தமிழ்நாட்டில் உணர்வு எப்போது மாறும் என்று சொல்ல இயலாது. நாளையே திரிஷாவுக்கோ, நமீதாவுக்கோ, ஸ்ரேயாவுக்கோ திருமணம் என்றாலோ, சிம்ரன் ஏதாவது நிகழ்ச்சியில் எங்காவது காலை நீட்டினாலோ, அல்லது தேர்தல் வந்து விட்டாலோ நாங்கள் அதில் பிஸியாகி விடுவோம். அப்புறம் ஈழத்தை எல்லாம் மறந்து விடுவோம்.*******

////உங்களுக்கு ஒரு இழவும் புரியவில்லையென எண்ணத் தலைப்படுகிறேன்.///

ஆம்! நான் பதிவுலகிற்கும், ஈழ விவாதங்களுக்கும் புதியவன். எனவே எனது எண்ணங்களில் முதிர்ச்சியின்மையும், கருத்துக்களில் தெளிவின்மையும் இருக்கிறது... ஆனால் இதை விட படு மோசமான
நிலையில் தான் தமிழன் ஈழம் பற்றிய விடயத்தில் இருக்கின்றான் என்பது தாழ்மையான கருத்து.

Anonymous said...

அனைவருக்கும் தமிழீழம் என்பது யாழ் மெட்டுக்குடிக்கான தீர்வு. மலையக மக்களை முன்னிலைபடுத்தித்தான் எந்த தீர்வும் இருக்க வேண்டும். மலையகம் குறித்த இந்த தீடிர் ஆச்சி மசாலாப்பொடி வர்க்கமான சீமான் பாரதிராஜாக்களுக்கு புரியவைக்க வேப்பிலை அடியுங்கள்.

Anonymous said...

என்ன இங்க ஒரு அனானி சிங்களன் கிட்ட வாங்கின எச்ச எலும்புத்துண்டுக்கு ரொம்ப தான் கொரைக்குது. ஏலேய் வாங்கினதுக்கு மேல கொரச்சிட்ட. போதும்டா.
நண்பர்களே இங்கே ஒரு பாப்பார நாய் இல்லாத பிரச்சினையை கிளப்புது. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்......

Anonymous said...

சஞ்சை காங்கிரஸ் செய்ய வேண்டியது ஒன்றுதான். சாஸ்திரி செய்த செயலுக்கு பரிகாரமாக மலையக மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள். மேட்டுக்குடி வர்க்கம் எந்த ஊருக்குப் போய் வேண்டுமனாலும் பிழைத்துக் கொள்ளும். பாவம் மலையக மக்கள். அய்யா கனவான்களே நீங்கள் தமிழீழம் அட்ந்து கொள்ளுங்கள் ஆனால் இன்னும் எத்தனைகால்த்துக்குத்தான் மலையகத்தானை வந்தேறி என்று கொச்சைப்படுத்தப்போகிறீர்கள்.

Anonymous said...

என்ன இங்க ஒரு அனானி சிங்களன் கிட்ட வாங்கின எச்ச எலும்புத்துண்டுக்கு ரொம்ப தான் கொரைக்குது. ஏலேய் வாங்கினதுக்கு மேல கொரச்சிட்ட. போதும்டா.
நண்பர்களே இங்கே ஒரு பாப்பார நாய் இல்லாத பிரச்சினையை கிளப்புது. உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்......//

மலையகத்தைப் பற்றிப்பேசினால் என்ன கிடைக்கும் என்று தெரியும். யாழ் மேட்டுக்குடியின் பாப்பரத்தனதை சொன்னால் நல்லது

said...

புலிகளில் பல மலையகத்தமிழர்கள் இருக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விடயம்தான். கிளிநொச்சியில் விவேகானந்த புரம் (சாட்சாத் அதே விவேகானந்தர்தான்), பாரதிபுரம் (சாட்சாத் அதே பாரதிதான்) ஆகிய பகுதிகளில் மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். முல்லைத்தீவு மாங்குளம் என பலபகுதிகளில் வாழ்கிறார்கள். அவர்கள் இனக்கலவர காலங்களில் தமிழர் தாயகங்களுக்கு வந்த அவர்களை அரவணைத்தது தமிழரின் மரபுத்தாயகம் தான். அவர்களால்தான் அந்த பூமி செழிப்புற்றது. காடுகளை வயல்களாக்கியவர்கள் அவர்கள்.

இன்றைக்கு அவர்களும் ஈழத்தமிழினம் தான். அவர்களும் போராளிகள்தான்.

ஈழம் எல்லோருக்கும் பொதுவாய் விடியும்.

தமிழர் கூட்டணி என்ற மேட்டுக் குடிக் கட்சியின் காலத்தில் இருந்த யாழ்ப்பாண மேலாதிக்க மனோநிலைகளை ஆயுதப் போர் துடைத்தெறிந்து விட்டது. இனி இளையவர்களின் கையில் ஈழம்..

ஆனால் அதே மேட்டுக்குடி கூட்டணியின் எஞ்சிய எச்சம் ஆனந்த சங்கரி ஐயாவின் அறிக்கைகளை மட்டும் உங்களுக்கு ஆதராவ பயன்படுத்துவீர்களாக்கும்.

Anonymous said...

கிளிநொச்சியில் விவேகானந்த புரம் (சாட்சாத் அதே விவேகானந்தர்தான்), பாரதிபுரம் (சாட்சாத் அதே பாரதிதான்) ஆகிய பகுதிகளில் மலையகத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.//

எமக்காகவும் பேசுங்களேன் என்ற தமிழகத்தில் பரபரப்பேற்படுத்திய சிடியை பாருங்கள். அதில் பேசுகிறவர்கள் பலர் மலையகத் தமிழர்கள்தான். அவர்களின் பேச்சு வழக்கை உற்று கண்காணியுங்கள். இனியும் மலையகத் தமழர் வேறு புலித்தமிழர் வேறு என புளுகாதீர்கள்.

சிங்களவனுக்கு தமிழன் ஒண்டுதான்.

Anonymous said...

சிங்களனுக்கும் எங்களுக்கும் நடப்பது சகோதரச் சண்டை என்று சொல்ல சிங்களன் எத்தனி கிலோ எலும்புக்கொடுத்தான்.

Anonymous said...

இணைய தளம்

Anonymous said...

கொழுவி நிச்சயம் இனப்போர் வர்க்கபேதத்தை குறைத்துள்ளது.இளையவர் கையில் வரும் ஈழத்தில் மலையக விடுதலையும் உண்டா?மலையகப்பிரச்சனைக்கு என்ன தீர்வு? ஒருங்கிணைந்த தமீழீழத்தில் மலையகம் ஏன் இல்லை? போராட மலையக மக்கள் வேணுட்ம் ஆனால் நில விடுதலி இல்லையா?

said...

சஞ்செய் உங்க பதிவு ரெம்பவே சூடாகிருச்சு

அந்த சூட்ட இன்னும் கொஞ்சம் ஏத்த தமிழ்மணத்தில் சூடான இடுகைகளிலும் வந்து விட்டது.

said...

போராட வேணும் என்று சொன்னதாக அர்த்தப் படுத்தாதீர்கள்.
சக தமிழர போலவே அவர்களும் போராட்டத்த தம் போராட்டமாக நினைக்கிறார்கள்.

சுயாட்சிக்கு அரசு இணங்கினால் - அவர்களும் அதனை அனுபவிப்பார்கள். ஆனால் சிங்கள அரசுகள் இன்றைக்கும் அவர்களை தனிமை படுத்தியே வைத்திருக்கிறது.

Anonymous said...

மலையகப்பிரச்சனைக்கு என்ன தீர்வு? ஒருங்கிணைந்த தமீழீழத்தில் மலையகம் ஏன் இல்லை? //

மலயக மக்கள் ஒருமித்த கருத்தில் - சிங்கள அரசை நக்கி பிழைக்கும் தமது அரசியல் வியாபாரிகளின் முகத்திலடித்து - அவர்களை ஓட ஓட விரட்டியடித்து - புறகணித்து
தமக்கான விடுதலையை புலிகளே பெற்றுத் தரவேண்டுமெனில்

தாராளமாக தமிழீழத்தில் மலையகம் அமையும். தமிழீழம் தனி நாடாக அமையுமாயின் முஸ்லீம்களுக்கான ஆட்சியும் மலையகத்திற்கான ஆட்சியும் சுயாட்சிகளாக அமையும்.

Anonymous said...

ஆனால் சிங்கள அரசுகள் இன்றைக்கும் அவர்களை தனிமை படுத்தியே வைத்திருக்கிறது.//

சிங்களனைவிடுமய்யா. புலிகள் இதுவரை என்ன செய்துள்ளார்கள்? ஊரெல்லாம் குண்டு போடத் தெரியுது. மலையக மக்களை விடுவிக்க குண்டு போடக்கூடாதா? அடைந்தால் மலையகத்துடன் விடுதலை இல்லையென்றால் எங்களுக்கும் வேண்டாம் என்று சொல்லத்தெரியாதா? மலையகத்தான்கள் அடிமைகள் என்றே வைத்துங்க் கொள்ளுங்கள். ஒரே நாட்டில் நீங்கள் மட்டுமெ விடுதலையனால் போதுமா? மாற்றுக் கருத்துள்ள எல்லா இயக்கங்களையும் போட்டுத்தள்ளிய புலிகளால் மலையக விடுதலைக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களை தெருவில் கொண்டுவந்து நிறுத்த முடியாத? அப்புறம் என்ன தேசியத் தலிவர்? ஆனந்த சங்கரி தேன் ஒரு தேசியத் தலிவர் என்று சொல்லவில்லையே. அல்லக்கைகளையும் காட்டிக் கொடுப்பவர்களையும் வுடுங்கள். புலிகள் சுயமாக ஏன் மலையகவிடுதலையை தங்களது அஜெண்டாவில் சொல்லவில்லை? பெற்றால் மலையகம் சேர்ந்த தமீழீழம் இல்லையென்றால் போர் என்று சொல்லைவிட்டு அப்புறம் தமிழக உதவியைக் கேட்கலாம். சரியா?

Anonymous said...

மலையக விடுதலையைப் பேசினால் டரியலாகும் மக்கா போதும் நிறுத்துங்க.வரலாறு படிங்க மக்கா. நம்ம விடுதலைக்கு தமிழகம் ஊறுகாய் வேண்டும். மலையக விடுதலைக்கு நீங்கள் ஊறுகாய் ஆகக்கூடாது ரொம்ப கவனம்தான்.

Anonymous said...

//மலைய மக்களுக்கு ஆதரவாக, யாழ் மேட்டுக்குடிக்கு எதிராகப் பேசினால் வந்து சாமியாடும் மேட்டுக்குடிவர்க்கமே, மலையகம் என்றால் அது பம்பாயிலிருக்கும் தமிழன் தனிநாடு கேட்பது என்று கொச்சைபப்டுத்துகிறாய். யாழ் மேட்டுக்குடி ஆண்டைகள் என்ன சுயம்பாக உருவான தமிழ் இனமா? விடுதலை என்றால் இலங்கையில் உள்ள அனைத்து தமிழருக்கும் விடுதலை. தனி நாடு என்றால் இலங்கயில் உள்ள அனைத்து தமிழருக்கும் வேண்டும். யாழ் மேட்டுக்குடி ஆண்டைகள் தனிநாடு கேட்கலாம். மலையகத்தன் கேட்டால் அது பம்பாயிக்கு பிழைக்கப்போனவர்கள் போன்ற நிலையால். வெட்கம் கெட்டவர்களே இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி?//

அனானி.. நிதானத்தோடுதான் பேசுகிறீர்களா..? தமிழீழம் அமைந்தால் மலையகத் தமிழரை அங்கே அழைத்து அணைத்துக் கொள்ள யாரும் எதிர்க்க மாட்டார்கள். ஏற்கனவே மேலே சொன்னபடி புலிகளே அவர்களை வன்னியிலும் திருகோணமலையிலும் குடியமர்த்தி வருகிறார்கள். யாருமே அவர்களைப் பிரித்துப் பார்க்கவில்லை. நீங்கள் ஏன் தமிழரை ஒன்று சேரக்கூடாது என்பதுபோல் ஒற்றைக்காலில் நிற்கிறீர்களோ தெரியவில்லை.

முதலில் தாயகக் கோட்பாடு என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். ஒரு இனக்குழுமத்துக்குரிய எல்லை வரையறைகள் இருந்தால் மட்டுமே அது அவ்வினத்தின் தாயகம். தமிழ்நாட்டைப்போல, கேரளத்தைப்போல, கர்நாடகாவைப் போல, ஈழத்தைப் போல..! இப்போது சொல்லுங்கள் மலையகத்தில் தமிழர்களின் நில வரையறை ஏது? அப்படி ஏதாவது உண்டா? அது இல்லாத காரணத்தினால்தான் அவர்களுக்கு சுய நிர்ணய உரிமை இல்லை. ஆனால் அவர்களின் வாழ்வுரிமையை யாராலும் பறிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள். அவர்களில் ஒரு லட்சம் பேரின் குடி உரிமையைப் இந்தியாவின் சம்மதத்துடன் பறித்த இலங்கை அரசு அவர்களைத் தமிழ்நாட்டுக்கு வெறுங்கையோடு அனுப்பியது. இலங்கை அரசின் இந்த இழி செயலுக்குத் துணைபோன இந்திய அரசை ஏனென்று கேட்டீர்களா? ஆனால் அந்த மலையகத் தமிழரில் பலரை வன்னியில் மீள்குடியமர்த்தி மறுவாழ்வளித்த புலிகளை மட்டும் கேள்வி கேட்க வந்துவிட்டீர்கள்.

சிறிது நிறுத்தி நிதானத்துடன் சிந்தியுங்கள்.

புலோலியான்.

Anonymous said...

அவர்களில் ஒரு லட்சம் பேரின் குடி உரிமையைப் இந்தியாவின் சம்மதத்துடன் பறித்த இலங்கை அரசு அவர்களைத் தமிழ்நாட்டுக்கு வெறுங்கையோடு அனுப்பியது. இலங்கை அரசின் இந்த இழி செயலுக்குத் துணைபோன இந்திய அரசை ஏனென்று கேட்டீர்களா?//

இந்தியாவின் கேடுகெட்ட சாஸ்திரி ஒப்பந்தத்தை விடுங்கள். இதை எத்ரித்து அந்தக் காலத்தில் யாழ் மக்கள் நடத்திய சங்கிலிப் போராட்டம் ஏதாவது? கடந்தகாலம் கசப்ப்பனது. புலிகள் இவர்களுக்கும் சேர்த்து விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும்.

Anonymous said...

//இந்தியாவின் கேடுகெட்ட சாஸ்திரி ஒப்பந்தத்தை விடுங்கள். இதை எத்ரித்து அந்தக் காலத்தில் யாழ் மக்கள் நடத்திய சங்கிலிப் போராட்டம் ஏதாவது? கடந்தகாலம் கசப்ப்பனது. புலிகள் இவர்களுக்கும் சேர்த்து விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும்.//

அனானி,

கண்டி நுவரெலியா போன்ற மலையகப் பகுதிகளில் சில இலங்களைப் பிரித்து தனி நாடு ஆக்க முடியாது. அது சிங்களவனின் தாய் நிலம். மலையகத் தமிழரின் விடுதலை அவர்களை ஈழத்துக்கு வரவழைத்து மறுவாழ்வு அளித்தல் ஆகும். ஏற்கனவே அது நடந்து கொண்டுள்ளது. தனி ஈழம் மலரும்போது முழு அளவில் இது நடக்கும்.

எங்கள் அந்த நாள் அரசியல் தலைவர்களில் உங்களை விட எங்களுக்கே வெறுப்பு அதிகம். அவர்களின் தெளிவான அரசியல் அறிவூட்டல் இல்லாத காரணத்தினால் ஈழத்தமிழர் சில வரலாற்றுத் தவறுகளை இழைத்திருக்கிறார்கள். ஆனால் அதை விவாதிப்பதற்குரிய நேரம் இதுவல்ல. முதலில் தமிழால் ஒன்றுபடுவோம். எல்லாத் தமிழருக்கும் ஒரு விடிவு காண்போம்.

புலோலியான்

Anonymous said...

புலிகள் இவர்களுக்கும் சேர்த்து விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டும்.//

இதை நான் வரவேற்கிறேன். அது போல பெங்களூர் மும்பை சிங்கபூர் மலேசியா மொறிசீயஸ் பிஜித் தீவு களில் உள்ள தமிழர்களுக்கும் அந்தந்த இடங்களில் தமிழீழத்தில் இணைத்து அவர்களுக்கும் விடுதலை வாங்கி கொடுக்க புலிகள் முன்வர வேண்டும்.

நான் சொன்னது சரிதானே அனானி?

ஆக குறைந்தது பெங்களூர் மும்பை தமிழருக்கு தமிழ்நாடு மாதிரியான தனி மாநிலத்த பெற்று கொடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

Anonymous said...

நேற்று லண்டனில் வெளிவந்த அத்தனை பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்தி.

ஆப்கானிஸ்தானில் போரில் பணிபுரிந்த பிரிட்டனைச்சேர்ந்த ஒரு ராணுவ வீரன் வீடு இல்லாமல் 1.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள வீட்டின் அறுகில் ஒரு காரில் குடியிருந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த 1.5 மில்லியன் மதிப்புள்ள நான்கு படுக்கை அறைகொண்ட வீட்டில் ஒரு அகதி குடும்பம் ஓசியில் ஆதாவது வரி செலுத்துவோரின் பணத்தில் குடியிருந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டிற்காக வரிசெலுத்துவோரின் பணம் ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம்(ஒரு வருடத்திற்கு) அரசு மூலம் வாடகையாக கொடுக்கப்படுகிறது. அகதிகளுக்கு குறிப்பாக இலங்கைத்தமிழர்களுக்காக மட்டும் ஜ்ரோப்பிய நாடுகள் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன்களை செலவிடுகிறது. வரிசெலுத்துவோரின் பணத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களையே குறைகூறிக்கொண்டும் கொள்ளையடித்துக்கொண்டும் இருக்கும் இவர்களுக்கு தம்மக்கள் தங்கள் தாயகத்தில் படும் கஷ்டம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. நம்மக்கள் மட்டும் ஏன் இவர்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரையை விரட்டியது போல இன்னும் சில வருடங்களில் குடியேறிய நாடுகளில் தனி ஈழம் கேட்டு சண்டையிடத்தான் போகிறார்கள். இதன் காரணமாகத்தான் நார்வே சமாதானப் பேச்சு வார்த்தைக்கு பல முறை வழிய வந்து உதவியது. ஏனென்றால் அகதிகளால் அதிகம் அவதிக்குள்ளாகும் நாடுகளில் நார்வேயும் ஒன்று. எப்படியாவது சாமாதனப்படுத்து இவர்களை அவர்கள் ஊருக்கு அனுப்பலாம் என்றால் முடியவில்லையே?!.

பிரிட்டனும் இவர்களை வெளியேற்ற பல சலுகைகளை அறிவித்து விட்டது. சொந்த ஊரில் பிழைத்துக்கொள்ள 15,000 பவுண்டு (சுமார் 12 லட்சம் ரூபாய்) மற்றும் இலவச விமான டிக்கெட் என்று அறிவித்தாலும் , இங்கு கிடைக்கும் சலுகைகளை விட்டு போக யாரும் முன்வரவில்லை.

நம் நாடும் இவர்களால் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏன் நம் தலைவரையே இழந்து நிற்கிறது. ஆனால் அவர்களை ஆதரிக்க இன்னும் சில புல்லுருவிகள் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தியத்தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!.

Anonymous said...

//18 years of suffering of entire Muslim population of Northern Sri Lanka - World is blind!!

In October1990, the Liberation Tigers of Tamil Eelam (LTTE) decided to evict the Muslim population of Northern province, approximately 100,000 people, with two days notice. The Muslims were told to leave the North within 48 hours or face death. They were carefully searched by the LTTE prior to their departure and all their possessions and valuables were taken away from them. They were permitted to carry with them 300 Rupees (about $3 US) for transportation out of Jaffna and a change of clothes. Thousands of Muslims fled to the area of Puttalam in western Sri Lanka, where they have lived for more than a decade. This forced expulsion of an entire population is violation of international human rights and humanitarian laws constituting crimes against humanity and war-crime.//

சும்மா நுனிப்புல் மேயாதீர்கள். அங்கே என்ன நடந்தது என்று அறிவீர்களா?

குள்ளநரித் தந்திரத்துக்கு பேர்போன சிங்கள அரசு எண்பதுகளின் மத்தியில் தமிழ் முஸ்லீம்களை விலைக்கு வாங்கி ஒற்றர்களாக்கி போராளிகள் பலரின் உயிர்களைக் காவு வாங்கியது உங்களுக்குத் தெரியுமா? பல முஸ்லீம்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தாலும் பணத்துக்கு ஆசைப்பட்டு சிங்களவனோடு கைகோர்த்தார்கள். அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் கைத்துப்பாக்கி, வாக்கிடாக்கி போன்றவற்றுடன் பல முஸ்லீம்க்ள் சிக்கினார்கள்.

அதுமட்டுமல்லாமல் கிழக்கில் முஸ்லீம்களைக் கொண்டு தமிழ்கிராமங்களைச் சூறையாடியது சிங்கள அரசு. அங்கிருந்து தப்பி வந்த தமிழர்கள் யாழில் வாழ்ந்த முஸ்லீம்களில் வெறுப்புக் கொண்டார்கள்.

இப்போது என்ன செய்வது? யார் நல்லவன் யார் கெட்டவன் என்று தெரியாத நிலை. சமூகத்திலும் ஒற்றுமையில்லை. ஒற்றர்களை உள்ளே வைத்திருந்தால் புலிகள் அழியக்கூடிய அபாயம். இப்போது இருக்கும் பலம் புலிகளுக்கு அப்போது இல்லை. அதிரடி முடிவு எடுக்கத் தயங்காத புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றினார்கள்.

சமாதான காலத்தில் இதற்கு வருத்தம் தெரிவித்து முஸ்லீம்களை புலிகள் அரவணைத்தார்கள்.

போராட்ட காலத்தில் நெருக்கடியான நேரத்தில் சில இக்கட்டான முடிவுகள் எடுக்கப்படுவது வழமை. நிலைமை சரிவரும் போது வருத்தம் தெரிவித்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வதே புத்திசாலித்தனம்.

புலோலியான்.

Anonymous said...

//ஆப்கானிஸ்தானில் போரில் பணிபுரிந்த பிரிட்டனைச்சேர்ந்த ஒரு ராணுவ வீரன் வீடு இல்லாமல் 1.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள வீட்டின் அறுகில் ஒரு காரில் குடியிருந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த 1.5 மில்லியன் மதிப்புள்ள நான்கு படுக்கை அறைகொண்ட வீட்டில் ஒரு அகதி குடும்பம் ஓசியில் ஆதாவது வரி செலுத்துவோரின் பணத்தில் குடியிருந்து கொண்டிருக்கிறது.//

அனானி.. ஈழத்தமிழர்கள் யாழ் இராச்சியம் என்று வைத்த் ஈழத்தை ஆண்டுகொண்டிருந்தார்கள். சிங்களவர்கள் கோட்டை இராச்சியம் கண்டி இராச்சியம் என்று வைத்து தங்கள் பகுதிகளை ஆண்டு வந்தார்கள். சும்மா இருந்த இவர்கள் மீது படையெடுத்துவந்து இலங்கைத் தீவைக் கைப்பற்றி குட்டிச் சுவராக்கியது போர்த்துக்கீசியர், டச்சுக்காரர் மற்றும் ஆங்கிலேயர்.

போகும்போது பழைய மாதிரியே பிரித்துக் கொடுக்காமல் எல்லா இராச்சியங்களையும் ஒன்றாக்கி நாட்டையும் தமிழனின் தலைவிதியையும் சிங்களவனின் கையில் கொடுத்துவிட்டுப் போனவர்கள் ஆங்கிலேயர்கள். அதற்கு இப்போது தங்கள் வரிப்பணத்தைக்கட்டி அழுகிறார்கள். இதில் என்ன குற்றத்தைக் கண்டீர்கள்?? :):):)

said...

கருத்துக்களுக்கு மதிப்பளித்தமைக்கு நன்றி சஞ்சை!

//நீங்களும் வன்னிப் பகுதிக்கே முக்கியத்துவம் தருவது போல் உள்ள்து. இதனால் தான் நாங்கள் உங்களை பிரித்துப் பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறோம்//
இன்றிருக்கும் நிலையில் வன்னியிலிருக்கும் மக்களின் அவலத்தைத் தீர்ப்பதே முதன்மையானது. அதை முன்வைத்துத்தான் தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதைத்தான் நானும் முதன்மைப்படுத்தினேன்.

//ஈழத் தமிழர், மலையகத் தமிழர், தமிழ் முஸ்லிம்கள் என்ற பாகுபாடு இருப்பதாக சொல்லப் படுவது பற்றியும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்//

பொதுவாக யாழ்ப்பாணத் தமிழர் மத்தியில் இப்படிப்பட்ட ஜாதித் திமிர் நிறையவே இருந்த்து. அன்றைப் போல இல்லாவிட்டாலும் இன்றும் இருக்கிறது (முக்கியமாக, புலம்பெயாந்த தமிழாகள் மத்தியில்). இலங்கைத் தீவின் மத்திய மலைநாட்டில், தேயிலை, றப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கூலித் தொழிலாளரின் சந்ததியை “மலையகத்தமிழன்” என்று பாகுபாடு காட்டுவது உண்மைதான். ஆனால் காலத் தொடாச்சியில், இளைய தலைமுறையிடம் அந்தநிலை மாறிவருகிறது என்பதையும் பார்க்கவேண்டும். 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலை இன்று இல்லை. இருப்பினும் மலையக மக்களுக்கான அரசியல் உரிமைகளைக் கோரி, அந்த மக்கள் மத்தியில் எழுந்த கட்சிகள்கூட தங்களுடைய நலனை மட்டும் கவனித்துக்கொண்டதால், இன்றும் மலையகத்தின் தோட்டங்களில் வேலைசெய்யும் பல இலட்சம் மக்கள் அடிப்படை வசதிகளுமில்லாமல் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களும் இல்லாமல் அடிமைகளாகவே இருக்கிறார்கள். இதனால் கொதித்துப்போன மலையக இளைஞாகள் சிலர், தங்களிடையே இருக்கின்ற அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து சுயமான போராட்டங்களில் (ஆயுதப்போராட்டம் அல்ல) இறங்கியிருக்கிறார்கள். அவர்கள் இப்போது விடுதலைப் புலிக்ளுக்கு ஆதரவாக இயங்குகிறார்கள், ஆயுதப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீலங்காப் படைகளால் கைதுசெய்யப்படுவது வழமையாகியிருக்கிறது. இதற்குமேல் கூறாமல் சில விடயங்கள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அத்துடன் 83ம் ஆண்டுக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மலையக மக்களில் கணிசமானவாகள் வன்னிக்குத் தப்பியோடினார்கள். அவர்கள் இன்றும் அங்கு வாழ்கிறார்கள். போராளிகளாகக் களத்திலும் நிற்கிறார்கள். அவர்களுக்குள் எந்த வேற்றுமையும் இல்லை.

முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவாகளுடைய நிலை கொஞ்சம் சிக்கலானது. அடிப்படையில் ஈழத்து முஸ்லீம்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், தாங்கள் தனியான இனம் என்று நிற்பவர்கள். இதுதான் தமிழகத்துக்கும் இலங்கைக்குமான வேறுபாடு. இன்று கொழும்பில் வாழும் பெரும்பாலான முஸ்லீம்கள் தங்கள் பிள்ளைகளை சிங்கள மொழியில் கல்விகற்க வைக்கின்றனர். எதிர்காலத்தில் இதுவும் பல தாக்கங்களை ஏற்படுத்தும்.

தொடக்கத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் முஸ்லீம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி உயிர்நீத்திருக்கிறார்கள். ஆனால் 1990ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கு விடுதலைப் புலிகள் தரப்பிலும் காரணம் கூறப்பட்டது. ஆனாலும் தாம் விரட்டியடிக்கப்ட்டதாக யாழப்பாண முஸ்லீம் மக்கள் இன்றும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். இப்போது அந்த மக்களில் ஒரு பகுதியினர் யாழப்பாணத்தில் மீண்டும் குடியேறியிருக்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதும் அதில் ஒருவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பியாக இருப்பதும் முக்கியமானது. அதேநேரம் புத்தளம் போன்ற இடங்களில் இருக்கும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களில் பலர் இன்று மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல விரும்பவில்லை. காரணம், அவாகளுடைய பிள்ளைகள் புத்தளத்திலேயே வளர்ந்துவிட்டதாலும் கொழும்புக்கு (ஒப்பீட்டளவில்) அண்மையில் இருப்பதாலும் யாழப்பாணத்தை அவாகள் விரும்பவில்லை.
விடுதலைப் புலிகள்தான் முஸ்லீம் மக்களை விரட்டினார்கள் என்றால் ஏன் மற்ற இயக்கங்களிலும் இப்போது முஸ்லீம்கள் தமிழர்களோடு இல்லை என்ற கேள்விக்கு விடை, அவர்கள் தனியான இனம் என்கின்ற அடையாளத்தைப் பேண விரும்புகிறார்கள் என்பதுதான். ஆனால் முஸ்லீம் மக்களுக்கான அரசியல் சக்தியும் ஒன்றாக இல்லாமல் சிதறியிருக்கிறது.
(இவை எல்லாவற்றையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்குச் சார்பான நிலையில் இருந்துகொண்டு, அதை நியாயப்படுத்தும் எண்ணத்துடன் சொல்லவில்லை. மலையகத்தின் தமிழ் மக்கள், புத்தளத்திலிருக்கின்ற முஸ்லீம் மக்கள் தொடர்பாக பெட்டக நிகழ்ச்சிகள் பல தயாரித்த அனுபவத்தில், நேரடியாக உணர்ந்ததை எழுதியிருக்கிறேன். அத்துடன் கொழும்பில் காத்திரமான தமிழ்ச் செய்திச்சேவையுடன் 6 வருடங்கள் பணியாற்றிய அனுபவமும் இருக்கிறது)

இறுதியாக,
இலங்கைத்தீவில் சிங்களவர்களைப் போலவே எல்லாவிதமான வாழ்வுரிமையுடனும் தமிழ், முஸ்லீம் மக்களும் வாழவேண்டும். ஆனால் “இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. அது சிங்களவருக்கே உரிமையானது. ஏனய சிறுபான்மை இனத்தவர், சிங்களவர்களை அனுசரித்து வாழ விரும்பினால் வாழலாம். உரிமைகள் தொடர்பில் தேவையில்லாமல் கேள்விகள் கேட்க்க் கூடாது” என்ற ஸ்ரீலங்கா இராணுவத் தளபதியின் கூற்றுத்தான் சிங்கள மக்களின் நிலைப்பாடு. இந்தநிலையில் எங்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனறால், அதற்கான வலுவான பின்புலம் தேவை. ஈழப்போராட்டத்துக்காகப் புறப்பட்டவாகளில் பாதை மாறியவர்கள், மாற்றப்பட்டவர்கள் போக எங்களுக்காக இருக்கின்ற ஒரே குரல் விடுதலைப் புலிகள்தான்.

ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டம் என்பது இளைஞர்களால் தொடங்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த பெரியவர்களின் வழிகாட்டலோ நெறிப்படுத்தலோ ஆரம்பத்தில் இருக்கவில்லை. அப்படியான போராட்டத்தில் தவறுகள் ஏற்படாதென்று கூறுவது முட்டாள்தனமானது. ஆனால் அந்தத் தவறுகள் திருத்தப்பட்டிருக்கின்றன. இன்றிருக்கின்ற அரசியல் முதிர்ச்சியும் பொறுமையும் அன்றிருந்திருந்தால், ராஜீவ் காந்தியின் மரணம் கூட நிகழ்ந்திருக்காது.

ஈழத்தமிழ் மக்களுக்கான விடிவு விடுதலைப் புலிகளின் வழியில்தான் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை. விடுதலைப் புலிகள்தான் எங்களுக்கிருக்கும் வலுவான பேரம்பேசும் சக்தி. அவர்கள் என்றோ செய்ததாகக் கூறப்படும் தவறுக்காக ஒட்டுமொத்த ஈழத்தழிழரும் செத்தொழியவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்திய அரசு மாறாதவரை இதற்கு மாற்று வழியில்லை. இங்கே நான் ஈழத்தமிழர் என்று கூறுவது மலையக மக்களையும் சேர்த்துத்தான்..
(வலைப்பக்கங்களுக்கு நான் புதியவன். தட்டச்சுச் செய்வதும் ஆமை வேகத்தில்தான். அதனால் தாமதமாக என் பதிலைத் தந்திருக்கிறேன். அதற்காக மன்னிக்கவும்)

Anonymous said...

வரிகட்டுரவன் வெள்ளைக்காரன் மட்டுமல்ல தோழரே, தமிழகத்தில் இருந்து அங்கு வேலைசெய்யச்சென்றவர்களும் தான்.

அடுத்தவன் பணத்தில் தின்றுகொண்ட அதிகாரமாக பேசாதீர்கள்.

Anonymous said...

"ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?"

பொத்திக்கொண்டு இருக்கவேண்டும்!

இல்லாவிட்டால் மூக்கை நீட்டி விடுதலைப் புலிகளாலும், சிங்களவர்களாலும் மூக்கொடை பட நேரிடும்.

Anonymous said...

//வரிகட்டுரவன் வெள்ளைக்காரன் மட்டுமல்ல தோழரே, தமிழகத்தில் இருந்து அங்கு வேலைசெய்யச்சென்றவர்களும் தான்.

அடுத்தவன் பணத்தில் தின்றுகொண்ட அதிகாரமாக பேசாதீர்கள்.//

மன்னிக்கவும். முதலாளித்துவ ஜனநாயகத்தில் உன் வரிப்பணம் என் வரிப்பணம் என்கிற பேதமெல்லாம் இல்லை. அதனால் நீங்கள் அங்கிருக்கும்வரை அகதிகளுக்கும் சேர்த்து வரி கட்டவேண்டியதுதான். இல்லையென்றால் பிரிட்டிஷ் அரசிடம் "ஏண்டா ஈழத்தமிழனை இந்தப்பாடு படுத்தினே", என்று கேள்வி கேளுங்கள். :P

மற்றையது, நான் பணம் போடுகிறேனே தவிர எடுக்கவில்லை. :O))

பின்குறிப்பு: அந்த ஆப்கன் சென்ற ராணுவ வீரருக்கு சமூக உதவித்தொகைத் திட்டம் பிரித்தானியாவில் இருப்பது தெரியாதோ?? :O))

-புலோலியான்

Anonymous said...

இலங்கையின் இறையாண்மைக்கு உலைவைக்கும் தமிழக அரசியல்!

- இந்திரஜித்

அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி விடுத்த ஒரு அறிக்கையில, இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில், இந்திய மத்திய அரசு 1971ல் பங்களாதேஷ் பிரிவினையின்போது செயற்பட்டதுபோல நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். தமிழ்நாட்டில் வை.கோபாலசாமி, ப.நெடுமாறன், தொல்.திருமாவளவன், எஸ்.ராமதாஸ் போன்றவர்கள் மட்டுமல்ல கருணாநிதியும் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறார் என்பதுதான் இதன் அர்த்தம். இந்திய மத்திய அரசில் ஒரு பிரதான பங்காளியாகவும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவராகவும் உள்ள கருணாநிதி, இன்னொரு சுதந்திரமும் இறைமையும் உள்ள நாட்டின்மீது இந்தியா வன்முறையை பிரயோகித்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என கூறுவது, அப்பட்டமான ஜனநாயக விரோத நிலைப்பாடு என்பதுடன், மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இதன் மூலம் கருணாநிதி இலங்கையின் இறையாண்மைக்கு சவால் விட்டதுமல்லாமல், இந்தியா 1955ல் பாண்டுங் மாநாட்டில் ஒப்புக்கொண்டு பின்பற்றி வருவதாகச் சொல்லிக் கொள்ளும் பஞ்சசீலக் கொள்கையையும் கேலிக்கூத்தாக்கியுள்ளார். அதுமட்டுமல்ல சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு 1929ல் எழுதிய கட்டுரை ஒன்றையும் கருணாநிதி சுட்டிக்காட்டி, இந்தியா இலங்கையில் தலையிட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் வலியுறுத்தியுள்ளார். நேருவின் கட்டுரையில் அவர் இந்தியா பலவீனமாக இருப்பதனால் (அப்பொழுது பிரிட்டிஸ் ஆட்சியின் கீழ் இருந்துது) அயல்நாடுகளில் உள்ள தனது பிரஜகளை பாதுகாக்க முடியாமல் இருக்கிறது என்றும், இந்தியா பலம் பெறும் காலம் வரும், அப்பொழுது அது தனது பிரஜைகளை பாதுகாக்கும் எனவும் கூறியிருந்தார். இதை மேற்கோள் காட்டிய கருணாநிதி, இப்பொழுது இந்தியா பலம் பெற்றுள்ளதால், அது இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

கருணாநிதியின் கூற்றின்படி, இலங்கையின் வடகிழக்கில் வாழுகின்ற தமிழர்களும் இந்தியப் பிரஜைகள் என்றே அர்த்தமாகிறது. இது இலங்கையின் சுதந்திரத்தையும் இறைமையையும் மட்டுமின்றி, இலங்கை தமிழர்களின் தனித்துவத்தையும்மதிக்காத, தமிழக, தமிழ் பேரினவாத சக்திகளின் ஆணவப்போக்காகும். இது ஒருபுறமிருக்க, இன்னொரு தமிழக இனவெறியரான ப.நெடுமாறன், இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டும்கூட,வன்னியில் இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள யுத்தத்தை நிறுத்தமுடியாதென, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கூறியிருப்பது, இந்தியாவின் இறைமையை மீறும் செயலென அறிக்கை விடுத்துள்ளார். இதன்பொருள் இலங்கை என்பது இந்தியாவின் ஒருபகுதி என்ற கருத்தை உள்ளடக்கி நிற்கிறது. இந்த அறிக்கையின் மூலம், கருணாநிதியைப்போலவே நெடுமாறனும் இலங்கையின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அப்பட்டமாக மீறி நிற்கின்றார். தமிழக இனவெறி அரசியல்வாதிகளின் இத்தகைய உரைகளும் அறிக்கைகளும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டவை மட்டுமல்ல. தமிழகத்திலும் தமிழ் இனவாதத்தை தூண்டி, அங்கும் ஒரு பிரிவினைப் போக்கை வளர்க்கும் நோக்கம் கொண்டவை. இந்திய அரசு இதை முளையிலேயே கிள்ளியெறிய தவறினால், தமிழ்நாடும் ஒரு காஸ்மீராக, காலிஸ்தானாக, நாகலாந்தாக,அசாமாக மாறக்கூடிய நிலை வெகுதூரத்தில் இல்லை.

1987 ஆண்டில் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படைமீது, புலிகள் தொடுத்த வலிந்த தாக்குதல்களால் இந்திய அமைதிப்படை புலிகளுடன் யுத்தம் புரிய நேரிட்டது. அப்பொழுது இந்திய அமைதிப்படை தமிழர்களை கொல்வதாகக்கூறி, இந்திய மத்திய அரசையும் இந்திய அமைதிப்படையையும் கருணாநிதி கடுமையாக வசை பாடினார். புலிகளுடனான யுத்தத்தில் இந்திய இராணுவத்தினரில் 1255 பேர் கொல்லபட்டனர், பல ஆயிரக்கணக்கான காயமுற்றனர். இவ்வாறு பல இழப்புகளைச் சந்தித்த இந்திய அமைதிப்படை 1990 ஆண்டு இந்தியாவிற்கு திரும்பியபொழுது, இந்திய அமைதிப்படை தமிழர்களுடன் சண்டைபோட்டு விட்டதாகக்கூறி, கருணாநிதி இந்திய அமைதிப்படையை வரவேற்க மறுத்தார். இப்பொழுது அதே கருணாநிதி, 1971ல் பங்களாதேஷ் பிரிவினையின்போது இந்தியா நடந்து கொண்டதுபோல இந்திய மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டுமென புத்தி பேதலித்தமாதிரி பிதற்றுகிறார். 1960களில் இந்தியா பின்பற்றிய அயலுறவு கொள்கைகளின் விளைவாக, தன்னைச்சுற்றிவர இருந்த நாடுகளான சீனா, பாகிஸ்தான், பர்மா, நேபாளம், சிக்கிம்,பூட்டான், ஆப்கானிஸ்தான் என எல்லாநாடுகளுடனும் எல்லைப்பிரச்சினையை உருவாக்கிக்கொண்டது. சீனாவுடன் 1962ல் ஒரு தடவையும்,பாகிஸ்தானுடன் 1965லும் 1971லுமாக இருதடவைகளும் எல்லையுத்தத்திலும் ஈடுபட்டது. சிக்கிமை 1972ல் தனது நாட்டுடன் இணைத்தக் கொண்டது. ஆனால் இந்தியாவின் தெற்கு பக்கத்தில் உள்ள இலங்கையைப் பொறுத்தவரை,(முன்னைய காலங்களில் சோழப்பேரரசர்களின் படையெடுப்புகள் நடந்தபோதிலும்) இருநாடுகளுக்கிடையிலும் தரைத்தொடர்புகள் இல்லாததாலும், இலங்கையின் பண்டாரநாயக்க ஆட்சிகளின் புத்திசாதுரியத்தினாலும்,இந்தியாவுடன் பெரும் முரண்பாடுகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் இந்தியாவின் மத்திய அரசாங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் ஏகபோகம் தகர்ந்து, ஜனதாதளம், பாரதீயஜனதா போன்ற கட்சிகளின் அரசுகள் உருவான பின்னணியில், அயல்நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளும் மேம்படத் தொடங்கின. குறிப்பாக சீனாவுடனும் பாகிஸ்தானுடனுமான இந்தியாவின் உறவுகள் முன்னெப்போதையையும் விட இப்பொழுது சிறப்பாக உள்ளன. ஆனால் தரைத்தொடர்புகளும் இல்லாமல், இந்தியாவைவிட எழுபதில் ஒரு மடங்கு சிறியதுமான,இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை,இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தமிழ்தேசிய வெறிபிடித்த சக்திகள் சீர்குலைத்துவிடக்கூடிய அபாயம் இப்பொழுது எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைமையிலான இலங்கை தமிழ் பாசிசசக்திகள்,இந்தியாவின் இறைமைக்கு சவால்விட்ட அளவுக்கு வேறு எந்த அயல்நாடும் அதற்கு சவால்விட்டது கிடையாது எனலாம். அதேபோல தமிழக தமிழ் இனவெறி சக்திகள் (முன்பு சோழமன்னர்களின் படையெடுப்புகளை விடுத்துப்பார்த்தால்) அளவுக்கு வேறு எந்தவொரு அந்நிய சக்தியும் இலங்கையின் இறைமைக்கு சவால்விடுத்ததும் கிடையாது. இந்த உண்மையை இந்திய அரசாங்கத்தின் தலைவர்களும் கொள்கை வகுப்பாளர்களும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

இலங்கை இனப்பிரச்சினை என்பது தமிழ் இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்தோ அல்லது வெளிசக்திகளின் தலையீட்டினாலோ தீர்க்கப்படக்கூடிய ஒன்றல்ல. அது முற்றுமுழுதாக இலங்கையின் அனைத்து இனங்களினதும் இணக்கப்பாட்டின் மூலம் தீர்க்கப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக நாட்டின் சனத்தொகையில் 70 வீதத்தை வகிக்கும் சிங்களமக்களின் புரிந்துணர்வும் உடன்பாடும் அதற்குத்தேவை. இலங்கையின் 2500 வருட வரலாற்றில் தமிழகமன்னர்களின் பல படையெடுப்புகளின் காரணமாக, இந்தியா என்றால் ஒர் ஆக்கிரமிப்பு நாடு என்ற சிந்தனை சாதாரண சிங்களமக்களின் மனதில் ஊற்ப்போய் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இலங்கையைவிட்டால் தமக்கு வேறுநாடு கிடையாது என்ற கருத்தும் சிங்களமக்கள் மத்தியில் உண்டு. இலங்கை கௌதம புத்தரால் சிங்களமக்களுக்கென ஆசீர்வதிக்கப்பட்ட நாடு என்ற நம்பிக்கையும் சிங்களமக்களுக்கு உண்டு. மேலும் இந்த கருத்தோட்டங்களை அரசியல் ஆதாயம் தேடுவதற்காக சிங்கள இனவாதிகள் வளர்த்தும் வந்துள்ளார்கள். ஆனால் அதேநேரத்தில் சாதாரண சிங்களமக்கள், தமிழர் உட்பட ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களின் உரிமைகளை மறுப்பவர்கள் அல்ல. தீவிர இனவாதம் பேசிய சிங்கள அரசியல்வாதிகளை, இலங்கைச் சிங்கள மக்கள் எப்பொழுதும் நிராகரித்தே வந்துள்ளனர். இன்றுகூட இலங்கையில், இனங்களின் ஐக்கியத்தை விரும்பும் தமிழர்களின் விகிதாசாரத்தைவிட, அதை விரும்பும் சிங்களவர்களின் விகிதாசாரமே அதிகம். எனவே இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா அனுசரணை வழங்குவதானால், அது தலையீடு அல்லது நிர்ப்பதித்தல் என்ற வகையில் இருக்குமானால்,அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். உள்நாட்டு அரசியல் தேவைகளுக்காக இந்திய மத்திய அரசாங்கம்,தமிழக இனவாத அரசியல்வாதிகளின் சொற்படி செயற்படுமானால்,அது இலங்கையின் ஸ்திரதன்மையை பாதிப்பதுடன் மாத்திரம் முற்றுப்பெறாது. இந்தியாவையும் அது கடுமையாக பாதிக்கும். ஏனெனில் சில தமிழக அரசியல்வாதிகள் அப்பாவித்தனமாக நம்புவது போல, புலிகள் சுயாதீனமான ஒரு தமிழ் தேசிய இயக்கமல்ல. அவர்களின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் அனைத்து வேலைத்திட்டங்களிலும், அந்நிய வல்லாதிக்க சக்திகளின் கரங்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன. அதில் முக்கியமானது இந்தியாவை சீர்குலைத்து, இந்திய உபகண்டத்தை யுத்தப்பிராந்தியமாக நிலை நிறுத்துவது. அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து மகத்தான சுதந்திரப் போராட்டத்தை நடாத்திய இந்திய மக்கள்,தம்மீது அந்நிய –உள்நாட்டு நாசகார சக்திகளால் போடப்பட்டுள்ள சதி வலையை நிச்சயம் அறுத்தெறிவார்கள் என்று நம்பலாம்.

http://www.thenee.com/html/251008-3.html

Anonymous said...

நான் சொன்னது சரிதானே அனானி?

ஆக குறைந்தது பெங்களூர் மும்பை தமிழருக்கு தமிழ்நாடு மாதிரியான தனி மாநிலத்த பெற்று கொடுக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.//

வெளங்கீரும்.இப்படியே பேசு. இன்னும் 100 வருடம் ஆனாலும் சிங்களும் நானும் சகோதரன் இந்திய பொத்திக்கொண்டு இருக்கடும் அப்படியே சொல். நாடு கிடைத்தாப்லதான். இந்தியாவோ தமிழ்நோடோ உன் உதவிய கேக்கல அப்பு. எத்தன பேரத்தான் கொல்லுவாக. அரசியல் தெளிவு இல்லாத மக்கான்களிடம் என்னத்த்ச் சொல்ல. 30 வருசம் போராட்டம் வெற்றியக் கொடுக்க்லனா அடுத்து என்ன செய்யனும்னு பாக்கனும். பம்பாய்கரான் ஓங்கிட்ட வந்து உதவி கேகுறப்ப அவன் செருப்பல அடி. மலையகததானுக்கு யாழ் மேட்டுக்குடி பண்ண உதவியெலாம் படிப்பு படி.

Anonymous said...

இந்தியா பொத்தட்டும். ரொம்ப சரிப்பு. இதே வார்த்தைய புலித் தேசியத் தலிமை அப்படிச் சொல்ல திராணியிருக்கா? நடேசனோ என்னெ டவுசரோ சொல்லிப்பருங்க. அப்பவாச்சும் தமிழ்நட்டுக்கானுக்கு புத்தி வரும். இந்தியா பொத்தட்டும் என்று. அகில உலக டமிழ்தேசிய புலித் தல சொல்ல தில் இருக்கா? போர்க்களத்துல இல்லாம ஒடி வந்து வெளி நாட்டுல உக்காந்துகிட்டு என்ன வேண்டுமானலும் சொல்லலாம் தம்பி. அம்புட்டு ரோசம் இருந்தா போர் முனைக்கு போங்க பாசு. சும்மா புளாக்கு எழுதருது உதவாது. நொள்ள பேசியே 30 வருசமா வீணாக்கியாசு.

Anonymous said...

இந்தியா பொத்தட்டுமுன்னு சொல்ர மக்களே வாங்க போர் முனைக்கு. அமெரிகாவுலயும் கனடாவுலேயும் உக்காந்து கத,கவித , படம் பார்த்துக்கிடி நீலிக்கண்ணீர் விட வேணடாம். வாங்க போர் முனைக்கு.

Anonymous said...

//1983 இல் புலிகள் இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருந்திருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.//
நீங்கள் நினைப்பது தவறு. 1983 இல் புலிகளால் தான் இலங்கை தமிழர்களுக்கு இந்த துன்பங்களே வந்தது. இதை விட பேரழிவு ஏதாவது உண்டா அவர்களுக்கு?

Anonymous said...

//நீங்கள் நினைப்பது தவறு. 1983 இல் புலிகளால் தான் இலங்கை தமிழர்களுக்கு இந்த துன்பங்களே வந்தது. இதை விட பேரழிவு ஏதாவது உண்டா அவர்களுக்கு?//

அதெப்படி என்று கொஞ்சம் விளக்குங்களேன்..! :O))

புலோலியான்

Anonymous said...

ரவுசர் பாண்டிகளா இந்தியா பொத்தட்டும் சரியா. அப்புறம் நம்ம ஆண்டை பாலசிங்கம் அண்ணை மாதிரி சிங்களவன் சோதரன். நடப்பது சோகதரச் சண்டை என்று சொல்லி இந்தியாவை பொத்தச் சொல்ல ஆள் இல்லாத குறைய தீர்த்து வச்சீக மக்கா. வாழுக புலித் தலமை. வாழுக நீங்கள் அமெரிக்காவிலும் கனடாவிலும். சரியா. அகதிக் கோட்டா அப்படியே எவர் கீரீனா இருக்கட்டும்.அடுத்த யாழ் தலைமுறையும் நாட்டவிட்டு பறக்கட்டும். போர் முனைல எவன் செத்தா என்ன. இந்தியாவே நீ பொத்து. சரியா. வெளங்கிருமய்யா :-((

Anonymous said...

-இல்லாவிட்டால் மூக்கை நீட்டி விடுதலைப் புலிகளாலும், சிங்களவர்களாலும் மூக்கொடை பட நேரிடும்.-

சூப்பரு கலக்குர மாமே. இந்தியாவே பொத்து. இல்லாங்காட்டி நாங்க எங்கடை சோதரன் சிங்களவனுடன் சேர்ந்து மூக்குடைப்போம் ஏற்கனவே எங்கடை முன்னோர் மலையகத்தானுக்கு வச்ச ஆப்பு தெரியுமில்ல. ரீசண்டா ராஜிவ் ஆப்பு ஞ்ஜ்பகம் இருக்கா. எங்க புலி தெஇச்ய தலிவர்ய் உங்கடை சப்போர்ட்டை கேட்டாரா என்ன? பொத்து இந்தியாவே பொத்து.

Anonymous said...

புலியும் தமிழகமும் சேரவே கூடாது என்கிற முனைப்பு நன்றாகவே தெரிகிறது. ஹா..ஹா..ஹா..
:):):)

புலோலியான்

Anonymous said...

இந்திராவைக் கொலைசெய்தவர்களும், காந்தியை கொலை செய்தவர்களும் தண்டிக்கப்பட்டு விட்டார்கள்.

ராஜீவைக் கொலை செய்த பிரபாகரன் இந்தியாவிடம் சரணடையட்டும். ஒட்டு மொத்த தமிழகமும் ஈழத்திற்கு ஆதரவு கொடுக்கும்.

Anonymous said...

விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்கள் பல இந்தியாவின் காட்டிக் கொடுப்பினால் அழிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்கள் சிந்திய வியர்வைப் பணத்தில் புலிகள் வெளிநாடுகளில் செய்த வணிகத்தில் பெற்ற பணத்தில் வாங்கிய கப்பல்களும் அவற்றில் ஏற்றப்பட்டிருந்த ஆயுதங்களும் வன்னிக்கு வந்து சேரமுன்னரேயே அழிக்கப்பட்டிருக்கின்றன. பன்னாட்டுக் கடற்பரப்பிலும் இந்தனேசியாவின் சுமத்திரா தீவிற்கு அருகே வைத்தும் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டிருகின்றன. ஒன்பது வரையான கப்பல்கள் அவற்றிலிருந்த பெறுமதியான ஆயுதங்கள் இவற்றைவிட அந்த கப்பல்களை இயக்கிய அனுபவம் மிக்க போராளிகள் இந்திய காட்டிக் கொடுப்பினால் பன்னாட்டுக்கடலிலே இழக்கப்பட்டன. இது தமிழரின் படை பலத்தைத் பலவீனப்படுத்த உதவியது.

இந்தக் கப்பல்களின் அழிவுகள் நடைபெறாது விட்டிருந்தால் வன்னியில் சிங்களப் படைகள் மேற்கொண்ட நகர்வுகள் எப்போதோ முற்றாக முறியடிக்கப்பட்டு சிங்களத்தின் ஆக்கிரமிலிருந்து ஏனைய தமிழர் நிலங்களையும் புலிகள் கைப்பற்றிருப்பர்.

வான் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்பு ராடர்கள் உள்ளிட்டவற்றை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்காக ஆளணி வளத்தையும் இந்தியா வழங்கியிருக்கிறது. அண்மையில் சிங்கள அரசு கொள்வனவு செய்த மிக் - 29 போர் வானூர்திகள் மூலம் வன்னியில் தமிழர் வாழ்விடஙகள் மீது குண்டு வீச்சை மேற்கொள்வது இந்திய வானோடிகள்.

இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால் யாரிடமிருந்து ஆயுதம் வாங்கினால் தமது இறையாண்மைக்குப் பாதிப்பு என்று சொல்லி இலங்கைக்கு உதவுவதற்கான நொண்டிச் சாட்டைச் சொல்லும் இந்தியா குறைந்த வட்டியிலான கடனை இலங்கைக்கு வழங்கி பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளிடமே ஆயுதத்தை வாங்க உதவுகிறது.

ஈழத்தமிழர்கள் சிங்களப் படைகளின் தாக்குதல்களில் பெருமளவில் கொல்லப்படும்போது அமைதி காக்கும் இந்தியா புலிகள் சிங்களப் படைகள் மீதோ அல்லது தென்னிலங்கையிலோ தாக்குதல் நடத்தினால் உடனடியாகக் கண்டனம் தெரிவிக்கும்.

ஈழத்தமிழர்கள் இந்தியாவிடமிருந்து எதிர்பார்ப்பது ஒன்றுதான் எந்தவகையிலும் தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக எந்தச் செயற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டாம் என்பதே அது.

Anonymous said...

Karuna removed as TMVP political head- Spokesman



TMVP spokesman Azad Maulana says MP Karuna Amman is no more in charge of the TMVP political party but continues as its military unit head. He says the TMVP is unhappy with his recent public statements.

Anonymous said...

Karuna bought over by Govt. charges Pillayan

The battle between Karuna and Pillayan intensified last week with the office of Eastern Chief Minister Sivanesathurai Chandrakanthan alias Pillayan faxing a statement that Karuna has been bought over by the government.

The statement was signed as Tamil People Living in the East (TPLE). The statement said Karuna had betrayed the Tamil people after being appointed as a Member of Parliament at the expense of the rights of the Tamil community.

The statement called upon Pillayan not to make such decisions that would push the Tamils to a helpless situation. "Karuna Amman has been bought over. What would be the state of the people of our district if Pillayan also abandons us?" the statement said.

The divisions within the TMVP widened with the Pillayan faction openly challenging Karuna’s leadership.

Soon after Karuna’s statement that provincial councils did not require police powers, Pillayan loyalists and TMVP General Secretary, E. Kaileswararaja fired off a letter to Karuna seeking explanation as to why he made such a statement against party decisions. However Karuna loyalists hit back arguing that the Pillayan faction was engaged in splintering the party right down the middle.

Karuna last Tuesday had said that the provincial councils did not need police and land powers. The TMVP had said that the statement was against the party decision and said that the view expressed by Karuna was his personal view.

However K. Iniyabharathi, TMVP Ampara District Head, a Karuna loyalist told The Sunday Leader that a certain group was trying to split the party by creating unwanted problems.

He said that Karuna still remains the leader of the TMVP. "These are all unwanted issues. Some people are trying to split the party by raising unwanted problems. Karuna Amman is still the leader of the TMVP. No one needs to have doubts about that," Iniyabharathi said.

Anonymous said...

LTTE issue: Jaya demands Karuna's arrest, assembly dissolution







Chennai, Oct 25 (PTI) Stepping up her attack against the DMK Government on the LTTE issue, AIADMK General Secretary Jayalalithaa today demanded dissolution of the Tamil Nadu Assembly besides arrest of Chief Minister M Karunanidhi for allegedly eulogising late LTTE leaders S Tamilselvan and Anton Balasingam.
"I have made this demand long back. Whether the UPA Government, of which the DMK is a constituent, has the guts to do this?" she asked in a statement.

The arrest of Tamil film directors Seeman and Amir, for their pro-LTTE remarks at a rally by film industry in Rameswaram, was only a "farce", she alleged.

"They were in full public view in the human chain and Karunanidhi had also seen them in the demonstration. Why police did not arrest them initially? They were arrested only after completion of the human chain and after giving interviews to media," she charged.

Jayalalithaa also demanded the arrest of DPI leader Thol Thirumavalavan, who had also reportedly supported the LTTE, at a conference here in January last.

Alleging that his party colleague Vanniarasu was involved in arm smuggling for LTTE, she wanted to know why the two were not arrested under the Unlawful Activities (Prevention) Act. PTI

Anonymous said...

India’s action on Sri Lanka not satisfactory, says CPI

Special Pimpizaran

New Delhi cannot wash its hands of Tamils issue: D. Pandian

Tamil Nadu people ready to donate food and medicine to Sri Lankan Tamils: CPI

“Appoint Tamils as High Commissioners to

Sri Lanka, Singapore and Malaysia”


--------------------------------------------------------------------------------



CHENNAI: The action taken by the Central government in response to the demand of the people of Tamil Nadu to stop the war in Sri Lanka was neither satisfactory nor promising, Communist Party of India State secretary D. Pandian said on Saturday.

Talking to journalists here, he said India could not wash its hands of the Sri Lankan Tamils issue on the pretext that it was an internal matter of another country.

“When human rights are violated, borders of a country cannot be a stumbling block. In the case of Sri Lanka we have a close relationship with the Tamils.”

Stating that people of Tamil Nadu were ready to donate food and medicine to the Sri Lankan Tamils, Mr. Pandian requested N. Ram, Editor-in-Chief of The Hindu, to get permission from Sri Lankan President Mahinda Rajapaksa to distribute the same.

“He is the only person who can pick up the phone and talk to Mr Rajapaksa. He should get permission from him to send food, medicine and other relief materials,” Mr. Pandian said
, but made it clear that the materials should not be distributed through the Sri Lankan government.

“A committee comprising doctors who are not affiliated to any political party, retired judges, Buddhist monks, heads of Hindu mutts, Christian priests and Moulvis from Tamil Nadu should be formed for the purpose,” he said. The Centre should also offer help in this regard.

Mr. Pandian said National Security Adviser M.K. Narayanan and Foreign Secretary Shiv Shankar Menon should not advise the government on the Tamils issue. “If possible, the government should appoint Tamils as High Commissioners to Sri Lanka, Singapore and Malaysia.”

Another demand of Mr. Pandian was to send two Union Ministers from Tamil Nadu along with External Affairs Minister Pranab Mukherjee to Sri Lanka to hold talks. “If Ministers are not allowed, MPs from Tamil Nadu can be sent.”

The next course of the CPI’s action on the issue, he said, would be decided in consultation with other parties.

On the arrest of film directors Seeman and Ameer, Mr. Pandian said the government should be lenient towards them as theirs was only “an emotional outburst and not a political statement.”

Anonymous said...

Karuna at odds with TMVP

The entry of former LTTE eastern commander and renegade Vinayagamoorthi Muralitharan alias ‘Karuna Amman’, into the Sri Lankan Parliament has continued to create waves in political and media circles. Last week, when President Mahinda Rajapaksa summoned heads of media organisations and newspaper editors to Temple Trees, Karuna was also present, and was invited to speak soon after the President. Presidential Secretariat translator, M.K. Rahumath translated Karuna’s speech for those present.

“What the eastern people need right now is development. We are in the process of reshaping their ideas vis-à-vis the Sinhala people. Under these circumstances, if we ask for police powers in the east, that would look suspicious,” he told the newspapermen.

The media went on to give his statement a great deal of play.
Simultaneously, fissures began to show in earnest, within Karuna’s party, the TMVP.
Once these statements appeared in the news, TMVP Chairman Kumaraswami Nanda Gopalan stated publicly that, Karuna Amman’s statement did not reflect the opinion of the party. Gopalan told the BBC’s Tamil Service that, not only did the TMVP stand for police powers in the eastern region, but they also held to the position that, the 13th Amendment should be fully implemented, with all powers stipulated therein being delegated to the Provinces. He added that, as per the papers filed with the Elections Department, the TMVP’s legitimate Chairman was himself.

In a further blow to Karuna’s supremacy, the TMVP’s Political Unit Head, Kailesh Raja, said that, although the former LTTE commander deserved a certain degree of respect, for founding the party, all credit for building it up to being what it was currently should go to Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan alias ‘Pillaiyan’.
“We don’t know at this point, whether the media interpreted Karuna’s statement about not wanting police powers in the east or, whether this was his personal view he was expressing at the forum. In any case, the party has decided to seek an explanation from Karuna Amman about his statement,” the TMVP Chairman said.

Chandrasekeran admonished
Meanwhile, President Rajapaksa is believed to have severely admonished and warned Upcountry Peoples’ Front Leader and Community Development Minister P. Chandrasekeran for having violated collective Cabinet responsibility, in making a statement in Parliament against the government.

The President summoned Chandrasekeran on Thursday (23) to warn him in this regard:
Chandrasekeran, making a statement to Parliament, said that, the notion that, the resolution to the ethnic conflict would be brought about after the war, is like asking the Tamil people what they want after bringing them to their knees. At this point, National Freedom Front Leader Wimal Weerawansa and Opposition Leader Ranil Wickremesinghe questioned how a minister of the Cabinet could violate the principle of collective Cabinet responsibility thus. At this point, Chief Government Whip, Dinesh Gunewardane said that, Chandrasekeran said it in his capacity as a leader of a party and that, these sentiments were not the position of the government. However, several ministers had raised concerns at the Cabinet meeting held on the same day, regarding Chandrasekeran’s outburst. Here, the President assured his ministers that he would summon Chandrasekeran and question him in this regard. Upon inquiry, Chandrasekeran said that he met the President at Temple Trees and explained the circumstances which led to his statement and added that, the President had instructed him to act with more responsibility and caution as a member of the Cabinet. He said that, he had assured the President that he would do so in the future.

Anonymous said...

why prabhakaran is revered and other rebels forgot to ring bells is this.

YOU GOT FUCKED UP FOR ONE PIECE OF BREAD and A CUP OF WINE

Karuna denies ouster
UPFA Parliamentarian Vinayagamurthi Muralidaran alias Karuna has denied reports that he is no more in charge of the TMVP political unit, as declared by party spokesman Azad Maulana.
Speaking to The Nation Karuna maintained he was still in total control of the party. Moulana, yesterday informed the press that Karuna has now been made in charge of the military unit, and that he will no longer serve as the leader of the political arm of TMVP.

Severely castigating Maulana’s comments, Karuna said the party had no military wing and that the TMVP was a political party which he said Maulana did not understand.
“I am shocked that Moulana who has released some ‘unwanted’ information to the press without my consent does not know that our’s is a political party,” he said. He said through this press interview Moulana had only betrayed the party and given the impression to the world that TMVP is still a military movement.

Karuna also said that he spoke to Pillaiyan’s advisor Ragu and inquired from him about the development.
“I have not been able to contact Pillaiyan. But I will soon meet him and thrash out matters,” he said.
Admitting that there are squabbles within the party, Karuna vowed to sort out all the matters within a week and call for a press conference. Asked whether he was planning to take disciplinary action against Moulana, he said that would be done only after consulting the politburo shortly.

Anonymous said...

The Real Commander Zero Stand Up Please!!

Firing up the east over
Karuna-Pillayan battle

By Dashrath

The putsch within the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP) came out in to the open last week in the wake of a controversial statement made by its Leader V. Muralitharan alias Karuna at Temple Trees last Tuesday (21).

TMVP Leader and newly elected Parliamentarian Vinayagamoorthi Muralitharan alias Karuna Amman had said last Tuesday that there was no necessity for police powers to the Eastern Province and what was needed was development. This statement had surprised the TMVP, which said that all powers should be devolved at provincial level.

This resulted in the TMVP General Secretary E. Kaileswararaja writing to Karuna, demanding an explanation as to why he had made that statement when the party he leads has a different view.

On Friday, October 17, Karuna loyalists reportedly barged into the TMVP head office, Meenagam and the adjoining press down Govindan Road, Batticaloa and had taken over the place while 'arresting' a few Pillayan supporters.

Tense situation

The press is used to publish the newspaper Tamil Alai run by the TMVP. The newspaper, which was earlier run by Karuna loyalists, was run by Pillayan cadres following Karuna's departure to the UK. Reports from the area said that a tense situation prevailed during the day. The situation however was brought under control the following day where that Karuna cadres had left the office premises.

The conflict within the TMVP is nothing new. It has been evident on several occasions in the past as well. Karuna and the current Eastern Province Chief Minister, Sivanesathurai Chandrakanthan alias Pillayan were at loggerheads due to financial issues of the party before the former left for the UK.

The tension was kept under wraps by the TMVP.

Last year saw several clashes between Pillayan and Karuna loyalists in Batticaloa which resulted in many of the Karuna supporters being 'detained' by Pillayan. Pillayan had reportedly taken over almost all of Karuna's offices. This too was denied by the TMVP.

Not on good terms

The name Karuna Amman was not in the limelight as far as the TMVP was concerned for at least one year after he had left for the UK. Pillayan was recognised as the leader of the party. Despite reports that Karuna and Pillayan were not on good terms, the TMVP constantly said that Karuna was the leader of the party and Pillayan his deputy.

Following Karuna's arrival in Sri Lanka last June, the scenario changed dramatically with the attention shifting more towards Karuna. Though there were no clashes or confrontations reported due to the feud within the TMVP, there was always a doubt on how both would work together after Pillayan was made Chief Minister of the Eastern Province.

Karuna however said that he will continue to be the leader and would not interfere with the work of the Chief Minister. Little did we know at the time though that he would soon be made a lawmaker of the country.

Today however the gloves are off and the party has openly shown its displeasure over Karuna's remarks of not wanting police powers for the Eastern Province. TMVP Spokesperson Azath Moulana said that the party is 'shocked' to hear the statements made by Karuna Amman and considered it to be his personal view and not of the party.

This tension between the two loyalists have so far not affected the civilians directly. Though there was tension in Batticaloa when the TMVP press was taken over by Karuna cadres, no civilians were targeted or affected due to the feud.

The police have said that it had taken appropriate action to make sure the situation was brought back to normal.

Private issue

So far, the police had not taken anyone into custody on the TMVP press issue. Police Spokesperson SSP Ranjith Gunasekara said that it was a private issue concerning the TMVP and there was no violence reported.

The duty of the police is not limited to look into problems as and when incidents happen. It is also their duty to make sure that incidents of this sort in the future do not affect normal civilian life. "We cannot forecast about the future," says the Police Spokesperson. It seems that the police has still not taken steps to protect civilians from the internal feuds of armed groups functioning in the area. These former LTTE cadres are still armed to the teeth and roam freely.

The east is a sensitive region, being the home of all three communities. So far, there have been no communal clashes in the region.

The only time there were clashes were when there was confusion as to who would be appointed the chief minister of the east. The confusion began when Pillayan and M.L.A.M Hisbullah both claimed they will be appointed chief minister, following the UPFA victory at the Eastern Provincial Council polls on May 10.

It however turned out that Pillayan was appointed the chief minister with word in the grapevine being that India was in favour of Pillayan's appointment. Even after the appointment however there were clashes between the Tamils and the Muslims. The clashes were so intense that Tamils who were passing Muslim areas were stoned and vice versa. Both parties amicably settled the issue subsequently. Thankfully, no issues have cropped up since.

Different situation

Today, the situation has slightly changed and we find conflicts of opinion within the same party, the TMVP. Though this would not create ethnic disharmony in the region, it will definitely have an impact on the civilians who are now getting used to the environment after the east was liberated from the Tigers. The east may be liberated from the Tigers but the fact is that the guns continue to speak louder.

And how serious a crisis it is turning out to be is reflected in the planned October 26 anti Indian protest in Batticaloa led by Karuna who is now the government's point man for the east.

While Karuna has called on all Tamil parties and civilians to join in the protest, Chief Minister Pillayan and his supporters in addition to the likes of Anandasangaree of the TULF and the EPRLF have made it known they will have nothing to do with any anti Indian protests.

However Karuna was determined to proceed with the protest using full state security and this on the eve of Senior Presidential Advisor Basil Rajapakse's visit to India is bound to add a new dimension to the crisis.

Anonymous said...

India to continue military aid to Sri Lanka
Saturday, 25 October 2008 13:34
New Delhi has virtually ruled out demands by Tamil Nadu political parties to stop military aid to Sri Lanka, Indian media has reported.
External Affairs Minister Pranab Mukherjee told Rajya Sabha that Sri Lanka's security is "connected" with its security and it would not like "international players in our backyard."

He said however, there was no military solution to the raging ethnic conflict, and urged Colombo to find a peacefully negotiated political settlement.

Mr. Mukherjee took the opportunity to stress that India did not want influx of Tamil refugees from Sri Lanka into its territory, saying it was the "responsibility" of that country to provide food and shelter to civilians displaced because of the hostilities.

"In our anxiety, we should not forget the strategic importance of that island and it is not only their security, it is closely connected with out security," Mukherjee said.

"What type of security arrangements should be made, what type of assistance they will require and what is their security requirement, there should be some common assessment because it is so close to us," he said.

"Surely, we would not like to have the playground of international players at our backyard. These aspects are to be kept in view while making an assessment of the situation," he added.

Meanwhile, 'Divaina' reported the Indian External Affairs Minister as having said that New Delhi would continue supply arms and provide training to Sri Lankan armed forces.

Anonymous said...

Indian Media: Tamasha Time

India on alert for fleeing LTTE operatives including its leader
Sunday, 26 October 2008 - 5:35 AM SL Time

The Union Home Ministry has called on immigration authorities in South India, including Kerala to be on alert on LTTE operatives fleeing Sri Lanka.

Official sources said it was possible that wanted LTTE men could crossover from Sri Lanka in Indian fishing boats or procure fake Indian passports or travel to other countries posing as Indians. A racket came to light this year with immigration officials detaining 41 passengers on the charge of possessing fake Indian passports. During interrogation they revealed that terrorist leader Velupillai Prabhakaran and his close associates were planning to flee the island. The Indian Home Ministry has taken action to beef up security in the sea limits.

Anonymous said...

senile or Pea Brain? And, yes, if this ignorant clown is one of the best Jounalists of India... even the god can not save the country.
"Ignorance is a Bliss, Idoit"

India’s response ethically, morally, politically wrong

By Kuldip Nayar
When Sri Lanka's army commander General Sarath Fonseka claimed some four months ago that they had "defeated" the LTTE (Liberation Tigers of Tamil Eelam), I had my doubts. Now I believe him because of the antics by Tamil Nadu Chief Minister M. Karunanidhi. He threatens to withdraw the DMK support of 14 Lok Sabha members from the Manmohan Singh government if it does not step in to "stop the genocide" against the Tamils in Sri Lanka.

The cat is out of the bag when he asks for a ceasefire against the LTTE. Karunanidhi's threat works because the Manmohan Singh government panics. It does not want to be reduced to a minority government. Hence it summons Sri Lankan envoy at New Delhi to the Foreign Office to express its concern over the Tamils's plight. The Prime Minister himself calls on the phone Sri Lankan President Mahinda Rajapaksa and follows it up with the announcement that Foreign Minister Pranab Mukhaerjee would visit Colombo to sort out things.


DMK supporters participating at a human chain demo on Friday in support of Sri Lankan Tamils.
I do not know how things would work out in the end. Militarily, the Sri Lankan army is in the mopping-up process. The LTTE's last stronghold, Kilinochchi, has been pierced through. Will Colombo or, for that matter, the military agree to have a ceasefire when the LTTE has been roundly defeated? And what does it mean in political terms because Sri Lanka itself concedes that the problem is political and cannot be solved militarily? My questions are directed towards New Delhi.

How can it interfere in the internal affairs of Sri Lanka? What is our business to protect the LTTE against the Sri Lankan military? How can we ask or even make a hint to a sovereign nation to do or not to do certain things? We are setting a precedent which we would regret one day.

Asking an independent country not to march against the forces it considers rebels amounts to belittling its sovereignty. Our act is palpably wrong, morally, ethically and politically. Whether the Manmohan Singh government stays or falls without the DMK support is not the concern of the nation. But putting the weight of its authority to undermine a country's sovereignty is very much our concern. We should be discreet enough when and where to draw the line.

This does not mean that we should not be concerned over the violation of Tamils' human rights. That Tamils in Tamil Nadu are anxious about them is all the more reason for our sympathy. But there are ways and means of doing so. Calling a country's envoy to the Foreign Office is certainly not one of them. I can understand the centre supporting Karunanidhi's demand to stop the "genocide against Tamils."
I can also understand that human rights violations create a situation which can be volatile for Tamil Nadu or even beyond. But I cannot understand how the LTTE represents the Tamils. It is a banned organisation in India and it has been proved beyond doubt that LTTE chief Velupillai Prabhakaran was personally responsible for the assassination of former Prime Minister Rajiv Gandhi.

Tamils in Sri Lanka are justifiably angry that they do not get their due. I heard endless complaints when I was at Colombo some time ago. Extortions were many and the police would not even register a report by Tamils. Still, the Tamils in Sri Lanka are not disloyal to the country. Nor do they want to secede from Sri Lanka. They want to be treated at par with the Sinhalese, the majority in the country.

The LTTE is a band of Tamil terrorists. They cannot be allowed to hijack the Tamil community which feels that it has no equal opportunities and that its language, Tamil, does not enjoy the same status as the Sinhala. True, Sri Lanka is a unitary state but it should administer in a federal way so that Tamils feel they are part and parcel of the country's ethos. However, the eyes of the Manmohan Singh government are fixed on how to save it. The last time when it sought a vote of confidence in the Lok Sabha, it had to bribe a few MPs to garner a majority.

Today, the government is doing the same thing, giving in to Karunanidhi's threats. This may be all right with the Congress party, but it is not acceptable to the nation. The real fault is ours because we created the LTTE, gave it training and weapons. It developed its own ambition which was bound to happen when our foreign office foolishly thought that the LTTE would come in handy to needle of the Sri Lankan government to get a better deal for Tamils. The end was right but the means were wrong. As Mahatma Gandhi said, "If means are vitiated the ends are bound to be vitiated."

Anonymous said...

Sonia & Priyanka

said...

பொடியன் - தமிழ்பிரியன்
உங்கள் கேள்விகளுக்கு தெளிவானவை என நான் நம்பும் அளவில் பதில்கள் சொல்லி விட்டேன். அதை நீங்களும் ஏற்பீர்கள்.

அனானியின் கேள்வியில் - என்ன நோக்கம் நிறைந்திருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள் - (அனானி என்பது குறித்து சிக்கல் இல்லை. நானே ஒரு அனானிதானெ )

கருத்தியல் வறுமை ஏற்படும் போதெல்லாம் - தலைக் கேறும் எரிச்சலில் -வார்த்தைகளில் வன்முறையைக் கொட்டுவதும் - பண்பாட்டுக் குறைவாக பேசுவதும் - வழமையானவைதான்.

யாழ் மேட்டுக்குடி வாதம் என்பதும் மலையக மக்கள் மீதான வர்க்க பேதம் என்பதுவும் மலையக மக்களை கைவிட்ட ஈழத்தமிழர் அரசியல்தலமைகள் ஈழத்தில் இருந்தன என்பதுவும் - நூறு வீதம் நான் ஏற்றுக் கொண்ட கருத்துக்களே..

என் பக்கத் தவறினை மறைத்து - அடே அடே நீதாண்ட பிழை விட்டவன். பேசாத நீதான் பிழை நீதான் பிழை - என உளறிக் கொண்டிருக்கும் தேவை எனக்கு எங்களுக்கு கிடையாது. எனக்கோ எங்களுக்கோ எந்த பெரியண்ணன் பிம்பமும் கிடையாது.

நான் மிகத் தெளிவாக என் எம் தவறுகளை ஏற்று - அது மீள நடவாது என்பதற்கான நிகழ்வுகளையும் நம்பிக்கைகளையும் தருகிறோம்.

ஆனால் அனானி -
இந்த பதிவின் நோக்கத்திற்கு எங்கள் பதிலின் நியாயத் தன்மையை ஏற்றுக் கொள்ள முடியாத மன அரிப்புடன் - வெப்பியாரத்துடன் - அதை ஏற்றுக் கொள்வது எங்கே தன் தோல்வியாகிடுமோ என்ற - தான் தோல்வியுறவதோ என்ற மனச் சிக்கலில் சிக்கி உழன்று உளறல்களை பதிலாக்கிறார்.

அதன் வெளிப்பாடுதான் - மலையக மக்களுக்கும் தனி ஈழம் பெற்று கொடுங்கள் என்ற கூக்குரல்.

ஏன் - மும்பாய் தமிழர்களுக்கு - தனிமாநிலம் பெற்றுக் கொடுங்களேன் என கேட்டால் -

நீ தான் உதவி கேட்டு வருகிறாய் - ஆகவே நான் சொல்வதை கேள் - நீ சொல்வதை கேட்க முடியாது என்ற காலணித்துவ மனநிலையில் பதில் வருகிறது.

Anonymous said...

அதன் வெளிப்பாடுதான் - மலையக மக்களுக்கும் தனி ஈழம் பெற்று கொடுங்கள் என்ற கூக்குரல். //

ஆம் கூக்குரல்தான். கொழுவி. மலையகம் பற்றிப் பேசினால். பாப்பரத்தனம், சிங்களவனிடம் எலும்பு வாங்கிய நாய், நக்கிப் பிழைப்பவன் என்று சொல்லும் அல்லக்கைகளை கண்டிக்க வக்கில்லை. புளாக்கில் நடக்கும் இதே வன்கொடுமைதான் யாழில் நடக்கிறது. வடக்கத்தியான், பீத்தமிழன், இதல்லாம் யாராம்? மலையகம் விடுதலை பற்றி பேசினால் பம்பாயைப்பற்றிப் பேசுவது சரியா? நொள்ளைவாதம் செய்ய வேண்டாம். புலித்தலிமையின் தமிழீழ வரைபடத்தில் மலையகம் இல்லை. அதைக் கொண்டுவர புலித்தலமை என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். பாம்பாய், பெங்களூர் பற்றி பேச வேண்டாம். பேசினால் நொள்ளைவாதமாத்தான் முடியும்.

சிங்களவன் சண்டை சோதரச் சண்டை இந்தியா பொத்து என்று சொன்ன ஆண்டை பாலசிங்கத்தை கண்டித்தீர்களா? யாழ் மேட்டுக்குடி வர்க்கம் சிங்களவனிடம் மலையகம் நக்கிப் பிழைக்கிறது என்று சொன்னவனைக் கண்டித்தீர்களா? ஓடிப்போய் வெளிநாட்டில் நொங்கு தின்பவன் 99 சத்வீதம் மலையக்த்தானா இல்லை யாழ் மேட்டுக்குடியா? இதெல்லாம் நக்கிப்பிழைப்பு இல்லையா? பாவப்பட்ட சனங்களய்யா மலையகம். கேவலப்படுவோம் என்று தெரிந்தே புலிகளிடம் உதவி கேட்பது தவிர வேறு வழியில்லை. உங்க்ளைப்போல் சிங்களத்தான் சோதரன் என்று ஆண்டை பாலா அண்ணை போல சொல்லி சிங்களவ்னிடம் போக மனம் வரவில்லை. 30 வருடமாக நடக்கும் போர் ஏன் இன்னும் நடக்கிறது? ஒற்றுமை இல்லை கொழுவி. உண்மையச் சொல்லுங்கள் புலிகளிடம். மலையகம், முஸ்லீம் தனி நாடு திட்டம் இல்லாமல் போர் ஒரு பொழுது போக்குத்தான். அனானியாக குண்டு போட்டு கொலை செய்தால் வீரம். டுபாக்குர் கமெண்ட் போட்டால் என்ன தவறு?

Anonymous said...

பாம்பாய், பெங்களூர் பற்றி பேச வேண்டாம். பேசினால் நொள்ளைவாதமாத்தான் முடியும். //

தமிழரின் மரபுத்தாயகம் குறித்து பேசினால் - ? பதிலுக்கு மலையகம் பற்றி பேசினால்... அது என்ன பிள்ளைவாதமா?

மலையகத் தமிழர்களை அவர்களின் அரசியற்தலைவர்கள் கைவிட்டு இருக்கிறார்கள். ஆம். அரசியற்தலைவர்கள் அரசை நக்கித்தான் பிழைக்கிறார்கள்.

சொல்லமுடியாது - தமிழனின் இராணுவ பலம் உயரும் வேளையில் - மலையகத்தையும் கைப்பற்றிவிடலாம். ஆனால் அப்போது ஐயோ தமிழகத்தையும் கைப்பற்ற போகிறார்கள் என கதறக்கூடாது ஆமா..

இன்னொன்று - தமிழ்ஈழம் - தமிழ்நாடு மாதிரியான ஒரு நிலையில் இன்று இருக்குமானால் - ஒட்டுமொத்தமாக எழுந்து மலையக மக்களின் விடுதலைக்கு தீர்வு காணுமே தவிர - சும்மா இருந்து நொள்ளை பேசிக்கொண்டோ - அல்லது தீர்வு காண விரும்பகிறவர்களை - புறணி பேசிக்கொண்டோ இருக்காது.

ஒரேயொரு சந்தோசம் எமக்கு உண்டு.

அது அனானியைப் போன்றவர்கள்.. வெறும் ஒன்றிரண்டு பேர் என்றதுதான்.

மிகுதி மொத்த தமிழகமும் என் சகோதரர்கள். எனக்காக எழுவபவர்கள். அந்த மகிழ்ச்சியில் இந்த ஒற்றை மனிதர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
நன்றி!

said...

இப்போ மத்திய அரசு என்ன மாதிரி நடவடிக்கை எடுத்துள்ளது, எடுக்கப்போவதாக ப்ராணாப் சொல்லியிருக்காரோ, அதே தான் நாங்க பதிவா போட்டு கேட்டோம்... உடனே, புலி ஆதரவு, மறைமுகமா (indirect) இது புலி ஆதரவு ஆகிடும்... நம்ம அங்கே எதுவுமே செய்யவேண்டாம் அவ்ளோ சொன்னீங்க, stajoe. & பொடியன் சஞ்சய்..

இப்பவாச்சும் புரியுதா?

காங்கிரஸ், ப்ரனாப் கூட மறைமுகமா புலி உதவி செய்யறாங்கனு சொல்லிடாதீங்க..

Anonymous said...

ஆனால் அப்போது ஐயோ தமிழகத்தையும் கைப்பற்ற போகிறார்கள் என கதறக்கூடாது ஆமா..///

ஹி..ஹீ.ஹீ.. நீ திருந்துவ ..நிச்ச்யம் மாட்ட. முதல்ல உங்க டவுசர மாட்டுங்கப்பு. இப்படிப் பேசீயே 30 வருசமா அலையுறோம்.


இன்னொன்று - தமிழ்ஈழம் - தமிழ்நாடு மாதிரியான ஒரு நிலையில் இன்று இருக்குமானால் - ஒட்டுமொத்தமாக /

மலையகத்தான விட்டமாதிரி நாங்க யாரையும் விடமோட்டொம். எங்களுக்கு தனித்தமிழ்நாடு வேணுமின்னி தேவை இல்லை. அப்படி வரும் பட்சத்தில் அது நிச்சயம் யாழ் மேட்டுக்குடி மலையகத்தவிட்டமாதிரி யாரையும் விட மாட்டோம். சரியா. அப்புறம் எங்களுக்கு இப்ப தனித் தமிழகம் தேவையில்ல. அது தேவைப்படும்போது நாங்க என்ன செய்யணுமோ அதைச் செய்வோம். தனி ஈழம் கேட்குற நீங்க மலையகத்தை சேத்துக்குங்கப்புன்னு சொன்னா ஏன் இப்படி சுத்து வளைக்கனும்.

Anonymous said...

CHENNAI: Kollywood’s October 19 rally, expressing solidarity with Sri Lankan Tamils, may have been a huge draw, but in the wake of the arrest of
directors Seeman and Ameer, the festive season just got a little dimmer for the industry.

“It will be a sad Deepavali for us,” read a statement from director Bharatiraja on Sunday. According to a producer who attended a day-long meeting at the Producers’ Council on the eve of Deepavali, “Neither secessionism nor politics is our agenda.”

While a section of the industry is worried over the fall-out of the speeches by Seeman and Ameer, the Nadigar Sangam has maintained a stoic silence, signalling a polarised situation yet again within Kollywood. When the announcement of the rally was made, it was presumed that all the stars would participate, but barring Vadivelu, the big stars stayed away from Rameswaram.

“The logistics of organising a trip to Rameswaram at such short notice were huge,” said actor Sarath Kumar, who heads the AISMK (All India Samathuva Makkal Katchi).

On condition of anonymity, Nadigar Sangam officials said that it was a conscious decision to avoid the Rameswaram show. “There were apprehensions that some of the speakers could turn out to be rabble-rousers, and get emotional” said a Nadigar Sangam official. “Walking the tightrope between politics and cinema, between one Kazhagam and another, calls for a lot of skill and all the stars were worried about being linked to either of the Kazhagams, and hence the decision to keep away,” said another actor.

Industry observers point out that despite the close relationship between politics and cinema in Tamil Nadu “No one can ride two horses at the same time, then entry into politics would mean the end of one’s film career,” they added.

Ananda Suresh, producer and member of South Indian Film Exporters Association, however, said that the rally was not aimed at gaining political mileage for anyone. “Tamil producers owe a moral debt to Sri Lankan Tamils. They have helped our films grow in the export market exponentially in the last few years,” he said. Ten years ago, the overseas rights of Tamil films fetched only about Rs 2 lakh. “Currently a Vijay or Ajith film fetches Rs 2 crore and more overseas, while a Rajnikanth film is sold for Rs 10 crore,” said Suresh. It is >business, not politics, he added.

Anonymous said...

The Hindu


Pact with Sri Lanka the first of its kind



Special Correspondent



It is expected to lead to a cooling of the political temperature in Tamil Nadu







— Photo: V. Sudershan

Sorting it out: Basil Rajapaksa, Senior Advisor to Sri Lankan President Mahinda Rajapaksa, with External Affairs Minister Pranab Mukherjee in New Delhi on Sunday. At right is Foreign Secretary Shiv Shankar Menon.

New Delhi: Describing Sunday’s agreement between India and Sri Lanka on fishing as highly significant, a senior Indian official said this was the first time the two countries had come up with a way of dealing with what happens when fisherfolk cross the International Maritime Boundary Line (IMBL). To the extent to which the fishermen issue had been a principal concern of Tamil Nadu Chief Minister M. Karunanidhi and most MPs from the State, the official expected the new agreement to lead to a cooling of the political temperature in the State.

The agreement came at the end of a visit to Delhi by Basil Rajapaksa, senior advisor to the President of Sri Lanka.

India’s concern


In a joint press release, the Ministry of External Affairs said India had conveyed its concern at the humanitarian situation in the northern part of Sri Lanka, especially of civilians and internally displaced persons caught in the hostilities and emphasised the need for unhindered essential relief supplies. As a gesture of goodwill, the release said, “India has decided to send 800 tonnes of relief material to Sri Lanka for the affected civilians in the North.” This relief will be routed through the Sri Lankan government with actual distribution overseen by the United Nations, senior officials told The Hindu.

On his part, Mr. Rajapaksa said the Sri Lankan authorities were making efforts to provide relief and ensure the welfare of civilians in the North. And he gave an assurances that “the safety and wellbeing of the Tamil community in Sri Lanka is being taken care of,” the press release noted.

Political settlement


The joint release also noted that both sides discussed the need to move towards a peacefully negotiated political settlement in the island, including the North and that terrorism should be countered with resolve. The Indian side called for implementation of the 13th amendment and greater devolution of powers to the provinces. As for Sri Lanka’s Eastern province, both sides agreed to “further nurture the democratic process” there.

Anonymous said...

Phone campaign against actors: Tamil youth allegedly arrested



By Yohan Perera
As phone campaign against the South Indian actors who had declined to participate in the protests against the Military operations in the North is underway in Sri Lanka, a Tamil youth has been allegedly arrested by the Wellawatte police for forwarding an SMS he got to his friends.

Ganesalingam Pradeep a 24 year old youth had allegedly forwarded an SMS which called all Sri Lankan Tamils to boycott all the films in which two South Indian actors Wijeyakumar and Arjun are starring to four of his friends.

He was arrested on Saturday evening while relaxing in his home on Saturday night,one of his family members told Daily Mirror yesterday.

This family member called for his release stating that he had not done anything wrong as he had nothing to do with the senders of the SMS. The sender is reported to be a local as the message was not a roaming one which comes from overseas.

“We are sad as this happened just two days before the Deepavali and we cannot celebrate the festival today,” he said.

According to the family member of this boy, the police had said that the Intelligence Units had wanted to question the boy. He said he visited him last evening at the Wellawatte police where he was informed about the inquiry by the Intelligence Unit.

The family of this youth have also brought the matter to the notice of the Western Peoples Front (WPF) leader Mano Ganeshan.

WPF condemned the arrest stating that it is a violation of the rights of the people. WPF Frontliner Dr. A. N. Kumar Guruparan said the youth only exercised his right to communicate with his friends and did not participate in any campaign.

However, OIC Wellawatte police Mangala Dehideniya denied that they had arrested any Tamil youth.

Anonymous said...

A gang of about fifteen Sinhalese armed persons entered the house of a Tamil family in Perk rubber estate in Horana electorate Sunday evening and attacked the inmates mercilessly with clubs and knives. Other Tamil families in the area along with the affected family fled into the nearby jungle to escape further attack from the Sinhalese hoodlums. The violence comes as reports in Colombo said an upcountry Tamil minister in the Mahinda Rajapaksa government, Mr. P. Chandrasekaran was currently under presidential investigation for alleged expression of support to the recent protest campaign lauched by the Tamil Nadu government that sought to protect Tamils in Sri Lanka.

About two hundred upcountry Tamil families are residing in the rubber estate in Kalupahana division. The Sinhalese hoodlums left the place after terrorizing the entire Tamil population that they would return shortly to teach them a lesson, civil sources said.

Tamil families later went to the Horana police station and made complaints and wanted police protection. They complained that they were attacked just because they are Tamils. Those fled for refuge in the nearly jungle returned to their houses the following day, sources reported.

Violence against upcountry Tamils and arrests of youngsters by armed forces have become routine and are in spate in recent times.

'All Tamils in Sri Lanka will be eliminated' is the usual slogan of the attackers.

Anonymous said...

புதிய மலையகம் - http://puthiyamalayagam.blogspot.com/

Anonymous said...

நாம் மலையகத் தமிழர் எமது தாயகம் மலையகம்
http://nichchamam.blogspot.com/2008/06/blog-post_30.html

Anonymous said...

LTTE is not down. Please do not equate the vocies of tamil parties in india as for keeping LTTE survive.

Anyway what happened to the shot down LTTE plane?

COLOMBO (Reuters) - A suspected airstrike by the Liberation Tigers of Tamil Eelam (LTTE) rebels targeted a military base in northwestern Sri Lanka on Tuesday, military sources said.

"One LTTE aircraft was airborne and dropped bombs on Mannar area military headquarters. We are checking on reports of damage and casualties," a military official speaking on condition of anonymity told Reuters. Another official confirmed the strike.

Anonymous said...

LTTE fights against the odds. look at the sl soldiers even after indians, americans, israelies and nutty dondu support them


28 Oct 2008

Sri Lanka: Death and desertion

Sri Lankan soldiers march through flooded waters during an operation on the Mannar front.
Desertion rates soar in the Sri Lankan army, but as the military closes in on Tiger rebels, its new tactic of amnestying deserters seems to be working to some extent, Anuj Chopra reports for ISN Security Watch.

By Anuj Chopra in Kurunegala District for ISN Security Watch


--------------------------------------------------------------------------------


Just five months ago, a 29-year-old infantry soldier in the Sri Lankan army's 12 Gajaba Regiment exchanged fire with fighters from the Liberation Tigers of Tamil Eelam (LTTE) in their stronghold in the island's northern Wanni region.

"The ground was shaking and shrapnel flew everywhere," he recalls, speaking to ISN Security Watch in Kurunegala District. "Corpses lay every where. It was a bloody, bloody scene."

A bullet ricocheted off the back of his skull and got lodged in his upper shoulder.
Now as fighting intensifies in Wanni, Mahendran has received marching orders. Barely recuperated, he packs his suitcase in his mud-and-clay hut, preparing to return to the battlefield.

The Sri Lankan army claims it is now within just over a kilometer of Kilinochchi, the rebels' de-facto capital, and the island's ethnic war is now reaching a decisive showdown. As its troops push eastward into the interiors of rebel-held territory in Wanni, determined to crush the Tigers, the government is leaving no stone unturned to win this war that has simmered for a quarter century.

It is calling back wounded battle-hardened soldiers like Mahendran. And just this month, the Sri Lankan government announced it was increasing its defense budget by 6 percent from the previous year to SL Rs 177 billion (US$1.6 billion), a major chunk of which is being used to intensify army recruitment drives across the island, and even re-recruiting deserters by offering them amnesty pardons if they agree to return to the frontlines.

As fighting gets fiercer in the north, the army is whetting a large appetite for fresh recruits. It launched its fourth recruitment drive in January this year, which will continue until 31 December. So far, it has reportedly recruited 10,136 soldiers.

According to army spokesperson Brigadier Udaya Nanayakkara, the army is currently looking to recruit another 24,000 during the next few months. Already, the strength of the Sri Lankan army has swollen to 140,000 in recent years, which makes it larger than the British army in terms of personnel.

In recent months, the Sri Lankan Defense Ministry has been sending a nationwide text message imploring the country's youth to join the defense forces: "Young Patriots - come join with our armed forces and be a part of a winning team."

Answering the call

Many in an obscure, impoverished village in this district in central Sri Lanka have answered the call. The soldiers interviewed by ISN Security Watch requested that the name of the village not be published, fearing they could be tracked down and censured for talking to the press.

In this dusty, bucolic village, dirt roads remain pitted with bone-jarring potholes, water shortages are common, the power supply is erratic and the nearest hospital is a good 48 kilometers away.

Seeking a path out of the grinding poverty - and unable to scrape a living from the slivers of paddy farms in this arid region - the entrenched 25-year-old war has become a career for hundreds of this village's youth from over 400 families.

Roughly half the men of fighting age have enlisted in the army, navy, police or other security branches.

Mahendran joined the army in 2002, and with his army salary, he bought a 19-inch color TV and a mobile phone and is planning to build a concrete house with electricity and a hand water pump in his backyard.

Mahendran's elderly father, who goes by the name of Tushara, says he lives in a perpetual state of anxiety when his son is out on the frontlines. Almost every month a corpse returns from the Wanni battle field and a pall of gloom envelopes the village. In the last six months alone, seven bodies were returned.

"If there were any other job opportunities, I wouldn't let my son go to the battle field," he says.

Desertion and amnesty

In recent years, the Sri Lankan army has been plagued by a high level of desertions, a problem that has only been exacerbated as fighting intensifies, say military analysts. But in desperate need for manpower to win this war, the government has also occasionally announced amnesty periods during which times deserters can rejoin the forces without penalty. In 2007, the army, short of man power, announced an amnesty pardon for soldiers who had gone absent without leave since 2003. This amnesty apparently resulted in the reinstatement of thousands of deserters.

By the government's own admission, during the last 6 months 4,004 army deserters have reported back to their units. It launched an island-wide operation to track down and arrest its deserters who refused to re-join the army, and 2,984 soldiers and 21 officers who refused to report back have been arrested for deserting and will be tried in court. If convicted, they could serve up to three years in prison.

The army refuses to acknowledge that desertion is a serious problem.

The army commander for Jaffna peninsula in northern Sri Lanka, Major General G A Chandrasiri, told ISN Security Watch that "deserters make up a very tiny figure - only 0.5 percent of the army.

"Most of them are soldiers who went absent without leave," he adds, saying a majority of them willingly return to the frontlines once offered an amnesty pardon.

However, the re-recruitment of deserters bewilders a leading Colombo-based military analyst who requested anonymity, fearing reprisals.

"If the army is really winning this war, as it claims it is, why are so many soldiers deserting the army?" he asks. "No one would want to desert a victorious army, no?"

The army is creating a dangerous delusion of an imminent victory, he told ISN Security Watch. Adept at guerrilla tactics, the Tigers won't go down without severely bleeding the army.

Over the past year, the Tigers have suffered a series of reverses on the battlefield. Now, the Sri Lankan military is at their doorstep in the north, making rapid advances into Tiger-controlled territory. But even though the Tigers have lost vast swathes of their territory, it is speculated that the rebels still have thousands of hardened fighters and suicide attackers.

As war reaches full-throttle in Wanni - on land, air and sea - the army is bracing itself for a possible chemical attack by the Tigers as it inches toward Kilinochchi. The war is expected to get even bloodier in the last few kilometers.

There are about 200,000 civilians currently trapped in the Wanni battle zone, and aid workers who recently emerged from that region say the Tigers are expected to use them as human shields.

"If the Tigers force the civilians to flee in all directions then the army will not be able to separate 15,000 Tigers from 200,000 civilians," the military analyst says. "This may lead to a bloodbath and help the LTTE to escape to another part of Sri Lanka. I do not see the army crushing the LTTE without the loss of thousands of civilians and soldiers."

In Mahendran's hamlet, residents shelter at least six deserters. Every time the military police raids the village looking for them, they sidle out of the hamlet into hiding in the near by paddy fields, residents revealed.

"The Tigers have survived for 25 long years. It's not so easy to crush them," says Priyantha, 28, who has deserted the army twice, the first time in 2000. He rejoined in 2002, only to leave again in 2006. He says he abandoned the army for "personal reasons." His family acknowledged he "couldn't cope with the bloodshed." Currently living off farming, he leads a precarious life, always fretful of being caught by the police for abandoning the army.

"Prabhakaran is a brutal man," Priyantha says. "If he goes down, he'll take thousands of soldiers with him."

Anonymous said...

trust the following for your future, not karunanithi nor jj
http://www.tubetamil.com/view_video.php?viewkey=4efdc9d79e94c4921bb4

said...

நல்லதொரு தலைப்பிலான பதிவுக்கு நன்றி பொடியன்.

தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.
சில அனானிகளின் பின்னூட்டம் கவலையளிக்கும் அதேநேரம் யதார்த்தத்தை புரிந்துகொண்டு பேசும் வலை நண்பர்களால் அந்தக் கவலை காணாமல்போகிறது.

இப்போது இலங்கையிலுள்ள நிலைமையில் (நான் இலங்கையில் இருப்பதால்) சில விடயங்களை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.
வடக்கு கிழக்கு மலையகம் என்ற பாகுபாடு இங்கு எதற்காக வந்ததோ தெரியவில்லை. தனித் தமிழீழம் கோரும் புலிகளின் போராட்டம் நிலத்துக்கான போராட்டம் என மேலோட்டமாக கொள்ளலாம். மலையக மக்களோ வயிற்றுப்பசியைத் தீர்ப்பதற்கு அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கால்வயிறு நிரப்புவதற்கே தீனியில்லாதபோது அவர்கள் எதைப்பற்றிச் சிந்திக்கப்போகிறார்கள்? என்னைப்பொருத்தவரையில் இந்த மக்கள் ஆத்மார்த்தமாக தமிழீழம் உருவாவதை ஆதரிக்கிறார்கள் என்றே கூற முடியும்.
இந்தியாவிலிருந்து கூலித் தொழிலுக்காக அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் தம் தாய் நாடாக நேசிப்பது இந்தியாவையே.

(பின்னூட்டம் திசை மாறுவதால் இத்துடன் நிறுத்துகிறேன்)

Tamiler This Week