இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner
Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Monday, 29 June 2009

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு” திருக்குறள் - 396

“மணற்கேணி- 2009”


சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி

Feel Good

இன்றைக்கு பதிவுலக்கு வெளியே பதிவுலகைப் பற்றி இருக்கும் ஒரு மறைமுக அறைகூவல், பதிவர்கள் எனப்படும் இணைய எழுத்தாளர்களால் ஆக்கப்பூர்வமாக எதுவும் எழுத முடியுமா என்பதே. முன்னோடி எழுத்தாளர்கள் முதல் பொதுத்தள ஊடகங்கள் வரை இந்தக் கேள்வியை மறைமுகமாக கேட்டுவருகின்றன மேலும் பதிவர்களின் எழுத்துத் திறன் பற்றி பொதுமக்களிடம் பேசத் தயங்குகின்றன.அது தவிர பொதுமக்களிடையே பதிவுலகம் பற்றிய அறிமுகங்கள் இல்லாததற்கு முதன்மைக் காரணி கணினி மற்றும் இணைய இணைப்பு அனைவரிடம் இல்லை என்பதே. இவை வெளிப்படையான காரணங்கள் என்றாலும், இணையத்தில் எழுதுகிறேன், இணைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்று பிறரிடம் சொன்னால் அவர்கள் உடனடியாக ஐஆர்சி எனப்படும் இணைய உரையாடியில் வெட்டிப் பேச்சு பேசுவரோ என்றே நினைக்கிறார்கள்.

இணையத்தில் மிகப் பெரிய அளவிலான கருத்தாய்வுகள், விவாதங்கள் நடந்து வருவதும் வெளியில் பலருக்கும் தெரியவில்லை. இணையத்தில் வெளியிடப் பட்டக் கட்டுரைகள் இவை என்று பொதுமக்கள் முன்பு அத்தகைய ஆக்கங்களைக் கொண்டு செல்லும் முயற்சி பெரிய அளவில் மேற்கொள்ளப் படவில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. பதிவுலகம் பற்றி பொதுமக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைத் தவிர இது குறையன்று.

பதிவுலகில் பலரும் மிகவும் சிறப்பாக எழுதுகிறார்கள், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்கள், அவர்களின் எழுத்துகள் பொதுமக்கள் முன் கொண்டு செல்ல பொதுத்தள ஊடகங்களையே நாட வேண்டி இருக்கிறது, அத்தகைய ஊடகங்கள் வெளியிட்டால் அது தன் எழுத்துக்கான பரிசு என்று நினைத்து மகிழும் நிலையில் பதிவர்கள் இருக்கிறோம். ஒருவரது எழுத்து பரவலாக ஏற்கப் படுவது ஊடகங்களைக் சார்ந்தது அல்ல, அது முழுக்க முழுக்க ஒருவரின் எழுத்தின், கருத்தின், எழுத்தாழத்தின் தன்மையைச் சார்ந்தது என்பதை நம்மால் உறுதி செய்ய முடியும். அன்றாடம் எழுதுகிறோம், ஆழமான கட்டுரைகளை நம்மாலும் எழுத முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் நாம் சிறந்த எழுத்தாளர் என்கிற உண்மையை நாமே உணர்வோம். அத்தகைய நல்ல வாய்ப்புகளை சிங்கைப் பதிவர்களும், தமிழ்வெளி திரட்டியும் ஏற்படுத்திக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறது.

மணற்கேணி 2009

கிணறு வேண்டும் என எண்ணிய பிறகு வெறும் மணல் தான், ஆழமாக தோண்ட தோண்ட அதனுள் நீர் இருப்பது, சுரப்பதும் நமக்கு தெரியவருகிறது. நம் எழுத்துக்கள் வெறும் எண்ணங்களாலும், நடப்புகளாலும் எழுதப்படுவதைவிட ஒரு குறிக்கோள் அதாவது ஒரு தலைப்பின் கீழ் எண்ணங்களைக் குவித்து தகவல்களைத் திரட்டி சிறப்பான ஆக்கமாக மாற்றும் போது அது ஒரு படைப்பாகப் போற்றப்படும். பதிவர்களை ஊக்குவித்து, பரிசளித்து, பதிவர்களை மற்றும் ஒரு பரிணாம வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல, சிங்கைப் பதிவர்கள் எடுக்கும் சிறு முயற்சியின் முதல் வித்து மணற்கேணி - 2009.

இந்த ஆண்டுக்கான மணற்கேணி - 2009 போட்டி சூலை 01, 2009 துவங்குகிறது. பதிவர்கள் தங்கள் கருத்தாக்கங்களை போட்டிப் பிரிவுகளுக்கான மின்னஞ்சல் முகவரிகளுக்கு ஆகச்டு 15, 2009 23:59:59 (தமிழக நேரம்)க்குள் அனுப்ப வேண்டும். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். பதிவு வைத்திருப்பது கட்டாயம் இல்லை என்றாலும் இட்டீடு(விவாதம்) வேண்டி பதிவிடுவதை ஊக்குவிக்க விரும்புகிறோம். இயன்ற வரை தனித்தமிழில் ஆக்கங்களைத் தர முயலுங்கள். முனைப்பிற்கான முயற்சி இது. போட்டி ஆரம்பமாகும் தினத்திற்கு முன்போ அல்லது போட்டி கடைசி தினத்திற்கு பின்போ வரும் கருத்தாய்வுகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ள இயலாது, போட்டிக்கு அனுப்பும் கடைசி நாள் வரை போட்டி கருத்தாய்வு வலைப்பதிவுகளிலே அல்லது எந்த விதத்திலும் எங்கேயும் வெளியாகியிருக்க கூடாது, போட்டி விதிமுறைகள் சூலை 01,2009 அன்று வெளியிடப்படும்...

கருத்தாய்வு போட்டி மூன்று பிரிவுகளில் நடைபெறுகிறது, ஒவ்வொரு பிரிவிலும் பல தலைப்புகளின் கீழ் நடைபெறுகிறது, இது தொடர்பான விவரங்களை போட்டி தலைப்புகள் என்ற சுட்டியின் கீழ் காணலாம். ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒருவர் என மொத்தம் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்து ஒரு கிழமை(வாரம்) தங்கி சுற்றுபயணம் செய்யலாம்

இணைப்பு தர

மணற்கேணி 2009 பற்றிய விளம்பரத்தை உங்கள் தளங்களில் இட்டு இம்முயற்சியை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்

போட்டி அறிவிப்பை உங்கள் தளத்தில் பதிய இந்த வலைப்பூவின் மேல்பகுதியில் வலது ஓரத்தில் இருக்கும் “ add மணற்கேணி - 2009 widget" என்ற பொத்தானை அமுக்கவும். தானாக உங்கள் தளத்தில் இணைந்துக் கொள்ளும்.


ஹிஹி.. இந்தப் பதிவுக்கும் தமிழ்மணம்ல ஓட்டுப் போடுவீங்களாம்.. :)

Wednesday, 10 June 2009

சாமி பாட்டுக் கேட்கலாம் வாங்க


பள்ளிப்படிப்பு முடியும் வரை தினமும் வீட்டில் இருந்து தான் சென்று வருவேன். கல்லூரியில் சேர்ந்த பின் தான் ஹாஸ்டல் வாசம். பள்ளிப் படிப்பு முடியும் வரை மார்கழி மாதம் வந்தாலே கடும் எரிச்சலாக இருக்கும். அந்த மாதம் முடியும் வரை காலையில் 5 மணிக்கு மேல் தூங்க முடியாது. கடுமையான குளிர் வேற இருக்கும். அதையும் தாண்டி பெரிய கம்பளி போர்த்தி ரொம்ப நேரம் தூங்கலாம். ஆனால் மார்கழி மாதம் மட்டும் அதெல்லாம் ஆகாது. அந்த மாதம் முழுதும் மாரியம்மன் கோவிலுக்கு போய் பொங்கல் வைப்பார்கள். காலை சிலர், மாலை சிலர் என முறை வைத்து பொங்கல் வைப்பார்கள். அந்த மாதம் முடியும் போது அனைவரும் பொங்கல் வைத்துவிடுவார்கள்.

அதனால் தினமும் காலை 4 அல்லது 5 மணிக்கெல்லாம் கோவில் கோபுரத்தில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கி அலற ஆரம்பித்துவிடும். சுமார் 5 கிமீ வரை கேட்குமளவுக்குகேட்கும்படி வைத்துவிடுவார்கள். அதுல சினிமா பாடல் போட மாட்டாங்க. மாட்டாங்க என்ன ? மாட்டோம்.. காலைல ரேடியோ செட்டுக்காரர் ஆன் பண்ணி விட்ருவார். அப்புறம் எங்க இஷ்டத்துக்கு பாட்டுப் போடுவோம். அந்த கேசட் பெட்டியில சாமி பாட்டு தவிர வேற ஒன்னும் இருக்காது. அப்போ எல்லாம் சாமி பாட்டுக் கேக்கறதுல விருப்பம் இருக்காதுன்னாலும் வேற வழி இல்ல. கேட்டுத் தான் ஆகனும். அவ்வப்போது பாடலை நிறுத்திவிட்டு மைக் ஆன் பண்ணி அன்று பொங்கல் வைக்க வேண்டியவர்களின் பெயரை சொல்லி சீக்கிறம் வர வேண்டும் என்றும் அன்று மாலை மற்றும் அடுத்த நாள் பொங்கல் வைக்கவேண்டியவர்கள் பெயரை சொல்லி அறிவிப்பும் செய்வோம். இதுக்கு பெரிய போட்டியே இருக்கும். ஹ்ம்ம்.. அதெல்லாம் இப்போ போயே போச்.. இப்போ எல்லாம் மார்கழி மாதமே யாருக்கும் நினைவி இருக்குதான்னு தெரியலை.
மார்கழி மாதம் மட்டும் இல்லை.. கோவில் திருவிழா எப்போ நடந்தாலும் இதே கதை தான். ஆகவே அந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு வரிக்கு வரி நினைவில் இருக்கும். சினிமா பாடல் கூட 4 வரிகளுக்கு மேல் நினைவில் இருக்காது. விருப்பம் இல்லாமல் கேடிருந்தாலும் பின்னாளில் சாமி பாடல்கள் எல்லாம் ரொம்ப பிடித்துப் போய்விட்டது. சாமி கும்பிடுவதை நிறுத்திய பின்னும் கூட ரசிக்க முடிந்தது.

எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் மாரியம்மன் தொடர்பான பாடல்கள், டிஎம்எஸ்-ன் முருகன் பாடல்கள் மற்றும் ஐயப்பன் பாடல்கள் பெரும்பாலானவை வரிக்கு வரி பாட?! தெரியும். மார்கழி மாதம் பற்றி எழுத ஆரம்பித்தாம் 10 பதிவு எழுதலாம். காலையில் வாசல் பெருக்கி, சாணித் தண்ணீர் தெளித்து வெங்கசெங்கல் பொடியில் கோலம் போட்டு.........

இப்போ மேட்டர் அதுவல்லை..சமீபத்தில் ஒரு பதிவர் ஒரு பக்தி பதிவு எழுதி இருந்தார். அவர் எழுதும் அனைத்தும் பக்திமயமானது தான். பெயர் மறந்துவிட்டது. ராமலக்‌ஷ்மி அககாவுக்கு தெரியும். அவர் பதிவில் இந்தப் பாடல்கள் பற்றி படித்ததும் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். எனக்கு இந்த மாதிரி பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என்றும் அதற்கான சுட்டிகள் இருந்தால் கொடுங்கள் என்றும் கேட்டிருந்தேன். பின் நானும் thiraipaadal , imeem , last.fm , vodpod என எனக்குத் தெரிந்த தளங்களில் எல்லாம் தேடினேன். கூகுளிட்டும் பார்த்தேன். ஒன்னும் கிடைக்கலை. கடுப்பாகி விட்டுட்டேன்.

இதை எப்படியோ தெரிந்துக் கொண்ட என் பேவரிட் இசைத் தளமான thiraipaadal புதிதாக bhaktipaadal என்று ஒரு தளம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஏராளமான பக்திப் பாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன. திரைபாடல் தளத்தில் ரொம்ப பிடித்த விஷயமே அவர்கள் வகைப்படுத்தும் விதம் தான். அற்புதமாக இருக்கும். இசையும் தெளிவாகவும் தரமாகவும் இருக்கும். பக்திபாடல் தளத்தின் சென்றதும் ஈஸ்வரி அவர்கள் மற்றும் டி எம் எஸ் பாடல்களைத் தான் தான் கேட்டேன். என்ன ஆச்சர்யம்...!.. சிறு வயதில் கேட்டிருந்தாலும் அனைத்து வரிகளும் இன்னும் நினைவில் இருக்கு. கூடவே பாட?! முடிகிறது. அந்த அளவு மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. :)

டிஸ்கி: என்னை யாருக் காதலிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக காதலை வெறுத்தாலும் காதல் பாடல்கள் கேட்கப் பிடிக்காமலா இருக்கு? அதே போல் தான் இதுவும்.. கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் சாமி பாடல்கள் ரொம்பவே பிடிக்கும். கந்தசஷ்டிகவசத்துக்கு நான் அடிமை. :)

சாமி பாட்டு கேட்கும் ஆசை உள்ளவர்களுக்கு,
பக்திபாடல் இசைத்தளம் Baktipaadal.com

Saturday, 30 May 2009

செல்வேந்திரனுக்காக ஒரு பதிவு

தலைப்பைப் பார்த்து டரியல் ஆனவர்கள் மன்னிக்க.. :)

நம் நண்பர் பதிவர் கம் இலக்கியவாதி செல்வேந்திரன் , சிறப்பு விருந்தினராக ( விவாதிக்கும் குழுவில் ஒருவராக அல்ல ) பங்கு பெற்ற “ நீயா நானா” நிகழ்ச்சி நாளை (31.05.2009 - ஞாயிற்றுக்கிழமை ) இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. அனைவரும் தவறாமல் பார்த்து பாக்கியம் பெருவீர்களாக..

வாழ்த்துகள் செலிப்ரிட்டி செல்வேந்திரன்.. மேலும் பல மேடைகளில் மிளிர வாழ்த்துகள்..

வடகரை வேலன் அண்ணாச்சி, இணையத்தில் புது வீடு வாங்கி இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள்.

Saturday, 16 May 2009

தத்துபித்துவம் - 1 + 201வது பதிவு

இப்போது எல்லாம் டிவி பார்ப்பது என்பதே ஒரு கொடுமையான சமாச்சாரமா ஆய்டிச்சி. எல்லா சேனல்களைலும் ஒரே மாதிரி நிகழ்ச்சிகள். முன்னாடி எல்லாம் எல்லா சேனல்களிலும் அழுகாச்சி சீரியல்களா ஓடிட்டு இருக்கும். அந்த சமயங்கள்ல விஜய் டிவியில சில புதுமையான நிகழ்ச்சிகளும் ஜாலியான தொடர்களும் ஒளிபரப்ப ஆரம்பிச்சாங்க. அதனால டிவி பார்க்க உட்கார்ந்தா விஜய் டிவி தான் பார்ப்பேன். இப்போ எல்லா சேனல்களிலும் ஒரே மாதிர் ரியாலிட்டி ஷோக்கள் தான் வருது. எந்த சேனல் திருப்பினாலும் யாராவ்து ஆடிட்டே இருக்காங்க.. யாராவது கெமிஸ்டி , பிசிக்ஸ் எல்லாம் நல்லா வொர்க் அவுட் ஆச்சி, கோ ஆர்டினேஷன் நல்லா இல்ல.. டமிங் மிஸ் பண்ணிட்டிங்க , எனர்ஜி லெவல் கம்மியா இருந்தது ( எப்டி தான் அளக்கறாங்களோ ) என்று அரைச்ச மாவையே அரைக்கிறாங்க.. இல்லைனா எதாவது அற்ப காரணங்களுக்கு சண்டைப் போடறாங்க.. அதையுமாய்யா ஒளிபரப்புவிங்க?. இந்த ஆட்டம் பாட்டம் ஆளுங்க டார்ச்சர் தாங்கறதில்லை.. கொய்யால.. ஒன்னுக்கடிக்கிறதைத் தவிர வேற ஒன்னுவிடாம ஒளிபரப்பறாங்க.

அது இல்லைனா யாராவது பாடிட்டே இருக்காங்க. அங்கயும் யாராவது பல்லவி, ச்சரணம், டெம்போ என்று நமக்கு புரியாத வார்த்தைகளா பேசறாங்க. சும்மா சும்மா டென்ஷன் ஆகறாங்க. போட்டியில கலந்துக்கிறவங்க , ஒரு எபிசோடுக்கு யாராவது ஒருத்தராவது அழறாங்க.. போட்டின்னா தோல்வி சகஜம் தானே.. சும்மா இருந்து தோற்பதில்லையே.. போட்டி போட்டு உங்களை விட திறமைசாலிகிட்ட தானே தோல்வி வருது.. இதுக்கு பெருமை படறதை விட்டு அழுவாங்களா யாராச்சும்? இது கூட பரவால்ல.. இவங்க வீட்ல இருந்து அப்பா அம்மா தாத்தா பாட்டி அத்தை மாமா எல்லாரும் வந்திருப்பாங்க.. அவங்களும் கூடவே அழுவாங்க.. அழுதுகிட்டே திடீர் கருத்து கந்தசாமிகளாவும் ஆய்டுவாங்க.

இவங்களை எல்லாம் தாண்டி வந்தா இந்த காமெடி ஷோ பன்றவங்க இம்சை.. ஸ்டேண்டிங் காமெடி பன்றோம்னு சொல்லிட்டு மொபைல் கண்டுபிடிச்ச காலத்துல வந்த SMS எல்லாம் மனப்பாடம் பண்ணி ஒப்பிச்சிட்டு இருக்காங்க.. இல்லைனா மிமிக்ரி என்ற பெயரில் சினிமா நடிகர்கள் குரல்களை எல்லாம் கொத்து புரோட்டா போடறாங்க.. சிலர் பன்றது கொஞ்சம் ரசிக்கிற மாதிரியும் இருக்கும். ஆனால் பெரும்பாலான மிமிக்ரிகள் கடுப்பு தான். வேற கான்செப்டே இல்லை போல. அங்க இருக்கிற நடுவர்கள் இருக்காங்களே.. யப்பா.. தாங்க முடியலை..

சரி, செய்தி பார்க்கலாம்னு சன் செய்தி, கலைஞர் செய்தி திருப்பினா, அவங்க கொடுமை அதுக்கு மேல.. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை வேஷ்டியை அவுத்துப் போட்டு ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சின்னு சொல்வாங்களே அந்த மாதிரி தான். காலைல பதிவு பண்ணி வச்ச செய்தியையே ராத்திரி வரைக்கும் ஒளிபரப்பறாங்க.

இவங்கதான் இப்டி. எதுனா இங்கிலீசு சேனல் பாக்கலாம்ன்னு திருப்பினா இந்த அரசியல் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் காட்டுக் கத்து கத்திட்டு இருக்காங்க.. தேர்தல் முடிஞ்சாலும் கொஞ்ச நாளைக்கு இந்த இம்சை இருக்கும்.. எல்லா சேனல்களிலுமே ஒரே விஷயத்தை தான் திரும்ப திரும்ப பேசிட்டு இருக்காங்க.. அதுலையும் இந்த நிகழ்ச்சியைத் தொகுக்கிறவங்க டார்ச்சர் அதுக்கு மேல. ஐபிஎன்னோட சகரிகா கோஸ், எண்டிடிவி பார்க்கா தத் 2 பேரும் கொஞ்சம் பரவால்ல.. தமிழ்நாட்டுக்கு ஓரளவு முக்கியத்துவம் தராங்களேன்னு நெனைச்சி டைம்ஸ்நவ் பார்த்து தொலைஞ்சா அவ்ளோ தான். விவாதம்ன்னு சொல்லிட்டு இந்த அன்னா கோஸ்வாமி அடிக்கிற லூட்டிக்கு அளவே இருக்காது.. இவர் கரன் தாபரோட வள வளா கொழ கொழா வெர்ஷன். பேசறவங்களை மடக்கறதா நினைச்சி மணிக்கணக்குல அவர் மட்டுமே பேசுவார். விவாதத்துக்கு வந்த அரசியல்வாதிங்க எல்லாம் இவர் வாயைத் தான் பரிதாபமா பார்த்துட்டி இருப்பாங்க.. நம்ம சுப்பைய்யா வாத்தியாருக்கு சொந்தக்காரர் போல...

என்னக் கர்மம் தாண்டா பன்றதுன்னு அன்னைக்கு ஒரு நாள் விஜய் டிவியை பார்த்தேன்.. அதுல எதோ ஒரு FM ஸ்டேஷன்ல அதோட ஆர்ஜேவும் பாடகர் ஸ்ரீனிவாசும் இங்கிலிஷ்ல( மட்டுமே) பேசிட்டு இருந்ததை ஒளிபரப்பினாங்க..

கடுப்பாகி ஆன்லைன் வந்து நம்ம கானா பிரபாகிட்ட பேசிட்டு இருந்தேன்..அவர் ஆஸ்திரேலிய தமிழ் வானொலியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர். அப்போ அவர் சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது. அவர்கள் வானொலியில் மருந்துக்குக் கூட ஆங்கிலம் பாவிப்பது இல்லையாம். ஒரு மருத்துவ நிகழ்ச்சி தவிர. அது சரி தான்.. அன்னாசினை - மூத்தசகோதரபாவம்னா சொல்ல முடியும்?. அது 24 மணி நேர தமிழ் ஒலிபரப்பு. அந்த வானொலியுடன் தொடர்புள்ள அனைவருக்கும் பாராட்டுகள்.

ஆனால் நம்ம ஊர் பன்பலைகளில் பெருமளவு ஆங்கிலம் தான். இதற்கு கானா அடிச்ச கமெண்ட் “ எதுவுமே பக்கத்துல இருக்கும் போது அதோட மதிப்பு நமக்குத் தெரியாது பாஸ்”... ஆமால்ல..

ஹிஹி.. இது என்னோட 201வது பதிவு.. :-)
இந்த வலைப்பூ ஆரம்பித்து மிகச் சரியாக 25 மாதங்கள் ஆகிறது. :-)
உங்கள் பொன்னான ஆதரவுக்கு நன்றி..நன்றி.. நன்றி.. :))

Monday, 20 April 2009

Virus Found

கோவையில் நடந்த விஜய் டிவியின் இசைமழை நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அண்ணாச்சி தன் புது போனை என்னிடம் கொடுக்கிறார். சமீபத்தில் வாங்கியது.

“ அண்ணாச்சி.. போன் சும்மா கும்முனு இருக்கு.. சார்ஜ் ரொம்ப நேரம் இருக்குதா?”
அதற்காகத் தான் அதை வாங்கப் போவதாக சொல்லி இருந்தார்.

“ ஹ்ம்ம்.. அதெல்லாம் ஓகே.. அதுக்காக தான இதை வாங்கறதா சொன்னேன்”

“அட.. ஸ்க்ரீன் கலக்குதே.. இந்த கடிகாரம் ரொம்ப அழகா இருக்கு அண்ணாச்சி.. என் போன்ல இல்ல பாருங்க.. :( “

“ இது தேர்ட் பார்ட்டி ப்ரோக்ராம்பா.. ”

அருகில் இருந்த வெயிலானை காட்டி
“ இவர்கிட்ட இருந்து தான் எனக்கு கெடைச்சது.. இரு உனக்கும் அனுப்பறேன்..”

“ ஓ.. அப்டியா.. உடனே அனுப்புங்க.. ரொம்ப நல்லா இருக்கு”

“உன்னோட போன் 6200வா?”

“ இல்லை அண்ணாச்சி.. 6233”

“ அட.. ப்ளூ டூத் ஆன் பண்ணுப்பா.. அப்போ தான் அனுப்ப முடியும்”

“ அதெல்லாம் அப்போவே ஆன் பண்ணிட்டேன் அண்ணாச்சி”

“ உன்னோட போன் பேர் இதுல தெரியலையே”

என் போன் பெயர் அதில் இருப்பதை நான் முன்பே பார்த்துவிட்டேன். ஆனால் எதுவும் அவரிடம் சொல்லவில்லை. அண்ணாச்சி திரும்பவும் முயற்சிக்கிறார். திரும்ப திரும்ப முயற்ச்சிக்கிறார்.

“ அட போய்யா.. இதுல உன் போன் பேர் வரலை.. “

இதுக்கு மேல விட்டா அந்த ப்ரோக்ராம் நமக்கு கிடைக்காம போய்டும்னு நினைச்சி...

அவர் போனில் தெரிந்த ஒரு வாசகத்தை காட்டி “ ஹிஹி.. அண்ணாச்சி அதான் என்னோட போன்.. தைரியமாக அனுப்புங்க..:)))) “

“அடப்பாவி... #$%$#%^&%^%%$#$%%#.. நான் கூட என்னோட போன்ல வைரஸ் இருக்கும் போல.. இப்போ ஆஃப் பண்ணி பாக்கெட்ல போட்டு நாளைக்கு அந்த மொபைல் கடைக்கு போய் , என்னய்யா புது மொபைல்ல வைரஸ் இருக்குன்னு சண்டை போட்டிருப்பேன். வாங்கி ஒரு வாரம் கூட ஆகலை. அதுக்குள்ள வைரஸ் வந்துடிச்சேன்னு பயந்து போய்ட்டேன்.. ஆளைபாரு..”

அருகில் இதை கேட்டுக் கொண்டிருந்த சுரேகா சிரித்து முடிப்பதற்கு நீண்ட நேரம் ஆச்சி.. :)

என் மொபைல் ப்ளூ டூத் பெயர் : Virus Found என்று வைத்திருக்கிறேன்.
அவ்வப்போது பயணங்களில் இருக்கும் போது அருகில் ப்ளூடூத் மூலம் யாராவது ரொம்ப அலும்பு பண்ணிக் கொண்டிருந்தால் என் மொபைலில் ப்ளூடூத் ஆன் பண்ணிவிடுவேன். அடுத்து நடப்பதை பார்க்க ரசிக்க ஆயிரம் ஜென்மம் வேண்டும்.. :))

அஸ்கி புஸ்கி : இது ஒரு பழிவாங்கும் பதிவு அல்ல. :)

Wednesday, 18 February 2009

தமிழ்மணம் Vs தமிழிஷ்

சமீக காலங்களில் தமிழிஷின் வளர்ச்சி நன்றாகவே தெரிகிறது. இந்தப் பதிவு தமிழிஷ், தமிழ்மணத்தை விட அதிக வளர்ச்சி பெற்றது என்பதை காட்ட அல்ல. என் வலைப்பூவுக்கு தமிழ்மணத்தை காட்டிலும் தமிழிஷில் இருந்தே அதிக நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை காட்ட மட்டுமே. கடந்த பதிவை எழுதிய பின் வந்த நண்பர்களின் விவரங்களை கூகுள் அனலிடிக்சில் பார்த்த போது பெரிய மாறுதல் தெரிந்தது. பிப்ரவரி 17ம் தேதி வந்தவர்களில் 53 பேர் தமிழிஷில் இருந்தும் நேரடியாக 20 பேரும் வந்திருக்கிறார்கள். 11 பேர் மட்டுமே தமிழ்மணத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்.

தமிழ்மணத்தின் வாசகர் பரிந்துரையில் உள்ள தவறான முறையால் , அதில் சிலர் மட்டுமே இடம் பிடிக்கிறார்கள். டைனமிக் ஐபி வசதியை பயன்படுத்தி தாங்களே பல வாக்குகளை பதிவு செய்து அவர்களின் பதிவுகள் மட்டுமே இருப்பது போல் பார்த்துக் கொள்கிறார்கள். அதில் பெரும்பாலும் ஒரே விஷயத்தை பற்றியே எழுதுவதால் தமிழ்மணம் வருபவர்களுக்கு மிகச் சிறந்த இடுகைகளை படிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

சூடான இடுகைகளில் இருந்து சிலரை நீக்கியதற்கு பதில் வாசகர் பரிந்துரையில் இருந்து சிலரை நீக்கலாம். சூடான இடுகை என்பது படிப்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே அமையுமென்று நினைக்கிறேன். அதில் கள்ள ஓட்டு எல்லாம் செல்லாது. தமிழ்மணம் விழித்துக் கொண்டால் மட்டுமே வாசகர்களை தக்கவைத்துக் கொள்ளும். விழித்துக் கொள்வார்களா? அல்லது விழித்து என் பதிவைக் கொல்வார்களா? :)

Posted By..
Gandhi...SS

Wednesday, 21 January 2009

தலைக்கவசம் போட வைத்த 25 ரூபாய்

நான் ஈரோட்டில் இருந்த 4 வருடங்களும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தான் இருசக்கர வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தேன். பிறகு கோவையில் அலுவலகம் தொடங்க திட்ட்மிட்டதும், கோவையில் நம்ம தில்லாலங்கடி வேலை செல்லாது என்று ஓட்டுநர் உரிமம் பெற்றேன். நான் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது ஒரு போக்குவரத்து/போக்காவரத்து காவலரும் என்னை விசாரித்ததில்லை. இரவில் திரைப் படம் பார்க்க செல்வது, நண்பர்கள் வந்தால் அவர்களை அழைத்துவர செல்வது, தொடர்வண்டி நிலையம் செல்வது என முக்கிய்மான எல்லா இடங்களுக்கும் அடிக்கடி சென்றிருக்கிறென். ஆனால் என்னிடம் ஓட்டுநர் உரிமமோ வாகனத்திற்கான சான்றிதல்களோ எந்த அலுவலரும் விசாரித்ததில்லை. பல சமயங்களில் நான் செல்லும் சாலைகளில் இரவில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் என்னை யாரும் நிறுத்தியதில்லை. இன்றுவரை அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பார்ப்பதற்கு மிக நாகரிகமானவன் போல் கூட இருக்க மாட்டேன். ஆனால் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒரு வாரத்திற்குள் இரவு நேரத்தில் பேருந்து நிலையம் அருகில் ஒரு காவலர் என் வாகனத்தை நிறுத்தினார். அதான் உரிமம் இருக்கே. :).. நல்ல வேளை அவர் வாகனத்திற்கான சான்றிதல்கள் எதுவும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் சங்கு தான். :)

நாங்கள் கோவையில் அலுவலகம் தொடங்க ஆரம்பித்த சமயம் தமிழக அரசு , அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் உபயோகிக்க வேண்டும் என உத்தரவு போட்டது. ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னாடி அமர்ந்து வருபவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது அரசாணை. அப்போது நான் தினமும் ஈரோட்டிலிருந்து கோவை வந்து அலுவலகம் மற்றும் சேமிப்புக் கிடங்கிற்கான இடம் தேர்வு செய்ய ஒரு இடைத்தரகர் மற்றும் என் நண்பர் ஒருவருடன் இரு சகக்ர வாகணத்தில் சென்று சரியான இடம் பார்த்துக் கொண்டிருந்தேன். வாகனத்தில் பின்னாடி அமர்பவரும் தலைக்கவசம் போட வேண்டும் என்பதால் நான் புது இருசக்கர வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கி விட்டேன். தினமும் அதை ஈரோட்டிலிருந்து பேருந்தில் வரும் போது கொண்டுவந்து கோவையில் வாகனத்தில் செல்லும் போது உபயோகிப்பேன்.

பிறகு சில நாட்களிலேயே அந்த சட்டம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஆகவே நான் தலைக்கவசம் பயன்படுத்துவதையும் தவிர்த்துவிட்டேன். பிறகு கோவை வந்து புதிய வாகனம் வாங்கும் போது அவர்கள் கொடுத்த தலைக்கவசமும் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நான் ஆரம்பத்தில் வாங்கியதை வைத்திருந்தேன். ஆனால் அதை அணிந்து வாகனம் ஓட்டியதே இல்லை. வாகனம் வாங்கும் முன்பே தலைக்கவசம் வாங்கிவன் நான் ஒருவனாகத் தான் இருப்பேன்.

சமீபத்தில் திருப்பூர் சென்றுவிட்டு என் இருசக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தேன். அப்போது பின்னாடி அமர்ந்திருந்த எங்கள் விற்பனை அலுவலர் தான் வண்டி ஓட்டுவதாக கூறினார். சரி.. பாசக்கார பய.. ரொம்ப தூரம் வாகனம் ஓட்டியதில் நான் களைப்பாக இருப்பேன் என்று எண்ணி கேட்கிறார் போலும் என்று நினைத்து அவரை ஓட்ட சொன்னேன். கொஞ்ச தூரம் வந்ததும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிரில் மூன்று போக்குவரத்துக் காவலர்கள் எங்களை நிற்க சொன்னார்கள். எப்போதுமே நம்ம பாசக்கார பயலுக நேரம் காலம் தெரியாமல் சொதப்புவதில் நம்மையே மிஞ்சுபவர்களாச்சே என்று நினைத்துக் கொண்டு, வாகனத்தில் இருந்து இறங்குவதற்கு முன் அவரிடம் உரிமம் உள்ளதா என விசாரித்தேன். நான் நினைத்த மாதிரியே நடந்தது. உரிமத்தை தொலைத்துவிட்டாராம். அதான பார்த்தேன். சரி கொஞ்சம் முன்னாடி நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு அவரை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு வாகனத்தில் இருந்த சான்றிதல்களை எல்லாம் எடுத்துக் கொண்டு நான் காவல் அதிகாரிகள் அருகில் சென்றேன். எங்களை நிறுத்திய அதிகாரி மற்றவர்களை ஓரங்கட்டுவதில் மும்முரமாய் இருந்தது எனக்கு வசதியாய் இருந்தது. ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த அதிகாரி அருகில் சென்று பவ்யமாய் எல்லா ஆவணங்களியும் கொடுத்தேன். பதிவு சான்றிதல், வாகன காப்பீட்டுச் சான்றிதல் எலலாம் சரியாக இருந்தது. அடுத்து?.. வேறென்ன.. ஓட்டுநர் உரிமம் இருக்கா என்று வினவினார். ஹிஹி.. ஓட்டியவ்ரிடம் தானே இல்லை.. உட்கார்ந்து வந்த என்னிடம் இருக்கே.. ஒருவழியாய் அன்று தில்லாலங்கடி வேலை செய்து தப்பித்தேன். அது வரை நான் அபராதம் என்று ஒரு பைசாவும் கட்டியதில்லை.

இதெல்லாம் பழங்கதை.. இப்போ கோவை மாநகர காவல்துறை ஆணையர் மஹாலி அவர்கள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தே ஆக வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார். அப்படியும் நான் அதை பின்பற்றாமல் தான் சுற்றிக் கொண்டிருந்தேன். சில தினங்களுக்கு முன் இரவு ஒரு பாசக்கார முகவர் அவராகவே அழைத்தார் காசோலை தருவதற்கு. அது கனவா நனவா என்ற ஆச்சர்யத்தில் சென்ற எனக்கு நிஜமாகவே காசோலை அளித்து திக்குமுக்காட வைத்தார். அந்த மிதப்பிலேயே வந்துக் கொண்டிருந்த என்னை லட்சுமி ஆலைகள் தாண்டி ஒரு காவல் துறை அக்கா நிறுத்தவிட்டார். நான் நல்ல பிள்ளையாய் வாகன ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அருகில் போய் நின்றேன். அதற்கு அந்த அக்கா “ அதெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் தம்பி. தலைக்கவசம் எங்கே?” என வினவினார். அங்க அக்காவை பார்ப்பதற்கு மிக நல்லவராகவே தெரிந்தார். இத்தனை ஆண்டுகால சந்தைப் படுத்துதல் துறையில் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரே சிறப்பம்சம் இது தான். யாராக இருந்தாலும் முகம் பார்த்ததுமே அவர் எப்படிப் பட்டவராக இருபபார் என ஓரளவுக்கு கணித்து விட முடிகிறது. ஆஹா.. மாட்டிக்கிட்டயே காந்தி.. என்று நினைத்த வாறே “ அக்கா.. மன்னித்துக் கொள்ளுங்கள் அக்கா. காலையில் இருந்து வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறேன். அப்போது தலைக்கவசத்துடன் தானக்கா ஓட்டினேன். இப்போது வீட்டிலிருந்து ஒரு நண்பரை பார்ப்பதற்காக வந்தேன். இப்போது தான் தலைக்கவசத்தை வீட்டில் வைத்துவிட்டு வந்தேன். இதுவரை நான் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதே இல்லை. இந்த ஒருமுறை மட்டும் விட்டுவிடுங்கள் அக்கா. இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்ட மாட்டேன்..” என்று கூச்சநாச்சமே இல்லாமல் பொய் சொன்னேன். நிச்சயம் அபராதம் கட்டியாக வேண்டும் என்றாலும் கட்டிவிடுகிறேன். தவறு என்னோடது தானே என்று மிக நல்லவன் போல் நன்றாகவே நடித்தேன். அவரும் அதை நம்பியது போல் தான் தெரிந்தது. இன்னொருவரும் இதே போல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அபராதம் கட்ட 100 ரூபாய் இல்லை என்று அளந்து விட்டுக் கொண்டிருந்தார். பிறகு அந்த அக்கா என்னைப் பார்த்து “ பாருங்க இவரிடம் 100 ரூபாய் இல்லையாம். கோவைக்காரங்க சட்டைப் பையில் 100 ரூபாய் கூட இல்லாமல் சுற்றுவார்களாம். இதை நான் நம்பனுமாம்” என்று சொனனார். சரி இருங்க என்று சொல்லிவிட்டு மற்ற எல்லாரிடமும் அபராதம் வசூலித்து தவறாமல அதற்கான ரசீதையும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆஹா.. நம்மை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது. விட்டுவிடுவார் போல் இருக்கே என்று நினைத்து ஓரமாக நின்றுக் கொண்டேன். அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு அபராதம் போட்டு ரசீதும் எழுதிவிட்டார்கள் அந்த அக்கா. ஆனால் அந்த தோழரோ 50 ரூபாய் தான் இருக்கிறது. 100 ரூபாய் இல்லை என்று நிஜமோ பொய்யோ சொல்லிக் கொண்டிருந்தார். அவர் புலம்பலில் கடுப்பான அக்கா வாகன சாவியை கொடுத்துவிட்டு செல்லுங்கள். பணம் கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்து செல்லுங்கள் என்று கோபமாக சொல்லிவிட்டார். இன்னும் சற்று நேரம் இருந்தால் நமக்கும் ஆப்பு அடிப்பார் போல என்று நினைத்து “ அக்கா.. நான் வேண்டுமானால் அபராதம் செலுத்திவிடுகிறேன்.. நேரம் ஆகிறது “ என்று சொன்னேன். உடனே இன்னொரு நண்பரையும் என்னையும் பார்த்து அந்த 50 ரூபாய் தோழரை காண்பித்து இவருக்கு ஆளுக்கு 25 ரூபாய் கொடுத்துவிட்டு செல்லுங்கள். நான் ரசீது எழுதிவிட்டேன். இவர் 50 ரூபாய் மட்டும் கொடுத்தால் மீதம் 50 ரூபாய் நான் தான் கட்ட வேண்டும்.” என்றார். நான் 25 ரூபாயை அக்காவிடம் கொடுத்தேன் . ஆனால் அவர் அதை அந்தத் தோழரிடம் கொடுக்க சொன்னார். ஆஹா .. காவல் துறையில் இவ்வளவு நல்ல அக்காவா என்று நினைத்துக் கொண்டு அந்த தோழரிடம் 25 ரூபாய்க் கொடுத்து விட்டு அக்காவிர்கு நன்றி சொல்லி கிளம்பினேன்.

கிளம்பும் போது அக்கா சொன்னாங்க. “ நகரில் மொத்தல் 21 இடத்தில் இது போன்ற தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆகவே யாரும் தப்ப முடியாது. இனி தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்ட வேண்டாம். மீறினால் ஒரு நாளைக்கு குறைந்தது 100 ரூபாய் நீங்கள் அபராதம் கட்டுவது உறுதி” என்றார்

அவர் சொன்னது போலவே நகரில் எங்கெங்கு காணினும் தலைக்கவச சோதனைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் என்னை யாரும் நிறுத்தவில்லை. பின்ன.. தலைக்கவசம் இல்லாமல் ஓட்டினால் தானே நிறுத்துவார்கள். :))

பின்குறிப்பு : காலையில் இணையத்தில் என்னைக் கண்ட தாரணிபிரியா அக்கா “ டேய் தம்பி, என்னடா எப்போவும் அரசியல் பதிவா எழுதிட்டு இருக்க.. உன்னை திட்ட வேண்டும் போல் ஆசையா இருக்கு..ஒரு மொக்கை பதிவு போடுடா.. வந்து கும்மி அடிச்சிடறேன்” என்று பாசமாய் கேட்டதற்காகத் தான் இந்த மொக்கை.. எதுவாக இருந்தாலும் அவர திட்டிக் கொள்ளவும். :)

பிகு2 : என்னாலும் ஆங்கில சொற்கள் கலக்காமல் தமிழில் எழுத முடியும். :))
பிகு3 : ஆனாலும் எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுத முடியாது. :))

மொக்கை போட்டவன்..

Monday, 12 January 2009

முத்தக்கா வீட்டு திருவிழா

நம்ம முத்தக்காவோட தாத்தா சைவப் பெருந்தகை திரு சு. அருணாச்சலம் அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு முத்தக்கா அழைத்திருந்தார். நானும் வடகரை வேலன் அண்ணாச்சியும் போயிருந்தோம். 4.30 க்கு அண்ணபூர்ணா கலையரங்கத்துக்கு போய்ட்டோம். அங்க போனதும் முத்தக்காவுக்கு போன் பண்ணேன். கீழே உணவகத்தில் குட்டிப் பையன் சபரிக்கு உணவு கொடுத்திருப்பதாகவும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாகவும் சொன்னாங்க. ஒன்னும் அவசரமில்லைககா, மெதுவா வாங்க என்று எந்த “உள்நோக்கமும்” இல்லாமல் சொல்லிவிட்டு ஒரு ஓரத்தில் உட்கார்ந்து வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன் :).

மேடையில் ஒரு குழுவினர் பக்தி கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருந்தார்கள். வேலன் அண்ணாச்சி அதை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தார். பொதுவாக இது போன்ற பஜனைகளை கேட்டுக் கொண்டிருப்பவர்களை பார்த்தால் கிண்டலாக இருக்கும். என்ன புரியுதுன்னு இப்டி பார்த்து தலையாட்றாங்க என்று. ஆனால் நேரில் கேட்கும் போது ரொம்பவே இனிமையாக இருக்கு. கொஞ்சம் என் போனில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

பொதுவாக சிலர் வீட்டு விஷேஷதுக்கு அழைத்து நாம் அங்கு சென்றால், எதோ ஒரு சம்பிரதாயத்துக்கு கூப்ட்டோம். உடனே வந்துட்டான் பாரு.. என்ற ரீதியில் நடந்துக் கொள்வார்கள். இன்னும் சிலர், ஹ்ம்ம் கூப்டோம்.. நீ வந்துட்ட. சரி போனாப் போகுதுன்னு வா வான்னு மட்டும் சொல்லிட்டு வேலையப் பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஹிஹி. வேற எனன் தான் பண்ணனுமாம்? :) . இது போன்ற விழாக்களில் நம் அழிச்சாட்டியம் தாங்க முடியாது. அவர்கள் நம்ம மட்டுமே அல்லது நம்மை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நமக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

என்றெல்லாம் ஓவர் சீன் போடுவோம். அது ரொம்பவே தப்பு. அவர்களுக்கு எல்லா விருந்தினர்களையும் கவனித்தாக வேண்டும். நம்ம முத்தக்கா இருக்காங்களே.. இதுல எந்த வகையும் இல்லை. அநியாயத்துக்கு கவனிச்சாங்க. மாயவரத்துக்காரங்க எல்லாருமே இப்டி தானோ. கிருஷ்ணாக்கா ( அபி அம்மா ) இப்டி தான் கவனிச்சி எங்களை திக்கு முக்காட வச்சாங்க. முத்தக்கா எங்களை உட்காரவே விடலை. அவங்க அம்மா, அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, சகோதரர்கள், மாமியார் இன்னும் ஏராளமான அவர்களின் நெருங்கிய உறவினர்களை எலலாம் அழைத்து வந்து எங்களை அறிமுகப் படுத்திவைத்துக் கொண்டே இருந்தார்கள். எங்களுக்கு பயங்கர சந்தோஷம். எவ்ளோ பேர் இப்போ இப்டி ஆத்மார்த்தமா விருந்தினர்களை கவனிக்கிறாங்க?. ரொம்ப நன்றி முத்தக்கா. உங்க நூற்றாண்டு விழாவுக்கும் நாங்க வந்து ஆசிர்வாதம் வாங்கனும்.

எங்களை கடந்து போகும் போதும் வரும் போதும் சாப்டுங்க சாப்டுங்கன்னு ரொம்ப அன்பா சொல்லிட்டே இருந்தாங்க. அப்புறம் சாப்ட்டுக்கறோம்னு சொல்லியும் கேட்கலை. அடிக்கடி சொலிட்டே இருந்தாங்க. வேலன் அண்ணாச்சி பொறுமை இழந்துட்டார். யோவ் வாய்யா.. நாம் போகலைனா அவங்களே கொண்டு வந்து குடுத்துடுவாங்க போல. எதுக்கு அவங்களுக்கு சிரமம் வைக்கனும்னு சொல்லி சாப்ட இழுத்துட்டு போனார். நல்ல சுவையான ஜிலேபியும் மசால் போண்டாவும் குடுத்தாங்க.

காலையிலிருந்தே விழா நடந்துக் கொண்டிருந்தாலும் மாலை தான் களைகட்டியது. சிறிது நேரத்தில் இறைவணக்கப் பாடல்களை பெரியவரின் கொள்ளுபேரனும் பேத்திகளும்(எல்லாம் பொடிசுங்க) பாடினார்கள். அட அட.. என்ன இனிமையான குரல் பசங்களுக்கு, அதைவிட அவர்கள் முகபாவம் இருக்கே. வாவ்.. அவ்ளோ அழகு. இதை எல்லாம் ரசிக்காம எப்டி தான் இந்த அம்மாக்கள் எல்லாம் டிவியிலும் கம்ப்யூட்டரிலும் தலையை விட்டு வாழ்ந்துட்டு இருக்காங்களோ..

ஹ்ம்ம்ம்...
குழலினிது யாழினிது என்பர்......... :(

இறைவணக்கம் வாசிக்க முக்கியமான ஒருவர் நேரில் வரமுடியாததால் அவர் அம்மாவிடம் தன் தேன் குரலில் ஒரு பாடலை தாத்தாவிற்காக பாடி அனுப்பி இருந்தார். அதை ஒலிபரப்பினார்கள். ஆஹா.. என்ன ஒரு கனீர் குரல். வேறு யாரு? ஜூனியர் முத்தக்கா மாதினி பாப்பா தான். அதை வலைப்பதிவில் போட சொல்வோம்.

பிறகு மேடையில் அமர வேண்டிய விருந்தினர்களை எல்லாம் அழைத்தார்கள். அப்போ தான் தெரிஞ்சது முத்தக்கா எம்புட்டு பெரிய ஆளுன்னு.. கோவை மேயர், திமுக முன்னாள் எம்பி, பேரூர் ஆதினம், அறநிலையத் துறை துணை ஆணையர், அவினாசிலிங்கம் பல்கலை வேந்தர், அண்ணபூர்னா நிர்வாக இயக்குநர், சில பேராசிரியர்கள் என் பெரும் புள்ளிகள் தான் எல்லோரும். எல்லோரும் முத்தக்கா குடும்பத்துக்கு மிகவும் நெருகமானவர்கள் போலும். அவர்கள் குடும்பத்தை பற்றியும் பெரியவரைப் பற்றியும் அவ்ளோ பேசினாங்க. மதியமே வைகோ வந்துட்டு போனாராம்.

அதுல ஒரு விருந்தினர் சொன்னார் “ சிலர் தடம் பார்த்து நடப்பார்கள். சிலர் தடையம் விட்டுப் போவார்கள். ஆனால் இந்தப் பெரியவர் தான் தடம் பார்த்து நடந்து தடையமும் விட்டு வைத்திருக்கிறார்”. உண்மைதான். காரணம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்கள் பெரியவரின் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து தான். அதிலும் முத்தக்காவின் பெரியம்மாவும் தாத்தாவின் மருமகளுமான் ஒரு அம்மா தான் அவ்வளவு அழகாய் தொகுத்து வழங்கினார். கல்யாணம் முடிந்ததும் தனிக் குடித்தனம் போனோமா, பெத்தவங்களை கை கழுவினோமா அல்லது முதியோர் இல்லத்தில் விட்டோமான்னு இருக்கிற இந்தக் காலத்துல் நூற்றாண்டு விழா கொண்டாடும் தன் மாமனார் மாமியாரை கொண்டாடும் மருமகள்கள் அதிசயம் தானே.

என்னை வெகுவாக கவர்ந்தது என்று சொல்வதைவிட பிரமிக்க வைத்தது என்று சொன்னால் அது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. அவ்வளவு அருமையாக திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்கள். முழுக்க முழுக்க அவர்கள் குடும்பத்தார் தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்கள். தேர்ந்த ப்ரொஃபொஷனல்களால் திட்டமிட்டு நடத்தப் படும் பல பிசினஸ் மீட்டிங்குகளில் ஏராளமான சொதப்பல்களை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த விழாவை அவ்வளவு நேர்த்தியாக நடத்தினார்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சபாஷ்.

பிறகு எங்கள் அருகில் அமர்ந்து முத்தக்கா தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் காட்டி யார் , என்ன உறவு, என்ன செய்கிறார்கள் என்றெல்லாம்
சொல்லிக் கொண்டிருந்தார். பெருமைப்படும் அளவிற்கு மிகச் சிறந்த குடும்பம். முத்தக்காவின் மகன் சபர் செம சமத்து. பொதுவாகக் குழந்தைகள், அவர்களை தூக்கிவைத்துக் கொள்ள சொல்லி தான் நச்சரிபபார்கள். ஆனால் சபரியோ யார் தூக்கிவைத்துக் கொண்டாலும் கீழே இறக்கிவிட சொல்லிக் கொண்டிருந்தான். முத்தக்கா போலவே ரொம்ப நல்லா பழகினான். இன்று மதியம் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பதிவர் சந்திப்பு இருக்காம். மிச்சம் மீதி பலகாரங்களை எல்லாம் வ்சூல் செய்ய ஜி3 அக்கா வரதா சொல்லி இருக்கங்களாம். :)

பெரியவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் முடித்துக் கொண்டு முத்தக்காவிடம் சொல்லிவிட்டு மிகவும் சந்தோஷமாக வந்தோம்.

சொல்வதற்கு இன்னும் ஏராளமாக இருக்கு. ஆனால் இதுவே ரொம்ப பெரிய பதிவா போய்டிசி. இதையே எவ்ளோ பேர் முழுசா படிப்பாங்கன்னு தெரியலை. அதனால இதோட முடிச்சிக்கிறேன். :)

கொசுறு : ஆசிர்வாதம் வாங்க செல்லும் முன் நம்ம பெரியவர் வேலன் அண்ணாச்சி என்னிடம் “ எனக்கு 100 வயசு வழனும்னு எல்லாம் ஆசை இல்லைபா.. ஆனா நீ 100 வயசு வாழனும். உன் கிட்டயும் நான் ஆசிர்வாதம் வாங்கனும். இதான் என் ஆசை” அப்டின்னு சொன்னார். பெரிசுக்கு என்னா வில்லத் தனம் பாருங்க மக்களே. இப்போவே 70 வயசை நெருங்கிட்டு இருக்கார். அவருக்கு இன்னும் 84 வருஷம் கழிச்சி என் நூற்றாண்டுலையும் ஆசிர்வாதம் வாங்கி அதுவரைக்கும் கதம்பம் போடனுமாம். கண்டிக்க ஆளில்லால வளர்ந்துட்டு இருககார் இவரு. :)

விழாவில் தாத்தாவின் நூற்றாண்டு மலர் மற்றும் அவர்கள் குடும்பம் பற்றிய குறுந்தகடு வெளியிட்டார்கள். நூற்றாண்டு மலரும் குறுந்தகடும் வெளியிடுவதற்காக மட்டும் குறைந்த அளவில் கொண்டு வந்தார்களாம். மற்றவை அச்சில் இருக்கிறதாம். இது தெரிந்தும் நூற்றாண்டு மலரை நான் முத்தக்காகிட்ட கேட்டேன். உடனே வேகமா எழுந்து போய்ட்டாங்க. அடடா.. தப்பா கேட்டுட்டோம் போல.. அக்கா கோச்சிட்டு போய்ட்டாங்களே.. இரவு சாப்பாடு இல்லாமலே அனுப்பிடுவாங்களோன்னு நான் கவலையோட உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்துல ஒரு மஞ்சள் பையோட வந்தாங்க. அதை என் கையில் கொடுத்து “ இதை இப்போ பிரிக்காத. புத்தகம் அனுப்ப உங்க அட்ரஸ் கேட்டாங்க. அதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு நான் தெரியாம சுட்டுட்டு வந்துட்டேன். வச்சிக்கோ”ன்னு சொன்னாங்க. ஆஹா.. சொந்த வீட்லையே சுட வச்சிட்டோம்ல.. :))

விழாமுடிந்து வந்ததும் இதை எழுதிவிட்டேன். இல்லைனா என் சோம்பேறி தனத்தால எழுதாம விட்டு விடுவேன். மனசுக்கு திருப்தியான நல்ல விஷயங்களை மத்தவங்க கிட்ட பகிர்ந்துக்காம இருக்கிறது தப்புங்கோ.ஆனா தாமதமா இன்னைக்கு தான் பப்ளிஷ் பண்றேன். :)

Posted by..

Tuesday, 30 December 2008

இன்று (30.12.08) இரவு 8 மணி முதல் 9 மணி வரை கோவை ரெய்ன்போ எஃப் எம் கேளுங்க மக்கா.

'சுற்றுச் சூழல் போராளி' பட்டத்தை பெற்ற கோவையை சேர்ந்த அன்பர் ம.யோகநாதன் அவர்களது சிறப்புப் நேர்க்காணல் இன்று இரவு 8 மணி முதல் 9 மணி வரை கோவை ரெய்ன்போ பண்பலைவரிசையில் ஒலிபரப்படுகிறது. வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர்கள் தவறாமல் கேட்டு ஊக்கம் கொடுங்கள். சில விஷயங்களை நம்மால் நேரடியாக பங்கெடுத்து செய்ய முடியாமல் இருக்கும். ஆனால் அதை ஈடுபாட்டுடனும் அற்பணிப்புடனும் செய்பவர்களை ஊக்குவிப்பதும் ஒருவித சேவை மாதிரி தான். ஆகவே தவறாமல் இந்த சிறந்த மனிதரின் நேர்க்காணலை கேட்டு அவருக்கு உற்சாகமளிப்போம். முடிந்தால் அவரின் நேர்க்காணலை இங்கு வலையேற்ற முயற்சிக்கிறேன். கோவை தவிர பிற பகுதி நண்பர்களும் கேட்கலாம்.

Sunday, 14 December 2008

இதுதாண்டா போலிஸ்

ஆந்திராவில் பெண்கள் மீது திராவகம் வீசிய 3 பொறம்போக்குகளை அம்மாநில காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இதை கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எல்லா மாநில காவல்துறையும் இதுபோல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் இந்த பொறம்போக்குகள் மாதிரி மேலும் பல பொறம்போக்குகள் உருவாவதை தடுக்கலாம்.

இதை தெலுங்கு தேசம் போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் சில ”மனித உரிமை அமைப்புகளும்” எதிர்த்துள்ளன. இந்த மானம்கெட்ட மனித உரிமை அமைப்பினரை முதலில் என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும். அதென்னவோ தெரியவில்லை ரவுடிகளையும் தாதாக்களையும் அவர்களைப் போன்ற பரதேசிகளையும் கொன்றால் இந்த “மனித” உரிமை ஆர்வலர்களுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது.

அட வெங்காயங்களா.. இது போன்ற ரவுடி நாய்களால் எத்தனை அப்பாவி உயிர்கள் போகிறது.. எவ்வளவு பேர் வாழ்க்கை நாசமாகிறது.. அவர்களால் கட்டவிழ்த்துவிடப் படும் வன்முறைகள் தான் எவ்வளவு?.. அவர்களால் எடுக்கப் பட்ட உயிர்கள் தான் எவ்வளவு? அவர்களெல்லாம் உங்கள் பார்வையில் மனிதர்களாகத் தெரியவில்லையா? அவர்களின் உயிர்களை இந்த ரவுடி நாய்கள் எடுக்கும் போது எப்போதாவது இந்த நாய்களுக்கு எதிராக போராடி இருக்கிறீர்களா?..

அரசியல்வாதிகளை விட கேவலமான விளம்பரப் பிரியர்கள் இந்த மனித உரிமை அமைப்பினர். ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுக்கப் படும் விவகாரங்களில் மட்டும் அதுவும் தீயவர்களுக்கு ஆதரவாக மட்டும் களமிறங்கும் இந்த விளம்பர கும்பல்.

பேசாமல் மனித உரிமை அமைப்பு என்ற பெயரை மாற்றி “ரவுடிகள் உரிமை அமைப்பு” என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு “வீர தீர “ சாதனை புரிந்ததர்காக குடியரசுத்தலைவர் விருது வழங்க வேண்டும்..

அப்டியே இந்த அப்சல் குருவுக்கும் ஒரு என்கவுண்டர் ப்ளான் பண்ணா நல்லா இருக்கும்..

Thursday, 13 November 2008

இந்த நாய்ங்கள எல்லாம் அம்மணமாக்கி அடிக்கனும் - Adults Only

சென்னை சட்டக் கல்லூரியில் ஜாதி சண்டை அரங்கேறி இருக்கிறது. அந்த ஜாதி வெறிபிடித்த பரதேசிகளின் செயலை பார்க்கும் போது அவமானமாய் இருந்தது.. இந்த கம்மனாட்டி பசங்களா நாளை சட்டத்திற்கு போராடப் போகிறார்கள். ஜாதித் தலைவர்களுக்கும் சமூக விரோதிகளுக்கும் அடியாட்களாய் போக வேண்டிய பன்னாடை பரதேசிகள் எல்லாம் சட்டம் பயின்று என்ன மயிறப் புடுங்கப் போகுதுங்க? இதுங்களால ஈடூபாட்டுடன் இந்த படிப்பை படிப்பவர்கள் மீதும் ஒட்டு மொத்தமாய் வெருப்பு வருகிறது. சட்டம் படித்தால் சில நாய்கள் சட்டத்தால் கட்டுபடுத்த முடியாதவர்கள் என்று நினைத்துக் கொள்கின்றன. எதற்கெடுத்தாலும் வன்முறை தான் இவர்களின் வழி. ஜாதி சண்டை போடவா இந்த நாய்களை பெத்து வளர்க்கிறார்கள். இந்த பேமானிகளின் செயல்களை பார்த்து இவர்களை பெற்றவர்கள் எவ்வளவு கலங்கிப் போய் இருப்பார்கள்.. இதுக்காடா உங்களை எலலாம் கடன் வாங்கி கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறாங்க? இந்தக் கபோதிகள் சாப்பிட போனால் ஹோட்டலில் பணம் கொடுப்பதில்லை.. கேட்டால் வன்முறை.. போலிஸ்காரர்களுடன் எப்போதும் மோதல்.. எந்த பொது விதியையும் கடைபிடிப்பதில்லை.. எப்போதும் ஒரு வெறித்தனம்.. இதுக்காடா சட்டம் படிக்க வரீங்க? ஒவ்வொரு நாயும் கையில் ஆயுதங்களுடன் அடியாட்களை விட கேவலமாக காட்சி அளித்தார்கள்... த்தூ தெறி.. இந்த சொறிநாய்களின் உதவியுடன் தான் நீதி மன்றங்களுக்கு போக வேண்டும் என்பதை நினைக்கையில்.. பேசாமல் தூக்குப் போட்டு தொங்கலாம்..

இந்த வெறிநாய்களை அம்மணமாக்கி அடிபப்தற்கு முன் அப்போது அம்மணமாய் வேடிக்கை பார்த்த காவல் துறை துணிமாட்ட வேண்டும். அங்கே காக்கி சட்டை அணிந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் அம்மாணமகத் தான் தெரிந்தார்கள்.

சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்கள் கொடிய ஆயுதங்களுடன்....
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியவர்கள் கையில் லத்தியுடன் அம்மணமாய்..
சந்தோஷம்டா.. ரொம்ப சந்தோஷம்..

( வன்முறையில் ஈடுபடும் சில சொறி நாய்களின் மீதுள்ள நியாயமான கோபம் தான் இந்த பதிவு.. எல்லா சட்ட மாணவர்களையும் சாடுவது நோக்கமல்ல )

Sunday, 6 July 2008

அணுப்பாவை தமிழரசியை நான் சைட் அடிக்கக் கூடாதாம்... ஓசை செல்லா மிரட்டல்.

என்னையும் அன் "பாசமிகு" சக பதிவர் தமிழரசியையும் வைத்து காமெடி பண்ண ட்ரை பண்ணும் ஓசை செல்லாவின் முயற்சியை நான் மனதார வரவேற்கிறேன்..



மக்களே சொல்லுங்க.. தமிழரசியை சைட் அடிக்க கூடாதா?:)). இப்போ எல்லாம் நான் அவங்க பதிவு பக்கமே போறதில்ல. என்னை ஏன் சாமி வம்புக்கு இழுக்கறிங்க?..:(

ஓசை செல்லாவின் மிரட்டலில் தமிழரசிக்கு உடன்பாடு இருக்கிறதா என்று தமிழரசியே தெளிவுபடுத்த வேண்டும்.:P

Saturday, 10 May 2008

தமிழக காவல் துறையின் லட்சணம்


ஒரு காலத்தில் தமிழக காவல் துறை ஸ்காட்லாண்ட் யார்டுக்கு இணையாக பேசப் பட்டது. ஆனால் இன்று .. அவர்கள் தங்கள் திறமைய ஆளும் கட்சிக்கு ஆட்கள் இழுக்கவும் எதிர் கட்சியினரின் தொலை பேசி பேச்சிகளை ஒட்டு கேட்கவும் ஆளும் கட்சிக்கு அடிபணிந்து எதிர் கட்சியினரை உளவு பார்க்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இதைவிட பெருங்கொடுமைகள் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறை வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவங்கள் இப்போது அடிக்கடி நடப்பது தொடர்கதை ஆகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி அருகில் அதியமான் கோட்டை காவல் நிலையதிலும் அதை தொடர்ந்து பென்னாகரம் காவல் நிலையத்திலும் துப்பாக்கிகள் கொள்ளை போனது. அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் காவலர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறார்கள். எவ்வளவு கேவலம் இது... காவல் நிலையத்தையே காவல் காக்க முடியாத இவர்களால் எப்படி பொது மக்களை காக்க முடியும். இவர்களை பணி நீக்கம் செய்யாமல் விசாரணை குழு அமைக்கிறார்கள். கர்மம்....

அடுத்து சில தினங்களில் கோவையில் மரம் கடத்தும் கும்பல் ஒன்று ஒரு பூங்காவில் இருந்த சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்றார்கள். இத்தனைக்கும் இந்த பூங்கா நகரின் மத்தியில் இருக்கிறது. காவல் துறையினர் எந்த லட்சனத்தில் நகரில் இரவு ரோந்து பார்த்திருப்பார்கள் என்று பாருங்க.

இதைவிடக் கொடுமை.. கோவையில் இரவு பணியில் இருந்த காவலர்களில் வாக்கி டாக்கியை யாரோ அபேஸ் பண்ணி சென்றது. தன்னிடம் ஒருவன் திருடுவதையே தடுக்க முடியாத இவர்களா நகரில் நடக்கும் திருட்டை தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?..

சமீபத்தில் சென்னையில் நடந்த கொடுமை..... ராஜாஜி சாலையில் உள்ள அரசு கருவூலம், சம்பளக் கணக்கு அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளக் கட்டிடத்தில் நடந்த கூத்து... அந்த பகுதியில் இரவில் ரோந்து சென்ற கமிஷனர் அந்த அலுவலக கட்டிடத்திற்கு சென்று கதவை தட்டி இருக்கிறார். அரை மணி நேரம் கழித்து ஆயுதப் படை காவலர் ஒருவர் தூக்க கலக்கத்தில் கதவை திறந்திருக்கிறார். எந்த லட்சணத்தில் காவல் காக்கிறார்கள் பாருங்க.

அன்றைய உயர் அதிகாரிகள் ரோந்தின்.. ஒரு காவலர் லுங்கியுடனும், 4 பெண் காவலர்கள் நைட்டியுடனும் "பணி" புரிந்திருக்கிறார்கள். மேலும் 3 காவலர்கள் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றிருந்ததும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இதே ரீதியில் சேவை புரிந்தால் தமிழகத்தில் ஒரு பயலும் பாதுகாப்பாக இருக்க முடியாது. குறிப்பாக இரவில் யாரும் வெளியே செல்ல முடியாது. இவர்களை கண்காணிக்க வேண்டிய உயர் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து கொஞ்சம் ஒழுங்காக வேலை பார்த்தால் தான் இந்த நிலை மாறும்.

......... மங்கை அவர்களின் பதிவை படிசச்தும் இதை எழுதத் தோன்றியது....

Thursday, 8 May 2008

தமிழச்சியும் இளையகவி்யும் ஜூ.வியின் மேட்டர் பஞ்சமும்

...படத்து மேல எலிய வச்சி அமுக்குங்க.. படம் பெரிசாகும்...
வாரத்துக்கு 2 பதிப்பு வெளியிட வேண்டிய கட்டாயத்திற்காக ஜூவி செய்யும் மொள்ளமாறித் தனம். இது ஜூவிக்கோ, தமிழச்சிக்கோ எந்த வகையிலாவது பயன் தரக் கூடிய கட்டுரை ?!யா?... எமக்கு வந்த நம்பத் தகுந்த தகவல்படி தன் பதிவின் ஹிட்ஸ் ஜாஸ்தி ஆவதற்காக இளையகவி காசு குடுத்து அல்லது தன் பதிவின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் ஒரு பகுதியை கொடுப்பதாக்க சொல்லி இதை போட சொல்லி இருக்கிறார். :) காலையில் நான் அவரிடம் தொலை பேசிய போது அவரும் இதை ஒத்துக் கொண்டார். என்ன கொடுமை சார் இது? அந்த ஜொள்ளு பதிவு போட தமிழச்சியிடம் சம்மதம் பெற்றாராம்... யோவ் இளைய கவி.... தமிழச்சிய உங்க சகோதரினு தானைய்யா சொன்னிங்க.. சகோதரிய ஜொள்ளுவிட சகோதரியே சம்மதிச்சாங்களா? ஏன்யா இப்படி புளுகறிங்க? ஏன்யா இப்படி தமிழச்சி பேரை கெடுக்கறிங்க? ...

Friday, 18 April 2008

அபிஅம்மா.. அபிக்கு மட்டும் இல்ல.. எங்களுக்கும்..

அந்த வீட்டிலேயே ரொம்ப நல்லவங்க.. எதையும் தாங்கும் இதயம்.. பின்ன.. இந்த அபியப்பாவை சமாளிக்கிறது எவ்வளவு பெரிய விஷயம்?.. அதை விட பெரிய விஷயம் அந்த அராத்து அபிராமியையும் குட்டி தாதா நட்டுவையும் சமாளிக்கிறது.. அப்பப்பா.. என்னா ஒரு வில்லத் தனமானவங்க இவங்க 3 பேரும்.... ஆனா நான் எதையும் தாங்கும் இதயம்னு சொன்னதுக்கு காரணம் வேற.. அதாவது 2 நாள் எங்களுக்கு சமைச்சி போட்டு சமாளிச்சாங்க பாருங்க.. நிஜமாவே அபி அம்மா தி க்ரேட் தான்.

15ம் தேதி காலைல அபி வீட்டுக்கு போனோம்..மேல் மாடி ரூம்ல போய் பேக் எல்லாம் அப்டியே கடாசிட்டு கட்டில் மேல உக்காந்து கொஞ்ச நேரம் கதை அடிச்சிட்டு இருந்தோம். பசிக்க ஆரம்பிச்சது... எல்லாரும் மாத்தி மாத்தி ஒருத்தர் மூஞ்சிய இன்னொருத்தர் பாத்துட்டு இருந்தோம்... பூனைக்கு யாரு மணி கட்டறதுங்கற ரேஞ்ச்ல...சாப்ட போறதுக்கு இல்ல.. அதுக்கு முன்னாடி பல் துளக்கிட்டு அப்புறம் குளிக்கனுமாம்ல.. அப்போ தான் சோறு போடுவாங்களாம்.. என்ன கொடுமை சார் இது...எங்களோட பல வருஷ விரதத்தை கலைக்க வச்சிட்டாங்க.. சரி மொதல்ல யார் குளிக்கிறது?.. நீ நான்னு எங்களுக்குள்ள செம போட்டி.. யார் கடைசியா குளிக்கிறதுங்கறதுல....:)

அப்புறம் ஒரு வழியா கொஞ்சம் பெருந்தன்மையோடயும் செம கடுப்போடயும் நம்ம இம்சை அண்ணன் முதல் ஆளாக குளிக்க போனார்... அப்புறம் கொஞ்சம் விட்டுக் குடுத்து இளையகவி கணேஷ் குளிச்சார்.. மங்களூர் சிவா மாம்ஸ் குளிக்கட்டும் .. அப்புறம் நாம குளிக்கலாம் என்று நான் காத்துட்டு இருந்தேன்.. ஆனா அந்தாளுக்கு சரியான நெஞ்சழுத்தம். அபிஅப்பா லேப்டாப்பில சார்ஜ் தீரும் வரை ஆன்லைனில் இருந்தார். நானும் எவ்வளவு நேரம் தான் பசியை கட்டுபடுத்திட்டு இருக்கிறது.... போய்யா டேஷ்னு நான் குளிக்க போய்ட்டேன்.. அப்புறமா அவர கழுத்த புடிச்சி பாத் ரூம்ல தள்ளி விட்டோம்.. குளிச்சாரா இல்ல.. தலையை மட்டும் நனைச்சிட்டு வந்தாரா தெரியலை.

அப்புறம் கீழ போய் ஹால்ல ரவுண்டு கட்டி உக்காந்தோம்...ஒரு பெரிய ஹாட் பாக்ஸ்ல பூரி.. அதைவிட பெரிய ஹாட் பாக்ஸ்ல இட்லி.. அதைவிட ரொம்ப பெரிய பாத்திரத்துல பொங்கல்... அதை பார்த்ததும் நாங்க எல்லாரும் கோரஸா சொன்ன டயலாக் " அச்சச்சோ.. எதுக்கு இவ்ளோ சமைச்சிங்க.. யார் இதெல்லாம் சாப்பிடறது? எங்க 4 பேருக்கு இவ்ளோ எதுக்கு.. எல்லாம் வீணாகப் போகுது"... சரி.. பசங்க எல்லாம் கம்மியா தான் சாப்பிடுவாங்க போலனு நெனச்சிட்டாங்க போல..

இன்னும் சிலர் வரேன்னு சொல்லிட்டு கடைசி நேரத்துல வராம போய்ட்டாங்க. அது அபி அம்மாவுக்கு தெரியாது. அதனால அவங்க குத்து மதிப்பா ஒரு 15 பேருக்கு சமைச்சி வச்சது தான் மேல நான் சொன்னது எல்லாம்... உங்களுக்கு எதுக்கு சிரமம் .. நாங்களே போட்டுக்கிறோம்.. எல்லாத்தயும் இங்க எடுத்து வச்சிடுங்கன்னு சொன்னப்போவே அபிஅம்மா உஷாரா ஆயிருக்கனும். ஆனா பாவம்.. அவங்க எங்கள எல்லாம் ரொம்ப நல்லவங்கனு நெனச்சாங்களோ என்னவோ.. சமைச்சதை எல்லாம் அப்டியே கொண்டு வந்து வச்சிட்டாங்க.

எல்லாரும் முதல் ரவுண்டு இட்லில ஆரம்பிச்சோம். முதல் ரவுண்டு முடியும் போது பாதி இட்லி காலி.. அடுத்து பூரி... பூரிக்கான முதல் ரவுண்டுலையே மொத்தமும் காலி...அடுத்து பொங்கல் முதல் ரவுண்டு... நாங்க பொங்கல் சாப்டுட்டு இருக்கும் போதெ அபிஅம்மா கிச்சன்க்கு போய்ட்டாங்க...சரி எதோ வேலை இருக்கும் போலன்னு நெனைச்சிட்டு நாங்க எங்க கட்மைல கண்ணா இருந்தோம். அடுத்து இட்லி ரெண்டாவது ரவுண்டு ஆரம்பிச்சோம். ரெண்டாவது ரவுண்ட்ல இட்லி காலி. அடுத்து பூரியும் காலி. அடுத்த கொஞ்ச நேரத்துல பொங்கலும் காலி...பொங்கல் காலி ஆகற நேரத்துல அபிஅம்மா ஒரு பெரிய பாத்திரம் கொண்டு வந்து வச்சாங்க. என்னடானு பார்த்தா அந்த பாத்திரம் ஃபுல்லா பூரி.. நாங்க சாப்ட்ட வேகத்தை பார்த்து பயந்து போய் திரும்பவும் பூரி செய்யத் தான் சமையல் கட்டுக்கு போய் இருக்காங்க.. ஆஹா.. என்ன ஒரு தீர்க்கத் தரிசி... நிஜமா சொல்றேன்.. மிகை படுத்தல.. அந்த பாத்திரமும் கொஞ்ச நேரத்துல காலி... அபி அம்மாவும் சளைக்காம பூரி செஞ்சி சுடச் சுட குடுத்துட்டே இருக்காங்க.. நாங்களும் சாப்டுட்டே இருக்கோம்.... ஒரு கட்டத்துல எங்க வேகம் கொறைஞ்சது. சரி.. இபோதைக்கு இது போதும்னு எழ நினைக்கும் போது.. இந்த அபி அப்பா வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டாரா? யார்னா முட்டை தோசை சாப்பிடறிங்களானு ஒரு வார்த்தையை கேட்டுட்டார்... இம்சை வேண்டாம்னு சொல்லிட்டார்.. நானும் காலை நேரத்தில் முட்டை கலந்த உணவு சாப்பிட மாட்டேன்.. நானும் வேண்டாம் என்று சொல்லிட்டேன்... மங்களூர் சிவா, வீட்டில் மட்டும் அசைவம் சாப்பிடும் பழக்கம் இல்லை.. அதனால் அவரும் வேண்டாம் என்று சொல்லிட்டார்... அடுத்து நம்ம இளைய கவி கணேஷ்.. அவரால் வேண்டும் என்றும் சொல்ல முடிய வில்லை.. வேண்டாம் என்றும் சொல்ல முடியவில்லை... ஒரு மாதிரியாக நெளிந்தார்... அபிஅப்பாவும் மற்ற இடத்தில் இப்படி தான் நெளிவாரோ என்னவோ.... சரியாக கண்டு பிடித்துவிட்டார்... ஒரு முட்டை தோசை மட்டுமாவது சாப்பிடுங்க என்று இளைய கவியிடம் சொன்னது தான் தாமதம்... நாங்கள் அனைவரும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதால் அவரால் நேரடியாக கேட்க முடியவில்லை.. எனவே அபிஅப்பாவை பார்த்து நீங்க சாப்பிடறதா இருந்தா நான் சாப்பிடறேன் என்று ஒரு பிட்டை போட்டார்... அவர் அப்படி சொல்லி முடிக்கவும் அபிஅம்மா ஒரு முட்டை தோசையை இளைய கவி தட்டில் வைக்காவும் சரியாக இருந்தது... அதாவது மக்களே..இவர் நெளிவதை பார்த்த உடனே அபிஅம்மா தோசை ஊத்த ஆரம்பிச்சிடாங்க போல... மறுபடியும் என்னா ஒரு தீர்க்கத் தரிசி.... அப்டியே மீன் வறுவல், வடை என்று ப்ளேட் ப்ளேட்டாக காலி ஆய்ட்டு இருந்தது..இப்படியாக ஒரு வழியாக காலை "சிற்றுண்டி" முடிந்தது.

............ என் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்ட அபியை பார்க்க பாவமாக இருந்தது... அதனால ஒரு பூரியை எடுத்து அவள் தட்டில் வைத்தேன்... அங்கிள் என்னால சாப்பிட முடியாது அங்கிள்னு சொன்னா.. அட என்னம்மா நீ.. வளர்ற பொண்ணு.. இது நம்ம வீடு மாதிரி கூச்சப் படாம சாப்டுனு சொன்னேன்... என்னாடா இவனுங்க இந்த தீனி திங்கறானுங்களேன்னு செம கடுப்புல இருந்தாளோ என்னவோ.." ஹலோ.. இது என் டயலாக்.. இதெல்லாம் நீங்க சொல்லப் படாது.."னு சொல்லிட்டா...( ஓசில சாப்ட்டமா .. போனமானு இல்லாம என்னடா வெட்டி பேச்சினு நெனைச்சாலோ என்னவோ.. :P )

இந்த கலாட்டா எல்லாம் முடிஞ்சதும் உண்ட மயக்கத்துல கொஞ்ச நேரம் உருண்டு பொரண்டுட்டு இருந்தோம்... அப்புறம் கொஞ்ச நேரத்துல காஃபி குடுத்தாங்க... என்னடா இவனுங்க என்னத்த குடுத்தாலும் வேணாம்னு சொல்லாம இந்த வாங்கு வாங்குறானுங்களேனு நெனைச்சாரோ என்னவோ .. அபிஅப்பா எங்கள எல்லாம் இல்லாத காவிரி கரையை காட்டறதா சொல்லி வெளிய கூட்ட்டிட்டு போனார்... அதுவும் 12 மணிக்கு... வெயில் சுட்டெரிக்கிது.. மனசாட்சியே இல்லாம இழுத்துட்டு போனார்.. பின்ன... மனசாட்சியே இல்லாம அந்த காட்டு காட்டினோம்ல.. அந்த கடுப்பு அவருக்கு.... பாதி வழியில போனதும் அதோ பாருங்க அதான் காவிரி கரைனு காட்டினார்.. ஆனா அப்டி எதுவுமே எங்களுக்கு தெரியலை.. ஆனா அடிக்கிற வெயிலுக்கு பயந்து அதை பத்தி எதுவுமே சொல்லாமா.. ஓ .. அது தானா.. அப்டினு மட்டும் சிம்பிளா முடிச்சிகிட்டு திரும்பிட்டோம்.. எங்க கஷ்டம் எங்களுக்கு... மத்தியான சாப்பாடு வேற வீட்ல அபிஅம்மா ரெடி பண்ணிட்டு இருந்தாங்க....

வழியில ஒரு கடைல எலந்த வடை, கடலை மிட்டாய், இஞ்சி சோடா, மோர் எல்லாம் வாங்கி குடுத்தார்னு கெளரவமா சொல்ல ஆசை பட்டாலும்... நாங்களா தான் கடைல தொங்க விட்டிருந்ததை புடுங்கி தின்னுட்டு அபிஅப்பா காசு தருவார்னு அவர் பக்கம் கையை காட்டிட்டு வந்த உண்மையை சொல்லாமல் இருக்க முடியலை..அப்டியே ஒரு கோழிக்கறி கடைல கறி வாங்கிட்டு வீட்டுக்கு போய் கொஞ்ச நேரம் நல்லா ரெஸ்ட் எடுத்தோம்.. பின்ன.. அடுத்த ஆட்டத்தை ஆடனும்ல... அப்புறம் அபிஅம்மா பொக்குனு போய்டுவாங்கல்ல...எங்களை நம்பி தான ஒரு கல்யாண வீட்ல சமைக்கிற மாதிரி சமைச்சிட்டு இருந்தாங்க....

மதிய உணவும் சாதரனமா இல்லை.. சிங்கங்கள் எல்லம் செம ஃபார்ம்ல இருந்தோம்.. நானும் சிவாவும் சைவம்.. இம்சை அண்ட் இளையகவி அசைவம்... கோழிகறி கொழம்பு.. சாம்பார் , ரசம் , மோர், அப்பளம் என செம கட்டு கட்டினோம்....ம்ம்ம்.. அபிஅம்மா இதுகெல்லாம் கொஞ்சம் கூட அசரவே இல்லையே.. வடிச்சி கொட்டிட்டே இருந்தாங்க.. நாங்களும் சளைக்காம உள்ள தள்ளிட்டே இருந்தோம்.... நல்ல வேளை.. கவிதாயினி முதல் நாள் எங்களோட கூட்டணி சேரலை.. இல்லைனா அபிஅம்மா நெலமை ரொம்ப பரிதாபமா ஆயிருக்கும்...:)

அடுத்து ... மாலை 6 மணி போல குசும்பன் கல்யாணத்துக்கு கெலம்பர வைபோகம்... நாங்க எல்லாம் தெளிவா எல்லாத்தயும் எடுத்து கார்ல வச்சிட்டோம். அபிஅம்மா தான் ரொம்ப பாவம்.. எங்களுக்கு சமைச்சி போட்டே ரொம்ப டயர்ட் ஆய்ட்டாங்க போல... வந்து கார்ல உக்காந்ததும்.. அச்சச்சோ அதை மறந்துட்டனே என்று எதாவது எடுக்க திரும்ப வீட்டுக்கு போவாங்க.. அதுக்கப்புறம் கார்ல உக்காந்ததும் திரும்ப எதுனா மறந்து வச்சதை எடுத்துட்டு வர போவாங்க... இப்டியே கொஞ்ச நேரம் போய்ட்டிருந்தது... கடைசியா நட்டு துணி இருந்த பை மறந்துட்டாங்க... அபிஅப்பா தானே எடுத்துட்டு வரேன்னு போனார்.. அபிஅம்மா தெளிவா சொன்னாங்க .. பச்ச கலர் பைன்னு.. நம்ம தலைவர் எதோ ஒரு மஞ்ச கலர் பையை எடுத்துட்டு வீட்டயும் பூட்டிட்டு இருந்தார்.. இவர நம்பினா வேலைக்கு ஆகாதுனு அபிஅம்மாவே போய் அந்த பை எடுத்துட்டு வந்தாங்க.. ஓருவழியா கார் கெளம்பிடிச்சி.. பாதி தூரம் போனதும் தான் தெரிஞ்சது.. அபி அடுத்த நாள் போட வேண்டிய துணிகளும் அபி அப்பா சலவை செய்து வைத்த அவரோட துணிகளும் மறந்துட்டு வந்தது... :)).. அப்புறம் என்ன பண்றது.. அவ்ளோ தூரம் போய்ட்டு திரும்பியா வர முடியும்... அடுத்த நாள் அபிஅப்பா வேஷ்டி சட்டையில் வந்து எபப்டியோ சமாளிச்சார்...

திரும்ப அடுத்த நாள் குசும்பன் கல்யாணம் முடிஞ்சி.. மதியம் அபி வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்... கொஞ்சம் ஓய்வு.. ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டதால் அபி அம்மாவின் நல்ல நேரமோ என்னவோ எங்களால் அங்கு அதிக நேரம் இருக்க முடியவில்லை... மதியம் குசும்பன் கல்யாணத்திலேயே சாப்பிட்டு விட்டு தான் வந்தோம்... ஆனாலும் வந்த வேகத்தில் அபிஅம்மா இட்லியும் கொஸ்துவும் செஞ்சிட்டாங்க.... ரயிலில் இரவு சாப்பிடுவதற்கு தேவையான அளவு 4 பொட்டலங்களாக கட்டி வச்சாங்க... அது பத்தாதுன்னு அப்போவே சாப்ட சொல்லி எல்லார்க்கும் தட்ல வச்சி குடுத்தாங்க.. எல்லாரும் சொல்லி வச்ச மாதிரியே... " அய்யய்யோ வேணாம்க்கா.. இப்போ தான சாப்ட்டு வந்தோம்.. அதுக்குள்ள எப்டி சாப்டறது.. அதுவும் இல்லாம இப்போ சாப்ட்டா ரயிலில் சாப்ட முடியாது எல்லாம் வீண் ஆய்டும்"னு அளந்து விட்டுட்டு இருந்தோம்... அதான் 2 நாளா எங்க யோக்கியதையை தான் பாத்தாங்களே.. அதனால தட்ல போட்டு வச்சிட்ட்டாங்க.. அடுத்த 2 நிமிஷத்துல எல்லாம் காலி... கடைசில காயத்ரிக்கு வச்சிருந்த இட்லியையும் சிவாவும் இளையகவியும் அபேஸ் பண்ணிட்டு கவிதாயினிக்கு வெறும் கொஸ்து மட்டும் மிச்சம் வச்சிருந்தாங்க... அதை பார்த்து கவிதாயினி பாவமாக முழித்ததை காண கண் கோடி வேண்டும்.... பொட்டலம் கட்டிய இட்லியும் கொஸ்துவும் என் பைல மறக்காம் எடுத்து வச்சிகிட்டோம்...:)))

இதெல்லாம் முடிந்து ரயில் நிலையம் சென்று கவிதாயினி, இளையகவி , இம்சை 3 பேருக்கும் டிக்கெட் வாங்கி முடிச்சதும் அபி கிட்ட இருந்து போன்.. இம்சை லேப்டாப் சார்ஜர் விட்டுட்டு வந்துட்டார்.. பின்ன கவனமெல்லாம் சாப்பாட்டுலையே இருந்தா இப்டி தான் ஆகும்.. :P... அதை கூரியரில் அனுப்ப சொல்லிட்டோம்..

ரயிலில் போகும் போது திருச்சியை தாண்டியும் யாரும் சாப்பிடவே இல்லை.. எனக்கே பயங்கற ஆச்சர்யம்.. நானும் பல முறை எல்லார்கிட்டயும் சொல்லி பார்த்தேன்.. சாப்பிடுங்க.. சாப்பிடுங்க என்று.. எல்லாரும் செம பந்தா பண்ணாங்க.. வேணாம் .. பசிக்கலை.. சாப்பிட முடியாது.. என்று .. வழக்கம் போல இளையகவி கொஞ்சம் ஜாஸ்தியாவே சீன் போட்டார்.. வேண்டாம் என்று... நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்.. இவங்களுக்கெல்லாம் அபிஅம்மா வைத்தியம் தான் சரி என்று நினைத்து இட்லியை எடுத்து எல்லார் கைலையும் குடுத்துட்டேன்.. இருந்தது 4 பொட்டலம்.. நாங்களோ 5 பேர்...என்னை தவிர மற்ற 4 பேருக்கும் குடுத்துட்டேன்..எனக்கௌ மட்டும் இல்லாம போய்டிச்சி.. என்னை பார்த்து ஒருத்தருமே பரிதாபப் படலை.. பாவிகள்.. எல்லாரும் வெளுத்துக் கட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. நானும் எவ்ளோ நேரம் தான் அவங்க வாயையே பாத்துட்டு இருக்கிறது... என் பக்கத்தில் அப்பாவியாய் கவிதாயினி தான் உக்காந்துட்டு இருந்தாங்க.. என்ன பார்த்தா பாவமா தெரிஞ்சதோ என்னவோ.. போனா போகுதுனு அவங்க இலையிலையே ஒரு ஓரத்துல கொஞ்சம் இடம் குடுத்து அவங்களுக்கு குடுத்த இட்லியை என்னையும் சாப்பிட சொன்னாங்க.... நீ நல்லா இருக்கனும் தாயினு சாப்பிட்டேன்... அவங்க 3 பேருக்கும் பத்தலைனு அவங்க நெளிஞ்சத பார்த்தாலே புரிஞ்சது... நாங்க சாப்டு மிச்சம் வச்ச ஒரெ ஒரு இட்லியையும் மங்களூர் சிவா விட்டு வைக்கல.... அடபாவிகளா .. இதுக்காய்யா இம்புட்டு நேரமா வேண்டவே வேண்டாம் இந்த வயிற்றில் இடமில்லைனு த்ரீ ரோஸஸ் விளம்பரம் மாதிரி பாடிட்டு இருந்தீங்க..:(....

................

அன்று மாலை நாங்கள் வந்தவுடன்.. அபிஅப்பாவிற்கு செம அடி விழுந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.. யோவ் உனக்கு ஆக்கி போடறதே பெரிசு.. இதுல உன் கூட்டளிங்கள வேற கூட்டியாந்த்து ஊட்ல விட்டுட்டியா.. மனுஷங்களாய்யா அவங்க.... நானும் எவ்வளவு தான் ஆக்கிப் போட்டுட்டே இருக்கிறது.... அவனுங்களும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அப்டி திங்கறானுங்கய்யா... உனக்கே அளவோட தான் சோறு போடறேன்.. ஆனா அவனுங்க 6 மாச மளிகை சரக்குகளை ரெண்டே நாள்ல காலி பண்ணிட்டானுங்க.... இனி கூட்டிட்டு வருவியா.. கூட்டிட்டு வருவியானு செமத்தியா அடி பின்னி எடுத்திருப்பாங்க...:)))
------------------
ஹிஹி... இது சும்மா டமாசுக்கு..

நிஜமாவே கொஞ்சம் கூட சுமையா நினைக்காம சிரிச்ச முகத்தோடையே கூட பிறந்த தம்பிகளை கவனிக்கிற மாதிரி அபிஅம்மா அவ்ளோ அன்பா கவனிச்சாங்க... நன்றினு சொல்லி அவங்களை பிரிச்சி பாக்க கூட மனசு வரலை....அவங்க எவ்ளோ பாசமா எங்களை கவ்வனிச்சி இருந்தா நாங்க எங்க வீடுங்கிற உணர்வுல அந்த காட்டு காட்டி இருப்போம்னு நெனைச்சி பாருங்க.... உண்மையில் அபிஅப்பா ரொம்ப குடுத்து வச்சவர்...

கொசுறு : அபிஅம்மா ஒரு சிவில் இஞ்சினியர்... இப்போது அவர்கள் இருக்கும் வீட்டை அழகாக திட்டமிட்டு கட்டியது அபிஅம்மா தான்.

.. நேரம் ஒத்துழைத்தால் கோவை டூ மயிலை டூ திருவாரூர் டூ மயிலை டூ கோவை பயணம் பத்தி பதிவு போடறேன்.. உண்மையில் அவ்வளவு அழகான பயணம் இது... புது மாப்பிள்ளை குசும்பனுக்கு நன்றிகள் பல...

Saturday, 12 April 2008

பெங்களூரில் அலுவலக வாடகை குறையும்.


பெங்களூரில் அலுவலகங்களுக்கான வாடகை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா(STP) திட்டத்தின் படி மென்பொருள் நிருவனங்கள் தற்போது அனுபவித்து வரும் சலுகைகள் மார்ச் 2009ல் காலாவதி ஆகிறது. ஆகவே தாங்கள் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை மிச்சம் பிடித்து தற்போதுள்ள லாபத்தை தக்க வைத்துக் கொள்ளாவும் மேலும் புதிய சலுகைகளை அனுபவிக்கவும் இந்த நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு இடம் பெயர உள்ளன.

கர்நாடகத்தில் மொதம் 13 சி.பொ.ம. விற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அதில் 11 பெங்களூர் நகரில் அமைய உள்ளது. ஆகவே பெங்களூர் நகரத்தில் தற்போது உள்ள நிறுவனங்களுக்கு போதுமான இடம் சிபொம வில் கிடைத்து விடும். இப்போது அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இடங்கள் காத்து வாங்க ஆரம்பித்துவிடும். வேறு வழியே இல்லாமல் அந்த இடத்திற்கு சொந்தகாரர்கள் வாடகையை குறைத்தே ஆக வேண்டும்.

இதனால் வீட்டு வாடகை எதுவும் குறைய வாய்பில்லை. ஒருவேளை நிறுவங்களுக்கு தருவது போல் அதன் பணியாளர்களுக்கும் சில சலுகைகளுடன் சிறப்பு குடியிருப்பு மண்டலங்கள் அமைத்தால் ஒருவேளை வீட்டு வாடகைகளும் குறையலாம் :)...

இருங்க நம்ம விஜயகாந்த் உங்க கிட்ட என்னவோ பேசனுமாம்..
தலைவா .. பேசுங்க தலைவா..

ஏய்.. பெங்களூருல ஐடி கம்பனிங்கள்ல மட்டும் மொத்தம் 4 லட்சம் பேர் வேலை பாக்கிறாங்க. அந்த கம்பனிங்க எல்லாம் சேர்ந்து மொத்தம் 100மில்லியன்ன் சதுர அடி இடத்தை ஆக்கிரமிச்சி இருக்காங்க. இதுல முக்கால்வாசி இடம் லீசுக்கு எதுத்திருக்காங்க... சில வருஷங்களுக்கு முன்னாடி அதாவது மார்ச் 2004ல் அலுவலக வாடகை ஒரு சதுர அடிக்கு ரூ.22 முதல் 42 வரை இருந்திச்சி.. ஆனா இப்போ ஒரு சதுர அடி இடத்துக்கு 48 முதல் 78 வரை இருக்கு... இனி இதெல்லாம் கொஞ்சம் குறையும்.. வர்ட்டா.. ஹும்....

கொசுறு : டிசம்பர் 2007 தகவல்படி...இந்தியாவில் 282.87 மில்லியன் தொலைபேசி இணைப்புகள் வழங்கபட்டிருக்காம். அதாவது 28 கோடிக்கு மேல.. ஹய்யோ... கலக்கறாங்கய்யா... 2010க்குள்ள 500மில்லியன் இணைப்புக்கு இலக்கு வச்சிருக்காம் இந்திய அரசாங்கம். அட சீனாவ மிஞ்சிடுவோம் போல இருக்கே... அல்லாரும் ஜோரா ஒருவாட்டி கை தட்டுங்கபா.. :))

டிசம்பர் 2007 வரை 3.13மில்லியன் ப்ராட்பேண்ட் இணைப்புகள் வழங்கப் பட்டிருக்கு. இன்னும் 3 வருடத்தில் 20மில்லியன் ப்ராட்பேண்ட் இணைப்புகள் வழங்க இலக்கு வச்சிருகாங்களாம். ஆகவே மக்களே எல்லாரும் உங்க டயல் அப் கனெக்ஷன தூக்கிட்டு ப்ராட்பேண்ட் வாங்க தயாரா இருங்க சாமியோவ்... ஏன்னா தகவல் தொழில்நுட்பத் துறையில் பல புதிய மாறுதல்களை பண்ணும் திட்டத்தை தன் குர்தா பையில் வச்சிக்கிட்டு சுத்திட்டு இருக்காராம் எங்க சின்ன சிந்தியா... அப்டியே அண்ணாச்சிக்கு ஒரு வாழ்த்து சொல்லிடுவோம்.:)
நான்றி : SI dailydose.

Friday, 28 March 2008

புரியலை தயவுசெய்து (தமிழ்மணம்) விளக்கவும்

சமீபத்தில் தமிழ்மணத்தில் இருந்த நீக்கப்பட்ட சில இடுகைகள் மற்றும் வலைப்பூக்களால் மீண்டும் தமிழ்மணம் சூடாகி இருக்கிறது. நீக்கத்திற்கு கூறப்படும் காரணங்கள் முரனாகவே இருக்கிறது.ஆபாசமான வார்த்தைகள் அல்லது தனிநபர் மீதான தாக்குதல்களின் காரணமாக நீக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது. யோனி, ஆண்குறி என்று எழுதியவர்கள் பதிவுகள் எல்லாம் தமிழ் மணத்தில் வலம் வந்தது.

பொறுபுள்ள ஒரு இணையதளமாக சட்டவிரோத செயல்களுக்கு துணை போகாமல் இருப்பதை கொள்கையாக வைத்துக் கொள்ளலாமே ஒழிய .. தங்கள் தளத்தில் பதிவு செய்தவர்கள் எதை எழுத வேண்டும் எதை எழுதக் கூடாது என்பதை எல்லாம் முடிவு செய்யக் கூடாது.இது கருத்து சுதந்திரத்திற்கும் தனி நபர் சுதந்திரத்திற்கும் தீங்கானது. அப்படி முடிவு செய்யும் உரிமை தங்களுக்கு இருக்கு, அதை பின்பற்றுபவர்கள் இங்கு உறுப்பினர்களாக இருக்கலாம். இல்லை என்றால் வெளியேறலாம் அல்லது உறுப்பினர் ஆக வேண்டாம் என்று ஒருவேளை சொன்னால்.. அதற்கு தமிழ்மணம் பதிவுலகிற்கு அப்பார்பட்டவர்களால் நடத்தப் பட வேண்டும். தமிழ்மணத்தின் நிர்வாகிகளை பொறுத்தவரை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்பட்டவர்களாக தெரியவில்லை. அவர்கள் எழுதும் பதிவுகளில் இதை காணலாம்.

ஒரு முக்கியமான சந்தேகம்...தமிழ்மணம் ஒரு திரட்டியா அல்லது இணைய உலகின் கலாச்சார காவலனா?.. தமிழ்மணத்திலிருந்து சில பதிவுகள் அல்லது பதிவர்களை வெளியேற்றுவதன் மூலம் தமிழ்மணம் அல்லது அந்த திரட்டியை பயன்படுத்துபவர்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் தமிழ்மணம் சாதித்தது அல்லது சாதித்துக் கொண்டிருப்பது என்ன? தமிழ்மணத்திலிருந்து நீக்கப் பட்ட பதிவர்கள் அது போன்று எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது நீக்கப் பட்ட இடுகைகளை தமிழ்மணத்தின் உறுப்பினர்கள் படிப்பதை நிறுத்தி இருக்கிறார்களா? ஒரு திரட்டியாக தமிழ்மணத்தால் யார் மனதையுமே மாற்றவோ திருத்தவோ முடியாது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்ததை ( சட்ட விரோதம் இல்லாத வகையில் ) எழுதவோ, வாசிக்கவோ உரிமை உண்டு.

பெரும்பாலும் நீக்கத்திற்கு சொல்லப்படும் காரணம்.. தனிநபர் தாக்குதல்.. அவதூறு பரப்புதல். இதை தமிழ்மணம் எந்த அளாவுகோலின் படி முடிவு செய்கிறது. யார் மீது அவதூறு பரப்பபடுகிறதோ அவர் சட்ட ரீதியாகத் தான் இதை எதிர்கொள்ள வேண்டும்/முடியும். இதற்காக தன்னிடம் பதிவு செய்துள்ள பதிவரை அல்லது அவரது இடுகையை நீக்கும் உரிமை தமிழ்மணத்திற்கு கிடையாது. ஆபாசமாக இல்லாமல்(உதாரணம் : போலி தளங்கள்) குற்றசாட்டு ரீதியில் ஒருவர் பற்றிய செய்திகளை வெளியிடுவதை தனிநபர் தாக்கு அல்லது அவதூறு பரப்புவது என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை குற்றம் சுமத்தபட்ட்வர் அல்லது கண்டிக்கப் பட்டவர் அந்த செயலுக்கு உரியவராக இருக்கும் பட்சத்தில் ஒருவரது தவறான செயல்பாட்டை தங்கள் தளத்தில் பதிவு செய்துகொண்டவர் தெரிந்துக் கொள்ளவிடாமல் தடுக்கும் அல்லது மறைக்கும் செயலாகவே இந்த நீக்கங்களை கருத முடிகிறது.

இப்படி நீக்குவதற்கு பதில் தமிழ்மணத்திற்கு ஒவ்வாது என்று கருதும் இடுகைகளை தனியாக வகைபடுத்தலாம்.அவற்றை முகப்பு பக்கத்தில் தெரியாமல் அந்த பிரிவிற்கு தனி பக்கங்களை அளிக்கலாம். இதன் மூலம் விருப்பம் உள்ளவர்கள் அதை படிக்கட்டும். விருப்பம் இல்லதவர்கள் ஒதுக்கி விடட்டும்.

அல்லது ஒரு பதிவை அல்லது பதிவரை நீக்குவதற்கு முன் தன் உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதை வெளியிட்டு அதன் பின்னர் நீக்கினாலாவது பரவா இல்லை.

சைட் டிஷ் : தமிமணம் வெறும் ஒரு திரட்டி மட்டும் தான். அதன் வேலை தன்னிடம் பதிவு செய்த்துக் கொண்டவர்களின் பதிவுகள திரட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பதிவர் அல்லது படிப்பவரின் சுதந்திரத்தில் எல்லாம் தலையிடக் கூடாது. எதை படிப்பது எதை ஒதுக்குவது என்பதெல்லாம் படிப்பவரின் உரிமை/கவலை. இதில் எதற்கு ஒரு திரட்டி தலையிட வேண்டும்? எல்லாவற்றையும் ஆரம்பத்தில் அனுமதித்துவிட்டு பிறகு அந்த நிலைபாட்டிலிருந்து மாறுவது என்பது வெறும் பரபரப்புக்கான வேலையாகவே தெரிகிறது.தமிழ்மணம் தவிற வேறெந்த திரட்டியும்( இப்போதைக்கு) இந்தளவு தனிநபர் சுதந்திரத்தில் தலை இடுவதில்லை.

Thursday, 27 March 2008

பெண்களிடம் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டதா?

சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு மாணவி ரட்டை ஜடை போட்டு வரவில்லை என்று அந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியை " ஜடையை அறுத்துவிடுவேன்" என்று மிரட்டி இருக்கிறார். ( அறுத்து விட்டதாகவும் பத்திரிக்கை செய்திகள் சொல்கின்றன..). அதே மாணவியின் வகுப்பாசிரியை அந்த மாணவியின் தலையை சுவற்றில் மோதி காயப் படுத்தி இருக்கிறார். அந்த மாணவியின் பெற்றோர் காவல் துறையில் புகார் குடுத்த பின் கல்வி துறை அதிகாரிகள் விசாரணை செய்து அந்த ஆசிரியைகளை பணிநீக்கம் செய்ய பரிந்துரைத்து பின்பு அவர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.

அடுத்து சமீபத்தில் இதே போன்ற ஒரு சம்பவம். இன்னொரு தனியார் பள்ளியில் மெதுவாக தேர்வெழுதியததற்காக ஒரு மாணவனை அந்த வகுப்பாசிரியை, தேர்வெழுத பயன்படுத்தும் அட்டையால் அவன் தலையில் அடித்திருக்கிறார். அட்டையில் இருந்த க்ளிப் பட்டு மாணவன் தலையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த மாணவன் கடைசி வரை ரத்தம் வந்த இடத்தில் கையை வைத்துக் கொண்டு தேர்வு எழுதி இருக்கிறான். கடைசி வரை அவனுக்கு முதல் உதவி கூட செய்யவில்லையாம். இதில் அந்த ஆசிரியையின் மிரட்டல் வேறு.." இதை யாரிடமாவது சொன்னால் இதே போன்று மீண்டும் அடிப்பேன்" என்று. இதற்கு பயந்து அந்த மாணவன் வீட்டில் உண்மையை சொல்லவில்லை. பள்ளி நிர்வாகமும் " உங்கள் பையன் விளையாடும் போது கீழே விழுந்துவிட்டான். வந்து அழைத்து செல்லுங்கள்" என்று தான் தகவல் சொல்லி இருக்கிறது.

பிறகு இரவு தூங்கும் போது அந்த மாணவன் " மிஸ் என்ன அடிக்காதிங்க மிஸ்.. அடிக்காதிங்க மிஸ்" என்று உளறி இருக்கிறான். அதை வைத்து காலையில் அவனை மிரட்டி விசாரிக்கும் போது தான் உண்மையை சொல்லி இருக்கிறான். இதையடுத்து அவன் பெற்றொர் பள்ளிக்கு சென்று புகார் தெரிவித்த பின் அந்த ஆசிரியை வேலை நீக்கம் செய்தி்ருக்கிறார்கள்.

இந்த 2 சம்பவங்களிலுமே, இந்த ஆசிரியைகள் மீது இதற்கு முன்பே இது போன்ற புகார்கள் வந்ததாகவும் அப்போதே அவர்களை எச்சரித்ததாகவும் இரண்டு பள்ளி நிர்வாகமும் கூறி இருக்கிறது. அப்படியானால் இதற்கு முன்பே பல மாணவர்களும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். முதல் முறை தவறு செய்யும் போதே அவர்களை நீக்கி இருந்தால் மேலும் மேலும் மாணவர்கள் பாதிக்கப் பட்டிருக்க மாட்டார்கள். இந்த சம்பவங்களுக்கு காரணமான மூவருமே பெண்கள் தான். கேட்டால் .. பெண்கள் தான் கனிவானவர்கள், மிருதுவானவர்கள்.. பாசமானவர்கள் என்று பீற்றிக்கொள்கிறார்கள். என்ன கொடுமை கோயம்புத்தூர் இது? :)

ஆரம்ப வகுப்புகளுக்கு பெண்களை ஆசிரியைகளாக நியமிப்பதே அவர்கள் குழந்தைகளை தாயுள்ளத்தோடு கனிவாக கவனித்துக் கொள்வார்கள் என்பதால் தான். ஆனால் நிலைமையோ வேறு மாதிரி இருக்கு. இதற்கு காரணம், இவர்களுக்கு எந்த பயிற்சியும் இல்லாதது தான். அரசாங்க பள்ளிகளில் பணியாற்ற் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் படித்திருக்க வேண்டும். ஆனால் தனியார் பள்ளிகளில் அந்த தகுதி தேவை இல்லை. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அதைவிட முக்கியத் தகுதி.. குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும். இவர்களிடம் எந்த தாயுள்ளம் இருக்கும்? குடுக்கிற சம்பளத்துக்கு இந்த மாதிரி வேலை பார்த்தாலே போதும் என்ற மன நிலையில் தானே இருப்பார்கள். அதற்காக அனைத்து ஆசிரியைகளையுமே குறை சொல்ல முடியாது. மாணவர்களிடம் மிகக் கனிவாக நடந்து அவர்களுக்கு நல்ல இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ஆசிரியைகளும் இருக்கிறார்கள். களைகள் மட்டுமே உடனடியாக களையப்பட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் வேலைக்கு சேரும் முன் ஆசிரியர்/யைகளுக்கு ஒரு பொதுவான அரசமைப்பு மூலம் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும். அந்த சான்றிதழை பெறுபவர்கள் மட்டுமே பணியில் சேர முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அடிக்கடி ஆசிரியர்/யைகளுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். குறந்த பட்சம் மாதம் ஒரு முறை பயிற்சி வகுப்புகளாவது நடத்த வேண்டும். அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.

எல்லாம் இருக்கட்டும்.. பெண்களிடம் எப்போடா ராசா சகிப்புத் தன்மை இருந்தது குறைவதற்கு என்று கேட்க்கும் "ஆணி"ய வாதிகளை பார்த்து ஒன்று சொல்லிகொள்கிறேன்... " எல்லாம்.. பெண்ணியவாதிகளின் கண்மூடித் தனமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்கத் தான் அப்படி...." அவ்வ்வ்வ்வ்வ்வ் :(((((

Friday, 8 February 2008

வன விலங்குகளை வாழவிடுவோம்.

சமீபத்தில் கோவைக்கு அருகில் 3 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிர்விட்டன. அதில் ஒன்று தாயின் வயிற்றில் இருந்த குட்டி யானை. மிகக் கொடுமையான சம்பவம். இதற்கு காரணம் பேராசை பிடித்த பொதுமக்கள் தான்.சில ஆண்டுகளாகவே வனப் பகுதிகளை ஒட்டியுள்ள் பகுதிகளில் சிறுத்தை புலிகளால் மக்கள் உயிர் விடுவதும், யானைகளால் வயல்வெளிகள் பாதிக்கப் படுவதுடன் அவைகளால் மனிதர்களின் உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டது. இதற்கு காரணம் வனப் பகுதிகளை ஒட்டி வாழும் மக்களின் பேராசை தான் காரணம்.

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள தங்களின் விவசாய நிலபரப்பை அதிகரி்த்துக் கொள்ள காட்டை அழிக்கின்றனர். காட்டை அழித்து விவசாய நிலங்களாக மாற்றி இவர்கள் வளமாக வாழ்கிறார்கள். ஆனால் காட்டை நம்பி வாழும் வன விலங்குகளை பற்றி இவர்கள் சுத்தமாக கவலைபடுவதே இல்லை. வன விலங்குகளின் இருப்பிடத்தை இவர்கள் அழித்துக் கொண்டே இருந்தால் அவைகள் எங்கே போகும்?ஊருக்குள் தான் வரும். விலங்குகளின் இருப்பிடத்தை இவர்கள் ஆக்கிரமித்துவிட்டு , அவைகள் ஊருக்கு வந்து இவர்களை துன்புறுத்துவதாக கதறுகிறார்கள்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழிப்போம்னு தான பாரதி சொன்னார். தனியொரு மனிதனின் வளத்தை பெருக்க ஜகத்தினை அழிப்போம்னு சொல்லலையே. காட்டை அழித்து விளைநிலங்களாக மாற்றுவது மட்டுமில்லாமல் , விறகுக்காகவும் வேறு உபயோகங்களுக்காகவும் மரங்களை வெட்டி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் வழித் தடங்களை அழிக்கிறார்கள். வனவிலங்குகள் வழி தவறி ஊருக்குள் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். மேலும் மரங்களை வெட்டுவதால் மழை அளவு குறைந்து வனப் பகுதிக்குள் இருக்கும் நீர் ஆதாரங்கள் வற்றிவிடுவதாலும் அவைகள் தண்ணீருக்காக ஊருக்குள் வந்துவிடுகின்றன. இதற்கெல்லாம் மனிதர்கள் தான் காரணம்.

வனவிலங்குகள் அழியாமல் பாதுகாக்க வேண்டுமானால் காடுகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். ஏனெனில் காடுகளில் யானைகள் தான் வழித் தடங்களை உருவாக்குகிறது. இதனை பயன்படுத்தியே மற்ற விலங்குகள் வனத்தின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்று தங்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறது. மேலும் இந்த வழித் தடங்களை பயன்படுத்தியே அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பான பகுதிகளுக்கு எல்லா வன வினவிலங்குகளும் இடம் பெயர்கின்றன.

மக்கள் மேய்ச்சலுக்காக தங்களின் வளைப்பு கால்நடைகளை காடுகளின் விடுவதால் புதிய மரங்கள் உருவாவது தடுக்கப் படுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு உணவுகிடைப்பது குறைவதுடன் மழை அளவு குறந்து நீரில்லாமல் மரங்கள் காய்ந்து போக நேரிடுகிறது. இதனால் காடுகளில் தீப்பிடித்து வனமும் அதில் வாழும் உயிரினங்களும் அழிந்து விடுகின்றன. யானைகள் உருவாக்கும் பெரும் வழித் தடங்கள் காட்டுத் தீ பரவாமல் தடுக்க உதவுகிறது.

இப்படி பல வகைகளில் வன விலங்குகளுக்கு பயனுள்ள யானைகளை தந்தங்களுக்காக கொல்வது மட்டுமின்றி காட்டை அழித்து அவற்றை ஊருக்குள் வரவைத்து ரயிலிலும் பேருந்துகளிலும் மோதி ( பேருந்தில் அடிபட்டும் யானைகள் இறந்திருக்கின்றன) கொன்றால் அது யானைகளின் எண்ணிக்கையை மட்டுமின்றி பிற வன விலங்குகளின் எண்ணிக்கையும் குறைய செய்யும். ஆகவே யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை காப்போம். ஆக்கிரமிப்பு எண்ணத்தை கைவிடுவோம்.

கொசுறு : பாரதி ஜகம் என்று சொன்னது உலகத்தை அல்ல. வனத்தை தான். ஜகம் என்றால் வனம்(காடு) என்றும் பொருள் உண்டு. தனியொரு மனிதனின் பசிக்காக உலகத்தையே அழிக்கச் சொல்லும் அளவுக்கு பாரதி என்ன கொடூர உள்ளம் படைத்தவரா?.. அவர் காடு என்ற பொருள் பட சொன்னதை தான் நம்மாளுங்க உலகம்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருக்காங்க. வனத்தில் இருப்பதாக நம்பப் படும் மோகிணிக்கு தான் ஜகன் மோகிணி என்று பெயர சொல்லுகிறார்கள்.

Monday, 21 January 2008

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என் அன்புத் தோழியே!

ஒரு காலத்துல நம்ம நிலா அப்பா நந்து ஆஃபிஸ்க்கு வந்தார்னா உடனே சென்னை ஆன்லைன் அரட்டை பக்கத்தை திறந்து வச்சிப்பார். திரும்ப வீட்டுக்கு போற வரைக்கும் அதுலயே தான் இருப்பார்.எனக்கு தெரிஞ்சி ஒரு காலத்துல அவருக்கு தெரிஞ்ச இரண்டு இணையதளங்கள்... சென்னை ஆன்லைன் மற்றும் ஹாட்மெயில் மட்டும் தான். அவர் வேற எந்த இணையதளத்தையும் பார்த்ததா எனக்கு ஞாபகம் இல்லை. வீட்டுக்கு போய் என்ன கர்மத்த எல்லாம் பார்த்தாரோ... அதெல்லாம் எனக்கு தெரியாது.. :P.

சரி அப்டி என்ன தாண்டா அந்த சென்னை ஆன்லைன்ல இருக்குனு நெனச்சி நானும் அந்த பக்கம் ஒதுங்க ஆரம்பிச்சேன். அப்புறம் தான் அதோட மகிமை புரிஞ்சது. அட அட.. யாஹூ விட்டா சாட் பண்ண வேற இடம் தெரியாம இருந்த நான் சாட் ரூம்னா இப்டி தான் இருக்கனும்னு தெரிஞ்சிகிட்டேன்.உண்மையிலேயே வருத்தப் படாத வாலிபர் சங்கம் அங்க தான் இருந்தது. எனக்கு ரொம்ப அருமையா ஒத்துப்போன கும்பல் அது. அப்புறம் நானும் அதுலயே தவம் கெடந்தென்.:)..ரொம்ப அற்புதமான நண்பர்கள் எல்லாம் கெடைச்சாங்க. எங்க அராஜகம் தாங்காம அந்த சாட் ரூம் மூடி சில ஆண்டுகள் ஆகியும் எங்கள் நட்பு தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.அதில் நந்து அண்ணா பெயர் ஹூண்டாய்:)... என் பெயர் ICQ :). கூகுள் அவ்வளவு பிரபலம் இல்லாத சமயங்களில் நான் ICQ தான் அதிகம் பயன்படுத்தினேன்.I Seek You என்பதன் சுருக்கம் தான் ICQ. என் தோழி பெயர் நிலா.

அப்போது எனக்கு அறிமுகமானவள் தான் என் அன்புத் தோழி நிலா @ ப்ரியா.(இந்த பேரை படித்ததும் உங்களுக்கு ஏதெனும் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல:P ). சென்னை ஆன்லைன் அரட்டை பக்கம் மூடியதும் எங்கள் நட்பு யஹூவில் தொடர்ந்தது.பிறகு தொலைப்பேசியில் குறுஞ்செய்திகளாக, பிறகு தொலப்பேசி அழைப்ப்புகளாக வளர்ந்தது. என்னிடம் " மிகுந்த மரியாதை"யுடன் பேசும் நண்பர்களில் இவளும் ஒருத்தி.:).பிறகு அது ஒரு நாளைக்கு வெறும் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் மட்டும் பேசிக் கொள்ளும் நட்பாக வளர்ந்தது. போன் பில் கட்டியே கடனாளி ஆயிருப்பியேனு எல்லாம் கேக்கப் படாது. எனக்கு ஏர்செல் டூ ஏர்செல் ஃப்ரீமா :). இவளைப் பற்றி எனக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று சொல்லுமளவுக்கு எனக்கு பிடித்த என் நெருங்கிய தோழி.பின்ன இப்டி மணி கணக்குல பேசினா எப்டி தெரியாம போகும்.....

அவள் படிப்பு, அவள் நண்பர்கள், அவள் காதல், அவள் காதலன் , அவள் குடும்பம் , அவள் காதலன் குடும்பம், அதில் ஏற்பட்ட ப்ரச்சனைகள், உடல் எடை குறைக்க கடைபிடிக்கும் உணவு பழக்கங்கள், ஜிம்மில் எடுத்துக் கொண்ட பயிற்சிகள், அவள் காதலனை கைபிடிக்க பட்ட கஷ்டங்கள், அவமானங்கள், அவள் அம்மாவுடன் போடும் சண்டைகள்... இப்படி அவள் என்னுடன் பகிர்ந்துக் கொள்ளாத விஷயங்களே இல்லை. பல சமயங்களில் அவள் அம்மவுக்கும் அவளுக்கும் நடக்கும் சண்டைகளுக்கு நான் தான் நாட்டாமை:). அவள் அம்மா என்னையும் அவர் மகன் மாதிரி நினைத்து ரொம்ப பாசமா பேசுவாங்க. அவங்க அக்கா, அக்கா பசங்க எல்லாரும் இப்போ என் நண்பர்கள்.:). ஆனால் இன்றுவரை அவளை நான் நேரில் பார்த்ததில்லை.அவள் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்தாள். நேரம் இல்லாததால் போக முடியவில்லை. போட்டோ மட்டும் பார்த்திருக்கேன்.

ஆனால் அவள் என்னை நேரில் பார்த்திருக்கிறாள். :)
ஒரு நாள் வழக்கம் போல அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது திருமணதிற்கு நகைகள் வாங்க சென்னை செல்வதாக சொன்னாள். எந்த ரயிலில் செல்வது என்பது இன்னும் முடிவாகவில்லை என்று சொன்னதால் நானும் அதை பெரிதாக கண்டுக்கொள்ள வில்லை. ஏன்னா எனக்கு அப்போ ஊருக்கு போற ப்ளான் எதுவும் இல்லை.இருந்தால் நானும் அந்த ரயிலிலேயே செல்ல ப்ளான் பண்ணி இருப்பேன். அதனால் அவள் பயணத்தை பற்றி மறந்தேவிட்டேன். அடுத்து வந்த ஒரு ஞாயிற்றுகிழமையில் நான் கோவை எக்ஸ்ப்ரஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தேன். சேலம் வரை உக்காந்துட்டு தான் இருந்தேன். நமக்கு ரிசர்வ் பண்ணி எல்லாம் பயணம் பண்ணி பழக்கம் இல்லை( ஆனாலும் ரிசர்வ்ட் கோச்ல தான் ஏறுவோம்ல.) ... அதனால் ஈரோடு அல்லது சேலம் வரை தான் உட்கார இடம் கிடைக்கும். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எழுந்துகொள்வதும் பிறகு யாரும் உட்காராத இடம் பார்த்து உக்காருவதும் நம் பொழப்பு. அன்றும் சேலத்தில் அது போல் எழுந்து நின்றுக்கொண்டேன். அந்த கோச் ஃபுல் ஆய்ட்டதால நின்றுகொண்டு வந்தேன்.

கண்ணை மூடிக் கொண்டே SMS டைப் செய்யும் அளவுக்கு SMS அரட்டை அடிப்பவன் என்பதால் பயணத்தில் இருக்கும் போது அவ்வப்போது மொபைலை எடுத்துப் பார்ப்பது வழக்கம். ஆனால் அன்று நான் நின்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த சீட்டில் ஒரு குட்டி பாப்பா செய்துக் கொண்டிருந்த சேஷ்ட்டைகளை ரசித்துக் கொண்டு இருந்ததால மொபைலை மறந்துட்டேன்.( பக்கத்தில் இருந்த ஃபிகர நான் பார்க்கல :P ). எங்க ஊர் வந்ததும் என் பேக் எடுத்துக்கிட்டு இறங்கறதுக்கு சில நொடிகள் முன்பு மொபைலை எடுத்துப் பார்த்தால் நிலா@ப்ரியா மெஸேஜ்..... டேய் நாயே ஸ்டெப்ஸ் பக்கத்துல நிக்காதே. விழுத்து சாகப் போற. இன்னொரு மெஸேஜ்: ஐயாவுக்கு காஃபி குடிக்கிற பழக்கம் எல்லாம் இருக்கோ... இன்னொன்னு : லூசு பயலே ரயில்ல எதயும் குடிக்காத. வயித்தால போகப் போகுது.எதும் சுத்தமா இருக்காது... . எனக்கு செம ஷாக். மெஸேஜ் படிச்சி முடிக்கவும் ரயில் நிக்கவும் சரியா இருந்தது. திரும்பி பார்க்க கூட நேரம் இல்லை. கீழே இறங்கியதும் அவளை அழைத்தேன். போன் எடுத்ததும் கெக்கெ பிக்கெனு நான் ஸ்டாப் சிரிப்பு. "சஞ்சய் நான் உன்ன பாத்துட்டனே..." எனக்கு செம கோவம்.. இது வரைக்கும் நேர்ல பார்த்ததில்லை.ஒரு மணி நேரமா என்ன பார்த்திருக்கா. பக்கம் வந்து பேசவே இலை. கேட்டா சும்ம ஒரு சர்ப்ரைஸ் தாண்டா.. நான் அனுப்பின மெஸேஜ் பார்த்து நீ கண்டுபிடிபப்னு நெனச்சேன். நீ மொபைல் பாக்காம எந்த பொண்ண பாத்து ஜொள்ளு விட்டிருந்தியோ.. நான் என்ன பண்றதுனு கேக்கறா.:(. ஏண்டி எதுக்கு தான் சர்ப்ரைஸ் குடுக்கறதுனு ஒரு விவஸ்தை இல்லயா.? அப்புறம் என்ன அடுத்த ஒரு வாரம் சண்டை தான்.:).. அப்புறம் அவங்க அம்மா தான் சமாதானம் பண்ணி வச்சாங்க. எனக்கு கேக்கற மாதிரி அவள நல்லா திட்னாங்க. அதனால திரும்ப பேச ஆரம்பிச்சிட்டோம்.

இதுல என்ன கொடுமைனா நான் சேலம் வரைக்கும் எந்த சீட்ல உக்காந்துட்டு வந்தேனே அதுக்கு எதிர் சீட் தான் அவ ரிசர்வ் பண்ணி வச்சிருந்து இருக்கா.அவளும் அவங்க பெரியம்மாவும் வந்திருக்காங்க. அவங்க அம்மா வந்திருந்தா இந்த கொடுமை நடந்திருக்காது:(.அவ உக்காந்திருந்த இடத்திற்கு மேல தான் என் பை வைத்திருந்தேன். பை எடுக்கும் வரை பார்த்திருக்கா.பாவி ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. சரி என்ன பன்றது உண்மையான அன்புக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா என்ன?

....அதாகப் பட்டது மக்களே இந்த ராட்சஷிக்கு வர ஞாயிற்றுக்கிழமை டும்..டும்..டும்...ஒரு அப்பாவி பைய்யனின் வாழ்க்கை வீணாகப் போகிறது... பாவம் அந்த பையன் இந்த பிசாசுகிட்ட மாட்டிகிட்டு என்ன கொடுமை எல்லாம் அனுபவிக்கப் போகிறானோ? :P...

....இவர்கள் வாழ்க்கையில் எல்லா செல்வங்களையும் பெற்று நலமாகவும் சந்தோஷமாகவும் மணவாழ்க்கை வாழ வாழ்த்துவோம்....

இந்த
பதிவை முடிக்கும் போது இந்த தோழியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி :
1.கல்வி
2.அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொன்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்லொழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி
என்னும் 16 செல்வங்களையும்ம் பெற்று பெருவாழ்வு வாழ்க! :)

.....ரிப்பீட்டேய்....
..இந்த தலைப்பு வைத்த பின்பு தான் இந்த செய்தி வந்தது.. என்ன ஆச்சர்யம்?! :)

ஆஃப் தி ரெக்கார்ட் : இவளிடம் பேசும் போது நந்து அண்ணா ஒரு காலத்தில் இவளை விரும்பியதாகவும் ...நிலா குட்டிக்கு இவள் நினைவாகத் தான் அந்த பெயரை வைத்ததாக சொல்லிவிட்டேன். அவளிடம் பேசி முடித்தவுடன் நம்ம அண்ணாச்சிகிட்டயும் இத சொல்லிட்டேன். கொஞ்சம் உசுப்பேத்தி விட்டாளே ஒரு வழி ஆகிவிடும் ஆள் இவள். ஆகவே உடனே நந்து அண்ணாவுக்கு கால் பண்ணிட்டு இத கேட்டுட்டா. நம்ம ஆள் வெரும் வாய மென்னுட்டு இருக்கிறவர். அவள் கிடைத்தால் .. சொல்லவா வேணும்... நான் சொன்னது நிஜம் என்று சொனன்தோடு இல்லாமல் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டையலாக் வேற அள்ளி விட்டிருக்கிறார். யாரயாச்சும் உசுப்பேத்திவிட்டு ஒடம்ப ரணகளமாக்கிப் பாக்கறது எங்களுக்கு கை வந்த கலை.. :P...அவளுக்கு தலை கால் புரியவில்லை. அன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு என்னை சரியா தூங்க கூட விடல. நடு ராத்திரி கால் பண்ணி இதா பத்தி சொல்லி உணர்ச்சிவசப் பட்டு பேசுவாள். டேய்_____ நிஜமாவே நந்து என்ன லவ் பண்ணானா?( இவங்க 2 பேரும் மச்சான்னு சொல்லி தான் பேசிப்பங்க... இப்போ தலைவர் யார்க்கிட்டயும் அவ்வளவா பேசிக்கிறதில்லைனு நிலா பாப்பா சொல்லிச்சி:)..)...உன்கிட்ட வேற என்னடா சொன்னான் என்ற ரீதியில் செமையா டார்ச்சர் குடுக்க ஆரம்பிச்சிட்டா. இந்த இம்சை தாங்க முடியாம ... அட தண்டக் கர்மமே.. நீ என்ன பொறக்கும் போதே லூஸா இல்லை அப்டி வளத்துட்டாங்களா?.. சும்ம உன்ன வெறுப்பேத்த தான் 2 பேரும் ப்ளான் பண்ணி அப்டி சொன்னோம். அவர் பொண்ணுக்கு நல்ல தமிழ் பேர் வைக்கனும்னு நெனச்சி தான் அந்த பேர் வச்சார். உனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற"
உண்மை"யை சொல்லி.. அன்று உலகத்தில் இருந்த அத்தனை கெட்ட வார்த்தைகளிலும் திட்டு வாங்கியது தனிக் கதை. :P

Tamiler This Week