இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comTuesday, 21 April 2009
Sunday, 22 February 2009
அபிஅப்பா மற்றும் இம்சைக்கு சவால் - ஜட்டிக்கதைகள்
Posted By...
Thursday, 20 November 2008
Reversible Specialist Nanthu f/o Nila
இதுல இரண்டாவது பாதியை பின்னாடி ( யாரு பின்னாடியா? அடிங்க! ) இருந்து படிக்கனுமாம்.. நந்துf/oநிலா சொல்றார். :)
Friday, 12 September 2008
மங்களூர் சிவா திருமண புகைப்படங்கள்
டோண்டு : நம்ம வயசு 26ன்னு சொன்னதுக்கு இந்த சஞ்சய் பய எதோ கமெண்ட் அடிச்சத கேட்டு அப்துல்லா கன்னா பின்னானு சிரிச்சாரே.. என்ன சொல்லி இருப்பான் இவன்? :(
கண்ணாடி போடாததால் 23 வயது குறைவான தோற்றத்துடன் தங்க தாமிரா.. கொள்ளை கொள்ளும் வெள்ளை சிரிப்புக்காரர்.. :)
வெண்பூ : சரி சரி அழாத.. நீ தான் உண்மையான வெண்பூ... இனி என் பேரை போலி வெண்பூ என்று மாத்திக்கிறேன்.. :))
வெண்பூ : மேடம்.. ரொம்ப பசிக்கிது.. கொஞ்சமா சாப்ட்டுகிறேனே ப்ளீஸ்...திருமதி வெண்பூ : ஹ்ம்ம்.. சரி சரி.. கொஞ்சமா சாப்டுங்க.. இல்லைனா உங்களுக்கு தான் பெரிய தொப்பைனு தாமிரா எல்லார்கிட்டயும் சொல்லிடுவார்..
வெண்பூ : சரிங்க மேடம்..
திருமதி வெண்பூ : சரி சரி .. பேச்சை கொறைங்க.. சீக்கிறம் சாப்ட்டு எனக்கு காபி ஆத்தி குடுக்கிற வழிய பாருங்க..
உ.தமிழன் : இதுக்கு தான் கம்பனி மீட்டிங்க் போறேன்னு வீட்ல சொல்லிட்டு தனியா வரனும்னு சொல்றது... தம்பி வெண்பூ இன்னும் வளரவே இல்லை.. :)
மங்களூர் சிவா திருமணம்! (ஒரு லைவ் ரிபோர்ட்) - தாமிரா
மேரேஜ் விமர்சனம் ஆப் மங்களூர் சிவா - புதுகை அப்துல்லா
-
மங்களூர் சிவா திருமணம் - டோண்டு ராகவன்
Friday, 4 April 2008
ஏப்ரல் மாத PIT போட்டிக்கு
கடந்த வாரம் ஊருக்கு போயிருந்த போது எடுத்தது. இந்த மாத PIT தலைப்புக்கு பொருந்துவது போல் தோன்றியது...








அபப்டியே இங்கயும் பாக்கலாம்.. http://www.flickr.com/photos/sanjaimgandhi/
Thursday, 20 March 2008
முதல்கட்ட சூறாவளி சுற்றுப்பயணம் இனிதே நிறைவுற்றது.
கோவை, சூலூர், திருப்பூர், அவினாஷி, பல்லடம், சோமனூர், பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், காங்கேயம், தாராபுரம், வெள்ளக்கோயில், கூடலூர், ஊட்டி, அருவங்காடு, கோத்தகிரி, குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம்..... வழக்கமான சுற்றுப்பயணமாக இல்லாமல் கோடை துவங்கிவிட்டதால் ஒரு முதல் கட்ட சூறாவளி சுற்றுப்பயணம் இனிதே முடித்துவிட்டேன். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடி சுற்ற்ப்பயணம் போக வேண்டியது தான்.
தினமும் இரவு 12 மணிக்கு மேல இரவு உணவு.. அதிலும் பெரும்பாலும் பஞ்சாபி தாபா ஹோட்டல்களிலேயே சாப்பிட்டு வயிறு அநியாயத்துக்கு எரிந்துக் கொண்டிருக்கிறது. அணைக்க எதாவது ஆக்கப் பூர்வமான ஐடியா குடுங்க மகா ஜனங்களே.
முதல்கட்ட சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான நேற்று மிகுந்த சிரமத்துக்கிடையில் :) காலை 4 மணிக்கு எழுந்து பயணத்தை துவங்கி ஊட்டி காபி ஹவுஸில் சிற்றுண்டி முடித்துக் கொண்டு வழியில் மான், காட்டுபன்றி, மயில், சிங்கவால் குரங்கு போன்ற சொந்த பந்தங்களை எல்லாம் சந்தித்து விட்டு கூடலூர் சென்று திரும்ப ஊட்டி வரும் வரை எல்லாம் சுமூகமாகத் தான் முடிந்தது. பிறகு ஊட்டிக்கும் குன்னூருக்கும் இடையில் பலத்த மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. கொஞ்சம் மழை பெய்தாலும் "தண்ணி" மப்பில் மரங்கள் கவிழும். நேத்து பலத்த மழை. மண்சரிவு ஏற்படாமல் இருக்கனுமே என்று நினைத்துக் கொண்டே வந்தோம். மரம் விழுந்ததோடு நின்றது. எப்படியும் மரத்தை அப்புறப் படுத்தி போக்குவரத்து சீராக 2 மணி நேரமாவது ஆகும். நல்ல வேளை ஒரு போலிஸ் அங்கிள் டேக் டைவர்ஷன் சொல்லி ஒரு ஒத்தையடி பாதையை காண்பித்தார். அவர் பேச்சை கேளாமல் சில லேம்ப் ஆயில்ஸ் மெயின் ரோட்டிலேயே சென்றார்கள். எப்படியும் 2 மணி நேரத்திற்கு மேல் அவதி பட்டிருப்பார்கள். போலிஸ் மாமா சொன்ன வழியில் சென்றதால் எந்த சிரமமும் நெரிசலும் இல்லாமல் அருவங்காடு வழியாக குன்னூர் வந்து சேர்ந்தோம். வழியில் மேட்டுப்பாளையத்தில் 11.30 மணிக்கு ஒரு ரோட்டோரக் கையேந்திபவனில் சுட சுட தோசை சாப்பிட்டு கோவை வந்து சேர்ந்தோம்.
ச்ச... எவண்டா கண்டுபிடிச்சான் ராத்திரியில் ஆடை மாத்திக் கொண்டு படுக்கனும் என்று.தினமும் ராத்திரி 12 மணிக்கு மேல தான் வீட்டுக்கே வர முடியுது. இதுல இந்த கன்றாவி எல்லாம் பண்ணிட்டு படுக்கனுமாம். ச்ச.. ஒரே குஷ்டமப்பா :(((....
..... இன்று காலையில் தொலைகாட்ச்சியில் செய்தி : "குன்னூருக்கும் மேட்டுபாளையத்துக்கும் இடையில் மண்சரிவு. போக்குவரத்து நிறுத்தம்." ஆஹா... ஜஸ்டு மிச்சுடு....
கூடலூர் போகும் வழியில் கேமராவில் சுட்டது.. :)
என்னா ஒரு வில்லத் தனமான பார்வை.. ஹிஹி.. பக்கத்தில் போக பாயந்துகொண்டு தூரத்தில் இருந்தே எடுத்த படம் இல்லை :P



































