இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner
Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Wednesday, 22 April 2009

ஓ போடாதிங்க.. ஓட்டு போடுங்க..

தேர்தல் நெருங்கிவிட்டது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள். வேட்பு மணுத் தாக்கலும் தமிழகத்தில் தொடங்கிவிட்டது. பெரும்பாலானவர்களுக்கு யாருக்கும் ஓட்டுப் போடுவதில் விருப்பம் இல்லை போலும். அதனால் 49ஓ விதியை பயன்படுத்தப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இது பல தவறான செயல்கள் தொடர்வதற்கும் நல்ல விஷயங்கள் நடக்காமலே போவதற்கும் தான் வழிவகுக்கும் என்பது என் அபிப்ராயம்.

49ஓ விதியை பயன்படுத்த நினைப்பதற்கு காரணம், அரசியல் கட்சிகள் அறிவிக்கும் வேபாளர்களின் மேல் நம்பிக்கை இல்லாமல் தானே. எல்லாத் தொகுதியிலுமே பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருப்பார்கள். அதில் பாதிப் பேர் சுயேட்சை வேட்பாளர்களாக இருப்பார்கள். அவர்களில் நிச்சயம் ஒருவராவது நாம் எதிர்பார்க்கும் தகுதியுடன் இருப்பார். அதாவது, நன்கு படித்தவராகவும், அந்த பகுதியின் மக்கள் நலனிலும் வளர்ச்சியிலும் ஆர்வம் கொண்டவராகவும், எளிமையானவராகவும், எளிதில் அனுகக்கூடியவராகவும் இருப்பார். அவருக்கு உங்கள் வாக்கை பதிவு செய்யலாமே.

நீங்கள் ஒரு சுயேட்சைக்கு வாக்களிப்பதன் மூலம் அவருக்கு ஆதரவு அளிக்கிறீர்கள் என்று மட்டும் காட்டுவதில்லை, களத்தில் நிற்கும் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் உங்கள் வாக்கை பதிவு செய்திருக்கிறீர்கள் என காட்ட முடியும். அதன் மூலம் வரும்காலத்தில் அரசியல் கட்சிகளும் தற்போது அதிக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரைப் போன்ற தகுதியில் இருப்பவருக்கு வாய்ப்பளிக்க முன்வருவார்கள். இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

அது மட்டுமல்ல, அவ்வாறு செய்வதன் மூலம் மேலும் பல நல்லவர்கள், அதாவது நாம் எதிர்பார்ப்பது போன்ற தகுதி உள்ளவர்கள் அரசியலுக்கு வருவார்கள். அவர்கள் மூலம் இந்த தேசத்தின் தலை எழுத்தையே மாற்ற முடியும். அதை விட்டு 49ஓ விதியை பயன்படுத்தி ஒட்டு மொத்தமாக வாக்களிப்பதை புறக்கணித்தால் நம் விருப்பம் என்ன என்பதை எப்படி உணர்த்த முடியும்? நாம் எது போன்ற வேட்பாளரை விரும்புகிறோம் என்பதை எப்படி வெளிப்படுத்த முடியும்?.

ஆகவே, உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும் எதாவது ஒரு வேட்பாளருக்கு வாக்களித்து உங்கள் ஜனநாயகக் கடமையை செய்யுங்கள். 49ஓ விதியை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக யோசியுங்கள். முடிந்தால் தவிர்க்கப் பாருங்கள்.

டிஸ்கி : தட்ஸ்தமிழுக்காக எழுதிய கட்டுரை.

அங்கே வாசிக்க

Tuesday, 13 January 2009

வாக்குரிமை இங்கு ஏலம் விடப் படும்

வாக்குகள்... காசுபார்க்க...
அன்பான வாக்காளப் பெருமக்களே!
உங்கள் வாக்குரிமைகளை ஏலம் விட்டு நல்ல விலை பெற்றுத் தருவதற்கு புதியதாக வாக்குரிமை ஏல மையம் அரம்பிக்கப் பட்டுள்ளது. எங்கள் கிளைகள் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் செம்மையாக செயல்படும்.

40 ஆண்டுகால கழக ஆட்சிகளின் புண்ணியத்தில் இன்னும் இலவசங்களை எதிர்பார்த்து வாழவேண்டிய உன்னத நிலையிலேயே வாக்காளர்கள் இருப்பதால் தேர்தல் சமயங்களில் பணம் பார்க்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற அரிய நோக்கத்தில் ஆரம்பிக்கப் பட்டுள்ளது இந்த ஏல மையம். நாம் இன்னும் 4000 ரூபாய் கலர் டிவிக்கும் 750 ரூபாய் கேஸ் அடுப்புக்கும் தேர்தல் சமயத்தில் இலைக்கு அடியில் வைத்துத் தரப்படும் 2000 ரூபாய்க்கும் ஆளாய்ப் பறக்கும் கேவலமான நிலையில் இருப்பதாலும், துவைக்க சோப்பு வாங்கக் கூட வழி இல்லாமல் அழுக்கு வேஷ்ட்டியுடன் அரசியலுக்கு வந்தவர்கள் எல்லாம் மகாராஜாக்களை போல் பளிங்கு மாளிகைகளில் வாழ்ந்துக் கொண்டு தேர்தலில் பணமழை பொழிவதாலும் இதை செவ்வனே பயன்படுத்திக் கொள்ள எங்கள் நிறுவனம் உங்களுக்கு உதவி செய்யும்.

இங்கு தனி வாக்காளராகவும், குடும்பமாகவும் பதிவு செய்துக் கொள்ளலாம். தனி வாக்காளர் பதிவுக்கு 10% சேவைக் கட்டணமும், குடும்பமாய் பதிவு செய்தால் 8% சேவைக் கட்டணமும் வசூல் செய்யப் படும். பல்க் புக்கிங் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் பரிசுப் பொருட்களும் வழங்கப் படும். அதாவது தெருவில் இருப்பவர்களை எல்லாம் சேர்த்து அவர்களின் வாக்குரிமைகளை ஒட்டு மொத்தமாய் அவர்களின் அனுமதியுடன் ஒருவரே பதிவு செய்யலாம். இதனால் பேப்பர் செலவுகள் மிச்சம் ஆகும். இதனால் மரங்களை காக்கலாம். இது போன்ற பல்க் புக்கிங் செய்பவர்களுக்கு 7% மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படும்.

சில கிராமங்கள் மிகவும் கட்டுக் கோப்பாய் இருக்கும். அது போன்ற கிராமங்களின் தலைவர்கள் செய்யும் பல்க் புக்கிங் வாக்குகளுக்கு மிக அதிக சலுகைகள் வழங்கப் படும். அவர்களுக்கு 5% மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்கப் படும்.

நிபந்தனைகள் :
  • குறைந்த பட்சம் ஒரு தேர்தலுக்காவது உங்களை... சாரி.. உங்கள் வாக்குகளை ஏலம் விட நிறுவனத்திற்கு உரிமை உண்டு.
  • உங்கள் வாக்குகளுக்கு குறைந்த பட்ச விலையை நீங்கள் நிர்ணயிக்கலாம்.
  • குறைந்தபட்ச விலையை விட பல மடங்கு கூடுதல் விலைக்கே ஏலம் விடப் படும். ஒருவேளை உங்கள் ஏலத் தொகை உங்களுக்கு கட்டுபடியாகாத பட்சத்தில் முதல் தேர்தலுக்குப் பிறகு ஒப்பந்தத்தை ரத்து செய்துக் கொள்ளலாம்.
  • சேவைக் கட்டணங்கள் உங்கள் வாக்குரிமையின் ஏலத் தொகையின் மதிப்பிலிருந்து கணக்கிடப் படும்.
  • பதிவு செய்த பிறகு வரும் முதல் தேர்தலுக்கு முன்பே நிறுவனத்திலிருந்து விலக விரும்பினால் 1000 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.
ஏலம் விடும் முறை:
தேர்தல் அறிவித்தவுடன் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்வார்கள். பிறகு குறிப்பிட்ட தேதியில் எங்கள் உறுப்பினர்களின் வாக்குரிமைகள் ஏலம் விடப் படும். தொகுதிவாரியாக ஏலம் விடப் படும். அதிக விலை கொடுக்க முன்வருபவர்களுக்கு அவர்கள் ஏலம் எடுக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு எற்ப உங்கள் முகவரி அடங்கிய விஷேஷ வாக்கு அனுமதி சீட்டு வழங்கப் படும். அதிக எண்ணிக்கையில் ஏலம் எடுக்கும் கட்சிக்கு 1000 வாக்காளருக்கு 10 வாக்காளர்கள் இலவசமாக அளிக்கப் படும். தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு உங்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் படும். உங்கள் முகவரி உள்ள விஷேஷ சீட்டை உங்களிடம் கொடுக்கும் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்தக் கட்சி தான் உங்களை ஏலம் எடுத்திருக்கும்.

இதன் உயரிய நோக்கம் :
தேர்தல் பிரச்சார செலவுகள் குறையும். வாக்காளர்களின் நேரம் விரயமாகாது. பண பட்டுவாடாவில் குழப்பம் அல்லது தில்லுமுல்லு நடக்காது. உங்கள் வாக்குக்கு உரிய பணம் உங்களுக்கு மிகச் சரியாக கிடைக்கும்.கலவரங்கள் தடுக்கப் படும். தேவையானது சுமூகமக கிடைப்பதால் வாக்கு மையத்தில் ஏற்படும் கலவரங்கள் குறையும். இதனால் அரசாங்கத்திற்கு டென்ஷன் குறையும். யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நம்மக்கு ஒரு புண்ணாக்கும் கிடைககது. ஆகவே தேர்தல் சமயத்தில் காசு பார்க்கும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது. எபப்டியும் யார் ஆட்சிக்கு வந்தாலும் சாமானிய மக்கள் வாழ்க்கை மேம்பட இன்று செய்யப் போவதில்லை. அப்படி செய்தால் இப்படி இலவசத்துக்கு அலைவோமா?. ஆகவே கேவலமாய இலவசங்களை பெறாமல் நம் வாக்குரிமையை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து கவுரவமாய் நாமே கடைக்கு போய் தேவையானதை வாங்கும் நிலை வரவேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தில் உயரிய நோக்கம்.

முந்துங்கள்.. முதலில் வரும் 100000 பேருக்கு ஒரு பென்சில் இலவசமாக வழங்கப் படும். இலவசம்னா தான் வாய பொளந்துட்டு வருவோமே.

மெலும் விவரங்களுக்கு அனுகவும் : e(lection)Bay.com

Posted by..

Friday, 9 January 2009

திருமங்கலத்தில் அதிமுக தான் ஜெயிக்கும்.

சென்ற பதிவின் தலைப்பு கும்மிக்கு மட்டும் இல்லை. நிஜமும் கூட. அதிமுக தான் ஜெயிக்கும். நம்ம நாட்ல இன்னும் சின்னத்தை பார்த்து ஓட்டுப் போடுபவர்கள் தான் அதிகம். அதுவும் சிறிய பின்தங்கிய பகுதியான திருமங்கலம் மாதிரியான பகுதியில் வேட்பாளரையோ நாட்டு/மாநில நலனையோ வேறு எந்த கருமத்தையோ பார்த்து வாக்களிக்க மாட்டார்கள். ஒன்லி சின்னம் மேட்டர்ஸ். :)

ஆகவே எந்த கூட்டணி பலமோ அந்தக் கூட்டணி ஜெயிக்கும். கடந்த தேர்தலில் திமுக+காங்கிரஸ்+பாமக+கம்யூனிஸ்டுகள் எல்லோரும் ஓரணியில் இருந்தார்கள். அதிமுக+மதிமுக ஓரணியில் இருந்தார்கள். பெரிய கூட்டணியாக இருந்தும் திமுக தோல்வி அடைந்தது. மதிமுக தான் வென்றது.

இப்போது திமுகவுடன் இருப்பதோ காங்கிரஸ் மட்டுமே. வி.சிறுத்தைகளால் தென்மாவட்டங்களில் எந்த பயனும் இல்லை. அவர்களால் பயனும் இல்லை.பாதகமும் இல்லை. அப்போ பெரிய கூட்டணியா இருந்தும் தோல்வி அடைந்த திமுக இன்று சிறிய கூட்டணி ஆகிவிட்டது.

மாறாக அன்று சிறிய கூட்டணியாக இருந்த அதுமுக கூட்டணி இன்று பலமான கூட்டணியாக இருக்கிறது. பாமகவின் ஓட்டுகள் நிச்சயம் அதிமுகவிற்கு தான் விழும். இல்லை என்றால் ராமதாஸ் நடுநிலை வகிப்பதாக அறிவித்திருக்க மாட்டார். பாமக தொண்டர்கள் திமுக கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் இருப்பதால் தான் இந்த நிலை.

சரி.. ஆளுங்கட்சி செல்வாக்கை வைத்து தில்லுமுல்லு செய்து ஜெயிக்கலாம் என்று நினைத்தாலும் நரேஷ்குப்தாவும் கோபால்சாமியும் அதுக்கும் வச்சிட்டாங்க ஆப்பு. மாநில காவல்துறையை நம்பாமல் துணை ராணுவப் படையை இறக்கி விட்டுவிட்டார்கள். அதோடு விட்டார்களா? எப்போதும் திமுகவிற்கு விசுவாசமா இருக்கும் தமிழக ஆசிரியர் பெருமக்களை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டு மத்திய அரசு ஊழியர்களை வாக்கு மையங்களில் பணி அமர்த்திவிட்டார்கள். ஆகவே ஆளுங்கட்சிக்கே உரிய அஜால் குஜால் வேலைக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. ஆகவே எந்த நவீன கேமராவை வைத்து எந்த ஆங்கிளில் பார்த்தாலும் அதிமுக வெற்றி தான் தெளிவாகத் தெரிகிறது..

பிறகு எதற்கு 2 கூட்டணிகளும் சேர்ந்து தனித்தனியா 150 கோடி ரூபாய்க்கு மேல செலவு பண்ணதா பேசிக்கிறாய்ங்க.. இவ்வளவு முதலீடு பண்ணவங்க இனி வரும் நாட்களில் இதை வட்டியோட சம்பாதிக்க என்ன எல்லாம் பண்ணுவாய்ங்களோ? அது ஒன்னும் சொந்த பணம் இல்ல.. அடிச்ச பணமாத் தான் இருக்கு.. ஆனாலும் அடிச்சதுக்கு அப்புறம் அவங்க சொந்தப் பணமா ஆயிருக்கும் இல்ல..என்னமோ போங்க...

டிஸ்கி : திமுகவும் காங்கிரஸும் கூட்டணி கட்சிகளா இருந்தா எல்லாத்துக்கும் சப்பை கட்டு கட்டனுமா என்ன? போங்கய்யா.. )

Posted by..

Tamiler This Week