இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSaturday, 28 February 2009
தமிழ்மணம் விருதுகள்
தமிழ்மணம் விருதுகள் அறிவித்ததிலிருந்தே அதில் எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. ஆகவே அதைப் பற்றி எதும் அறிந்துக் கொள்ளவும் இல்லை. வாக்கெடுப்பு போன்றவற்றில் கலந்துக் கொள்ளவும் இல்லை. ஆனாலும் விருதுகள் பற்றிய சர்ச்சைகள் உண்டானதும் அப்ப்டி யாருக்குத் தன் குடுத்திருக்கிறார்கள் என்று பார்க்கத் தோன்றியது. அடங்கொக்க மக்கா.. எல்லாரும் நம்மாளுங்க. இப்போது பதிவுகள் பக்கம் வருவது பெரிய அளவில் குறைந்துவிட்டதால், ஒட்டுமொத்தமா எல்லாருக்கும் ஒரே இடத்துல வாழ்த்து சொல்லிடறேன். இதில் ஒரு சில பதிவுகள் மட்டுமே படித்திருப்பேன். ஆனாலும் விருது வாங்கிய நண்பர்களுக்காக இந்த வாழ்த்துப் பதிவு..
தனித்திரு விழித்திரு பசித்திரு….. - செந்தழல் ரவி
வைகை - இராம்/Raam
Dubukku- The Think Tank - Dubukku , Dubukku- The Think Tank - Dubukku
Nila - நிலா
உண்மைத்தமிழன் - உண்மைத் தமிழன் , உண்மைத்தமிழன் - உண்மைத் தமிழன்
அலிபாபாவும் 108 அறிவுரைகளும் - தாமிரா
எண்ணச் சிதறல்கள் - எம்.ரிஷான் ஷெரீப்
பயணங்கள் Payanangal - புருனோ Bruno , பயணங்கள் - புருனோ Bruno , பயணங்கள் - புருனோ Bruno
ஸ்மைல் பக்கம் - லிவிங் ஸ்மைல் , ஸ்மைல் பக்கம் - லிவிங் ஸ்மைல்
மாதவிப் பந்தல் - kannabiran, RAVI SHANKAR (KRS) , மாதவிப் பந்தல் - kannabiran, RAVI SHANKAR (KRS)
கேன்சருடன் ஒரு யுத்தம் - அனுராதா
“தூயா” - Thooya
பல்சுவை! - SP.VR. SUBBIAH
குசும்பு - குசும்பன்
காலம் - கோவி.கண்ணன்
தமிழ்மணம் விருது பெற்ற எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் சாமியோவ்வ்வ்வ்... :)
Wednesday, 13 August 2008
பதிவர் பெயரிலியின் பித்தலாட்டம்.
பெயரிலி என்ற பதிவர் என்னை பற்றி எதோ தவறான பின்னூட்டம் போட்டிருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பதிவில் இதெல்லாம் சகஜமப்பா என்று விட்டுவிட்டேன். சமீபத்தில் தமிழ்மணம் திறந்த போது அவர் பதிவு ஒன்று முகப்பில் தெரிந்தது. அப்போது நண்பர் சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவர் பதிவிற்கு சென்று பார்த்தேன். நல்ல வேளையாக அவர் பதிவில் தேடும் வசதியை வைத்திருக்கிறார். அதை பயன்படுத்தி என்னை பற்றிய பின்னூட்டத்தை கண்டுபிடித்தேன். படித்ததும் பயங்கர அதிர்ச்சி. ரொம்ப தரக் குறைவான வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார்.
அவர் பின்னூட்டம் 1 :
//
-/பெயரிலி. said...
Wed Jul 16, 07:18:00 AM 2008//
இந்த பதிவர் இப்படி ஒரு பின்னூட்டமே எனக்கு போடவில்லை. அபப்டி போட்டிருந்தால் அது தானாகவே பிரசுரம் ஆகி இருக்கும். என்னால் தடுத்திருக்க முடியாது. ஏனென்றால் நான் மட்டுறுத்தலை நீக்கி பல மாதங்கள் ஆகிறது.
இதை சொல்ல இவர் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் இவர் யாரென்றே எனக்கு தெரியாது. இதர்கு முன் இவர் பதிவுகள் எதையும் நான் படித்ததும் இல்லை. இவரை பற்றி நான் கேள்விப்பட்டதும் இல்லை. இவர் யாராக இருந்து தொலைத்தாலும், நான் தமிழ்மணத்தில் தான் என் பதிவுகளை இணைத்துள்ளேன். நான் எழுதிய அந்த குறிபிட்ட பதிவு தமிழ்மணத்திற்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தால் , அதை எழுதிய நான் தமிழ்மணத்தை பயன்படுத்தக் கூடாது என்று தமிழ்மணம் முடிவு செய்தால் அதை அதிகாரப் பூர்வமாக தமிழ்மணம் அல்லது அதன் அதிகாரப்பூர்வ வலைப்பூவில் அறிவிக்கட்டும். அந்த அறிவிப்பை கண்ட அடுத்த வினாடி என் வலைப்பூக்களை விலக்க சொல்லும் வேண்டுகோள் அவர்களுக்கு போகும். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்து வாழ்பவன். எங்களுக்கு தன்மானத்தை விட பெரியது எதுவும் இல்லை. நான் என் வலைப்பூவை தமிழ்மணத்தில் இணைத்திருக்கும் போது அவர்கள் தான் இந்த கோரிக்கையை வைக்க வேண்டும். கண்ட கண்ட அனாமதேயங்களுகெல்லாம் இதை சொல்லும் உரிமை கிடையாது...
தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி. வலைத்தளம் இல்லை. அதன் வேலை அதில் இணைக்கப்பட்டுள்ள பதிவுகள திரட்டுவது மட்டும் தான். தமிழ்மணம், தனக்கென சொந்தமான ஆக்கங்களால்/படைப்புகளால் செயல்படும் வலைத்தளம் அல்ல. அதன் வளர்ச்சியே அதில் இணைக்கப்பட்டுள்ள வலைப்பூக்களால் தான். ஆகவே அந்த வலைப்பூக்களுக்கு சொந்தமானவர்கள் தமிழ்மணத்தின் செயல்பாடுகள் அல்லது கொள்கைகளில் குறை இருப்பதாக தெரிந்தால் சுட்டிக்காட்டும் அல்லது தட்டிகேட்கும் உரிமை பெற்றவர்கள் தான். நான் தமிழ்மணத்தில் இணைந்த பின்பு ஆங்கிலத்தில் எழுதி இருந்த சில நண்பர்களை தமிழில் எழுதவைத்து தமிழ்மணத்தில் இணைத்திருக்கிறேன். ஆகவே கேள்வி கேக்கவும் எனக்கு உரிமை இருக்கிறது. இணையத்தில் நாம் பயன்படுத்தும் பல சேவைகளில் குறை இருப்பின் அந்த சேவை அளிப்பவரை விமர்சிக்கிறோம். கேள்வி கேட்கிறோம். யாரும் வெளியே போ என்று சொன்னதில்லை. யாஹூ, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் உட்பட. :)..
பின்னூட்டம் 2 :
//
-/பெயரிலி. said...
இவ்ளோதான், இந்த போலித்தனமான சஞ்சய் வீரம்;
மேலே போட என் பின்னூட்டத்தினை விடவில்லை; ஆனால், அதற்குப் பிறகு நான் அநாமதேயமாக காப்பரேட் குறித்துப் போட்ட பின்னூட்டத்தினை விட்டிருக்கிறார்.
நாளைக்கு காலவரிசைப்படி, நான் போட்ட பின்னூட்டம் பொருந்தி அங்கே இருந்தால், அவருடைய நான் அனுமதித்தேனே க்ளெய்ம் சரியென்று படாமலிருக்க எதற்கும் ஒரு திரைச்சொட்டு இப்போது எடுத்திருக்கிறேன். வர வர எவரையுமே நம்பமுடிவதில்லை
அது இங்கே
Wed Jul 16, 07:36:00 AM 2008//
அட அனாமதேயமே... மூளை என்ற ஒரு வஸ்து இருக்கா உமக்கு?. நீங்க மேலே சொல்லி இருக்கிற பின்னூட்டமே எனக்கு வரலையே. அப்புறம் எங்க போயி உங்க பின்னூட்டத்த விடறது?.. எனக்கு நீங்க அந்த பின்னூட்டம் போட்டிருந்தா தானாகவே பிரசுரமாகி இருக்கும். ஏனெனில் முன்பே சொன்ன மாதிரி நான் பின்னூட்டம் மட்டுறுதல் செய்வதில்லை.உங்களுக்கு முன்பு தமிழ்மணத்தின் நிர்வாகிகளுல் ஒருவரான திரு. சுந்தரமூர்த்தி அவர்கள் போட்ட பின்னூட்டம் பாருங்க. அடுத்து உங்கஅனாமதேய பின்னூட்டம் பாருங்க.கீழே ஆதாரம்....
பொதுவாக மட்டுறுத்தல் இல்லாத பின்னூட்டங்களுக்குத் தான் மின்னஞ்சலாக வரும் நேரமும் பின்னூட்டம் இட்ட நேரமும் ஒன்றாக இருக்கும். மட்டுறுத்தல் செய்யப்படும் பின்னூட்டங்களில் நேரம் மாறி இருக்கும். அதாவது பின்னூட்டம் இட்ட நேரத்திற்கு பிந்தைய நேரமே மின்னஞ்சல் வந்த நேரமாக இருக்கும்.மட்டுறுத்தல் செய்யப்படும் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்ட நேரமும் மின்னஞ்சல் வந்த நேரமும் வேறு வேறாக இருக்கும். பின்னூட்டம் இடுவதற்கும் அதை மட்டுறுத்தி வெளிவருவதற்கும் மிக குறந்த பட்ச நேர வித்தியாசமாக இருக்கும்.
இதில் எதற்காக திரு. சுந்தரமூர்த்தி அவர்களின் பின்னூட்டமும் போட்டிருக்கிறேன் என்றால், ஒருவேளை உங்களின் அனாமதேய பின்னூட்டம் வரும் போது மட்டுறுத்தல் நீக்கி இருக்கலாம் என்று நீங்கள் கூறுகெட்ட தனமாக வாதிடக் கூடும். அதற்கு தான்.
//நாளைக்கு காலவரிசைப்படி, நான் போட்ட பின்னூட்டம் பொருந்தி அங்கே இருந்தால், அவருடைய நான் அனுமதித்தேனே க்ளெய்ம் சரியென்று படாமலிருக்க எதற்கும் ஒரு திரைச்சொட்டு இப்போது எடுத்திருக்கிறேன். வர வர எவரையுமே நம்பமுடிவதில்லை
அது இங்கே//
இதை திரும்ப திரும்ப படித்து சிரித்துக்கொண்டிருந்தேன். :)))... போடாத பின்னூட்டத்திற்கு திரைசொட்டு எடுத்தாராம்ல திரை சொட்டு.. :))
//இவ்ளோதான், இந்த போலித்தனமான சஞ்சய் வீரம்//
யார் போலி என்று இப்போது எல்லோரும் அறிந்திருப்பார்கள்.:)) மேலும் என் வீரத்தை பற்றி இந்த அனாமதேயம் பேசி இருக்கிறது, இதனிடன் என் வீரத்தை நிரூபிக்க நான் தயார். இந்த அனாமதேயம் தயாரா என்பதை அறிய ஆவல். :))
Friday, 18 July 2008
அட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு..
அட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு?..நான் அப்டி என்னங்க பெரிசா எழுதி கிழிச்சிட்டேன்.. நான் என்ன எழுதினாலும் இப்போ எல்லாம் என் பதிவுகள் சூடாண இடுகைல வந்துடுது.. பாருங்க இந்த பதிவு கூட சூடாண இடுகைகள்ல வரும். :D
Thursday, 17 July 2008
Wednesday, 16 July 2008
தமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்?
தமிழச்சிக்கு வேண்டுமானால் தமிழ்மணத்தைக் குறித்து தமிழக முதல்வர், கொளத்தூர் மணி, கி. வீரமணி போன்றவர்களிடம் புகார் செய்து தனது காரியத்தை சாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் தமிழ்மணத்திற்கு இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவோ, இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).
..... சொன்னவர் : திரு.மு. சுந்தரமூர்த்தி ( தமிழ்மணம் நிர்வாகிகளுல் ஒருவர் போலும் )
... அபப்டியானால் தமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்? தமிழ்மணம் எந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுபடும்?
Friday, 28 March 2008
புரியலை தயவுசெய்து (தமிழ்மணம்) விளக்கவும்
சமீபத்தில் தமிழ்மணத்தில் இருந்த நீக்கப்பட்ட சில இடுகைகள் மற்றும் வலைப்பூக்களால் மீண்டும் தமிழ்மணம் சூடாகி இருக்கிறது. நீக்கத்திற்கு கூறப்படும் காரணங்கள் முரனாகவே இருக்கிறது.ஆபாசமான வார்த்தைகள் அல்லது தனிநபர் மீதான தாக்குதல்களின் காரணமாக நீக்கப் பட்டிருப்பதாக தெரிகிறது. யோனி, ஆண்குறி என்று எழுதியவர்கள் பதிவுகள் எல்லாம் தமிழ் மணத்தில் வலம் வந்தது.
பொறுபுள்ள ஒரு இணையதளமாக சட்டவிரோத செயல்களுக்கு துணை போகாமல் இருப்பதை கொள்கையாக வைத்துக் கொள்ளலாமே ஒழிய .. தங்கள் தளத்தில் பதிவு செய்தவர்கள் எதை எழுத வேண்டும் எதை எழுதக் கூடாது என்பதை எல்லாம் முடிவு செய்யக் கூடாது.இது கருத்து சுதந்திரத்திற்கும் தனி நபர் சுதந்திரத்திற்கும் தீங்கானது. அப்படி முடிவு செய்யும் உரிமை தங்களுக்கு இருக்கு, அதை பின்பற்றுபவர்கள் இங்கு உறுப்பினர்களாக இருக்கலாம். இல்லை என்றால் வெளியேறலாம் அல்லது உறுப்பினர் ஆக வேண்டாம் என்று ஒருவேளை சொன்னால்.. அதற்கு தமிழ்மணம் பதிவுலகிற்கு அப்பார்பட்டவர்களால் நடத்தப் பட வேண்டும். தமிழ்மணத்தின் நிர்வாகிகளை பொறுத்தவரை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பார்பட்டவர்களாக தெரியவில்லை. அவர்கள் எழுதும் பதிவுகளில் இதை காணலாம்.
ஒரு முக்கியமான சந்தேகம்...தமிழ்மணம் ஒரு திரட்டியா அல்லது இணைய உலகின் கலாச்சார காவலனா?.. தமிழ்மணத்திலிருந்து சில பதிவுகள் அல்லது பதிவர்களை வெளியேற்றுவதன் மூலம் தமிழ்மணம் அல்லது அந்த திரட்டியை பயன்படுத்துபவர்களுக்கு என்ன பயன்? இதன் மூலம் தமிழ்மணம் சாதித்தது அல்லது சாதித்துக் கொண்டிருப்பது என்ன? தமிழ்மணத்திலிருந்து நீக்கப் பட்ட பதிவர்கள் அது போன்று எழுதுவதை நிறுத்தி இருக்கிறார்களா? அல்லது நீக்கப் பட்ட இடுகைகளை தமிழ்மணத்தின் உறுப்பினர்கள் படிப்பதை நிறுத்தி இருக்கிறார்களா? ஒரு திரட்டியாக தமிழ்மணத்தால் யார் மனதையுமே மாற்றவோ திருத்தவோ முடியாது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்ததை ( சட்ட விரோதம் இல்லாத வகையில் ) எழுதவோ, வாசிக்கவோ உரிமை உண்டு.
பெரும்பாலும் நீக்கத்திற்கு சொல்லப்படும் காரணம்.. தனிநபர் தாக்குதல்.. அவதூறு பரப்புதல். இதை தமிழ்மணம் எந்த அளாவுகோலின் படி முடிவு செய்கிறது. யார் மீது அவதூறு பரப்பபடுகிறதோ அவர் சட்ட ரீதியாகத் தான் இதை எதிர்கொள்ள வேண்டும்/முடியும். இதற்காக தன்னிடம் பதிவு செய்துள்ள பதிவரை அல்லது அவரது இடுகையை நீக்கும் உரிமை தமிழ்மணத்திற்கு கிடையாது. ஆபாசமாக இல்லாமல்(உதாரணம் : போலி தளங்கள்) குற்றசாட்டு ரீதியில் ஒருவர் பற்றிய செய்திகளை வெளியிடுவதை தனிநபர் தாக்கு அல்லது அவதூறு பரப்புவது என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒருவேளை குற்றம் சுமத்தபட்ட்வர் அல்லது கண்டிக்கப் பட்டவர் அந்த செயலுக்கு உரியவராக இருக்கும் பட்சத்தில் ஒருவரது தவறான செயல்பாட்டை தங்கள் தளத்தில் பதிவு செய்துகொண்டவர் தெரிந்துக் கொள்ளவிடாமல் தடுக்கும் அல்லது மறைக்கும் செயலாகவே இந்த நீக்கங்களை கருத முடிகிறது.
இப்படி நீக்குவதற்கு பதில் தமிழ்மணத்திற்கு ஒவ்வாது என்று கருதும் இடுகைகளை தனியாக வகைபடுத்தலாம்.அவற்றை முகப்பு பக்கத்தில் தெரியாமல் அந்த பிரிவிற்கு தனி பக்கங்களை அளிக்கலாம். இதன் மூலம் விருப்பம் உள்ளவர்கள் அதை படிக்கட்டும். விருப்பம் இல்லதவர்கள் ஒதுக்கி விடட்டும்.
அல்லது ஒரு பதிவை அல்லது பதிவரை நீக்குவதற்கு முன் தன் உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அதை வெளியிட்டு அதன் பின்னர் நீக்கினாலாவது பரவா இல்லை.
சைட் டிஷ் : தமிமணம் வெறும் ஒரு திரட்டி மட்டும் தான். அதன் வேலை தன்னிடம் பதிவு செய்த்துக் கொண்டவர்களின் பதிவுகள திரட்டுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பதிவர் அல்லது படிப்பவரின் சுதந்திரத்தில் எல்லாம் தலையிடக் கூடாது. எதை படிப்பது எதை ஒதுக்குவது என்பதெல்லாம் படிப்பவரின் உரிமை/கவலை. இதில் எதற்கு ஒரு திரட்டி தலையிட வேண்டும்? எல்லாவற்றையும் ஆரம்பத்தில் அனுமதித்துவிட்டு பிறகு அந்த நிலைபாட்டிலிருந்து மாறுவது என்பது வெறும் பரபரப்புக்கான வேலையாகவே தெரிகிறது.தமிழ்மணம் தவிற வேறெந்த திரட்டியும்( இப்போதைக்கு) இந்தளவு தனிநபர் சுதந்திரத்தில் தலை இடுவதில்லை.
Saturday, 22 December 2007
"போட்டி Vs விருதுகள் !! - என் சிறு கருத்து"
"போட்டி Vs விருதுகள் !! - என் சிறு கருத்து" என்று செல்லா மாமா ஒரு பதிவு போட்டிருக்கார்.. எபப்டியும் இந்த தலைப்பு ஒரு ரவுண்டு வரும் என்ற நம்பிக்கையில் இப்போது சுடரை 2வது ஆளாக நான் பிடித்திருக்கிறேன். :)
நானும் என் சிறு கருத்தை சொல்லிவிடுகிறேன். :)
போட்டி நடத்தறது எந்த தப்பும் இல்ல. ப்ரச்சனையே அது நடக்கும் இடம் , சூழல், நடத்தும் விதம்... இதுல தான் இருக்கு. இப்போ தமிழ் பதிவுலகத்துல பலவிதமான போட்டிகள் நடந்தாலும் தமிழ்மணம் நடத்தப் போகும் சிறந்த வலைபதூவிற்கான விருது பற்றித் தான் பல விதமான கருத்துகள் வெளிவருகிறது. இந்த விருது வழங்குவதை பலரும் ஆதரித்தாலும் அதை எதிர்ப்பவர்களை செல்லா மாமா போன்றவர்கள் தான் குறை சொல்கிறார்கள்.
தமிழ் பதிவு உலகத்தில் பல மோசமான யுத்தங்கள் இப்போது தான் முடிவுக்கு வந்திருக்கிறது. தமிழ்மணத்தின் சிறந்த வலைபதிவு விருதுக்கு பிறகு வெண்டுமென்றே சிலர் புறக்கணிக்கப் பட்டதாகக் கூறி அந்த பழய யுத்தம் மீண்டும் துவங்கப் படலாம். மீண்டும் இரு அணிகள் உருவாகலாம். இப்போது இருக்கும் அமைதி கெட வாய்ப்பு உள்ளது.
சிலர் தமிழ்மணத்தை விட்டு வெளியேறுவார்கள். சிலர் தமிழ்மணம் மற்றும் சில தனி நபர்கள் பற்றி அவதூறாக ஏதேனும் பேசி தமிழ்மணத்தை விட்டு வெளியேற்றப் படலாம்.
அதேசமயம் இந்த விருதுக்கு பல பதிவர்களும் ஆதரவு தெரிவிப்பதால் இதை கை விடவும் கூடாது. அதற்கு எனக்கு தெரிந்த ஒரு சிறு யோசனை..
.... இந்த விருது விஷயத்தில் தமிழ்மணத்தை முழுமையாக நம்புவதற்கு அடையாளமாக "
தமிழ்மணம் வலைப்பதிவு விருது 2007" லோகோவை தங்கள் பதிவுகளில் இடம்பெறச் செய்ய வைக்கலாம். அந்த லோகோவை பயன்படுத்தி இருக்கும் வலைப்பூக்களை மட்டும் விருதுக்கு பரிசீலிக்கலாம். இதன் மூலம் சர்ச்சைகளை தவிர்க்க வாய்ப்பு இருக்கிறது.
ஓசை செல்லா அங்கிளின் பதிவிலிருந்து,
"போட்டியாளர்களுக்கு நல்ல உதாரணம்: எங்கள் PiT போட்டியாளர்கள்... நேற்று முடிவு அறிவிக்கப்பட்டதும் பங்கேற்ற அனைவரும் வெற்றியாளர்களைப் பாராட்டும் இலகுவான மனநிலை!" "
ரொம்ப கரெக்ட் அங்கிள். PIT போட்டியில் பங்கேற்க விரும்பியவர்கள் தங்கள் விருப்பத்தை போட்டி அறிவிப்புக்கான பதிவில் வந்து பின்னூட்டமாக சொல்லி இருந்தோம். அதாவது PIT போட்டிக்கான நடுவர்கள் மீதும் அந்த போட்டி மீதும் நம்பிக்கை வைத்து அதில் கலந்துக் கொண்டதை அறிவித்தோம். அதனால் தான் முடிவு தெரிந்ததும் வெற்றியாளர்களை மனதார வாழ்த்தினோம். நடுவர்களையும் பாராட்டினோம்.
இதுவே , போட்டி தலைப்புக்கு ஏற்ற படங்களை PIT நடுவர்களே தேடிப் பிடித்து விருது கொடுத்திருந்தால் இந்நேரம் ரணகளம் ஆக்கியிருக்க மாட்டோமா? :P. ஆகவே மக்களே... தமிழ்மணம் வலப்பதிவு விருது 2007 க்கு பதிவுகளை பரிசீலிப்பதற்கு முன் இதில் விருப்பம் உள்ளவர்களின் பட்டியலை முதலில் தயார் பண்ண வேண்டும். என்ன நாஞ்சொல்றது? :-))


