இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comFriday, 1 May 2009
வருந்துகிறோம்
நம் நல்ல நண்பனும் என் பாசமிகு மாப்பிள்ளையுமான ஜோசப் பால்ராஜின் தந்தயார் இன்று நம்மையும் தன் குடும்பத்தையும் விட்டு பிரிந்து விட்டார் என்ற தகவலை மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கிறேன். ஜோசப்பின் குடும்பத்தாருக்கு எற்பட்ட இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் அண்ணாரது ஆதமா சாந்தி அடைய வேண்டும் எனவும் ப்ரார்த்திக்கிறேன்.
Wednesday, 16 July 2008
Tuesday, 8 July 2008
உன் ஆத்மா சாந்தி அடையட்டும் நண்பா
அடேய் பாவி..
என்ன காரியமடா செய்தாய் நீ?.
எப்படியடா உனக்கு மனம் வந்தது..
இவ்வளவு சீக்கிறம் எங்களை பிரிய?..
நம் பாசப் பிணைப்பு உடையாமல் தானேயடா இருந்தது
பத்தாண்டுகளுக்கும் மேலும்..
இப்போது என் குரலும் உடைந்து விட்டதே உன்னால்..
நாம் விவாதிக்காத விஷயம் ஏதும் உண்டா?
ஓ.. இனி எதுவும் இல்லையே..
எதற்கு இவர்களுடன் என்று நினைத்துவிட்டாயா?
பாவி.. நாங்கள் என்னடா பாவம் செய்தோம்?
சில தினங்கள் முன்பு
நாம் கடைசியாய் பேசும் வரை
நீயும் சிரித்துக் கொண்டு
என்னையும் சிரிக்க வைத்துக் கொண்டுதானேயடா இருந்தாய்..
இப்போது ஏனடா அழ விடுகிறாய்...
என் உயிர் தோழனே இளங்கோவடிகள்...
இதோ புறபட்டுவிட்டேன்..
உனை கெஞ்சி கேட்கிறேன்..
இப்போதும் அவரசப் பட்டுவிடாதே...
உன் முகத்தை கடைசியாய் பார்க்க விடு..
என்றும் உன் நினைவில்
கண்ணீருடன்
உன் நண்பன்.
