இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday 29 April, 2009

வாழ்த்துகள் அண்ணாச்சி


நம்ம அண்ணாச்சி வடகரைவேலன் அவர்கள் இன்று (29.04.2009) தன் புது வீட்டில் அன்பான குடும்பத்துடன் காலடி வைத்திருக்கிறார். புது வீட்டில் குடி புகும் அண்ணாச்சிக்கும அவர் தம் குடும்பத்தார்க்கும் மேலும் மேலும் சந்தோஷமும் செல்வமும் பெருகட்டும் என இதயப் பூர்வமாக வாழ்த்துவோம். வாழ்த்துகள் அண்ணாச்சி. போக்குவரத்து நெரிசல், தொழிற்சாலைகள் சத்தம் போன்ற தொல்லைகள் இல்லாமல் அமைதியான இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் 3 படுக்கை அறைகளுடன் 2 மாடிகளில் அமைந்த மிக அழகான இல்லம்.

( இதை மிக சிறிய வீடு என்று சொன்னார்.. பாருங்க மக்களே இது இவங்க ஊர்ல சின்ன வீடாம் .. :) )

நான் , பரிசல்காரன், வெயிலான் , செல்வேந்திரன், ஈரவெங்காயம் சாமிநாதன், சிவகுமரன் ஆகியோர் சென்று விழாவை சிறப்பித்துவிட்டு வந்தோம் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :)

31 Comments:

said...

அண்ணாச்சிக்கு எனது வாழ்த்துக்களும்!

said...

புதுமனை புகும் அண்ணாச்சிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

said...

அண்ணாச்சியை நானும் வாழ்த்திக் கொள்கிறேன் !

said...

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.. :)

said...

வேலன் அவர்களும் குடும்பத்தினரும் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

said...

அண்ணாச்சிக்கு எனது வாழ்த்துகள்...

said...

இனிய வாழ்த்துகள்!

said...

வீடு அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது!

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

said...

அண்ணாச்சி மேலும் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்!

said...

வாழ்த்துகள்

said...

அண்ணாச்சி வீடு அம்சமா இருக்கு மக்கா!
அண்ணாச்சி இந்த பாடல் வரிய பாடுங்க

"என்னுடன் வா வீடு வரைக்கும், என் வீட்டை பார், என்னை பிடிக்கும்."

said...

நான் முறையே
இட்லி
வடை
கேசரி
சர்க்கரைப் பொங்கல்
கிச்சடி
சேவை
பொங்கல்
மற்றும் ஒரு காபி மட்டுமே சாப்பிட்டேன்...

said...

செம ஃபாஸ்ட்டு மாப்ள நீ!

கலக்கல்

said...

நான் முறையே
இட்லி
வடை
கேசரி
சர்க்கரைப் பொங்கல்
மற்றும் ஒரு காபி மட்டுமே சாப்பிட்டேன்.

:)

said...

மனமார்ந்த வாழ்த்துகள்.

said...

//Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...
நான் முறையே
இட்லி
வடை
கேசரி
சர்க்கரைப் பொங்கல்
மற்றும் ஒரு காபி மட்டுமே சாப்பிட்டேன்.//

ஆனா எத்தனை முறை என்று சொல்லவே இல்லீயே மாம்ஸ்?

said...

சஞ்சய் கிச்சடியை விட்டுட்டீங்களே? நான் வரும்போது அதான் இரண்டாவது தடவை கேட்டுட்டிருந்தீங்க!!

said...

வாழ்த்துகள்

said...

இரா.சிவக்குமரன் said...

சஞ்சய் கிச்சடியை விட்டுட்டீங்களே? நான் வரும்போது அதான் இரண்டாவது தடவை கேட்டுட்டிருந்தீங்க!!

ada kaduvuley ithai ellama solluvenga siva anna

hahahhahah

said...

எல்லாருக்கும் வீடுங்குரது ஒரு கனவுதான்.அந்தகனவு நனவானதுல எங்களுக்கும் மகிழ்ச்சிதான்.

வாழ்துக்கள் அண்ணாச்சி.

said...

அண்ணாச்சிக்கும் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துக்கள்!

said...

நேரில் வரவியலாத குறையை போட்டோ மூலமும், செல் பேசியதன் மூலமும் நிறைவடைய செய்த சஞ்ஜெய்க்கு நன்றியும்,
தனது ரசனையினை வீட்டிலயும் நிரூபித்திருக்கும் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்களும்.

said...

அன்பின் அண்ணாச்சி

புதுமனை புகு விழா அருமையாக நடைபெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி

குடும்பத்தார் அனைவரும் எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழ இறைவனின் கருணை என்றுமிருக்க வேண்டுகிறேன்

நல்வாழ்த்துகள்

Anonymous said...

பதிவெழுதியும், பின்னூட்டமிட்டும், மின்னஞ்சல் மூலமும், குறுஞ்செய்தி அனுப்பியும், கை பேசியில அழைத்தும் வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் நன்றி.

said...

ஆஹா....!! வீடு நெம்ப சூபரா இருக்குதுங்க அண்ணாச்சி.....!!! வாழ்த்துக்கள் ..!! புது வீட்டுக்கு போயிருக்கீங்கோ.....!!!


" நீங்கள் பல்லாண்டு காலம் புதுமனையில் , எல்லா செல்வங்களையும் பெற்று.... பெருவாழ்வு வாழ..... என் வாழ்த்துக்கள்......."


" வாழ்க வளமுடன்........"

said...

அண்ணாச்சிக்கும், குடும்பத்தினருக்குமான இனிய வாழ்த்துகளை இங்கே பதிவு செய்வதில் மனமகிழ்கிறேன்..

said...

அண்ணாச்சிக்கு வாழ்த்துகள்!

said...

எப்பிடி இருக்கீங்க அண்ணா?
போட்டோ நல்லா எடுப்பீங்கன்னு நான் சொன்னது சரிதான?


(போட்டோ நீங்க தான எடுத்தீங்க???)

said...

// கிருத்திகா said...

எப்பிடி இருக்கீங்க அண்ணா?

//

ரொம்ப நலம் பெரிய அக்கா. :)

//போட்டோ நல்லா எடுப்பீங்கன்னு நான் சொன்னது சரிதான?//

என்னை விட பெரிய டகால்ட்டி விடுவ போல. நீ சொன்னது வேற யாரையோ தான். அப்பா சொல்ற வரைக்கும் யோசிச்சிட்டு தான் இருந்த. இந்த போட்டோ நான் அழகா எடுக்கலை.வீடு் ரொம்ப அழகா இருக்கு. அதனால நான் அழகா எடுத்த மாதிரி இருக்கு. :)
( உங்கப்பாவும் அழகாதானே இருக்கார்..:)) )

// (போட்டோ நீங்க தான எடுத்தீங்க???)//

சந்தேகப் பட்டா அடிவிழும். நான் தான் எடுத்தேன். :)

said...

சரி சரி விடுஙக எங்க அப்பாவுக்கே
ஐஸ் வச்சுட்டீங்க போல.

போட்டோவை கேமரா தான எடுத்துச்சு??!!

ஹி...ஹி...

said...

வீடு சூப்பர்..!
அண்ணாச்சி அதைவிட சூப்பர்..

ஆமா சஞ்சய்?
டெம்ப்ளேட்டுக்குன்னு ஏதாவது விருது குடுத்தா சொல்லுங்க! உங்க பேரைச்சொல்லணும்..!

Tamiler This Week