இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 24 October, 2008

எதையாவது புறக்கணிக்கனும் பாஸு

கொஞ்சநாளாவே தமிழ் பதிவர்கள் ஆளாளுக்கு எதயாவது புறக்கணிக்கிறாங்க. சிலர் தினமலரை.. சிலர் ஹிண்டுவை.. சிலர் ப்ளீச்சிங் பவுடர் பதிவை.. சிலர் டோண்டு பதிவை.. இப்படி எதையாவது புறக்கணிக்கிறாங்க. நாமளும் நம்ம பங்குக்கு எதையாவது புறக்கணிக்கனுமே..

அதனால இனி சர்ச்சைக்குறிய பரபரப்பான பதிவுகளை இந்த வலைப்பூவில் எழுதுவதை புறக்கணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அப்பப்போ வேற எதுனா பரபரப்பு பதிவுகளுக்கு போய் கபடி ஆடிக்கலாம். இங்கு வேண்டாம்.

என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் கும்மிக் கழக கண்மணிகள் இப்போதெல்லாம் என் பதிவு பக்கமே வருவதில்லை. குசும்பன் ஆன்லைன்ல என்னை பார்க்கும் போதெல்லாம் ஓவர் டார்ச்சர். பெரும்பதிவராம் நான். என்ன கொடுமை இது? இதெல்லாம் எனக்கு தேவையா? ஆனாலும் இது குசும்பனின் வழக்கமான நக்கல் தான் என விட்டுவிட்டேன்.

நேற்று இரவு என் வலையுலக சகோதரியிடமிருந்து வழக்கமான ஒரு மெசேஜ்..
“ அண்ணா வாட் டூயிங்” (இதை டெப்ளட்டா வச்சிருப்பா போல.. தினமும் இதைத் தான் அனுப்பறா ) :))
“ எங்க க்ரூப் ப்ளாக்ல ரொம்ப நாள் கழிச்சி ஒரு பதிவு போட்டுட்டு இருக்கேன்”
....உடனடி கேள்வி
“ யாரை திட்டி?”

என்ன கொடுமை சார் இது? நான் பதிவு போட்டாலே யாரையாச்சும் திட்டியாத் தான் இருக்குமா? நல்ல இமேஜ்.. இதே ரேஞ்ச்ல போனா வெளங்கிடும்..
அதனால இனி இதையாவது புறக்கணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் பாஸு..:)

இதே மாதிரி உங்களுக்கும் தோனுச்சினா நீங்களும் எதையாவது புறக்கணிங்க.. அது வழக்கம் போல என் வலைப்பூவா கூட இருக்கலாம்.. :))) எனக்கு என் அன்பு சகோதரியின் SMS உரையாடல் மாதிரி உங்களுக்கும் எதாவது காரணம் இருந்தா அதையும் சொல்லிடுங்க.. :)

இதற்கு நான் அழைப்பது...
.....எந்த தொடர் பதிவிலும் இதுவரை மாட்டாமல் தப்பித்த பதிவர் யாராவது இருந்தால் அவரை அழைக்கிறேன்... ஹ்ம்ம்ம் இதுக்கு யாரையும் அழைக்கலைனே சொல்லி இருக்கலாம்.. :)

மிஸ்டர் ஃநொந்தழல் ஆவி : ”வெக்கம் மானம் ரோஷம் சூடு சொரணை இதெல்லாம் இல்லாமல் வாழுவது எப்படி ஃபார் டம்மீஸ்”னு ஒரு பதிவு போடுங்க.. சின்ன வயசுல இருந்தே முன் கோவம் ஜாஸ்தி தான். ஆனா சமீப காலமா கன்னா பின்னான்னு கோவம் வருது.. :(

26 Comments:

said...

ஹி..ஹி.. பேசாம பதிவெழுதறத புறக்கணிச்சிடுங்களேன். நாங்களாவது தப்பிச்சிக்குவோம்ல.. :))))

said...

.

said...

ஒரே காரணத்துக்காக, நீங்க தான் ஏற்கனவே, ஒட்டு மொத்த ஈழ தமிழ் மக்களையும் அவர்களும் மனிதர்கள், வாழவைப்போமே, என்ற என்னத்தை , நினைப்பை முற்றிலும் புறக்கணித்துவிட்டீர்களே , அப்புறம் என்ன பாஸு.. சும்மா பூந்து விளையாடுங்க.. நமக்கு தான் தேசியம்., குல்லா, காந்தி நு ஆயிரத்தெட்டு மேட்டர் இருக்கே... :)

said...

பின்னூட்டத்தையெல்லாம் பார்த்தா உங்களை அடங்க விடுவாங்கன்னு தோணலை சஞ்சய்!

said...

என்னது யாராவது யாரையாவது புறக்கணிக்கனுமா? சரி மாம்ஸ் ஒன்னைய நான் புறக்கணீக்கிறேன். வேற வழி???? :))))))))))

said...

நானும்தான் என் மாமியாரை புறக்கனிக்கனும்னு பாக்கறேன், ஆனா வேலை கெடைக்கிரவரை முடியாது போலருக்கே:(:(:(

said...

//வெண்பூ said...

ஹி..ஹி.. பேசாம பதிவெழுதறத புறக்கணிச்சிடுங்களேன். நாங்களாவது தப்பிச்சிக்குவோம்ல.. :))))//
சாரி உங்கள் வேண்டுகோள் நிராகரிக்கப் படுகிறது. வேரு எதாவது... :)

எத்தனை நாளா இந்த கொல வெறி? :((

-----------------
கிங் என்னாச்சி... புள்ளி மட்டும் வச்சிருக்கிங்க.. கோலம் போட யார் வருவாங்க? :)

--------------

said...

// முரளி said...

ஒரே காரணத்துக்காக, நீங்க தான் ஏற்கனவே, ஒட்டு மொத்த ஈழ தமிழ் மக்களையும் அவர்களும் மனிதர்கள், வாழவைப்போமே, என்ற என்னத்தை , நினைப்பை முற்றிலும் புறக்கணித்துவிட்டீர்களே , அப்புறம் என்ன பாஸு.. சும்மா பூந்து விளையாடுங்க..//
அய்யா முரளி உணர்ச்சிவசப் படறதால மட்டுமே ஒன்னும் சாதிக்க முடியாதுங்கோ.. :)

ஈழத் தமிழ் மக்களை புறக்கணிக்கிறோம்னு சொல்றதெல்லாம் சும்மா சீன் க்ரியேட்டிங்க்மா.. :)

உங்களுக்கு ஈழத்தமிழர்களும் விடுதலை புலிகளும் ஒன்று. அதர்கு எதாவது காரணம் இருக்கலாம். எங்களுக்கு வேரு வேறு. அதர்கும் காரணம் இருக்கு.

காஷ்மீர் தனிநாடாவதை எதிர்த்தாலும் தனி ஈழத்தை நாங்கள் ஆதரிக்கவே செய்கிறோம். ஆனால் தனி ஈழம் மலர்ந்தால் அதை ஆள்வது யார்?

ஜனநாயகத்தை விரும்ம்பும் எந்த ஈழ அரசியல் தலைவரையாவது விடுதலைப் புலிகள் விட்டு வைத்திருக்கிறார்களா? அதனால் தான் நாங்கள் புலிகளை எதிர்க்கிறோம். ராஜிவ மட்டுமல்ல விருந்தினர்களாக வந்த ஈழத் தமிழ் தலவைர்களையும் நம் மண்ணில் கொன்று நம்மைத் தலை குனிய வைத்த பயங்கரவாதிகள் அவர்கள்.

யாரிடம் தனி ஈழத்தை ஒப்படைப்பீர்கள்? வெளிப்படையான ஜனநாயக ஆட்ச்சிக்கு யார் உத்திரவாதம்.

ஆகவே உங்களுக்கு ஒரு கொள்கை இருபப்து போல ஈழத் தமிழர்களை ஆதரித்தும் புலிகளை எதிர்த்தும் பேச எங்களுக்கும் காரணங்கள் இருக்கு.
சும்மா குருட்டுத் தனமான உணர்வில் எதுவும் பேச வேண்டாம்.

//நமக்கு தான் தேசியம்., குல்லா, காந்தி நு ஆயிரத்தெட்டு மேட்டர் இருக்கே... :)//
ரொம்ப சரி.. உங்களுக்கு இப்படி உருபப்டியா ஒன்னும் இல்லாதது தான் பிரச்சனையே..

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இதற்கு வேறு வலைப்பூ இருக்கு. அங்கு சண்டை போடலாம். இங்கு நல்ல நண்பராய் கும்மி மட்டும் அடியுங்கள் ப்ளீஸ்.. :))

said...

ஆஹா Figure of the weekக்கு மொத்த கதவுகளையும் திறந்துவிட்டேன்..

பின்புறமாய் வந்துவிட்டது ஒரு ஜந்து.

// Yuvaraj said...

திராவிட கட்சி கிட்ட காங்கிரஸ் அமைச்சர் பதவி தா, பதவி தா என்று கெஞ்சுவதை புறக்கனிக்கலாமே..//

அடேய் இது என் தனிப்பட்ட புறக்கணிப்பு பற்றிய மொக்கை பதிவுடா சாமி.. இங்க ஏண்டா அரசியல் பன்ற.. அதுவும் மூஞ்சிய மறைச்சிக்கிட்டு.. ச்சி..ச்சி.. :))

அது கெஞ்சல் இல்லை.. உரிமை.. மத்தியில் கேட்டு வாங்கினார்களே.. அதே மாதிரி மாநிலத்திலும் நடந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

என்னடா இது அக்கப் போரா போச்சி.. அவ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

//பரிசல்காரன் said...

பின்னூட்டத்தையெல்லாம் பார்த்தா உங்களை அடங்க விடுவாங்கன்னு தோணலை சஞ்சய்!//

விடுங்க பரிசல்.. எல்லாம் நம்மாளுங்க தான.. சும்மா ஜாலி பன்றாங்க..:))

-----------

அவங்களுக்கு அடிச்சி விளையாட எனனைய மாதிரி ஒரு இளிச்சவாயன் தேவை தானே..அதான் என்கிட்ட விளையாடறாங்க.. அவங்களுக்கு யாரைத் தெரியும்.. எங்க போவாங்க.. :)

said...

// புதுகை.அப்துல்லா said...

என்னது யாராவது யாரையாவது புறக்கணிக்கனுமா? சரி மாம்ஸ் ஒன்னைய நான் புறக்கணீக்கிறேன். வேற வழி???? :))))))))))//

இந்த குசும்பு தான வேணாம்னு சொல்றது... உங்களுக்கு இருக்கிற ஒரே மச்சான் நாந்தான்.. என்னைய புறக்கணிச்சிட்டு எங்கிட்டு போவிக? பொண்ணு குடுத்திருக்கோம்.. அப்டி எல்லாம் நீங்க பொறக்கனிக்க முடியாதுடி.. :))

said...

// rapp said...

நானும்தான் என் மாமியாரை புறக்கனிக்கனும்னு பாக்கறேன், ஆனா வேலை கெடைக்கிரவரை முடியாது போலருக்கே:(:(://

உங்களுக்கு சீக்கிறம் வேலை கிடைக்கவும் உங்கள் மாமியார் நிம்மதியாய் இருக்கவும் வேண்டிக் கொள்கிறேன். :))

தல ம் நு ஒரு வார்த்த சொல்லுங்க.. என்டிடிவி ல வேல வாங்கிடலாம்.. உங்க நாட்ல ஒரு ப்ரான்ச் போட சொல்லலாம்.. :))

said...

நீங்க என்ன பண்றீங்கங்கறத தெரிஞ்சிக்க... என்ன பண்றீங்கன்னு கேட்காம... வேற எப்படி கேட்பாங்களாம்?? :))

said...

//ஸ்ரீமதி said...

நீங்க என்ன பண்றீங்கங்கறத தெரிஞ்சிக்க... என்ன பண்றீங்கன்னு கேட்காம... வேற எப்படி கேட்பாங்களாம்?? :))
//

வாம்மா மின்னல்.. இதுக்கு பேர் தான் வாக்குமூலமா? :))

said...

:-) :-) :-)

said...

மெய்யாலுமே நீங்க பெரியாளு தான்!
ரொம்பா தான் தைகிரியம் உங்களுக்கு

said...

ஏன் உங்களோட எல்லா பதிவுலயும் "No. of பின்பொடி" தப்பாவே காட்டுது?

said...

யோவ் ஜோசப் லூசாய்யா நீயி.. எதுக்குய்யா இப்படி கெக்க பிக்கன்னு சிரிக்கிற? :))

--------------

வாலு இன்னாபா சொல்ரிங்க.. தலையும் பிரில வாலும் பிரில :(

-----------
யோசிப்பவர் .. ஏன் ராசா கொலை வெறி.. இப்டி உக்காந்து எண்ண வச்சிட்டிங்களே.. எல்லாம் சரியா தானுங்க இருக்கு.. :(

said...

//ஏன் ராசா கொலை வெறி.. இப்டி உக்காந்து எண்ண வச்சிட்டிங்களே.. எல்லாம் சரியா தானுங்க இருக்கு.. :(
//
சஞ்சய்,
பெர்மாலிங்கை யூஸ் பண்ணி ஒவ்வொரு பதிவையும் மட்டும் தனியா பாருங்க. 18 பின்பொடிக்கு 8 பின்பொடி அப்படின்னு தெரியுது. பொதுவான ப்ளாக் யூ.ஆர்.எல். யூஸ் பண்ணி பார்த்தால் பிரச்சனையில்லை.

For example, we can take this post itself. Check with the following url : http://podian.blogspot.com/2008/10/blog-post_24.html

said...

இல்லையே.. சரியாத்தான் இருக்கு யோசிப்பவரே..

said...

http://1.bp.blogspot.com/_eg4SGUh5cBE/SQxYlXipfYI/AAAAAAAABaE/eOlRfxqXglo/s1600-h/podi.jpg

said...

ஆஹா என்ன கொடுமை தல இது? :(

க்ரோம், எக்ஸ்ப்ளோரர், ஃபயர்ஃபாக்ஸ் எல்லாத்துலையும் எனக்கு சரியாத் தான் வருது.. :)

said...

பிரேக் த ரூல்லை புறக்கணிக்கலாம் என்று நினைக்கிறேன்!!!

:)))

//ஆனாலும் இது குசும்பனின் வழக்கமான நக்கல் தான் என விட்டுவிட்டேன்.//

சீரியசா சொன்னாலும் காமெடியா எடுத்துக்கிறாங்கப்பா:(((

said...

//க்ரோம், எக்ஸ்ப்ளோரர், ஃபயர்ஃபாக்ஸ் எல்லாத்துலையும் எனக்கு சரியாத் தான் வருது.. :)
//
நான் ஐ.இ.யில்தான் பார்க்கிறேன். வீட்டிற்குப் போய் ஃபயர் ஃபாக்ஸில் பார்த்துவிட்டு சொல்கிறேன்!!;-)

said...

http://1.bp.blogspot.com/_eg4SGUh5cBE/SQxwcJ2qirI/AAAAAAAABaM/lqKfaqYWC2A/s1600-h/podi_ie.jpg

சஞ்சய், ஃபயர் ஃபாக்ஸ் ஓகே. எக்ஸ்புளோரரில்தான் பிரச்சனை.

said...

எனக்கும் தப்பாத்தான் காமிக்குது சஞ்சய். இப்போ 5ன்னு சொல்லுது. நானும் ஐ.இ தான் உபயோகிக்கிறேன்.

Tamiler This Week