இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Tuesday 8 July, 2008

உன் ஆத்மா சாந்தி அடையட்டும் நண்பா

அடேய் பாவி..
என்ன காரியமடா செய்தாய் நீ?.
எப்படியடா உனக்கு மனம் வந்தது..
இவ்வளவு சீக்கிறம் எங்களை பிரிய?..
நம் பாசப் பிணைப்பு உடையாமல் தானேயடா இருந்தது
பத்தாண்டுகளுக்கும் மேலும்..
இப்போது என் குரலும் உடைந்து விட்டதே உன்னால்..
நாம் விவாதிக்காத விஷயம் ஏதும் உண்டா?
ஓ.. இனி எதுவும் இல்லையே..
எதற்கு இவர்களுடன் என்று நினைத்துவிட்டாயா?
பாவி.. நாங்கள் என்னடா பாவம் செய்தோம்?
சில தினங்கள் முன்பு
நாம் கடைசியாய் பேசும் வரை
நீயும் சிரித்துக் கொண்டு
என்னையும் சிரிக்க வைத்துக் கொண்டுதானேயடா இருந்தாய்..
இப்போது ஏனடா அழ விடுகிறாய்...

என் உயிர் தோழனே இளங்கோவடிகள்...
இதோ புறபட்டுவிட்டேன்..
உனை கெஞ்சி கேட்கிறேன்..
இப்போதும் அவரசப் பட்டுவிடாதே...
உன் முகத்தை கடைசியாய் பார்க்க விடு..

என்றும் உன் நினைவில்
கண்ணீருடன்
உன் நண்பன்.

Tamiler This Week